search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்
    X

    பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்

    • போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு
    • அரசு பள்ளி ஆசிரியருக்கு வலை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உடும்பியத்தை சேர்ந்த செல்லமுத்து மகன் மணிகண்டன் (வயது 39) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் 9 மற்றும் 10ம்வகுப்பிற்கு ஆங்கில பாடம் நடத்தி வருகிறார். மாணவிகளிடம் தவறாக நடத்தல், இரட்டை அர்த்ததில் பேசுவது, சில்மிஷம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த 16ம்தேதி கடிதம் மூலம் உதவி தலைமையாசிரியர் மணியிடம் புகார் அளித்தனர்.இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் மகேஸ்வரி ஆகியோர் பள்ளிக்கு சென்று பள்ளி மாணவிகளிடம் விசாரணை செய்ததில் ஆசிரியர் மணிகண்டன் மீதான புகார்கள் உண்மை என தெரியவந்தது.இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் மணிகண்டனை தேடிவருகின்றனர்.


    Next Story
    ×