search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திர சட்டசபை தேர்தல்"

    • ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.
    • ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முதல் மந்திரி சித்தராமையா மற்றும் மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.

    இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.

    இந்த தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களை பிரசாரத்தில் இறக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    இது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதால் வெற்றி வாய்ப்பு உள்ளது.

    இதனால் ஆந்திர மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளோம் என தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் தெலுங்கானா வி.ஐ.பி.க்கள் மதிக்கப்படவில்லை. சிபாரிசு கடிதங்கள் அதிகாரிகளால் மறுக்கப்படுகிறது. இதுகுறித்து விவாதம் நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

    • திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும்.
    • வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

    இதில் நடிகையும் மந்திரியுமான ரோஜாவுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என எதிர்க்கட்சியினர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு ரோஜா பதிலடி கொடுத்துள்ளார்.

    நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும். ஆந்திர மாநில மக்கள் நலமடையவும், ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரி ஆக வேண்டும். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.

    நான் கட்சி நிகழ்ச்சிகளிலும் அமைச்சரவை கூட்டங்களிலும் முன் வரிசையில் இருந்து வருகிறேன்.

    நகரி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளேன். வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றனர். அது பலிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×