search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல்"

    • கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தல்
    • ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் பெண்கள் பணிபுரியும் அனைத்து அரசு துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், போட்டி தேர்வு மையங்கள், தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், சிறுகுறு நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா பணியிடங்கள் முதலான அனைத்து பணியிடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரியும், கல்வி பயிலும் பட்சத்தில் அங்கு பாலியல் வன்கொடுமையை தவிர்ப்பதற்காக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013-ன் கீழ் உள் புகார் குழு அமைத்திட வேண்டும். ஒவ்வொரு அலுவலகத்திலும், வேலையிடத்திலும் அதன் பிரிவு பணியிடங்களிலும் 4 உறுப்பினர்கள் கொண்ட உள்ளக புகார் குழு எழுத்துப்பூர்வ ஆணையில் அமைத்திடல் வேண்டும். உள்ளக புகார் குழுவானது கீழ்க்காணும் உறுப்பினர்களை கொண்டு இருக்க வேண்டும். உறுப்பினர்-1 மூத்த நிலையிலுள்ள ஒரு பெண் உறுப்பினர். இவரே குழுவின் தலைமை அலுவலர் ஆவார். உறுப்பினர்-2 அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர், உறுப்பினர்-3 அலுவலகத்தில் பணிபுரிபவர், உறுப்பினர்-4 அலுவலகத்தில் பணிபுரிபவர் சட்டம் பணி அனுபவம் உள்ளவர், உறுப்பினர் 5 சமூகநல பணியாளர் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பெண்கள் தொடர்புடைய பணி அனுபவம் உள்ளவர்.

    மொத்த உறுப்பினர்களில் பாதிப்பேர் பெண்களாகவும், இதன் அலுவல் காலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றத்திற்குரியதாகவும் இருக்க வேண்டும். உள் புகார் குழுவானது பணிபுரியும் இடங்களில் மற்றும் கல்வி பயிலும் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான புகார் மனுக்கள் மீதான விசாரணைக்கு துணை புரிந்து, அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர், கல்வி பயிலும் மாணவிகளுக்கு தங்கள் பணியிடத்தில், நிறுவனங்களில் பாலியல் தொந்தரவு ஏதும் ஏற்படும் நிலையில் இக்குழு மூலம் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார் மனுக்களை பெறுவதற்கு அந்தந்த நிறுவனங்களில் புகார் பெட்டி வைக்கப்படவேண்டும். இந்த உறுப்பினர்கள் அடங்கிய உள்ளக புகார் குழு அமைத்து அதன் உறுப்பினர்கள் விவரம் கன்னியாகுமரி மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு கடிதம் மூலம் அனுப்பிட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

    உள் புகார் குழு மற்றும் புகார் பெட்டி வைத்திடாத அலுவலகங்கள் கல்வி, தொழில் நிறுவனங்கள், போட்டி தேர்வு மையங்கள் மற்றும் பெண்கள், மாணவியர் விடுதிகள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்ட பிரிவுகளின்படி ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    இதுதொடர்பான கூடுதல் விவரம் அறிய மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு ஆயுர்வேத கல்லூரியின் லேப்-டெக்னீசியன் சிறையில் அடைப்பு
    • தனது இன்பத்துக்கு உடன்பட வேண்டும் என்றும் பெண் டாக்டரை மிரட்டினார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டா ரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவி கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். ஆயுர்வேத மருத்துவ படிப்பு முடித்தவர்கள் பயிற்சி டாக்டர்களாக அங்கேயே பணியாற்றி வருகின்றனர். இதுபோக மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஏராளமான டாக்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 35 வயதான பெண் டாக்டர் ஒருவருக்கு, ஆஸ்பத்திரியின் உறைவிட மருத்துவ அதிகாரி (பொறுப்பு) ஆன்டனி சுரேஷ்சிங் (வயது 52) என்பவா் தொல்லை கொடுத்தார். மேலும் அவர், தனது இன்பத்துக்கு உடன்பட வேண்டும் என்றும் பெண் டாக்டரை மிரட்டினார். அதுபற்றி சம்பந்தப்பட்ட பெண் டாக்டர், கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆன்டனி சுரேஷ்சிங்கை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் படிக்கும் மேலும் 2 மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளது. அதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவிகள் 2 பேரும் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வதனத்துக்கு ஆன்லைன் மூலமாக தனித் தனியாக 2 புகார் மனு அனுப்பியுள்ளனர்.

    அந்த மனுக்களில், ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வரும் சுசீந்திரம் காக்கமூர் பகுதியை சேர்ந்த வைரவன் (வயது 35) என்பவர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மாணவிகளின் புகார் மனு மீது விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தர விட்டார். அதன்பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து வைரவனை கைது செய்தனர்.

    இதுபற்றி போலீசார் கூறுகையில், "கைதான வைரவன் மீது 2 மருத்துவ மாணவிகள் புகார் அளித்துள்ளனர். தங்களை பாலியல் ரீதியாக உரசியதாக புகாரில் கூறியி ருக்கிறார்கள். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்துள்ளது. இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் வைரவன் 2 மாணவிகளுக்கும் பாலி யல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. எனவே அவர் கைது செய்யப்பட் டுள்ளார்" என்றனர்.

    இதனையடுத்து கைதான வைரவனை போலீசார் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நாகர்கோவில் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வைரவன் நாகர்கோவில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வைரவனுக்கு நாளை மறுநாள் (27-ந்தேதி) திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஒரு நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் புது மாப்பிள் ளையை போலீசார் கைது செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
    • நேற்றும் அந்த மாணவி வழக்கம்போல டியூசனுக்கு சென்றார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்த 12 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி தினமும் டியூசனுக்கு சென்று வருவார். அவ்வாறு செல்லும் அந்த மாணவியை வாலிபர் ஒருவர் தினமும் பின் தொடர்ந்து சென்று தாலலை கொடுத்தப்படி இருந்துள்ளார். நேற்றும் அந்த மாணவி வழக்கம்போல டியூசனுக்கு சென்றார். பின்பு டியூசன் முடிந்ததும் இரவில் பீச் ராடு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மாணவிக்கு ஏற்கனவே தொல்லை கொடுத்து வந்த வாலிபர் அங்கு வந்தார்.

    அவர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை செய் துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பயத்தில் அலறினார்.இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். அவர்கள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்பு அந்த வாலிபரை கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். போலீசார் அந்த வாலிப ரிடம் விசாரணை நடத்தினார்கள். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க விரும்பவில்லை.

    இதனால் அந்த வாலிபர் மீது போலீசாரால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதுபோன்ற செயலில் ஈடுப டக்கூடாது என்று அந்த வாலிபரிடம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து அனுப்பினர். டியூசனுக்கு சென்று வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலி பருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பீச் ரோடு பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

    • 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் மீது போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது.
    • சகோதரரின் பராமரிப்பில் உள்ளார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை இழந்த மாணவி, தற்போது சகோதர ரின் பராமரிப்பில் உள்ளார்.

    சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் கார்த்திகேயன் (வயது 44) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாக கூறப்படு கிறது. இதுகுறித்து சிறுமி குடும்பத்தினரிடம் தெரி வித்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசா ரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் கூலித்தொழிலாளி.
    • இவர் அதே பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (55). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் தாயார் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, தொழிலாளி சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  

    • தாராபுரம் தளவாய்பட்டி னத்தை சேர்ந்த பார்த்தீபன் என்பவர் வந்தார்.
    • தன்னை பார்த்தீபன் ஆபாசமாக பேசியதாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேவேந்திரர் தெருவை சேர்ந்த 22 வயதான இளம்பெண், தாராபுரம் சர்ச் சாலையில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார்.

    பாலியல் தொல்லை

    சம்பவத்தன்று கடையின் உரிமையாளர் முருகன் வெளியே சென்றிருந்த நிலையில், கடைக்கு முருகனின் நண்பரான தாராபுரம் தளவாய்பட்டி னத்தை சேர்ந்த பார்த்தீபன் என்பவர் வந்தார். அப்போது பார்த்தீபனுக்கும், இளம்பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டது.

    இது குறித்து அந்த இளம்பெண் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் , தன்னை பார்த்தீபன் ஆபாசமாக பேசியதாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறியுள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பத்மபிரியா, பார்த்தீபன் மீது பெண் வன் கொடுமை சட்டம் மற்றும் ஆபாசமாக பேசியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வலைவீச்சு

    இதனிடையே பார்த்தீபன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகி ன்றனர். தலைமறை வான பார்த்தீபன் தாரா புரம் பூளவாடி சாலையில் உள்ள தேர்பாதை டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • மேலும் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி .போலீசார் தீவிரம்
    • காசிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்ட னைக்கு பாடகி சின்மயி வரவேற்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் காசி (வயது 28) என்ஜினியர்.

    இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் உள்பட சிலர் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் அளித்தனர். அந்த புகாரில் காசி தங்களுடன் நெருங்கி பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கூறியிருந்தனர். மேலும் காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி புகாரும் அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக அவர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து காசியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதில் காசிக்கு உதவியதாக அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆதாரங்களை அளித்ததாக காசியின் தந்தை தங்க பாண்டியனையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து காசியின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.

    காசி ஜாமீன் கேட்டு பலமுறை மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக காசி ஜெயிலிலேயே இருந்து வருகிறார். அவர் மீதான 8 வழக்குகளில் 6 வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ள நிலையில் அந்த வழக்குகள் விசாரணை நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்த பாலியல் வழக்கில் 29 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் காசியிடமிருந்து கைப்பற் றப்பட்ட லேப்டாப்பில் இருந்த ஆபாச படங்களின் ஆதாரங்களை வைத்தும் விசாரணை நடந்து வந்தது.

    இந்த வழக்கில் காசி குற்றவாளி என்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பலாத்கார வழக்கில் 3 பிரிவுகளின் கீழ் காசிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 376 (2 என்) பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்திய தண்டனைச் சட்டம் 354 (சி) இளம் பெண்ணை அந்தரங்க வீடியோ எடுத்த குற்றத்திற் காக 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், 506 (2) கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. வழக்கு தீர்ப்பு காரணமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்து காசியை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்திருந்தனர். தீர்ப்பை கேட்டு காசி கண் கலங்கினார். இதை தொடர்ந்து மீண்டும் அவரை போலீசார் பாளை யங்கோட்டை ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

    காசிக்கு சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப் பட்டதையடுத்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காசிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்ட னைக்கு பாடகி சின்மயி வரவேற்பு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    காசி மீதான பாலியல் வழக்கில் அவருக்கு தண்ட னை விதிக்கப்பட்டதை யடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள மேலும் 5 வழக்குகளை துரிதமாக முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த வழக்குகள் விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சாட்சிகள் விசாரணை தற்போது நடந்து வருகிறது. இந்த வழக்குகளுக்கான தீர்ப்புகளும் விசாரணை முடிந்து விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ள மேலும் 2 வழக்குகளில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பெண்களிடம் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட பல புகார்களை பெண்கள் கூறியதால் தலைமறைவானார்.
    • பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ ஜாமீன் கேட்டு நாகர்கோவில் கோர்ட்டில் விண்ணப்பித்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ(வயது 25) மீது பாலியல் புகார் கூறப்பட்டது. பெண்களிடம் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட பல புகார்களை பெண்கள் கூறியதால், அவர் தலைமறைவானார். இந்த நிலையில் நாகர்கோவிலில் பதுங்கி இருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து காவலில் எடுத்தும் விசாரித்தனர். அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ ஜாமீன் கேட்டு நாகர்கோவில் கோர்ட்டில் விண்ணப்பித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    • தி.மு.க. கவுன்சிலர் பக்கிரிசாமி நடத்தும் நர்சரி பள்ளியில் படித்த 6 வயது சிறுமி, பள்ளி தாளாளர் பக்கிரிசாமியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
    • அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்

    கடலூர்:

    விருத்தாசலத்தில் கடந்த 11-ந்தேதி தி.மு.க. கவுன்சிலர் பக்கிரிசாமி நடத்தும் நர்சரி பள்ளியில் படித்த 6 வயது சிறுமி, பள்ளி தாளாளர் பக்கிரிசாமியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.  இந்நிலையில் பாதிக்கப் பட்ட சிறுமிக்கு நீதிகேட்டு பா.ஜ.க. மாநில செயலாளரும், விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோஜ். பி. செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப் பட்ட சிறுமிக்கு மருத்துவ மனையில் உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும், பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும், முதல் தகவல் அறிக்கையில் உண்மை தகவலை பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களிட்டு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பா.ஜ.க. கடலூர் மாவட்ட தலைவர் மணி கண்டன், விருத்தாசலம் நகர செயலாளர் மணியழகன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு
    • அரசு பள்ளி ஆசிரியருக்கு வலை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உடும்பியத்தை சேர்ந்த செல்லமுத்து மகன் மணிகண்டன் (வயது 39) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் 9 மற்றும் 10ம்வகுப்பிற்கு ஆங்கில பாடம் நடத்தி வருகிறார். மாணவிகளிடம் தவறாக நடத்தல், இரட்டை அர்த்ததில் பேசுவது, சில்மிஷம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த 16ம்தேதி கடிதம் மூலம் உதவி தலைமையாசிரியர் மணியிடம் புகார் அளித்தனர்.இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் மகேஸ்வரி ஆகியோர் பள்ளிக்கு சென்று பள்ளி மாணவிகளிடம் விசாரணை செய்ததில் ஆசிரியர் மணிகண்டன் மீதான புகார்கள் உண்மை என தெரியவந்தது.இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் மணிகண்டனை தேடிவருகின்றனர்.


    • குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பது போல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
    • முருகன், செல்வம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் செக்கடி தெருவை சேர்ந்த ஒருவரின் 8 வயது பெண் குழந்தைக்கு அதே பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளர்கள் முருகன் (வயது 55) மற்றும் செல்வம் (65) 2 பேரும் அந்த குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பது போல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

    சம்பவத்தன்று அதேபோல் இருவரும் அந்த பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் போது அந்த குழந்தையின் தந்தை பார்த்து இருவரையும் கண்டித்துள்ளார்.

    பின்னர் அவர் இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார், அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முருகன், செல்வத்தை கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • பெண் சுயநினைவின்றி கிடந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்
    • திருவட்டார் போலீசார் அதிரடி நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள கொக்கவிளை பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் வீட்டில் ரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    அந்தப் பெண் சுய நினைவின்றி இருந்ததால், குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்தப் பெண் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள், திருவட்டார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட னர். அப்போது ஒரு வாலிப ரின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, அந்த வாலிபர், சுயநினைவின்றி கிடந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், அதற்கு அவர் மறுத்ததால் தாக்கி விட்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செயதனர். விசார ணையில் அவரது பெயர் எட்வின் (வயது 28) என்ப தும், தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. கைதான எட்வின் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    பக்கத்து வீட்டில் வசித்த பெண் மீது எனக்கு மோகம் இருந்தது. சம்பவத்தன்று அந்தப் பெண், உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து சென்றார். இதனை பார்த்ததும் எனக்கு அவர் மீது மேலும் ஆசை ஏற்பட்டது.

    அதன்பிறகு நான் மது அருந்தினேன். அந்தநேரத்தில் நிகழ்ச்சி முடிந்து அந்த பெண் வீடு திரும்பினார். அதனை பயன்படுத்தி நானும் வீட்டுக்குள் புகுந்தேன். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேலும் அவர் சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்தேன்.கட்டிலில் அவரது தலையை மோதிய தில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். பின்னர் நான் வீட்டில் இருந்து வெளியேறி விட்டேன்.

    இதற்கிடையில் அவரது கணவர் வந்து மனைவி சுயநினைவின்றி கிடப்பதை பார்த்து அலறினார். நானும் அங்கு சென்று அவருக்கு உதவுவது போல் நடித்தேன். மேலும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்த போது, நானும் அங்கே இருந்து, நகைக்காக தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருத்துக்களை தெரிவித்தேன். ஆனால் என் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    எட்வினை கைது செய்தது குறித்து போலீசார் கூறுகையில், சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போது, எட்வின் பேசியது மற்றும் அவரது நடவடிக்கைகள் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. எனவே அவரை கண்காணிக்க முடிவு செய்தோம். அவருக்கே தெரியாமல், அவரை கண்காணித்தோம். இதில் சந்தேகம் மேலும் அதிகரித்ததால் எட்வினை பிடித்து விசாரித்தோம். முதலில் மறுத்த அவர், பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டார் என்றனர்.

    ×