search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sterlite company"

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான தமிழக அரசு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #SupremeCourt #Sterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது.



    இந்த நிலையில் நேற்று தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் ஆஜராகி, தங்கள் தரப்பு மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகம் முறைப்படி பட்டியலிடும் போது இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். #SupremeCourt #Sterlite
    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு 45 நாட்களுக்கு பின்னர் ஊழியர்களுக்கு ஆலை நிர்வாகம் அவசர அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ThoothukudiProtest #sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது கடந்த மே மாதம் 22-ந்தேதி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடி சீல் வைத்தது. ஆலையை நிரந்தரமாக மூடவும் அரசு நடவடிக்கை எடுத்தது.

    ஆலையில் இருக்கும் அமிலங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே ஆலை மூடப்பட்டதால் ஏராளமான தொழிலாளர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கேட்டு பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மனு கொடுத்துள்ளது.

    மேலும் ஒப்பந்ததாரர்களும் ஆலையை திறக்க‌ வலியுறுத்தி மனுக்கள் கொடுத்து வருகின்ற‌னர். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவது குறித்தும் அரசு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க தனி இணையதளத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியது.

    ஸ்டெர்லைட் ஆலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பிற மாவட்டத்தினர், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என 2 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் பலரும் குடியிருப்பை காலி செய்து சென்றுவிட்டனர். உள்ளூர் ஊழியர்கள் மாற்றுப்பணிக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளனர். மும்பை, பெங்களூரில் இருந்து பணியாற்றியவர்கள் தூத்துக்குடியில் இருந்து ஊருக்கு சென்றுவிட்டார்கள்.



    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களை இன்று உடனே பணிக்கு திரும்புமாறு ஆலை நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. ஆலையில் வந்து ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்யவும் நிர்வாகத்தினர் அறிவுறித்தி உள்ளனர். ஆலையில் இருந்து வாகனங்கள் மூலமாக ஊழியர்களை அழைத்துவரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    அனைத்து ஊழியர்களையும் ஆலை குடியிருப்பு பகுதிக்கு வருமாறு கூறினர். இதையடுத்து ஆலைக்கு பல்வேறு பகுதியில் உள்ள ஊழியர்கள் இன்று காலை வர தொடங்கினர். ஆலை வாகனங்கள் மூலமாகவும் ஊழியர்கள் அழைத்து வரப்பட்டார்கள். ஆலை குடியிருப்பு பகுதிக்கு வந்த அவர்களிடம் ஊழியர்களின் வருகை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆலையை மீண்டும் இயக்கச்செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று ஆலையை திறக்க வலியுறுத்தி மனு கொடுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஆலை மூடப்பட்டு 45 நாட்களுக்கு பின்னர் ஊழியர்களுக்கு ஆலை நிர்வாகம் அவசர அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். #ThoothukudiProtest #sterlite
    தொழிற்சாலைகளை மூடுவது பொருளாதார தற்கொலை என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஜக்கிவாசுதேவ் கருத்து கூறியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். #Sterlite #jaggivasudev
    சென்னை:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில், சமீபத்தில் லண்டனுக்கு சென்ற யோகா குரு பாபா ராம் தேவ் வேதாந்தா குழுமத்தின் தலைவரும், ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனருமான அனில் அகர்வாலையும், அவருடைய மனைவியையும் நேரில் சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் பாபா ராம்தேவ் ஸ்டெர்லைட் ஆலையின் பெயரைக் குறிப்பிடாமல் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

    இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் ஈஷா அறக்கட்டளை நடத்தி வரும் சத்குரு ஜக்கி வாசுதேவ், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் தாமிரம் உருக்கும் தொழிலில் வல்லுநர் இல்லை. ஆனால், இந்தியாவில் தாமிரத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், அதன் தேவையும் அதிகம் என்பது மட்டும் எனக்கு தெரியும். நாம் சொந்தமாக தாமிரம் உற்பத்தி செய்யாமல் இருந்தால், சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கும்.



    சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் குறித்து சட்டப்பூர்வமாகவே அணுக வேண்டும். மிகப்பெரிய தொழில்களை அடித்துக்கொல்வது என்பது பொருளாதார தற்கொலையாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஜக்கி வாசுதேவ் கருத்துக்கு நடிகர் சித்தார்த் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Sterlite #jaggivasudev
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பிக்கப்பட்ட அரசாணை முறையாக பிறப்பிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் இன்று பதில் தாக்கல் செய்துள்ளது. #SterliteProtest
    மதுரை:

    தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அந்த ஆலையை மூட  வேண்டும் எனவும் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் தீவிரமடைந்த போது, அதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது.



    இந்த அரசாணை அவசரகதியில் இயற்றப்பட்டது என்றும், முறையாக அரசாணை பிறப்பிக்கப்படவேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அரசாணை பிறக்கப்பட்டதா என கேள்வி எழுப்பியது. மேலும், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு பின்னர் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.

    இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதிலளித்த தமிழக அரசு, கொள்கை முடிவு எடுக்கப்பட்டுதான் அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவே அரசாணை வெளியிடப்பட்டது என்றும் பதிலளித்தது. தமிழக அரசின் இந்த பதிலை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழக்கை முடித்துவைத்தது. #SterliteProtest
    தூத்துக்குடி புனரமைப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.620 கோடி வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #ThoothukudiProtest #Sterlite
    மதுரை:

    தூத்துக்குடி புனரமைப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.620 கோடி வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதுபற்றி, சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜய்நிவாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் அமைதியாக போராட்டம் நடத்தினார்கள். கடந்த மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தின்போது போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 150-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலையால் 25 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு காற்று, நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளது. இதனால் அங்குள்ள ஏராளமான கிராமங்களில் மக்களுக்கு புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 கோடியை இழப்பீடாக வேதாந்தா நிறுவனம் வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைக்கும் பணிகளுக்காக அந்த நிறுவனம் சார்பில் ரூ.620 கோடியை தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்தவேண்டும்.



    அந்த நிதி மூலம் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளான மீளவிட்டான், குமரரெட்டியாபுரம், மடத்தூர், கோரம்பள்ளம், புதுக்கோட்டை மற்றும் மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #ThoothukudiProtest #Sterlite
    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றிய அரசாணை தெளிவாக இல்லை. எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் ஒரு கொள்கை முடிவு எடுத்து ஆணை பிறப்பிக்கலாம் என்று, மதுரை ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது.#sterliteplant #ThoothukudiProtest
    மதுரை:

    கடந்த மாதம் 22-ந்தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரிகள், தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். பலியானவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை செய்து தர வேண்டும் என்று ஏராளமான வழக்குகள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    இவ்வாறு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 14 வழக்குகள், நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

    அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, “துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நிவாரணம் வழங்கி அவர்களின் உயிரை மதிப்பிட முடியாது” என்று கருத்து தெரிவித்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வைகோவும் நேரில் வந்திருந்தார். அவர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், அஜ்மல்கான் வாதாடியதாவது:-

    “கடந்த மாதம் 28-ந் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், காற்று மாசுபடுதல், தண்ணீர் மாசுபடுதல் குறித்த சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனுமதி காலாவதி ஆகிவிட்டது. மீண்டும் புதிதாக அனுமதி கொடுக்கவில்லை என்பதால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 48-வது பிரிவின் அடிப்படையில் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

    இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தீர்ப்பு ஆயத்திலோ அல்லது கோர்ட்டிலோ முறையீடு செய்து அனுமதி பெற்றால் தமிழக அரசு ஆணை செல்லுபடி ஆகாது. ஆலையை மீண்டும் இயக்குவதற்கு வாய்ப்பு உண்டாகும். எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான காரணங்களை விளக்கமாக பட்டியலிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான இந்திய அரசியல் சட்டத்தின் 48-வது பிரிவின்கீழ் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அப்போது தான் ஆலையை நிரந்தரமாக மூடும் சூழல் உருவாகும்.”

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

    “காற்று, தண்ணீர் சட்டப்பிரிவுகளின்கீழ் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்காததை மட்டுமே குறிப்பிட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் 48-வது பிரிவை காரணம் காட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு வழங்கிய அரசு ஆணை திட்டவட்டமாகவும், தெளிவாகவும் இல்லை. எனவே அதை ஒரு கொள்கை முடிவாக எடுத்து தமிழக அரசு ஆணை பிறப்பிப்பதற்கு இந்த கோர்ட்டு யோசனை கூறுகிறது. இந்த யோசனையை தமிழக அரசுக்கு அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும்.“

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

    பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

    முன்னதாக, துப்பாக்கி சூடு தொடர்பாக வழக்கு தொடர்ந்த வக்கீல்கள், “ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு செய்து வருகின்றனர்” என்று தெரிவித்தனர்.



    அதற்கு, “உரிய ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்தால் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    நீதிமன்றத்துக்கு வெளியே வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜூன் 6-ந் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரிக்கப்பட்டபோது, நான் செய்தியாளர்களிடம் என்ன கூறினேனோ அதுதான் இப்போது நடந்து இருக்கின்றது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு தமிழக அரசு ஏஜெண்டாக செயல்படுகின்றது. அதை எதிர்த்து, 22 ஆண்டுகளாக நான் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி வருகின்றேன்.

    தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந்தேதி 50 ஆயிரம் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தியபோது, தமிழக அரசு காவல்துறையை ஏவி, ஈவு இரக்கமின்றி 13 பேரை சுட்டுக்கொன்றதுடன், பலரை படுகாயப்படுத்தி அடக்குமுறையை ஏவிவிட்டது. இதனால் பொதுமக்கள் உள்ளம் எரிமலையானதால், மக்கள் கொந்தளிப்புக்கு அஞ்சி, ஆலையை மூடுவதாக ஒரு கண் துடைப்பு நாடகத்தை நடத்தி, நீதிமன்றத்தில் செல்லுபடியாகாத அரசு ஆணையை பிறப்பித்துள்ளது.

    ஆலையை இயக்குவதற்கு டெல்லி தீர்ப்பாயத்திலோ, நீதிமன்றத்திலோ ஸ்டெர்லைட் நிர்வாகம் உரிய நிலையை ஏற்படுத்திக்கொள்ளட்டும். அதன்பிறகு, நீதிமன்றம் கூறுவதால் நாங்கள் என்ன செய்யமுடியும்? என்று மக்களையும் ஏமாற்றி விடலாம் என திட்டமிட்டு தமிழக அரசு செயல்பட்டுள்ளது.

    அதனால்தான் ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு நீதிமன்றத்தில் ஆணை பெற்றாலும், லட்சக்கணக்கான மக்களை திரட்டி, மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் நடந்ததுபோல் தூத்துக்குடியிலும் அரங்கேற்றி, ஆலையை நிரந்தரமாக அகற்றுவோம் என்று கூறி வருகின்றேன். ஸ்டெர்லைட் பிரச்சினையில் தமிழக அரசின் முகத்திரை கிழிந்துவிட்டது.

    இவ்வாறு வைகோ தெரிவித்தார். #sterliteplant #ThoothukudiProtest
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரம் தொடர்பாக மேலும் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #Thoothukudi #SterliteProtest #Arrest
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டது.

    வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், மத்தியபாகம், வடபாகம், முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்குகளில் மொத்தம் 197 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இவர்களில் 173 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். கைதானவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கலில் ரகுமான், முகமது யூசுப், முகமது இசரத், வேல்முருகன், சோட்டையன், சரவணன் ஆகிய 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

    கலவர வழக்குகள் தொடர்பாக நேற்று அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகேஷ், நாம்தமிழர் கட்சி நிர்வாகி இசக்கிதுரை உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தார்கள். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் கல் வீசியதாக தூத்துக்குடி 3ம் மைல் பகுதியை சேர்ந்த அக்பர் (வயது 47) என்பவரை சிப்காட் போலீசாரும், கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன் (29), சிலுவைபட்டியை சேர்ந்த சுரேஷ் (29) ஆகியோரை வடபாகம் போலீசாரும் கைது செய்தனர்.

    மேலும் 4 பேரையும் போலீசார் இன்று கைது செய்தார்கள். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. போலீசாரின் கைது நடவடிக்கை காரணமாக தூத்துக்குடியில் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களும் கலக்கத்தில் உள்ள‌னர். #Thoothukudi #SterliteProtest #Arrest
    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எங்களால் ஆலையை தொடங்க முடியாது என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் என்று, தலைமை செயல் அதிகாரி கூறியதாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன.

    ஆனால், எங்கள் தலைமை செயல் அதிகாரி அவ்வாறு எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. தூத்துக்குடியில் அமைதி நிலவ வேண்டும் என்பது தான் எங்கள் முன்னுரிமை. ஆலையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எங்களால் திறக்க முடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    ×