search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கு தேசம் கட்சி"

    • கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் உருது 2-வது அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது.
    • சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மேற்கு கோதவரி மாவட்டத்தில், நடந்த ரம்ஜான் நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

    கர்னூல் உருது பல்கலைக்கழகம் மேம்படுத்தப்படும்.

    கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் உருது 2-வது அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் ஐதராபாத், விஜயவாடாவில் ஹஜ் ஹவுஸ் கட்டப்பட்டது. ஹஜ் யாத்ரீகர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.


    தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமியர்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதேபோல் சமூக வலைத்தளத்தில் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட செய்தி குறிப்பில், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாதம் தோறும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

    சொந்த தொழில் செய்ய 5 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். சந்திரண்ணா பீமா திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்.
    • யாருக்கு ஆதரவு என்பதை உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்வார்கள்- செய்தி தொடர்பாளர்.

    ஆந்திராவில் இருந்து தனியாக பிரிந்த மாநிலம் தெலுங்கானா. ஆந்திர மாநிலத்தில் செல்வாக்கு மிக்க மாநில கட்சியாக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சிக்கு தெலுங்கானாவில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இருந்தபோதிலும் 2018 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து 2 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

    17 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 13-ந்தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோத்ஸ்னா திருநாகரி தெரிவித்துள்ளார். ஆனால் யாருக்கு ஆதரவு என்பதை உயர்மட்ட தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளையில் ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எனத் தெரிவித்துள்ளார்.

    தெலுங்கு தேசம் கட்சி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சி, தெலுங்குதேசம், பா.ஜனதா ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன.

    கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என தெலுங்கு தேசம் முடிவு செய்தது. இதனால் அம்மாநிலத்தின் தெலுங்குதேசம் கட்சி தலைவர் ஞானேஸ்வர் சந்திரசேகர ராவ் கட்சியில் தேர்தலுக்கு முன்னதாக இணைந்தார். அதில் இருந்து தலைவர் இல்லாத அந்த கட்சியின் பல தலைவர்கள், தொண்டர்கள் கட்சியில இருந்து வெளியேறிய வண்ணமாக உள்ளனர்.

    2018 சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்று 3.51 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது. காங்கிரஸ் மற்றும் சிபிஐ உடன் கூட்டணி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வேட்பாளர்களை மாற்றக் கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • தேர்தல் நேரத்தில் போராட்டம் வலுத்து வருவதால் கட்சித் தலைமை விரக்தி அடைந்து உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வேட்பாளர்களை மாற்றக் கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல் சட்டமன்ற தொகுதியில் மூத்த தலைவரான பிரபாகர் சவுத்ரிக்கு சீட்டு மறுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கட்சி அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

    மேலும் அலுவலகத்தில் இருந்த மர சாமான்கள் பிளக்ஸ் பேனர்கள் துண்டு பிரசுரங்களை ரோட்டில் எடுத்து வந்து கொட்டி தீயிட்டு எரித்தனர். மேலும் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    படேறு தொகுதியில் சீட் கிடைக்காததால் பிரசாத் என்பவர் அவரது வீட்டில் இருந்த சந்திரபாபு நாயுடுவின் போட்டோக்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை சாலையில் போட்டு எரித்தார்.

    விஜயநகரம் மாவட்டம் நெல்லிமரலா பங்கர்ராஜுக்கு சீட்டு வழங்காததால் அவர் சுயேசையாக போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.

    இதேபோல் 8 சட்டமன்ற தொகுதிகளில் மூத்த தலைவர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டம் செய்தனர்.

    தேர்தல் நேரத்தில் போராட்டம் வலுத்து வருவதால் கட்சித் தலைமை விரக்தி அடைந்து உள்ளது.

    • பிரச்சார வாகனத்தில் இருந்து சீனிவாஸ் சைக்கிள், சைக்கிள் என மைக்கில் பேசினார்.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான பேன், பேன் சத்தமாக கத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருவூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கோலிகாபுடி சீனிவாஸ் போட்டியிடுகிறார்.

    இவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். அந்த பகுதியில் பிரச்சார வாகனத்தில் இருந்து சீனிவாஸ் சைக்கிள், சைக்கிள் என மைக்கில் பேசினார்.

    அப்போது கீழே நின்று கொண்டு இருந்த பெண்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான பேன், பேன் சத்தமாக கத்தினர்.

    இதனால் கடுப்பான சீனிவாஸ் அங்கிருந்த பெண்களை சைத்தான் சைத்தான் என கூறிவிட்டு வாகனத்தை வேறு ஊருக்கு ஓட்டுமாறு கூறிச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.
    • நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வெற்றிகர சூழ்நிலையை உருவாக்கும் என்று தெரிவித்தார்.

    ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிகளும் உள்ளன.

    வரும் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

    கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர பிரதேச மாநிலம் மோசமாக அழிக்கப்பட்டு இருப்பதாகவும், பா.ஜ.க. மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஒன்றிணைந்து நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வெற்றிகர சூழ்நிலையை உருவாக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் பாப்டாலா மாவட்டத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சந்திர பாபு நாயுடுவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சியின் சைக்கிள் துருப்பிடித்து விட்டதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "தெலுங்கு தேசம் கட்சியின் துருப்பிடித்த சைக்கிள் செயின் சரியாக ஓடவில்லை. இதன் காரணமாக அவர் மத்திய கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளார். தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பலவீன சமூகத்திற்கு ஆதரவாக நிற்கும்," என்று தெரிவித்தார்.

    • 6 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
    • இந்தக் கூட்டணியால் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது.

    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தில் வரும் ஏப்ரலில் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு பா.ஜ.க. மேலிடம் அழைப்பு விடுத்தது.

    இந்த அழைப்பை ஏற்று சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்றனர். அவர்கள் மத்திய மந்திரி அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பா.ஜ.க.-தெலுங்கு தேசம்-ஜனசேனா கட்சிகள் இடையிலான கூட்டணி ஆந்திராவில் உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் இணைந்துள்ளது என அக்கட்சியின் எம்.பி. கனகமேடலா ரவீந்திர குமார் தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க.-தெலுங்கு தேசம் கூட்டணி ஆந்திராவில் உருவாகி உள்ளதால் ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • தெலுங்கு தேசம் கூட்டணியில் 10 பாராளுமன்ற தொகுதி 40 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க. வலியுறுத்தியது.
    • சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து கூட்டணியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க., தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி ஏற்படும் சூழ்நிலை உருவானது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    தெலுங்கு தேசம் கூட்டணியில் 10 பாராளுமன்ற தொகுதி 40 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க. வலியுறுத்தியது. அதற்கு சந்திரபாபு நாயுடு சம்மதம் தெரிவிக்கவில்லை.

    தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற தொகுதிகளுக்கு 94 வேட்பாளர்களையும், ஜனசேனா கட்சிக்கு 24 இடங்களையும் ஒதுக்கி வேட்பாளர்களை அறிவித்தனர். மீதமுள்ள 57 இடங்களை நிலுவையில் வைத்துள்ளது.

    தெலுங்கு தேசம் கூட்டணியில் கட்டாயம் 7 இடங்களுக்கு மேல் ஒதுக்க வேண்டுமென பா.ஜ.க. அடம்பிடித்து வருகிறது. ஆனால் 4 முதல் 5 தொகுதிகளை ஒதுக்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.

    சில நாட்களில் பா.ஜ.க. தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

    இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து கூட்டணியை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    தேர்தல் நெருங்கி வருவதால் விரைவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்படும் என நம்புகிறோம் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.

    ஆந்திர மாநில தேர்தல் பிரசாரத்தில் ஆணுறை (காண்டம்) முக்கியமான கருவியாக மாறி உள்ளது. ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலில் சட்டசபைக்கும் தேர்தல் சேர்ந்து நடக்க இருக்கிறது.

    அதனால் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்படி வீடு வீடாக செல்லும்போது ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பரிசு தொகுப்பை இரு கட்சிகளும் வழங்குகின்றன.

    அந்த பரிசு தொகுப்பில் ஆணுறை பாக்கெட் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வழங்கும் ஆணுறை பாக்கெட்டில் அந்த கட்சியின் தேர்தல் சின்னமும், தெலுங்கு தேசம் வழங்கும் பாக்கெட்டில் அந்த கட்சியின் தேர்தல் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளன.


    தேர்தல் பிரசாரத்தில் ஆணுறை வழங்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இந்த விவாகரத்தில் இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர்.

    ஆனால் இரு கட்சிகளுமே ஆணுறையை வினியோகித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:-

    ஒரு வீட்டில் அதிக குழந்தைகள் இருந்தால் மானியமாக அதிக தொகையை கொடுக்க வேண்டி இருக்கிறது. அதனை குறைக்க ஆணுறை வழங்குகிறோம் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கு தேசம் கட்சியினர் திரைப்பட போஸ்டர்களை கிழித்து எரிந்து தீ வைத்து கொளுத்தினர்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சியினை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

    ஐதராபாத் பிலிம் நகரில் பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அலுவலகம் உள்ளது. சமீபத்தில் ராம் கோபால் வர்மா அரசியல் கட்சி தலைவர்கள் குறித்த 'வியூகம்' என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை கிண்டல் செய்யும் காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.


    இதனால் ஆத்திரம் அடைந்த தெலுங்கு தேசம் கட்சியினர் திரைப்பட போஸ்டர்களை கிழித்து எரிந்து தீ வைத்து கொளுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தெலுங்கு தேசம் கட்சியினரை அங்கிருந்து விரட்டி அடித்தனர். மேலும் கட்சியினர் பிலிம் நகரில் உள்ள அவரது அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.


    வியூகம் போஸ்டர்

    இதுகுறித்து தெலுங்கானா திரைப்பட இயக்குனர் ஒருவர் கூறுகையில் சினிமாவை பொழுதுப்போக்காக பார்க்க வேண்டும். சென்சார் போர்டு சர்டிபிகேட் வழங்கி அனுமதி அளித்த பிறகும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. தெலுங்கு தேசம் கட்சியினர் திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுக்க இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றார்.


    • தெலுங்கு தேசம் கட்சியினர் அப்பகுதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • என்.டி.ராமராவை மக்களின் இதயங்களில் இருந்து அகற்ற முடியாது.

     திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், முன்னாள் முதல் மந்திரியுமான என்.டி. ராமராவ் உருவ சிலைகள் மாநிலம் முழுவதும் உள்ளன.

    இந்த நிலையில் பாபட்லா மாவட்டம் பர்திபுடி சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த என்.டி. ராமராவ் சிலையின் தலையை இரவு மர்ம நபர்கள் துண்டித்து கீழே வீசி சென்றனர்.

    இதனை கண்ட தெலுங்கு தேசம் கட்சியினர் அப்பகுதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். என்.டி. ராமராவ் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது வெட்கக்கேடான செயல். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கோழைத்தனமான செயலில் ஈடுபட்டு உள்ளனர்.

    சிலையின் தலையை துண்டித்தவர்களை கண்டுபிடித்து கிரிமினல் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் கூறுகையில்:-

    வரும் தேர்தலில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற கவலையில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

    இதுபோன்ற செயல்களால் என்.டி.ராமராவை மக்களின் இதயங்களில் இருந்து அகற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை எந்த தவறையும் செய்தது இல்லை.
    • மற்றவர்கள் தவறு செய்யவும் அனுமதித்தது கிடையாது.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜ மகேந்திரவரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர ஐகோர்ட்டு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.

    இதையெடுத்து நேற்று மாலை சந்திரபாபு நாயுடு ஜெயிலிருந்து வெளியே வந்தார். அவரது மனைவி புவனேஸ்வரி மகன் லோகேஷ் மருமகள் பேரக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர்.

    மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    பின்னர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது :-

    எனது ஜாமீனுக்காக போராடிய ஜனசேனா, பி.ஆர்.எஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்னுடைய 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை எந்த தவறையும் செய்தது இல்லை.மற்றவர்கள் தவறு செய்யவும் அனுமதித்தது கிடையாது.

    எனது நேர்மையின் காரணமாக ஜெயிலில் 52 நாட்கள் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆந்திரா தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு மக்கள் என் மீது காட்டிய பாசத்தை விவரிக்க முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார்.
    • ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து விடுவிப்பு.

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    தனது வலது கண்-இல் பிரச்சினை இருப்பதால், அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி 53 நாட்கள் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திரா பிரதேசம் உயர் நீதிமன்றம் நான்கு வார காலத்திற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு இருந்தது.

    ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவரை வரவேற்க தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் அதிகளவில் திரண்டு இருந்தனர். மேலும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு பகுதிகளில் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×