என் மலர்
நீங்கள் தேடியது "டெல்லி"
- "இன்னும் எவ்வளவு நாள் ஆம் ஆத்மியையே குறைக்கூறி கொண்டு இருப்பீர்கள்?
- டெல்லி ஒரு gas chamber-ஆக மாறி உள்ளது
டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து வரும்நிலையில் மத்திய அரசும், மாநில அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் நிலைமை சீரடையும் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி ஒரு gas chamber-ஆக மாறியிருக்கும்போது பிரதமர் மௌளம் காத்து வருவதாக குற்றம் சாட்டினார். மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் பாஜக இந்த விவகாரத்தில் போதுமான அக்கறை காட்டவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் மாசுபாடு குறித்த பொது விவாதத்திற்கு தானும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் தயாராக இருப்பதாகவும், பாஜக தனது அமைச்சர்களை அனுப்பவேண்டும் எனவும் சவால் விடுத்தார்.
"இன்னும் எவ்வளவு நாள் ஆம் ஆத்மியையே குறைக்கூறி கொண்டு இருப்பீர்கள்?" என்று கேட்ட அவர், ஆம் ஆத்மி அரசின் கீழ் பஞ்சாபில் பராலி எரிப்பு 90 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் ஆம் ஆத்மி ஆட்சியின் போது டெல்லி இவ்வளவு கடுமையான மாசுபாட்டைக் கண்டதில்லை என்றும், தனது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் பாஜகவின் கவனம் AQI புள்ளிவிவரங்களை நிர்வகிப்பதில்தான் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் காற்று மாசு தொடர்பாக பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால்,
'ஓமனில் பிரதமர், ஜெர்மனியில் எதிர்க்கட்சித் தலைவர், மாசில் தேசத்தின் தலைநகர்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- காற்று மாசு அங்கு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில் GRAP stage-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
- டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
காற்று மாசு அங்கு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில் GRAP stage-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக இன்று முதல் BS-6 தரமற்ற இயந்திர வாகனங்கள் வியாழக்கிழமை முதல் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, மாசு கட்டுப்பாட்டு (PUC) சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் நிரப்ப கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வந்தது.
இந்த முடிவு டெல்லியின் எல்லை நகரங்களான குருகிராம், காஜியாபாத், ஃபரிதாபாத் மற்றும் நொய்டாவிலிருந்து தினமும் பயணிக்கும் சுமார் 12 லட்சம் வாகனங்களை நேரடியாகப் பாதிக்கும்.
இந்த விதிகளை கண்டிப்பாக செயல்படுத்த 126 சோதனைச் சாவடிகளில் 580 காவல்துறையினரையும் 37 அமலாக்கக் குழுக்களையும் அரசாங்கம் நியமித்துள்ளது.
பெட்ரோல் பம்புகளில் PUC விதியைக் கண்காணிக்க போக்குவரத்து, நகராட்சி மற்றும் உணவுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குளிர்காலத்தில் டெல்லியின் மாசுபாட்டிற்கு வாகனங்கள் 25 சதவீதம் வரை பங்களிப்பதாக ஆய்வுகள் காட்டியுள்ளதை அடுத்து, அரசாங்கம் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது.
இதற்கிடையே டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 50 சதவீத அலுவலகத்தில் ஊழியர்களுடன் பணிபுரிய நிறுவனங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
டெல்லி காற்று மாசு பிரச்சினை குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெறும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதிலளிப்பார்.
- டெல்லியில் தற்போது கடும் பனிமூட்டம் நிலவுகிறது.
- இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தற்போது கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, சாலைகளில் தெளிவாகத் தெரியாத நிலை உள்ளது. மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அங்கு ஒரு கிரிக்கெட் போட்டியும் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பந்து வீச்சாளர் முகம் கூட சரியாக தெரியாத நிலையில் பந்தை வீச அதை பேட்டர் விளாசுகிறார். அதில் கீப்பர் மற்றும் பேட்டர் மட்டுமே தெளிவாக தெரிகிறார்கள். மற்றபடி மறுமுனையில் உள்ள பேட்டர் , பந்து வீச்சாளர், நடுவர் ஆகியோர் ஓர் அளவு தெரிந்த நிலையில் சுற்றி யார் எங்கே உள்ளார்கள் என்பதே தெரியவில்லை.
இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் காதலுக்கு கண்ணில்லை என்றால் பரவாயில்லை கிரிக்கெட் விளையாட கண் வேண்டுமே. அதில் பந்து வருவது கூட சரியாக தெரியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இவர்கள்தான் உண்மையான கிரிக்கெட் லவ்வர்ஸ் எனவும் மற்றும் சிலர் என்னதான் பனி மூட்டத்தில் கிரிக்கெட்டில் விளையாடினாலும் பாதுகாப்பு முக்கியம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக நேற்று 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
- விமான சேவை ரத்தானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக நேற்று 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 131 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட மாநிலங்களில் பனி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவுவதால் சென்னை விமான நிலையத்தில் நேற்று 19 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் நாடு முழுவதும் நிலவிய மோசமான வானிலை காரணமாக இன்றும் விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்களில் சேவை ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து புறப்படும் 4 விமான சேவை, 7 வருகை விமான சேவை ரத்து செய்யப்பட்டன.
கொல்கத்தா, ஜெய்ப்பூர், காசியாபாத் நகரங்களுக்கான புறப்பாடு, வருகை விமான சேவை ரத்தானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- வட மாநில நகரங்கள் காற்று மாசுவால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
- தேசிய பாதுகாப்பு வரம்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, 2025 ஆம் ஆண்டிலும் இந்தியாவில் காற்று மாசு ஒரு பெரிய சவாலாகவே இருந்துள்ளது. குறிப்பாக, PM 2.5 போன்ற நுண் மாசுத் துகள்களின் அளவு உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல் அளவை விடப் பல மடங்கு அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதில் இந்தியாவில் குறிப்பாக வட மாநில நகரங்கள் காற்று மாசுவால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மிகவும் மாசுபட்ட நகரங்கள்:
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அசாம்-மேகாலயா எல்லையில் உள்ள பைர்னிஹாட் இந்தியாவில் மிக அதிக காற்று மாசுபாடு அளவைப் பதிவு செய்து, மிகவும் மாசுபட்ட நகரமாக முதலிடத்தில் இருந்தது. இதன் சராசரி PM 2.5 செறிவு தேசிய பாதுகாப்பு வரம்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.
டெல்லி: இந்தியாவின் தலைநகரான டெல்லி தொடர்ந்து மிக மோசமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, இரண்டாவது இடத்தைப் பிடித்தது. குறிப்பாகக் குளிர்கால மாதங்களில் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) இங்கு காற்றின் தரக் குறியீடு (AQI) 400 புள்ளிகளைத் தாண்டி 'அபாயகரமான' (Severe) நிலையை எட்டியது.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது காற்று மாசுக்கு முக்கிய காரணமாக அமைகிறது
பிற முக்கிய நகரங்கள்: கிரேட்டர் நொய்டா, குருகிராம், காஜியாபாத், ஃபரிதாபாத் போன்ற தேசிய தலைநகரப் பகுதிகள் (NCR) மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களும் அதிக மாசுபாடு கொண்ட பட்டியலில் இடம்பிடித்தன.
ஆண்டு முழுவதும் நீடிக்கும் பிரச்சினை: காற்று மாசுபாடு என்பது குளிர்காலப் பிரச்சினை மட்டுமல்ல; பருவமழை மற்றும் கோடை காலங்களிலும் பல மாவட்டங்களில் (சுமார் 60% மாவட்டங்கள்) PM 2.5 அளவு தேசிய சுற்றுப்புற காற்று தரத் தரங்களை (NAAQS) மீறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்கள்
தொழில்துறை மற்றும் கட்டுமானம்: பைர்னிஹாட் போன்ற நகரங்களில் தொழில்துறை அலகுகளின் அதிக செறிவு மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் தீவிரமான கட்டுமான நடவடிக்கைகள் பிரதான காரணங்களாக உள்ளன.
வாகன உமிழ்வுகள்: வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, குறிப்பாக டெல்லியில், காற்று மாசுபாட்டைத் தொடர்ந்து அதிகரிக்கிறது.
விவசாயக் கழிவுகளை எரித்தல்: குளிர்காலங்களில், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பது (சாகுபடி கழிவுகள் எரித்தல்) டெல்லி மற்றும் வட இந்திய நகரங்களில் காற்று மாசு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.
புவியியல் மற்றும் காலநிலை காரணிகள்: குளிர்காலத்தில் காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலை குறைவது, மாசுபடுத்திகள் நிலப்பரப்பிற்கு அருகில் சிக்கி மேகமூட்டத்தை உருவாக்குகிறது.

காற்று மாசுக்கு மற்றொரு முக்கிய காரணம் தொழிற்சாலைகள்
சுகாதார விளைவுகள்: காற்று மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்புகள் மற்றும் முன்கூட்டிய உயிரிழப்புகள் ஆகியவை குறிப்பிடத்தக்க தாக்கங்களாக உள்ளன.
பொருளாதார இழப்பு: காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுகாதாரச் செலவுகள் மற்றும் மனித உழைப்பு இழப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் (GDP) பாதிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள்
இந்திய அரசு காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது:
தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (NCAP): இந்தத் திட்டம் 2019 இல் தொடங்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டுக்குள் PM 2.5 மற்றும் PM 10 அளவுகளில் 40% குறைப்பைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 131 நகரங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காற்றின் தர மேலாண்மை ஆணையம்: தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் (NCR) மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்தக் கட்டமைப்பு செயல்படுகிறது.
கட்ட நடவடிக்கை திட்டம் (GRAP): டெல்லி போன்ற நகரங்களில் காற்றுத் தரம் மிகவும் மோசமடையும் போது, கட்டுமானம், வாகனங்கள் மற்றும் தொழில்துறை செயல்பாடுகளில் கட்டுப்பாடுகளை விதிக்கும் கட்ட நடவடிக்கைத் திட்டங்கள் (Phase III & IV) செயல்படுத்தப்படுகின்றன.
2025 ஆம் ஆண்டு தரவுகளின்படி, இந்தியா மாசுபாடு சவாலைத் தீர்ப்பதில் கணிசமான முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளது.
- உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ரூ.5,000 வரை அபராதம்
- மின்சாரம், எரிவாயு அடிப்படையிலான அடுப்புகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், தந்தூரி தயாரிக்கப் பயன்படும் அடுப்புகளுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது டெல்லி முழுவதும் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள், தாபாக்கள், தெருவோர உணவகங்களில் நிலக்கரி மற்றும் விறகுகளைப் பயன்படுத்தும் தந்தூரி அடுப்புகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திறந்த வெளியில் எவ்விதமான எரிக்கும் செயல்களைச் செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதில் மின்சாரம், எரிவாயு அடிப்படையிலான அடுப்புகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது ரூ.5,000 வரை அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
"நகராட்சி நிறுவனங்களின் ஆணையர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் உட்பட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், சோதனைகளை நடத்தி, தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து உணவகங்களும் உடனடியாக நிலக்கரி மற்றும் விறகு பயன்பாட்டை நிறுத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன" என இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது எக்ஸ் தளத்தில், "திறந்த வெளியில் குப்பை உள்ளிட்டவற்றை எரிக்க வேண்டாம். உங்களின் சிறிய ஒத்துழைப்பு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது.
- காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள்வந்தபோது வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.
மாத வாடகை செலுத்த முடியாமல் வீட்டை விட்டு விரட்டப்படும் சூழலில் குடும்பம் ஒன்று தற்கொலை செய்த சோக சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறி உள்ளது.
டெல்லியின் கல்காஜியில் ஒரு தாய் மற்றும் அவரது இஒரண்டு குழந்தைகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன.
இந்தக் குடும்பம் இங்கு ஒரு வீட்டில் ரூ.40,000 மாத வாடகைக்கு அனுராதா கபூர் (52), அவரது மகன்கள் ஆஷிஷ் கபூர் (32) மற்றும் சைதன்யா கபூர் (27) வசித்து வந்தனர்.
அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது. கட்டுமானத் துறையில் பணிபுரிந்த கணவர், குடும்பத்திற்கு மிகப்பெரிய கடன் சுமையை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த வீட்டின் மூன்றாவது மாடியை டிசம்பர் 2023 இல் குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்தனர். ஆனால் அவர்கள் வாடகை செலுத்தவில்லை.
கடந்த ஆண்டு கணவரும் இறந்த பிறகு, வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தை அணுகினார் .
கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மகன்கள் கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வாடகை தொடர்பாக வீட்டு உரிமையாளருடன் அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து வந்தன.
வீட்டு உரிமையாளரின் புகாரைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி வீட்டை காலி செய்ய காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வந்தபோது, வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.
வீட்டு உரிமையாளர் அழைத்தபோது திறக்காததால், போலி சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்தபோது, தாயும் அவரது இரண்டு மகன்களும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.
உடல்களுக்கு அருகில் ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் பண நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர் .
இறந்தவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
தலைநகர் டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '450' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையில் எட்டியுள்ளதால் நான்காம் கட்ட 'கிராப்' கட்டுப்பாடுகள் அமலாகின்றன.
அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்தே பணியாற்ற டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கட்டுமானப் பணிகளுக்கும், பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த தாக்குதலில் போலீசார், பாதுகாப்புப்படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
- பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற கட்டிடம் மீது கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 5 பேர் நடத்திய இந்த தாக்குதலில் போலீசார், பாதுகாப்புப்படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிகழ்வு வருடந்தோறும் பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தாக்குதலில் வீர மரணடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தாக்குதல் நினைவாக பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர்.
2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமீன் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில்,டெல்லி கலவர வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சமூக ஆர்வலர் உமர் காலித்துக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனைகளுடன் 2 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது
2020 முதல் உமர் பலமுறை ஜாமின் கேட்டு போராடி வரும் நிலையில், டிசம்பர் 16 முதல் 29 வரை குடும்ப திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
- கழிவுகள் எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 80-90 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.
- முதல் 10 பட்டியலில் உள்ள அனைத்து நகரங்களும் முந்தைய ஆண்டை விட அதிக PM2.5 அளவைப் பதிவு செய்துள்ளன.
எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA) அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில், நவம்பர் மாதத்தில் நாட்டின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
அதன்படி மிகவும் மாசுபட்ட நகரங்களின் முதல் 10 பட்டியலில் உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து நொய்டா, பகதூர்கர், டெல்லி, ஹாபூர், கிரேட்டர் நொய்டா, பாக்பத், சோனிபட், மீரட் மற்றும் ரோஹ்தக் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவை முன்னர் குற்றம் சாட்டப்பட்டன. இருப்பினும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த மாநிலங்களில் கழிவுகள் எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 80-90 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.
காற்று தர கண்காணிப்பு நிலையங்களிலிருந்து PM2.5 தொடர்பான தரவுகளின் அடிப்படையில் CREA தனது நவம்பர் 2025 அறிக்கையைத் தயாரித்துள்ளது.
முதல் 10 பட்டியலில் உள்ள அனைத்து நகரங்களும் முந்தைய ஆண்டை விட அதிக PM2.5 அளவைப் பதிவு செய்துள்ளன.
நாடு முழுவதும் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க சரிவை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
- மாசுபாட்டின் அளவு அதிகரிப்பது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் தொடர்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் ஏற்கனவே உள்ள நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது
டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '400' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக, 2022 மற்றும் 2024 க்கு இடையில் டெல்லியில் உள்ள ஆறு மருத்துவமனைகளில் சுமார் 2 லட்சம் சுவாச நோய்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பதிலளித்தார்.
அவரது பதிலில், அரசு தரவுகளின்படி, டெல்லியில் உள்ள ஆறு பெரிய மருத்துவமனைகள் 2022 ஆம் ஆண்டில் 67,054 சுவாசக் கோளாறுகளையும், 2023 இல் 69,293 மற்றும் 2024 இல் 68,411 சுவாசக் கோளாறுகளையும் பதிவு செய்துள்ளன.
மாசுபாட்டின் அளவு அதிகரிப்பது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் தொடர்புடையது. மேலும் ஏற்கனவே உள்ள நோய்கள் உள்ளவர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று பாரளுமன்றத்தில் டெல்லி மாசுபாடு குறித்து நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.






