என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நூதன போராட்டம் அறிவிப்பு
ByMaalaimalar29 Oct 2023 6:15 AM GMT (Updated: 29 Oct 2023 6:15 AM GMT)
- சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்த உள்ளனர்.
திருப்பதி:
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்கு மேலாக ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சந்திரபாபுநாயுடு சட்ட விரோத கைதை கண்டித்தும், உறங்கிக் கொண்டு இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி கண்களை திறப்பதற்காக எனக் கூறி இன்று இரவு 7 மணிக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு சாலைகள், வீட்டு மாடிகள், பால்கனிகளில் நின்று 5 நிமிடங்கள் ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்த உள்ளனர்.
இதேபோல் ஸ்ரீகாகுளத்தில் காளி செட்டி என்பவர் தலைமையில் 50 மீட்டர் நீளம் உள்ள கருப்பு துணியை கையில் பிடித்தபடி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X