search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kapil Sibal"

    • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் - நிர்மலா சீதாராமன்
    • பாஜக தோற்றுவிட்டால் அவர்களுக்கு இன்னும் பணம் தேவைப்படும். அதற்குதான் தேர்தல் பத்திர முறையை பற்றி மீண்டும் பேசுகிறார்கள் - காங்கிரஸ்

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

    "வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தல் பத்திர திட்டத்தை வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வருவோம்.

    தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்தது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது. அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் எம்.பி, "தேர்தல் பத்திர நன்கொடை முறையை திரும்பக் கொண்டு வருவோமென நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு பிரச்சனை என்னவென்றால், இந்த தேர்தலுக்கு அவர்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் இதில் அவர்கள் தோற்றுவிட்டால் இன்னும் பணம் தேவைப்படும். அதற்குதான் தேர்தல் பத்திர முறையை பற்றி மீண்டும் பேசுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என பா.ஜ.க கூறுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதையே பா.ஜ.க இப்போதும் விரும்புகிறது. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் எத்தனை கோடி கொள்ளையடிப்பார்கள் என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மை குறித்து பலமுறை கேள்விகள் எழுந்துள்ளன.
    • பாஜக-வின் குறிக்கோள் எதிர்க்கட்சிகளை குறிவைத்து அவர்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவது ஆகும்.

    டெல்லி மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கபில் சிபல் கூறியதாவது:-

    ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அமலாக்கதுறை ஒரு நம்பகத்தன்மையற்றதாக உள்ளது. பதவியில் உள்ள முதல்வர்கள் மீது பொய்யான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறது.

    இது நாட்டில் மிகவும் சோகமான நிலையை உருவாக்கி வருகிறது. இது எங்கேபோய் முடியும்.

    அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மை குறித்து பலமுறை கேள்விகள் எழுந்துள்ளன.

    இதற்கு முன்பும் தேர்தலில் போட்டியிட்ட பலரின் பெயர்களை உங்களிடம் கூறி உள்ளேன். அவர்கள் மீது எந்தெந்த வழக்குகள் உள்ளன என்பதை கூறியுள்ளேன். 

    இதுபோல வழக்குகள் உள்ள வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறை இதுபோன்ற நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை? பாஜக-வின் குறிக்கோள் எதிர்க்கட்சிகளை குறிவைத்து அவர்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவது ஆகும்.

    இது போன்ற நடவடிக்கையால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளால் பிரசாரம் செய்ய முடியாது. அவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்றால், அது கண்டிப்பாக பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சத்தீஸ்கர், தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் டார்கெட் செய்யப்பட்டது
    • மக்களவை தேர்தல் வர இருப்பதால் இன்னும் அதிகமானோர் மீது குறி வைக்கப்பட்டலாம்

    ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் பா.ஜனதா அரசை விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் கூறியதாவது:-

    அவர்கள் (பா.ஜனதா) தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை குறிவைத்துள்ளனர். மக்களவை தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. அவர்கள் இன்னும் பலர் மீது குறிவைப்பார்கள். ஒரு குறிப்பிட்ட நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதாவை டார்கெட் செய்வார்கள் என்ற அச்சம் உள்ளது.

    அவர்கள் சிபுசோரனை டார்கெட் செய்தார்கள். சிபுசோரன் மற்றும் 30 முதல் 40 அதிகாரிகளை சத்தீஸ்கரில் டார்கெட் செய்தார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். மத்திய பிரதேசம், தெலுங்கானாவில் அவர்கள் செய்ததையும் பார்த்து இருப்பீர்கள்.

    ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஜெயிலில் அடைத்தார்கள். மேற்கு வங்காளத்தில் அபிஷேக் பானர்ஜி டார்கெட் செய்யப்பட்டுள்ளார். பண மோசடி தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக நீதிமன்றங்கள் ஏன் விழித்துக் கொள்ளவில்லை?

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சியான அ.தி.மு.க. விலகி விட்டது.
    • வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகளும்தான் உள்ளன.

    புதுடெல்லி:

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அறிவித்திருப்பது பற்றி முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை சுயேச்சை எம்.பி.யுமான கபில் சிபல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சியான அ.தி.மு.க. விலகி விட்டது. பா.ஜனதாவுடன் இன்னும் இருப்பவை எந்த கொள்கையும் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணி கட்சிகள்தான்.

    அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் போன்றவர்களின் கட்சிகளும், வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகளும்தான் உள்ளன. பா.ஜனதா, கூடாரத்தில் புகுந்த ஒட்டகம் போன்றது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு பணிக்கு ஆள் தேர்வில் மத்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
    • விண்ணப்பிப்பது முதல் தேர்வு முடிவுகள் வெளியாவது வரை ஆன்லைனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

    புதுடெல்லி :

    பிரதமர் மோடி நேற்று முன்தினம் 'ரோஜ்கார் மேளா'வில் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி வழியாக பணி நியமன உத்தரவுகளை வழங்கி பேசினார். அப்போது அவர், "அரசு பணிக்கு ஆள் தேர்வில் மத்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. விண்ணப்பிப்பது முதல் தேர்வு முடிவுகள் வெளியாவது வரை ஆன்லைனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் ஆள்தேர்வில் ஊழலுக்கும், வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவதற்கும் முடிவு கட்டப்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.

    இதற்கு முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுபற்றி நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "ஆள் எடுப்பு செயல்முறையில் மாற்றம் வந்துள்ளது. இதனால் ஊழலும், வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவதும் முடிவுக்கு வந்துள்ளது என்று பிரதமர் கூறி இருக்கிறார். பாராட்டுகள். ஆனால் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக, தற்காலிக ஆசிரியர்களாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், ஆர்.எஸ்.எஸ். எண்ணம் கொண்டவர்களும் நியமனம் செய்யப்படுகின்றனர். இதுதான் வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவதற்கான ஒளிரும் எடுத்துக்காட்டு. பிரதமர் அவர்களே, என்ன சொல்கிறீர்கள்" என கூறி உள்ளார்.

    • கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். மக்கள் மனங்களை வெல்வது என்பது இன்னும் கடினமானது.
    • பிரதமர் தோற்று விட்டார். கர்நாடக மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    தென் மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. அங்கு 10-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கவும் இந்த வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்ட முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

    கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். மக்கள் மனங்களை வெல்வது என்பது இன்னும் கடினமானது. இனி வரும் 5 ஆண்டுகளுக்கு வெளிப்படையாகவும், நேர்மையாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடந்து கொள்வதன் மூலம் மக்களின் இதயங்களை வெல்லுங்கள்.

    இது எதுவுமே இல்லாததால்தான் பா.ஜ.க. தோல்வியைத் தழுவியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தேர்தல் முடிவு வெளியானதும் கபில் சிபல் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்த பதிவில் அவர், "பிரதமர் தோற்று விட்டார். கர்நாடக மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 40 சதவீத கமிஷன், தி கேரளா ஸ்டோரி, பிரிவினைவாத அரசியல், அராஜகம், பொய்மை ஆகியவற்றுக்கு இனி இடம் இல்லை. வெற்றி பெற காங்கிரஸ் தகுதியானதுதான்" என குறிப்பிட்டுள்ளார்.

    • எதைப் பார்க்க வேண்டும் என்பதில் மக்களைத் தீர்மானிக்க விடுங்கள்
    • உங்கள் அரசியல், வெறுப்பைத்தூண்டுகிறதை ஆதரியுங்கள் என்பதுதான்.

    புதுடெல்லி :

    பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், "தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்துகிறவர்கள், எதைக் கண்டு பயப்படுகின்றனர் என்று தெரியவில்லை. எதைப் பார்க்க வேண்டும் என்பதில் மக்களைத் தீர்மானிக்க விடுங்கள், நீங்கள் மற்றவர்களுக்காக தீர்மானிக்க முடியாது" என கூறி உள்ளார். இதற்கு முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யு மான கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க.வின் குஷ்பு, 'தி கேரளா ஸ்டோரி' படத்தைப் பொறுத்தமட்டில், எதைப் பார்க்க வேண்டும் என்பதை மக்களைத் தீர்மானிக்க விடுங்கள், மற்றவர்களுக்காக நீங்கள் தீர்மானிக்க முடியாது என்கிறார். அப்படியென்றால் அமீர்கானின் பி.கே., ஷாருக்கானின் பதான், பஜ்ராவ் மஸ்தானி படங்களுக்கு எதிராக எதற்காக போராட்டங்கள்? உங்கள் அரசியல், வெறுப்பைத்தூண்டுகிறதை ஆதரியுங்கள் என்பதுதான்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
    • எதிர்க்கட்சித்தலைவர்களின் பெயரைக் கெடுக்க பா.ஜ.க. விரும்புகிறது.

    புதுடெல்லி :

    நாடெங்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் வழக்குகள் பாய்வதும், சோதனைகள் நடத்தப்படுவதும் எதிர்க்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் இப்போது மதுபானக்கொள்கை ஊழல் விவகாரத்தில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக, முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரசில் இருந்து விலகி 'இன்சாப்' என்ற அமைப்பை நடத்தி வருகிற மூத்த வக்கீல் கபில் சிபல் கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க விரும்புகிறது.

    எனவேதான் எல்லா எதிர்க்கட்சித்தலைவர்களையும் குறிவைக்கிறது. ஜார்கண்ட், சத்தீஷ்கார், கேரளா என எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், தலைவர்களும் எவ்வாறு குறி வைக்கப்படுகிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம்.தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை வீழ்த்துவதற்கு அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணையின் விதிகளை பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது.

    எதிர்க்கட்சித்தலைவர்களின் பெயரைக் கெடுக்க பா.ஜ.க. விரும்புகிறது. இதற்காக சி.பி.ஐ.யையும், அமலாக்கத்துறையையும் மத்திய பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது. அதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று மத்தியில் ஆளும் பா.ஜ.க. முன்கூட்டியே தெரிந்து கொள்கிறது.

    மத்திய அரசுக்கு எதிராக பேசியபோதே கெஜ்ரிவால் குறி வைக்கப்படுவார் என நான் கணித்துவிட்டேன்.

    எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேராத வரையில் பா.ஜ.க.வை எதிர்கொள்வது என்பது மிகக்கடினமானதாகி விடும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ராகுல் காந்தி லண்டனில் பேசிய உரைக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது
    • பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.

    புதுடெல்லி :

    இந்தியாவில் ஜனநாயம் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக ராகுல் காந்தி லண்டனில் பேசிய உரைக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது. இதனால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்த விவகாரத்தில் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில்சிபல், ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'பாராளுமன்றத்தின் முட்டுக்கட்டை ஏன்? அரசு என்றால் இந்தியா என்று பொருள் அல்ல. அதைப்போல இந்தியா என்றால் அரசு என்று பொருள் அல்ல. உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ அரசை விமர்சிப்பது குடிமக்களின் உரிமை. அதை இந்தியாவை விமர்சிப்பதாகவோ, தேசப்பற்று இல்லாததாகவோ கருத முடியாது' என குறிப்பிட்டு உள்ளார்.

    கடந்த காலங்களில் பிரதமர் மோடியும் இவ்வாறு பேசியிருப்பதாகவும் கபில்சிபல் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கபில்சிபல் சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் உத்தரபிரதேச மேல்சபை எம்.பி. பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
    லக்னோ:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கபில்சிபல்.

    காங்கிரஸ் தலைமையை விமர்சித்த 23 அதிருப்தி தலைவர்களில் இவர் முக்கியமானவர் ஆவார். காங்கிரஸ் கட்சியின் நடைமுறையில் மாற்றம் தேவை, காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் யாரும் தலைமை வகிக்க கூடாது என்று கபில்சிபல் தெரிவித்து இருந்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்தே அவர் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து வந்தார். சமீபகாலமாகவே சோனியா காந்தியை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

    2024-ம் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சோனியா காந்தி 3 குழுக்களை நேற்று நியமித்தார். இதில் எந்த குழுவிலும் கபில்சிபல் பெயர் இடம் பெறவில்லை. மற்ற அதிருப்தி தலைவர்களான குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த நிலையில் கபில்சிபல் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகி உள்ளார்.

    இதைத் தொடர்ந்து கபில்சிபல் சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் உத்தரபிரதேச மேல்சபை எம்.பி. பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், அந்த கட்சியின் எம்.பி. ராமகோபால் யாதவ் ஆகியோர் முன்னிலையில் அவர் மனு தாக்கல் செய்தார்.

    பின்னர் கபில்சிபல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான கடந்த 16-ந்தேதியே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பி விட்டேன்.

    நான் சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் சுயேட்சையாக மேல்சபைக்கு மனு தாக்கல் செய்துள்ளேன். நாட்டில் சுயேட்சையாக குரல் கொடுக்க எப்போதும் விரும்பினேன். சுதந்திரமான குரலாக இருப்பதே முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ரபேல் விமான பேரத்தை தணிக்கை செய்வதில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபல் கூறியுள்ளார். #RafaleDeal #KapilSibal
    புதுடெல்லி:

    காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில் சிபல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போதைய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மெக்ரிஷி, கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி முதல் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி வரை மத்திய அரசின் நிதித்துறை செயலாளராக இருந்தார்.

    அந்த காலகட்டத்தில்தான், அதாவது 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்று, ரபேல் ஒப்பந்ததை இறுதி செய்து அறிவித்தார்.

    நிதித்துறை செயலாளர் என்ற முறையில், ரபேல் தொடர்பான பேச்சுவார்த்தையில் ராஜீவ் மெக்ரிசி பங்கேற்றுள்ளார். எனவே, அவர் ரபேல் பேரம் குறித்து தணிக்கை செய்வதற்கு உகந்தவர் அல்ல. ஆகவே, ராஜீவ் மெக்ரிஷி, ரபேல் விமான பேரத்தை தணிக்கை செய்வதில் இருந்தும், நாடாளுமன்றத்தில் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதில் இருந்தும் விலகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு கபில் சிபல் கூறினார். #RafaleDeal #KapilSibal 
    பண மதிப்பிழப்பு நாளை சர்ஜிகல் ஸ்டிரைக் நாளாகக் கொண்டாட பல்கலைக்கழக மானிய குழுவுக்கு தைரியம் உண்டா? என மூத்த காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். #UGC #SurgicalStrikeDay #KapilSibal #Demonetisation
    புதுடெல்லி:

    2016 ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை தாண்டிச்சென்ற இந்திய ராணுவம்,  அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. சர்ஜிகல் ஸ்டிரைக் என்று அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பின்னர் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை பெற்றது.

    இதற்கிடையே, வரும் 29-ம் தேதி சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு முன்னர் அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் அன்றைய தினம், என்.சி.சி அணிவகுப்பு, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை கொண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.

    இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.



    இந்நிலையில், பண மதிப்பிழப்பு நாளை சர்ஜிகல் ஸ்டிரைக் நாளாகக் கொண்டாட பல்கலைக்கழக மானிய குழுவுக்கு தைரியம் உண்டா? என மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதனால் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது.

    ஆனால், சர்ஜிகல் ஸ்டிரைக் நாளை அனைத்து பல்கலைக்கழகங்களும் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    இதேபோல், பண மதிப்பிழப்பு நாளை சர்ஜிகல் ஸ்டிரைக் நாளாகக் கொண்டாட பல்கலைக்கழக மானிய குழுவுக்கு தைரியம் உண்டா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  #UGC #SurgicalStrikeDay #KapilSibal #Demonetisation
    ×