என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chandra Babu Naidu"
- நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெயிலர்
சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இதனிடையே, ஜெயிலர் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
மோகன் லால்
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நீண்ட நாட்களுக்கு பிறகு என் அருமை நண்பர் மரியாதைக்குரிய சந்திரபாபு நாயுடுவுடன் மறக்கமுடியாத நேரத்தை கழித்தேன். அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கவும் அரசியல் வாழ்க்கையில் சிறந்து விளங்கவும் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
After a long time..I met my dear friend and respected Chandrababu Naidu garu and spent memorable time ..I wished him good health and great success in his political life. @ncbn pic.twitter.com/shIoKLROz4
— Rajinikanth (@rajinikanth) January 10, 2023
ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று கட்சி தலைவர்களிடையே டெலிகான்பரன்ஸ் மூலம் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஜெகன் மோகன் ரெட்டி மூலம் ஆந்திராவில் அதிகாரம் செலுத்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் முயற்சி செய்கிறார். ஆந்திராவில் உள்ள வளங்களைப் பார்த்து ஜெகன் மூலம் அதிகாரங்களை கைப்பற்ற முயற்சி மேற்கொள்கிறார். ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தை சந்திரசேகர் ராவிடம் கொடுத்துவிடுவார் என மக்கள் பயப்படுகிறார்கள்.
தெலுங்கானா முதலமைச்சர் தனது தவறான செயல்பாடுகளால் ஐதராபாத்தின் பெருமையை அழித்துவிட்டார். எனவே, ஜெகன் மோகன் ரெட்டிக்கும், சந்திரசேகர் ராவுக்கும் பொதுத் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார். #LSPolls #ChandrababuNaidu #JaganMohanReddy
இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய சந்திரபாபு நாயுடு மற்றும் எம்எல்ஏக்கள், மகாராஷ்டிர மாநிலத்திற்குள் நுழைய முயன்றபோது மகாராஷ்டிர போலீசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கும் மகாராஷ்டிர கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதுபற்றி ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அமித் ஷா, சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததன் பின்னணியில் பாஜக இல்லை என்றும், தேர்தல் நேரங்களில் மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும் தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, மத்தியிலும் மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது என்றும் அமித் ஷா கூறினார். #AmitShah #ChandrababuNaidu #GodavariProtest
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்