search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரபாபு நாயுடு"

    • இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவசர பயணமாக தற்போது டெல்லி விரைந்துள்ளார்.
    • மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளத்தற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள உள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவசர பயணமாக தற்போது டெல்லி விரைந்துள்ளார்.

     

    அவரது டெல்லி பயணத்துக்குக் காரணம் இன்னும் தெரியவராத நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றதற்கு அதன் தலைவரும் தனது நண்பருமான தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக உள்ள சந்திரபாபு நாயுடுவுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளதற்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளத்தற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு, அதைக் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார். 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
    • கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.

    இந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜ்யசபா எம்.பி கபில் சிபல், "நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் எப்போதும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சந்திரபாபு நாயுடு சர்வாதிகார ஆட்சி நடக்க கூடாது என்றும், மாநில அரசுகளின் அனுமதியின்றி அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ என்ன செய்தாலும் அதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

    இந்த நிலைப்பாட்டை எடுத்த அவர்களுக்கு சல்யூட். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது எடுத்த நிலைப்பாட்டில் இருந்து தவறமாட்டார்கள் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி.
    • தெலுங்கு தேசம் வெற்றியானது ஆந்திர மாநில வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி.

    ஆந்திர முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடு இன்று விஜயவாடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர்.

    தெலுங்கு தேசத்திற்கு கிடைத்த வெற்றி மக்களுக்கான வெற்றி. என் வாழ்நாளில் இதுபோன்று வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை நான் கண்டதில்லை.

    வெளிநாடுகளில் இருந்து வந்தும் தெலுங்கு தேசம் கட்சிக்கு விருப்பப்பட்டு வாக்களித்து சென்றுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் தெலுங்கு தேசம் கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

    மக்களுக்கு சேவையாற்ற அதிகாரத்திற்கு வரும் போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன். பா.ஜனதா கூட்டணியில் உறுதியாக நீடிப்பேன். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறேன். மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளேன்.

    நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மக்கள் எங்களுக்கு வாக்களித்து உள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் மிக மோசமான துன்பங்களை சந்தித்தேன்.

    தற்போது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளோம்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக நாங்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கட்சிகள் இணைந்து பணியாற்றியதால் இந்த வெற்றி கிடைத்தது.

    ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் என்னை எதற்காக கைது செய்தார்கள் என்பதற்கு சரியான விளக்கம் தரப்படவில்லை. நான் பல்வேறு அரசியல் மாற்றங்களை பார்த்திருக்கிறேன். நான் அனுபவமிக்கவன். தேசம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்ததால் தேர்தலில் வென்றோம்.

    உள்துறை மந்திரி அமித்ஷா, கூட்டணி கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோருக்கு நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க. கட்சி 240 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

    அந்த வகையில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல்தான் உருவாகி இருக்கிறது. ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் தனித்தனியே தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    அடுத்தடுத்த நடவடிக்கைகள் காரணமாக டெல்லியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

    • காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
    • தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருப்பேன்.

    அரியலூர்:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் 1,03,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனி மேரி ஸ்வர்ணா வெற்றி சான்றிதழை, தொல். திருமாவளவனிடம் வழங்கினார்.

    பின்னர் தொல். திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய அளவில் 400 இடங்களை வெல்வோம் என்று கூறிய மோடி தலைமையிலான அரசு தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இது சங்பரிவார் அமைப்பிற்கும், பொது மக்களுக்கும் இடையே நடைபெற்ற போர். இந்த போரில் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது சங்பரிவார் அமைப்புக்கும் மோடிக்கும் பின்னடைவு.

    இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், ஷின்டே தலைமையிலான சிவசேனா கட்சி உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு ஆதரவு வழங்கி, காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க உதவ வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் தற்பொழுது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 2 இடங்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றதன் மூலம், அங்கீகாரம் பெற்ற கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தார் போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்வாகியுள்ளது.

    ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க., ஆகியவை அங்கீகாரத்தை இழந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுமக்களின் ஆதரவுடன் மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்வாக வாக்களித்த பொது மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்த 2 முறை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்ததால் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை விட வேற எந்த வளர்ச்சி திட்டங்களையும் என்னால் செய்ய முடியவில்லை.

    தற்பொழுது காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தால், ஆளுங்கட்சி உறுப்பினர் என்ற முறையில் என்னால் முடிந்த வளர்ச்சிப் பணிகளை பாராளுமன்ற தொகுதிக்கும், தமிழகத்திற்கும் செய்வேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் கா.சொ.க.கண்ணன், சிந்தனை செல்வன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமரை தேர்வு செய்வதற்கான வியூகம் அமைத்து இருக்கிறோம்.
    • சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.-வால் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், பெரும்பான்மைக்கு தேவையானதை விட 240 இடங்களில் மட்டுமே பா.ஜ.க. தனித்து வெற்றி பெற்றுள்ளதால் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல்தான் உருவாகி இருக்கிறது.

    ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி இந்தியாவில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தடுக்க செய்ய வேண்டியவற்றை நிச்சயம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான வியூகம் அமைத்து இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார்.


     

    இதனிடையே "இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுப்போம்," என்று சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்து இருந்தார்.

    இது குறித்து பேசிய அவர், "இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டதில் இருந்தே, நாட்டில் சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டோம். பிரதமர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்வோம். பா.ஜ.க.-வால் இன்னலுக்கு ஆளானவர்கள் நிச்சயம் எங்களுக்கு துணை நிற்பார்கள். சந்திரபாபு நாயுடுவும் பா.ஜ.க. அரசாங்கத்தால் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்."


     

    இந்த சூழலில்தான், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான முடிவு கிடைக்கவில்லை. இதனிடையே தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனதா தளத்தை சேர்ந்தவரும், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக விளங்கியவருமான நிதிஷ் குமார் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

     


    2024 பாராளுமன்ற தேர்தலில் கிங் மேக்கர்களாக இருக்கும் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் யாருக்கு ஆதரவு என்பதில் தங்களின் நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை. ஒருவேளை இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் இருவருக்கும் மத்திய மந்திரிசபையில் பொறுப்பு வழங்கப்படுமா அல்லது துணை பிரதமர் போன்ற பதவி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இருவரும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்கும் போது, மற்ற கட்சிகளும் ஆட்சியமைக்கும் கூட்டணிக்கு ஆதரவளிக்கும் சூழல் உருவாகலாம். மத்தியில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் பிரதமர் பதவி, துணை பிரதமர் பதவி அல்லது மந்திரி சபையில் இடமளிப்பது உள்ளிட்டவை இந்தியா கூட்டணியின் கடைசிக்கட்ட அஸ்திரமாக இருக்கும் என்று தெரிகிறது.

    யாருக்கு ஆதரவளிப்பார் என்ற வகையில், சந்திரபாபு நாயுடு இன்று காலை செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். அப்படியாக நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற குழப்பத்திற்கு விரைவில் முடிவு கிடைத்துவிடும்.

    • நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
    • பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை இழுக்க ‘இந்தியா’ கூட்டணி முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது தெலுங்கு தேசம் கட்சி. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக வருகிற 9-ந்தேதி பதவியேற்கிறார். அக்கட்சி பாராளுமன்ற தேர்தலில் 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் (ஐக்கிய) 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இதனிடையே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இதை பயன்படுத்தி, பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை இழுக்க 'இந்தியா' கூட்டணி முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆதரவோடு ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சித்து வரும் நிலையில், இவர்கள் யாருக்கு ஆதரவு தரப்போகிறார்கள் என்பது தான் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார். காலை 10 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 160 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது.
    • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆவது உறுதியாகி உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

    ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

    இதற்கிடையே, ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 160 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது.

    தேவையான இடங்களுக்கு மேல் தெலுங்குதேசம் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆவது உறுதியாகி உள்ளது.

    இந்நிலையில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமோக வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு வாழ்த்துகள். தங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் வளர்ச்சியையும் தந்து, அம்மாநில மக்களின் கனவுகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றட்டும் என பதிவிட்டுள்ளார்.

    • தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது.
    • ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார்.

    ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 134 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய சந்திரநாயுடுக்கு தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதே போல் நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்போது ஆந்திராவில் அதிக இடங்களை வென்ற பவன் கல்யாணுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பவன் கல்யாணின் கட்சி தற்போது ஆந்திராவில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

    • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
    • முதல் மந்திரி ஜெகன் ரெட்டி தனது ராஜினாமாவை கவர்னரிடம் அளித்துள்ளார்.

    அமராவதி:

    பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ம் தேதி முடிவடைந்ததால் கடந்த 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

    ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். இந்த தேர்தலில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டது.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜனதா 10 இடங்களிலும் போட்டியிட்டது.வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே தெலுங்கு தேசம்- பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் இருந்தது.

    ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 158 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. கூட்டணி இல்லாமல் தனித்து 131 தொகுதிகளில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது.

    ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமோக வெற்றி பெற்று வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜூன் 9-ம் தேதி அமராவதியில் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமோக வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆந்திர கவர்னர் அப்துல் நசீரிடம் ஜெகன்மோகன் ரெட்டி தனது ராஜினாமா கடிதத்தை இன்று அளித்துள்ளார்.

    • 135 இடங்களில் முன்னிலை பெற்று தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
    • ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார்.

    ஆந்திரா சட்டசபைக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

    இதில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 135 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    இதில் அறுதி பெரும்பான்மை பெற்று தெலுங்கு தேசம் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது. ஆந்திராவின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்கிறார். அவர் வருகிற 9-ந்தேதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் சந்திரபாபு நாயுடு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. 

    • பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
    • சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரிடம் சரத் பவார் பேசியதாக தகவல் வெளியானது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    இதற்கிடையே, சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி கட்சியில் உள்ள சரத் பவார் டெலிபோன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நிதிஷ் குமாரிடமும் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது துணை பிரதமர் பதவி தர தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், சரத் சந்திரா தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்

    கூறுகையில், நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் ஆதரவு அளிக்கும்படி நான் பேசவில்லை. உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. சிறிதளவே வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

    ×