search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி"

    • டெல்லி தலித் மேயர் பதவியை பாஜக அனுமதிக்கவில்லை என கண்டித்து ஆம் ஆத்மி மாநகராட்சியில் போராட்டம் நடத்தியது
    • மேயர் தேர்தல் ரத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர ஆலோசித்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.

    டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். 10 எம்.பி.க்கள் (7 லோக்சபா மற்றும் 3ராஜ்யசபா) மற்றும் 14 எம்.எல்.ஏ.க்கள் (டெல்லி சட்டசபையில் உள்ள மொத்தமுள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் ஐந்தில் ஒரு பங்கு) மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

    இதன் மூலம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 274 ஆக உள்ளது. ஒரு வேட்பாளருக்கு மேயர் பதவிக்கு 138 வாக்குகள் தேவை .இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 134 கவுன்சிலர்களும் பாஜக வுக்கு 105 கவுன்சிலர்கள் உள்ளனர்.



    ஆம் ஆத்மிக்கு 134 கவுன்சிலர்கள், 13 எம்எல்ஏக்கள் மற்றும் 3 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர் . இதில் 3 சுயேச்சை கவுன்சிலர்களில் ஒருவரின் ஆதரவு ஆம் ஆத்மிக்கு உள்ளது. இதனால் ஆம் ஆத்மிக்கு ஆதரவு 151 ஆக உயர்ந்தது.

    மேலும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளருக்கு 9 காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆதரவும் கிடைக்க இருந்தது.ஆம் ஆத்மிக்கு மொத்த ஆதரவு 160 ஆக உயரும் சூழ்நிலையால் மேயர் தேர்தலில் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.




    டெல்லி மேயர்,துணை மேயர் பதவிக்கான தேர்தல் இன்று 26- ந் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில் மேயர் தேர்தலை கவர்னர் அலுவலகம் நேற்று ரத்து செய்தது. டெல்லி தலித் மேயர் பதவியை பாஜக அனுமதிக்கவில்லை என கண்டித்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

    ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் "தலித் விரோதி பாஜக" என்ற போஸ்டர்களை ஏந்தி கோஷமிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேயர் தேர்தல் ரத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.

    • ராமர் படம் இருக்கும் பேப்பர் தட்டுகளில் பிரியாணி வழங்க கூடாது என்று பஜ்ரங் தள் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
    • மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே இதைச் செய்தார்களா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்

    டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ராமரின் படம் இருக்கும் பேப்பர் தட்டில், பிரியாணி பரிமாறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

    இதை அறிந்த உள்ளூர் மக்களும் பஜ்ரங் தள் உறுப்பினர்களும் கடையைச் சுற்றி, கும்பலாக திரண்டு ராமர் படம் இருக்கும் பேப்பர் தட்டுகளில் பிரியாணி வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்தனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உணவக உரிமையாளரை கைது செய்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா அல்லது மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே இதைச் செய்தார்களா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது.
    • 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி ஒரு தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது.

    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 26-வது லீக் சுற்று ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது.

    நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (ராஜஸ்தானுக்கு எதிராக) என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறித்த லக்னோ அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையில் உள்ளது.

    டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது. லக்னோ ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழற்பந்து வீச்சின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி தத்தெடுப்பு ஆவணங்களை உருவாக்கி குழந்தைகளை விற்றுள்ளனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.5.5 லட்சம் ரொக்கமும், ஆவணங்களும் மீட்கப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் அதையொட்டிய நகரங்களில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை நடைபெறுவதாக சி.பி.ஐ. கவனத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். அப்போது சிலர் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லியில் ரோகிணி மற்றும் கேசவ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக பெண்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட 7 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்களது பெயர் சோனிபட்டை சேர்ந்த நீரஜ், டெல்லி பஸ்சிம் விஹாரை சேர்ந்த இந்து பவார், படேல் நகரை சேர்ந்த அஸ்லம், கன்னையா நகரை சேர்ந்த பூஜா காஷ்யப், மாளவியா நகரை சேர்ந்த அஞ்சலி, கவிதா மற்றும் ரிது ஆகும். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    இந்த கும்பல், குழந்தை இல்லாத தம்பதிகளை சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். பிறந்த பச்சிளம் குழந்தைகளை தத்துக்கொடுப்பு என்ற பெயரில் முறையாக வழங்குவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி பலரும் இந்த கும்பலிடம் பணத்தைக் கொடுத்துள்ளனர். இதன்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் பெறப்பட்டு உள்ளது.

    பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி தத்தெடுப்பு ஆவணங்களை உருவாக்கி குழந்தைகளை விற்றுள்ளனர். இந்த குழந்தைகள் பெற்றோரிடமும், பாதுகாவலர்களிடமும் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 10 குழந்தைகளை இந்த கும்பல் விற்றுள்ளதாக தெரிகிறது.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.5.5 லட்சம் ரொக்கமும், ஆவணங்களும் மீட்கப்பட்டு உள்ளன.

    மேலும் இந்த சோதனையின்போது 2 பச்சிளம் குழந்தைகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

    இதுபோன்ற சட்டவிரோத குழந்தை விற்பனை செய்யும் தொழில் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியிருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மார்ச் 31 அன்று பிற்பகல் 3 மணியளவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உணவகத்தின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
    • 36 வயதுடைய வழக்கறிஞர் ஒருவர் இந்த காரை ஓட்டி வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

    டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் அதிவேகமாக வந்த மெர்சிடிஸ் எஸ்யூவி கார் உணவகத்தின் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) பிற்பகல் 3 மணியளவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உணவகத்தின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து உணவகத்தின் உள்ளே இருந்த மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    36 வயதுடைய வழக்கறிஞர் ஒருவர் இந்த காரை ஓட்டி வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக நொய்டாவில் வசிக்கும் பராக் மைனி என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர், மெர்சிடிஸ் எஸ்யூவி காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த ஓட்டுநர் மது அருந்தி வாகனம் ஒட்டினாரா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    • சுனிதா கெஜ்ரிவாலின் பிரச்சனைகளை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது
    • இந்த நேரத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஒட்டுமொத்த ஜார்கண்ட் மாநிலமும் கெஜ்ரிவால் உடன் நிற்கிறது

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் சந்தித்து பேசினார்.

    இருவரது கணவர்களும் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக டெல்லி மாநில அமைச்சர் அதிசி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை தலைமை தாங்கும் தங்கள் கணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் மத்திய ஏஜென்சிகளின் மிருகத்தனமான அதிகாரத்திற்கு பயப்படாத இரண்டு வலிமையான பெண்களின் இந்த வீடியோவை பார்க்கும்போது பாஜக பயப்பட வேண்டும். இந்த பெண்களின் வலிமை மற்றும் தைரியத்திற்காக நான் தலை வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில் இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில், கல்பனா சோரன் பதிவிட்டுள்ளார். அதில்,

    சுனிதா கெஜ்ரிவாலின் பிரச்சனைகளை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சமயத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை சட்டவிரோதமாக கைது செய்வது, ஜனநாயக நாட்டில் சாதாரண நிகழ்வு கிடையாது. இந்த நேரத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஒட்டுமொத்த ஜார்கண்ட் மாநிலமும் கெஜ்ரிவால் உடன் நிற்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் ஏப்ரல் 4-ம் தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது . அதே போல மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 1-ம் தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல்.
    • அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்து வருகிறார்.

    முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, டெல்லி சட்டசபை கூட்டம் முதல் முறையாக இன்று நடைபெற இருக்கிறது. மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 28 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்கப்படுகிறார்.

    கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற இருக்கிறது. இந்த மனுவை நீதிபதி ஸ்வர்ன காந்த சர்மா விசாரிக்கிறார்.

    கைது செய்யப்பட்ட நிலையிலும், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்து வருகிறார். அந்த வகையில், டெல்லியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு சூழல் நிலவுவது தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதம் நடத்த சுகாதார துறை அமைச்சருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சுகாதார துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் டெல்லி சட்டசபை இன்று கூடுவதாக அறிவித்துள்ளார்.

    இன்றைய கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் இலவச பரிசோதனை மற்றும் மருந்துகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பார். மேலும் மருத்துவமனைகளில் கையிருப்பு எவ்வளவு மருந்துகள் உள்ளன என்ற விவரங்களையும் அவர் தாக்கல் செய்ய இருக்கிறார்.

    தான் கைது செய்யப்பட்ட நிலையிலும், டெல்லி மக்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டுவிட கூடாது என்பதில் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியாக இருப்பதாக அமைச்சர் பர்தவாஜ் தெரிவித்தார். மேலும், டெல்லியில் மருத்து கையிருப்பு, மருத்துவமனைகளில் நடத்தப்படும் இலவச பரிசோதனைகளில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்றும், குறைகள் இருப்பின் அவற்றை எதிர்கொள்வதற்கான திட்டமிடல்களை தயார்படுத்த தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • மாசுபட்ட நாடுகளின் தரவரிசையில் வங்காளதேசம் முதலிடத்தில் உள்ளது.
    • பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

    புதுடெல்லி:

    மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு காற்று மாசுபாடு மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சராசரி ஆயுட்காலத்திற்கு முன்னதாக இறக்கும் 7 மில்லியன் நபர்களின் மரணங்களுக்கு காற்று மாசுபாடு காரணமாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

    இதற்கிடையே, சுவிட்சர்லாந்தில் உள்ள காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐ.க்யு.ஏர் உலகம் முழுவதும் காற்றின் தரம் குறித்த அளவீடுகளுடன் புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான உலக காற்று தர அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. மொத்தம் 134 நாடுகளில் ஆய்வு நடத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:

    உலகிலேயே மாசுபட்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. டெல்லி நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லியில் காற்று மாசை ஏற்படுத்தும் பிஎம்2.5 துகள்களின் செறிவு 2022-ல் ஒரு கன மீட்டருக்கு 89.1 மைக்ரோகிராம் என்ற அளவில் இருந்தது. அது, 2023-ல் 92.7 மைக்ரோகிராமாக மோசம் அடைந்துள்ளது.

    இதேபோல், காற்று மாசு மிகவும் மோசமான பெருநகரங்களில் பீகார் மாநிலம் பெகுசராய் முதலிடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் பி.எம்.2.5 துகள்களின் செறிவு ஒரு கனமீட்டருக்கு 118.9 மைக்ரோகிராமாக உள்ளது. 2022-ம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்த நகரம் இடம்பெறாத நிலையில் 2023-ல் மிகவும் மோசம் அடைந்துள்ளது.

    மாசுபட்ட நாடுகளின் தரவரிசையைப் பொருத்தவரை இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் சராசரியாக பிஎம்2.5 துகள்களின் செறிவு ஒரு கன மீட்டருக்கு 54.4 மைக்ரோகிராம் என்ற அளவில் உள்ளது. 2022-ம் ஆண்டு 53.3 மைக்ரோகிராம் என்ற அளவுடன் 8-வது இடத்தில் இருந்த நிலையில் கடந்த ஆண்டு மேலும் மோசமடைந்துள்ளது.

    இந்தப் பட்டியலில் வங்காளதேசம் முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

    • 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது.
    • திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.

    இந்தியாவில் வாகனத் திருட்டுகள் 2022-ம் ஆண்டுடன் உடன் ஒப்பிடும்போது, 2023-ம் ஆண்டில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என அக்கோ டிஜிட்டல் இன்சூரன்ஸின் 'தெப்ட் அண்ட் தி சிட்டி 2024' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் வாகன திருட்டு தொடர்பாக தினசரி 105 வழக்குகள் பதிவாகிறது. இந்தியாவில் அதிகளவிலான வாகனங்கள் திருடு போகும் நகரங்களில் டெல்லி தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

    இந்தியாவில் திருடப்பட்ட வாகனங்களில் 80% கார்கள் ஆகும். திருடப்பட்ட கார்களில் கிட்டத்தட்ட பாதி கார்கள் (47%) மாருதி சுஸுகி என்று செய்தித்தாள்கள் கூறுகிறது.

    டெல்லியில் ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்படுகிறது. டெல்லியில் மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் கார்கள் தான் அதிகளவில் திருடு போகின்றது. அதைத் தொடர்ந்து ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசையர் ஆகியவை உள்ளன.

    சென்னையில் 2022 -ம் ஆண்டு 5% ஆக இருந்த வாகன திருட்டுகள் 2023-ம் ஆண்டில் 10.5% ஆக இரட்டிப்பாகியுள்ளது. பெங்களூரிலும் வாகனத் திருட்டுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

    • இந்த சம்பவம் குறித்து, டெல்லி அமைச்சர் அதிஷி, தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    • இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டெல்லியில் விகாஸ்புரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கேசாபூர் மண்ட என்ற பகுதியில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான ஒரு ஆழ்துளைக் கிணறு ஒன்று உள்ளது. இந்தக் குழியில் குழந்தை ஒன்று தவறி விழுந்ததாக செய்திகள் வெளியானது.

    தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.

    இந்நிலையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நபர் இன்று பிற்பகல் 3 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். அப்பொழுது குழியில் விழுந்தது குழந்தை இல்லை, 30 வயது மதிப்புடைய நபர் என்று தெரிய வந்துள்ளது.

    அந்த நபர் எப்படி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார் என்றும், இறந்த நபரை அடையாளம் காணும் முயற்சிகளும் நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து, டெல்லி அமைச்சர் அதிஷி, தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார்களால் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் உடனடியாக சீல் வைக்கப்பட்டு, 48 மணி நேரத்திற்குள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

    • ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார்

    கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும். இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார் என்றும், விக்கெட் கீப்பிங் செய்வதற்கு வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான்
    • டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதிக் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    "மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான். இதுகுறித்து எந்த மோதலும் எங்களுக்குள் இல்லை" என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காங்கிரஸ் தலைவரான அபிஷேக் சிங்வியின் வீட்டிற்கு மதிய உணவுக்காக சென்றிருந்தார். அதன் பின்னர், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான். இதுகுறித்து எந்த மோதலும் எங்களுக்குள் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதிக் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டெல்லியில் கூட்டணி இல்லாவிட்டால் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு எளிதாகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்திருந்தார். பஞ்சாபில் காங்கிரஸின் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பர்தாப் சிங் பஜ்வா, "முதலமைச்சர் பகவந்த் மானுக்கு 'நன்றி' தெரிவித்து, இதைத்தான் காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×