search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேடம்"

    • இந்நிலையில் 'GOAT'படம் குறித்த முக்கிய அப்டேட்கள் இன்று வெளியாகி உள்ளது
    • த்ரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். ஒரு அவர் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

    ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 'GOAT' படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

    படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்து வருகிறது.

    இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்க இருக்கிறது. இதில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன. இதற்கான ஷூட்டிங் லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்தார்.


     


    அதைதொடர்ந்து விரைவில் மாஸ்கோவில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. விஜய்-யின் 'GOAT' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் 'GOAT'படம் குறித்த முக்கிய அப்டேட்கள் இன்று வெளியாகி உள்ளது.

    'GOAT' படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாகவும், வில்லனுமாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் த்ரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். ஒரு அவர் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இதில் ஒரு முழு பாடலுக்கு விஜயும், பிரபுதேவாவும் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடுகிறார்கள். 'GOAT'படம் ஒரு அறிவியல் புனை கதையை தழுவியதாக அமைகிறது.

    • விரதம் தொடங்கும் முதல் நாளின்போது குலசை முத்தராம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பூசாரியிடம் ஆசி பெற்று காப்பு கட்டிக் கொள்வார்கள்.
    • ஒவ்வொரு பக்தரும் என்ன வேடம் அணிய வேண்டும் என அருள்வாக்காகச் சொல்கிறார்கள்.

    கோவிலில் தசரா பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு கடவுளின் வேடங்களை அணிந்த படி வீதி உலாவாக செல்வர். காளி, ஆஞ்சநேயர், சிவன், முருகன், விநாயகன் என பல்வேறு கடவுளைப் போல பக்தர்கள் வேடம் புனைந்து வருவது வேறு எங்குமே இல்லாத சிறப்பு.

    இப்படி வேடம் புனையும் பக்தர்கள் அனைவருமே ஏதாவது ஒரு வேண்டுதலுக்கான நேர்த்திக் கடனைத் தீர்க்கவே இப்படி வருகிறார்கள்.

    அதே வேடத்தில் ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து அதை கோவிலில் செலுத்துகிறார்கள்.

    பல்வேறு அவதாரங்கள் புனைந்து அம்மை, அப்பனைத் தரிசிக்கவும் வேண்டுதலைக் காணிக்கையாக்கவும், ஆண்டுதோறும் பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படும் தசரா பண்டிகையில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது.

    விரதம் தொடங்கும் முதல் நாளின்போது குலசை முத்தராம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பூசாரியிடம் ஆசி பெற்று காப்பு கட்டிக் கொள்வார்கள். அவர்கள் அணியும் வேடத்தை அவர்களே தீர்மானிப்ப தில்லை. அதற்கும் ஒரு வழிமுறை உள்ளது.

    முத்தாரம்மன் சந்நிதியில் முத்து போட்டுப் பார்க்கும் பூசாரிகள், ஒவ்வொரு பக்தரும் என்ன வேடம் அணிய வேண்டும் என அருள்வாக்காகச் சொல்கிறார்கள். அதன்படியே பக்தர்கள் வேடமணிந்து பத்து நாள் திருவிழாவில் பங்கு பெறுவர். பத்து நாள் வழிபாடு முடிந்ததும் கடலில் நீராடி விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், பூஜைகள் நடைபெற்றது.
    • முக்கிய நிகழ்ச்சியான சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு தெய்வீக வேடங்களுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 10-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்றுமுதல் நாள் முக்கிய நிகழ்ச்சியான சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு தெய்வீக வேடங்களுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம், அக்னி கப்பரை வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • இந்த ஆண்டு ஆடி மாத விழாவில் காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
    • காளியம்மன் வேடமடைந்து பக்தர்கள் முக்கிய வீதிகளில் வலம் வந்து அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில் பழமையான சொர்ண மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத விழாவில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேல் காளியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக காளியாட்ட விழா நடைபெறவில்லை. அதனால், இந்த ஆண்டு ஆடி மாத விழாவில் காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து காளியாட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காளியம்மன் வேடமடைந்து பக்தர்கள் முக்கிய வீதிகளில் வலம் வந்து அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மேளதாளங்கள் முழங்க காளியம்மன் நடனமாடியதை பக்தர்கள் கண்டுகளித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தனது சகோதரனை போல யாரும் இறந்துவிடக்கூடாது என கருதி எமதர்மன் வேடமிட்டு, சிக்னல்களில் நின்று கொண்டு ஹெல்மட் அணியாமல் வருபவர்களை எச்சரித்து வருகிறார் வீரேஷ் முட்டினாமாத்.
    பெங்களூர்:

    பெங்களூரை சேர்ந்த மேடை நாடக கலைஞரான வீரேஷ் முட்டினாமாத் பல டிவி சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால், தற்போது நாடகங்களில் நடிப்பதை விட்டுவிட்டு சாலைகளில் அவர் தனது பணியை செய்து வருகிறார். பெங்களூரில் இருக்கும் முக்கிய சிக்னல்களில் எமதர்மன் வேடத்தில் நிற்கும் வீரேஷை நீங்கள் பார்க்கலாம்.

    ஹெல்மெட் அணியாதவர்கள், சாலை விதிகளை மீறி வருபவர்களை பிடித்து அவர் எச்சரிக்கை விடுத்து வருகிறார். போலீசார்தான் வீரேஷை பணியமர்த்தியுள்ளதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், நிஜம் வேறு. கடந்த மாதம் வீரேஷின் மூத்த சகோதரர் சாலை விபத்தில் பலியானார்.

    ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற அவர் விபத்துக்குள்ளாகி, இரண்டு நாட்கள் கோமாவில் இருந்து பின்னர் உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என டாக்டர்கள் வீரேஷிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து, தனது சகோதரர் விபத்துக்குள்ளான சாலையில் சில நாட்களாக வீரேஷ் சுற்றி வந்துள்ளார்.



    அப்போது, பலர் ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிகளை மதிக்காமலும் சென்று வந்ததை பார்த்து வேதனை அடைந்த வீரேஷ், தன்னால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார். தனக்கு தெரிந்த மேடை நாடகத்தில் வேஷம் கட்டும் திறமையை வைத்தே அந்த பணியை வீரேஷ் செய்து வருகிறார்.

    ‘ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வருபவர்களை நான் எச்சரிக்கும் போது பலர் என் மீது கோபப்படுவார்கள். அவர்களிடம் பொறுமையாக எனது சகோதரனுக்கு நடந்த நிலையை கூறுவேன். அதில் ஒருவராவது திருந்தி ஹெல்மெட் அணிவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’ என வீரேஷ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
    ×