search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்லைன் வேலை ஆசையால்  ₹2.50 லட்சம் பணத்தை இழந்த இளைஞர் - 3 பேர் கைது
    X

    ஆன்லைன் வேலை ஆசையால் ₹2.50 லட்சம் பணத்தை இழந்த இளைஞர் - 3 பேர் கைது

    • கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டுள்ளனர்.

    ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் அருண் என்பவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்க்கை க்ளிக் செய்து, அதில் கொடுக்கப்பட்டிருந்த டாஸ்க்-ஐ ஒவ்வொன்றாக அவர் முடித்துள்ளார்.

    இதன் இறுதியில் அவர் வங்கி கணக்கில் இருந்து ₹2.50 லட்சம் வரை பணத்தை இழந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அருண் செலுத்திய வங்கிக் கணக்கு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

    அதில், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நல்லம்பட்டி தேஜா (22), அண்ணாநகர் சாந்தோம் காலனியைச் சேர்ந்த விஜய் (24), ஹைதராபாத்தைச் சேர்ந்த சரஸ்வதி (23) ஆகியோர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

    இதனை அடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, இவர்கள் கமிஷனுக்காக போலி வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணத்தைப் பெற்று, மோசடியில் ஈடுபட்ட வேறொரு கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது .

    இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டதும், மேலும் வடமாநில கும்பல் இவர்களது வங்கி கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வடமாநில கும்பலை காவல்துறை தேடி வருகிறது.

    Next Story
    ×