search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? கலெக்டர் ஆய்வு
    X

    வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த கூட்டம் நடந்தது.

    அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? கலெக்டர் ஆய்வு

    • திட்ட பணிகள் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
    • பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அலுவலகக் கோப்புகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், வட்டாட்சியர் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×