என் மலர்
நீங்கள் தேடியது "அருண்"
- கொள்கை முடிவு என்பதால் தான் முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார்.
- தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆட்சியில் பங்கு என அறிவித்தும் கூட்டணிக்கு கட்சிகள் வரவில்லையே என்ற கேள்விக்கு தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னதாக த.வெ.க.வின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து, அதன் அடிப்படையில் ஒரு வலிமையான தேர்தல் அறிக்கையை உருவாக்கத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு அமைப்பிற்கும் பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பிரசார குழுவின் மிக முக்கிய உறுப்பினராக செங்கோட்டையன் செயல்பட்டு வருகிறார். செங்கோட்டையன் ஒரு குழுவிற்கு தலைமையாக உள்ளார். கட்சியில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு தலைவர் இருப்பதால், அவர் தனித்து ஒன்றும் இல்லை. அவர் கட்சியின் ஒரு அங்கமாகவே இருக்கிறார்.
அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விஜய் திகழ்கிறார். ஒரு தலைமை என்பது தானாகவே உருவாக வேண்டும். மற்றவர்கள் சொல்லி உருவாகக்கூடாது.
தற்போதைய சில கூட்டணிகள் மேலிடத்து அழுத்தம் மற்றும் டெல்லியின் உத்தரவு காரணமாகவே இணைந்துள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவே ஆன்லைன் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மக்கள் குறைகளை தலைவர் விஜய் பெற்று வருகிறார்.
தி.மு.க. ஒரு "தீய சக்தி". அந்த சக்தியை வீழ்த்துவதே த.வெ.க.வின் முதன்மை இலக்கு. கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எங்களது கட்சி மிகவும் தெளிவாக இருக்கிறது.
தி.மு.க. சிறுபான்மையினரை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. ஆனால், சிறுபான்மையினரின் உண்மையான காவலராக விஜய் இருப்பார்.
வேலூரில் நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் "முதல்-அமைச்சர் நிகழ்ச்சி இருப்பதாகக் கூறி எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
30 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இவ்வாறு வேண்டுமென்றே முட்டுக்கட்டை போடுவது முறையல்ல.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது தவெகவின் கொள்கை முடிவு. கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள் என எண்ணி அந்த அறிவிப்பை வெளியிடவில்லை. கொள்கை முடிவு என்பதால் தான் முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சந்தோஷ் பி. ஜெயக்குமார் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
- இப்படத்திற்கு அருண் மற்றும் கவுதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
'ஹர ஹர மஹா தேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து', 'பொய்க்கால் குதிரை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'தி பாய்ஸ்'.

இந்தத் திரைப்படத்தில் அவருடன் 'ஜெயிலர்' ஹர்ஷத், 'கலக்கப்போவது யாரு' வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் மற்றும் கவுதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சாம் ஆர் டி எக்ஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை முஜிபீர் ரஹ்மான் கவனித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முற்றிலும் வித்தியாசமான முயற்சியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை நோவா பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்குமார் மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

'தி பாய்ஸ்' திரைப்படம் குறித்து சந்தோஷ் பி. ஜெயக்குமார் பேசியதாவது, ''ஐந்து இளம் பேச்சுலர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் 'தி பாய்ஸ்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஐவரும் தங்களது இளமைக் காலத்தில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகினால் அவர்களின் எதிர்காலமும், வாழ்வும் எப்படி இருக்கும்? என்பதனை இதுவரை சொல்லப்படாத வகையில் கல்ட் சினிமாவாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. மாணவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் தான்'' என்றார்.

தி பாய்ஸ் போஸ்டர்
வித்தியாசமான பாணியில் தயாராகி இருக்கும் 'தி பாய்ஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் கல்ட் சினிமா என்பது இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கில் தெரிய வருகிறது. இதனால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
- சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார்.
சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது படத்தின் புதி போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அதில் சீயான் விக்ரம் டி.வி.எஸ் வண்டியில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளுடன் வண்டியை ஓட்டுகிறார். படத்தின் நாயகியான துஷரா விஜயன் வண்டியில் முன்னாடி உட்கார்ந்துக் கொண்டு மகிழ்ச்சியாக சிரித்துப் பேசியபடியுள்ள காட்சிகள் அமைந்துள்ளன. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






