என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க அழுத்தம் கொடுக்கத் தொடங்கி உள்ளது- த.வெ.க நிர்வாகி அருண்ராஜ்
- பாஜகவைப் பற்றி விஜய் பேசவில்லை என்பது தவறு.
- பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் கூறிவிட்டார்.
த.வெ.க-வுக்கு பா.ஜ.க அழுத்தம் கொடுக்கத் தொடங்கி உள்ளதாக தவெகவின் நிர்வாகி அருண்ராஜ் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். சிபிஐ விசாரணை, 'ஜனநாயகன்' படப் பிரச்னை மூலமாக பாஜக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக அவர் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் பெருகிவரும் ஆதரவால் பெரும்பான்மை யான தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகக் வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிக்கும்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை முடிவு. இதனை முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார். கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள் என எதிர்பார்த்து அதனை அறிவிக்கவில்லை. இதனை எந்த கட்சியும் சொல்ல வில்லை. சமூக நீதி அடிப்ப டையில் செயல்படும் த.வெ.க. தான் சொல்லி இருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தி.மு.க. ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் நேரத்தில் தோல்வி அடையும் கட்சியோடு தே.மு.தி.க. சேர்ந்து இருப்பதால் அவர்களும் தோல்வி அடைவார்கள்.
கூட்டணி குறித்த முடிவுகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார். 90 சதவீத மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். இளைஞர்களை அரசியல் நோக்கி இழுத்தது தமிழக வெற்றிக் கழகம் தான்.
தி.மு.க. அவசர அவசரமாக தே.மு.தி.க. உள்ளே கொண்டு வந்ததன் காரணம் என்ன? தேர்தல் பயம் தி.மு.க.விற்கு வந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது.
ஆளும் தி.மு.க.விற்கு கூட்டங்கள் நடத்த உடனடியாக அனுமதி கிடைக்கிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நூற்றுக்கணக்கான விதிமுறைகள், அனுமதி மறுப்பு என தடைகளை ஆளும் கட்சியினர் செய்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல் மாநாட்டிலேயே கொள்கை எதிரி பா.ஜ.க., அரசியல் எதிரி தி.மு.க. என இரண்டு ஆளும் கட்சிகளை அறிவித்துவிட்டார். பா.ஜ.க. பல்வேறு அழுத்தங்களை கொடுக்க முயற்சி செய்தது. தற்பொழுது ஜனநாயகன் படம் நிறுத்தம், சி.பி.ஐ. விசாரணை என அழுத்தம் கொடுத்து வருகிறது. மதவாத பா.ஜ.க.வுடன் கூட்டணியில்லை என விஜய் அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






