என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் புகாரில் கைதான பாதிரியாருக்கு ஜாமீன்
    X

    பாலியல் புகாரில் கைதான பாதிரியாருக்கு ஜாமீன்

    • பெண்களிடம் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட பல புகார்களை பெண்கள் கூறியதால் தலைமறைவானார்.
    • பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ ஜாமீன் கேட்டு நாகர்கோவில் கோர்ட்டில் விண்ணப்பித்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ(வயது 25) மீது பாலியல் புகார் கூறப்பட்டது. பெண்களிடம் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட பல புகார்களை பெண்கள் கூறியதால், அவர் தலைமறைவானார். இந்த நிலையில் நாகர்கோவிலில் பதுங்கி இருந்த அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து காவலில் எடுத்தும் விசாரித்தனர். அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ ஜாமீன் கேட்டு நாகர்கோவில் கோர்ட்டில் விண்ணப்பித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    Next Story
    ×