என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arun"

    • பாஜகவைப் பற்றி விஜய் பேசவில்லை என்பது தவறு.
    • பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறிவிட்டார்.

    த.வெ.க-வுக்கு பா.ஜ.க அழுத்தம் கொடுக்கத் தொடங்கி உள்ளதாக தவெகவின் நிர்வாகி அருண்ராஜ் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். சிபிஐ விசாரணை, 'ஜனநாயகன்' படப் பிரச்னை மூலமாக பாஜக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக அவர் பேட்டி அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் பெருகிவரும் ஆதரவால் பெரும்பான்மை யான தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகக் வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிக்கும்.

    ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை முடிவு. இதனை முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார். கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள் என எதிர்பார்த்து அதனை அறிவிக்கவில்லை. இதனை எந்த கட்சியும் சொல்ல வில்லை. சமூக நீதி அடிப்ப டையில் செயல்படும் த.வெ.க. தான் சொல்லி இருக்கிறது.

    தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தி.மு.க. ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் நேரத்தில் தோல்வி அடையும் கட்சியோடு தே.மு.தி.க. சேர்ந்து இருப்பதால் அவர்களும் தோல்வி அடைவார்கள்.

    கூட்டணி குறித்த முடிவுகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார். 90 சதவீத மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். இளைஞர்களை அரசியல் நோக்கி இழுத்தது தமிழக வெற்றிக் கழகம் தான்.

    தி.மு.க. அவசர அவசரமாக தே.மு.தி.க. உள்ளே கொண்டு வந்ததன் காரணம் என்ன? தேர்தல் பயம் தி.மு.க.விற்கு வந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது.

    ஆளும் தி.மு.க.விற்கு கூட்டங்கள் நடத்த உடனடியாக அனுமதி கிடைக்கிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நூற்றுக்கணக்கான விதிமுறைகள், அனுமதி மறுப்பு என தடைகளை ஆளும் கட்சியினர் செய்கிறார்கள்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல் மாநாட்டிலேயே கொள்கை எதிரி பா.ஜ.க., அரசியல் எதிரி தி.மு.க. என இரண்டு ஆளும் கட்சிகளை அறிவித்துவிட்டார். பா.ஜ.க. பல்வேறு அழுத்தங்களை கொடுக்க முயற்சி செய்தது. தற்பொழுது ஜனநாயகன் படம் நிறுத்தம், சி.பி.ஐ. விசாரணை என அழுத்தம் கொடுத்து வருகிறது. மதவாத பா.ஜ.க.வுடன் கூட்டணியில்லை என விஜய் அறிவித்தார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • கொள்கை முடிவு என்பதால் தான் முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார்.
    • தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

    ஆட்சியில் பங்கு என அறிவித்தும் கூட்டணிக்கு கட்சிகள் வரவில்லையே என்ற கேள்விக்கு தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு முன்னதாக த.வெ.க.வின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து, அதன் அடிப்படையில் ஒரு வலிமையான தேர்தல் அறிக்கையை உருவாக்கத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு அமைப்பிற்கும் பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் பிரசார குழுவின் மிக முக்கிய உறுப்பினராக செங்கோட்டையன் செயல்பட்டு வருகிறார். செங்கோட்டையன் ஒரு குழுவிற்கு தலைமையாக உள்ளார். கட்சியில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு தலைவர் இருப்பதால், அவர் தனித்து ஒன்றும் இல்லை. அவர் கட்சியின் ஒரு அங்கமாகவே இருக்கிறார்.

    அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விஜய் திகழ்கிறார். ஒரு தலைமை என்பது தானாகவே உருவாக வேண்டும். மற்றவர்கள் சொல்லி உருவாகக்கூடாது.

    தற்போதைய சில கூட்டணிகள் மேலிடத்து அழுத்தம் மற்றும் டெல்லியின் உத்தரவு காரணமாகவே இணைந்துள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவே ஆன்லைன் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மக்கள் குறைகளை தலைவர் விஜய் பெற்று வருகிறார்.

    தி.மு.க. ஒரு "தீய சக்தி". அந்த சக்தியை வீழ்த்துவதே த.வெ.க.வின் முதன்மை இலக்கு. கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எங்களது கட்சி மிகவும் தெளிவாக இருக்கிறது.

    தி.மு.க. சிறுபான்மையினரை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. ஆனால், சிறுபான்மையினரின் உண்மையான காவலராக விஜய் இருப்பார்.

    வேலூரில் நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் "முதல்-அமைச்சர் நிகழ்ச்சி இருப்பதாகக் கூறி எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    30 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இவ்வாறு வேண்டுமென்றே முட்டுக்கட்டை போடுவது முறையல்ல.

    ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது தவெகவின் கொள்கை முடிவு. கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள் என எண்ணி அந்த அறிவிப்பை வெளியிடவில்லை. கொள்கை முடிவு என்பதால் தான் முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும்.
    • மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.

    சிவராத்திரி தினத்தன்று பூக்கும் குங்கிலிய மலர்

    சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும்.

    அது சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் என்பதும் ஆச்சரியமானது.

    மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.

    இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி எனும் இரு வகைகள் உள்ளன.

    ஜலரி மரங்களில்தான் சிவராத்திரியில் மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன.

    சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக விளங்கும் இப்பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனின் மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் கூட அவற்றை வெட்டுவதில்லை.

    கன்னடத்தில் குங்கிலிய மரத்தை "தளி" என அழைப்பர்.

    இப்பெயரிலேயே ஹோசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒரு இடம் உள்ளது.

    இதன் அருகிலுள்ள தேர் பெட்டா மலைப்பகுதியில் வருடந்தோறும் சிவராத்திரியின் போது குங்கிலியப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன!

    இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.

    இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.

    சிவராத்திரியில் பூக்கும் இந்த அதிசயப் பூக்களைக் காணவும், அதன் மணத்தை நுகரவுமே சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் தேர் பெட்டா மலைப்பகுதிக்கு வந்து செல்வதுண்டு.

    • சந்தோஷ் பி. ஜெயக்குமார் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு அருண் மற்றும் கவுதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

    'ஹர ஹர மஹா தேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து', 'பொய்க்கால் குதிரை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'தி பாய்ஸ்'.


    இந்தத் திரைப்படத்தில் அவருடன் 'ஜெயிலர்' ஹர்ஷத், 'கலக்கப்போவது யாரு' வினோத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அஹமத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண் மற்றும் கவுதம் என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சாம் ஆர் டி எக்ஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை முஜிபீர் ரஹ்மான் கவனித்திருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் முற்றிலும் வித்தியாசமான முயற்சியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை நோவா பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்குமார் மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.


    'தி பாய்ஸ்' திரைப்படம் குறித்து சந்தோஷ் பி. ஜெயக்குமார் பேசியதாவது, ''ஐந்து இளம் பேச்சுலர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் 'தி பாய்ஸ்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஐவரும் தங்களது இளமைக் காலத்தில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகினால் அவர்களின் எதிர்காலமும், வாழ்வும் எப்படி இருக்கும்? என்பதனை இதுவரை சொல்லப்படாத வகையில் கல்ட் சினிமாவாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. மாணவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் தான்'' என்றார்.


    தி பாய்ஸ் போஸ்டர்

    வித்தியாசமான பாணியில் தயாராகி இருக்கும் 'தி பாய்ஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படம் கல்ட் சினிமா என்பது இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கில் தெரிய வருகிறது. இதனால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

    • புதிதாக அருண் காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
    • துணை ஆணையர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.

    சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பூதாகாரமாக வெடித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு சென்னை மாநகர காவல் ஆணையரை மாற்றி, புதிதாக அருண் காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

    புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் அருண், அனைத்து காவல் துணை ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.

    கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் தொடர்புடைய கோப்புகள், ரவுடிகளின் பட்டியல், குற்றங்கள் அதிகம் நடக்கும் காவல் மாவட்ட விபரங்களை பெற்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, இனி எதுமாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்பது குறித்து காவல் ஆணையர் ஆலோசனை வழங்கியதாக தகவல்.

    இதுதவிர ரவுடிகளின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், முன்னெசரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிகிறது. 

    • இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் 'யானை'.
    • யானை திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    அருண் விஜய்யின் 33-வது படம் 'யானை'. ஹரி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து பின்னணியில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.

    யானை

    யானை

    இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'யானை' படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


    நாட்டின் பொருளாதாரம் குறித்து இன்று பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்திய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிதி பற்றாக்குறை அளவு 3.3 சதவீதத்தை கடக்க விட மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். #fiscaldeficittarget #ArunJaitley
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரிப்பு மற்றும் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவற்றை  தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

    நேற்றும் இன்றும் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நிதித்துறை உயரதிகாரிகள், ரிசர்வ் வங்கி கவர்னர் பிரதமரின் நிதித்துறை ஆலோசகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்றிரவு நடைபெற்ற ஆய்வு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி, இந்த ஆண்டின் நிதி பற்றாக்குறை அளவு 3.3 சதவீதத்தை கடக்க விட மாட்டோம் என உறுதி அளித்தார்.

    கடந்த ஆண்டு கணிக்கப்பட்ட இலக்கையும் கடந்து இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என நம்புகிறோம். பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. 

    முதன்மை செலவினங்களை பொருத்தவரை ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி நிலவரப்படி, ஒதுக்கீடு தொகையில் 44 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. எவ்வித வெட்டுகளும் இல்லாமல் இந்த  ஆண்டுக்கான முதன்மை செலவினங்கள் நூறு சதவீத ஒதுக்கீட்டுக்குள் இருக்கும் வகையில் நிர்வகிப்போம். 

    இந்த ஆண்டில் வருமான வரி வசூல் அபரிமிதாக உள்ளதால் செலவினங்களை சரி கட்ட ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி மூலம் கிடைக்கும் பணம் உதவிகரமாக இருக்கும் என்றும் அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். #fiscaldeficittarget  #ArunJaitley
    ×