என் மலர்
நீங்கள் தேடியது "கொள்கை முடிவு"
- கொள்கை முடிவு என்பதால் தான் முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார்.
- தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆட்சியில் பங்கு என அறிவித்தும் கூட்டணிக்கு கட்சிகள் வரவில்லையே என்ற கேள்விக்கு தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னதாக த.வெ.க.வின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து, அதன் அடிப்படையில் ஒரு வலிமையான தேர்தல் அறிக்கையை உருவாக்கத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு அமைப்பிற்கும் பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பிரசார குழுவின் மிக முக்கிய உறுப்பினராக செங்கோட்டையன் செயல்பட்டு வருகிறார். செங்கோட்டையன் ஒரு குழுவிற்கு தலைமையாக உள்ளார். கட்சியில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு தலைவர் இருப்பதால், அவர் தனித்து ஒன்றும் இல்லை. அவர் கட்சியின் ஒரு அங்கமாகவே இருக்கிறார்.
அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விஜய் திகழ்கிறார். ஒரு தலைமை என்பது தானாகவே உருவாக வேண்டும். மற்றவர்கள் சொல்லி உருவாகக்கூடாது.
தற்போதைய சில கூட்டணிகள் மேலிடத்து அழுத்தம் மற்றும் டெல்லியின் உத்தரவு காரணமாகவே இணைந்துள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவே ஆன்லைன் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மக்கள் குறைகளை தலைவர் விஜய் பெற்று வருகிறார்.
தி.மு.க. ஒரு "தீய சக்தி". அந்த சக்தியை வீழ்த்துவதே த.வெ.க.வின் முதன்மை இலக்கு. கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எங்களது கட்சி மிகவும் தெளிவாக இருக்கிறது.
தி.மு.க. சிறுபான்மையினரை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. ஆனால், சிறுபான்மையினரின் உண்மையான காவலராக விஜய் இருப்பார்.
வேலூரில் நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் "முதல்-அமைச்சர் நிகழ்ச்சி இருப்பதாகக் கூறி எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
30 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இவ்வாறு வேண்டுமென்றே முட்டுக்கட்டை போடுவது முறையல்ல.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது தவெகவின் கொள்கை முடிவு. கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள் என எண்ணி அந்த அறிவிப்பை வெளியிடவில்லை. கொள்கை முடிவு என்பதால் தான் முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அந்த ஆலையை மூட வேண்டும் எனவும் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் தீவிரமடைந்த போது, அதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த அரசாணை அவசரகதியில் இயற்றப்பட்டது என்றும், முறையாக அரசாணை பிறப்பிக்கப்படவேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அரசாணை பிறக்கப்பட்டதா என கேள்வி எழுப்பியது. மேலும், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு பின்னர் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதிலளித்த தமிழக அரசு, கொள்கை முடிவு எடுக்கப்பட்டுதான் அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவே அரசாணை வெளியிடப்பட்டது என்றும் பதிலளித்தது. தமிழக அரசின் இந்த பதிலை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழக்கை முடித்துவைத்தது. #SterliteProtest






