search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AP"

    • திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும்.
    • வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

    இதில் நடிகையும் மந்திரியுமான ரோஜாவுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என எதிர்க்கட்சியினர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு ரோஜா பதிலடி கொடுத்துள்ளார்.

    நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும். ஆந்திர மாநில மக்கள் நலமடையவும், ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரி ஆக வேண்டும். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.

    நான் கட்சி நிகழ்ச்சிகளிலும் அமைச்சரவை கூட்டங்களிலும் முன் வரிசையில் இருந்து வருகிறேன்.

    நகரி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளேன். வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றனர். அது பலிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உண்மை வெற்றி அடைந்தால் சிறையில் சந்திரபாபு நாயுடு நிரந்தரமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
    • ஆந்திராவில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் ஒன்ஸ்மோர் ஜெகன் என்ற முடிவை மக்கள் கொடுப்பார்கள்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர மந்திரி ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

    உண்மை வெற்றியடைய வேண்டும் என்று கோவிலில் வேண்டிக்கொண்டதாக சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி கூறியிருக்கிறார்.

    உண்மை வெற்றி அடைந்தால் சிறையில் சந்திரபாபு நாயுடு நிரந்தரமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    புவனேஸ்வரியும் சிறை செல்ல நேரிடும். ஆந்திராவில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் ஒன்ஸ்மோர் ஜெகன் என்ற முடிவை மக்கள் கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆந்திர மாநில பிரிவினையின்போது காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.
    • ஆந்திராவில் 3 தலைநகர்கள் திட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.

    திருப்பதி:

    ராகுல் காந்தி தேசிய ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது ஆந்திராவில் நடைபயணம் செய்து வருகிறார்.

    கர்னூல் மாவட்டம் அதோனிக்கு நேற்று வந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் அங்குள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். பல்வேறு கிராமங்கள் வழியாக ராகுல் காந்தி நடந்து சென்றார். அப்போது பொதுமக்கள் அவரை வரவேற்றனர்.

    அப்போது ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டியே இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. ஆந்திர மாநில பிரிவினையின்போது காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். போலவரம் அணை பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். ஆந்திராவில் 3 தலைநகர்கள் திட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது. அமராவதி ஒன்றே ஆந்திராவின் தலைநகராகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று 3-வது நாளாக ஆந்திராவில் ராகுல்காந்தி நடைபயணம் சென்றார். அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பலர் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து ஆரவாரம் செய்தனர்.

    • பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.
    • தமிழக அரசு நம்முடைய உரிமைகளை ஆந்திர அரசுடன் பேசி நிலைநாட்ட வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசின் முடிவை உடனடி யாக கைவிட வேண்டும்.

    உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின்படி, தண்ணீர் பகிர்ந்துகொள்ளும் மாநிலங்களோடு ஒப்புதல் இல்லாமல் ஆற்றில் எந்தவிதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்ற தீர்ப்பே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, ஆந்திர அரசு பாலாற்றில் புதிய தடுப்பணை பணிகளை மேற்கொள்ள கூடாது.

    மேலும் மிக முக்கியமாக தமிழக அரசு, நம்முடைய உரிமைகளை ஆந்திர அரசுடன் பேசி நிலைநாட்ட வேண்டும். அதன் அடிப்படையில் சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம்பெண்ணின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் பனாஜி நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
    பனாஜி:

    கோவா அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த ரம்யா கிருஷ்ணா நேற்று முன் தினம் மாலை பனாஜி கடற்கரைக்கு சென்றார். கடலை பின்னணியாக கொண்டு அவர் தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை சற்றும் எதிர்பாராத அவர் தன்னை காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பினார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கடற்கரையில் இருந்தவர்கள் அவரை மீட்க போராடினர். சற்று நேரத்தில் ரம்யா கிருஷ்ணா கடலுக்குள் மூழ்கினார். அவரது உடலை மீனவர்களும் காவல்துறையினரும் தேடி வந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம்பெண்ணின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் பனாஜி நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

    வல்லபாய் பட்டேலின் சிலையின் உயரத்தை விட அதிக உயரமாக இருக்கும் வகையில் ஆந்திர சட்டசபையை கட்ட முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். #ChandrababuNaidu #APAssembly
    அமராவதி:

    குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்துக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. இதுதான் உலகத்திலேயே உயரமான சிலை ஆகும்.

    பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது இதற்கான கட்டுமான திட்டத்தை உருவாக்கினார். அவரது முயற்சியின் காரணமாக இந்த சிலை நிறுவப்பட்டது.

    இப்போது இதைவிட உயரமான சிலை மற்றும் கட்டுமானங்களை அமைப்பதற்கு பலரும் போட்டி போடுகிறார்கள்.

    அயோத்தியில் ராமருக்கு 201 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    கர்நாடக அரசு காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை அமைப்பதாக அறிவித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் வீரசிவாஜிக்கு மிகப் பெரிய உயரமான சிலை ஒன்றை அமைக்கும் திட்டம் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் வல்லபாய் பட்டேல் சிலையை விட மிக அதிக உயரத்தில் ஆந்திர மாநில சட்டசபை கட்டிடத்தை கட்ட சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.

    ஒன்றுபட்ட ஆந்திராவின் தலைநகரமாக ஐதராபாத் இருந்து வந்த நிலையில் புதிய மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவின் தலைநகரம் விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டது.

    இதற்காக விஜயவாடா அருகே அமராவதி என்ற பெயரில் புதிய நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது. அங்கு சட்டசபை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் கட்டப்படுகிறது.

    சட்டசபை கட்டிடத்துக்காக கட்டிட வடிவமைப்பு பணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இங்கிலாந்தை சேர்ந்த கட்டிட வடிவமைப்பு நிறுவனமான நார்மா பாஸ்டர்ஸ் இந்த வடிவமைப்பை உருவாக்கி உள்ளது.

    சட்டசபை கட்டிடம் 3 அடுக்குகளாக கட்டப்படுகிறது. அதன் மத்தியில் மிக உயரமான கோபுரம் ஒன்று அமைக்கப்படுகிறது. இந்த கோபுரம் தான் கட்டிடத்துக்கு அழகை கொடுக்கும் வகையில் கட்டப்படுகிறது.

    அந்த கோபுரத்தின் உயரம் என்ன என்பது முடிவு செய்யப்படாமல் இருந்தது. இப்போது வல்லபாய் பட்டேலின் சிலையின் உயரத்தை விட அதிக உயரமாக இருக்கும் வகையில் 250 மீட்டர் உயரத்தில் கட்டுவது என்று முடிவு எடுத்துள்ளனர்.

    அதாவது பட்டேல் சிலையை விட 68 மீட்டர் கூடுதல் உயரமாக இந்த கோபுரம் இருக்கும்.

    ஏற்கனவே உள்ள வடிவமைப்பில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சில மாற்றங்களை செய்துள்ளார். அதன்படி கோபுர கட்டுமானத்தில் மாற்றங்கள் செய்து 250 மீட்டர் உயரத்துக்கு கட்டப்படுகிறது.

    இந்த கோபுரம் லில்லி மலர் வடிவத்தில் இருக்கும். அதாவது லில்லி மலரை கவிழ்த்து வைத்தால் எப்படி இருக்குமோ? அதுபோன்ற வடிவமாக கட்டப்படுகிறது.

    அதன் மேல் உச்சி வரை மக்கள் சென்று அமராவதி நகரை பார்வையிடலாம். இதற்காக கோபுரத்தில் 2 பார்வை மாடங்கள் அமைக்கப்படுகின்றன.

    முதல் மாடம் 80 மீட்டர் உயரத்தில் இருக்கும். அதில், 300 பேர் இருக்கும் வகையில் வசதி செய்யப்படுகிறது. அடுத்த மாடம் 250-வது மீட்டர் உயரத்தில் இருக்கும். அதில் 20 பேர் நின்று பார்வையிடலாம்.

    கீழிருந்து மேலே கடைசி வரை செல்வதற்கு லிப்டு வசதிகள் செய்யப்படுகிறது. மேல் பகுதி முழுவதும் கண்ணாடியால் கவர் செய்யப்பட்டு இருக்கும்.

    புயல், நிலநடுக்கம் ஆகியவற்றையும் தாங்கும் வகையில் இந்த கட்டிடம் கட்டப்படுகிறது. சட்டசபை கட்டிடத்துக்கான டெண்டர் பணி இந்த மாதம் இறுதி செய்யப்பட உள்ளது. 2 வருடத்தில் கட்டுமான பணியை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    ஏற்கனவே தலைமை செயலகம் கட்டும் பணிக்காக 5 கட்டிட டிசைன்கள் தேர்வு செய்யப்பட்டு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  #ChandrababuNaidu #APAssembly

    ஆந்திர மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவரை காதலித்த பெண்ணை அவரது தந்தையே கொலை செய்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #HonourKilling #AP
    ஐதராபாத்:

    ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நாகிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சைதன்யா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆவுலையா என்பவரின் மகள் இந்திரஜாவை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இந்திரஜாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில், கிராமத்தின் ஒதுக்குபுறத்தில் இந்துஜாவின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த விசாரணையில், தந்தை ஆவுலையா தான் தனது மகளை கொலை செய்து எரித்துவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்துஜாவின் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

    தாழ்ந்த ஜாதி வாலிபரை காதலித்ததாக தனது மகளையே கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #HonourKilling #AP
    ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை தாக்கிய டிட்லி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மீண்டும் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை தாக்கியது. #TitliCyclone
    புதுடெல்லி:

    வங்க கடலில் அந்தமான் அருகே உருவான டிட்லி புயல் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்து வந்தது.

    நேற்று அதிகாலை வடக்கு ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களையும் தெற்கு ஒடிசாவின் கஜபதி மற்றும் கஞ்சம் மாவட்டங்களையும் பலமாக தாக்கியது. அப்போது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பயங்கர காற்று வீசியது. காற்றும் மழையும் 4 மாவட்டங்களையும் துவம்சம் செய்தது.

    அதன்பிறகு அதி தீவிர புயலாக இருந்த டிட்லி புயல், தீவிர புயலாக மாறி தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி சுழன்று நகர்கிறது.

    நேற்று இரவு வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கேங்டிக் பகுதியை டிட்லி புயல் தாக்கியது. தற்போது வடக்கு ஒடிசாவின் பவானி பாட்னா நகரில் இருந்து கிழக்கு வடகிழக்கில் 50 கி.மீ தொலைவிலும், புல்பானி நகருக்கு மேற்கு தென்மேற்கே 80 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.


    இன்று காலை டிட்லி புயல் வலுவிழந்து ஒடிசா- மேற்கு வங்காளம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறுகிறது. இதன்காரணமாக வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் அடுத்த 48 மணிநேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், கடலோர ஆந்திராவில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள லூபன் புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசைநோக்கி மெதுவாக நகர்வதால் இன்னும் 4 நாட்களில் ஏமன்-ஓமன் கடற்கரை பகுதியை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #TitliCyclone
    டிட்லி புயல் இன்று அதிகாலை ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரை கடந்ததால் 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. #TitliCyclone
    புவனேசுவரம்:

    வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் தோன்றியது.

    நேற்று முன்தினம் அது வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு “டிட்லி” என்று பெயர் சூட்டப்பட்டது.

    இந்தியில் ‘டிட்லி’ என்றால் “வண்ணத்துப் பூச்சி” என்று அர்த்தமாகும். பெயர்தான் வண்ணத்துப் பூச்சியே தவிர இந்த புயலின் சீற்றம் தொடக்கத்தில் இருந்தே அதிக ஆற்றலுடன் இருந்தது. இதனால் வங்கக் கடலில் இந்த ஆண்டு உருவான புயல்களில் டிட்லி புயல்தான் அதிக வலுவான புயல் என்று வானிலை இலாகா அறிவித்தது.

    சென்னைக்கு அருகே வங்கக் கடலில் உருவான இந்த புயல் முதலில் தமிழகத்தை தாக்கும் என்று கணிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்ககைள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த புயல் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது.

    டிட்லி புயல் அதிதீவிரமாக மாறிய நிலையில் வடக்கு நோக்கி மேலும் நகர்ந்தது. இதனால் தமிழகம் மிகப்பெரிய புயல் ஆபத்தில் இருந்து தப்பியது. நேற்று மாலை டிட்லி புயல் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் வகையில் வங்கக் கடலில் சுமார் 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

    மணிக்கு சுமார் 19 கி.மீ. வேகத்தில் நகர்ந்த டிட்லி புயல் ஆந்திராவின் வடக்கு, ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களை மிக கடுமையாக தாக்கும் என்றும் அப்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த புயல் வியாழக்கிழமை (இன்று) அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    இதையடுத்து ஆந்திராவின் விசாகப்பட்டினம், விஜய நகரம், ஸ்ரீகாகுளம், ஒடிசா வின் கஞ்சம், கஜபதி, பூரி, கேந்திரபதா, நயகர், பத்ரக், ஜெகத்சிங்பூர், ஜஜ்பூர், கோர்தா, கட்டாக், பலா சோர், மயூர்பஞ்ச், கலஹந்தி, பவுத் மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” விடப்பட்டது. இந்த நிலையில் இன்று (வியாழக் கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு டிட்லி புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலசா எனும் இடம் அருகே டிட்லி புயல் கரையை கடந்ததாக வானிலை இலாகா கூறியது.

    டிட்லி புயல் கரையை கடந்தபோது மணிக்கு 140 முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புயல் கரையை கடந்து கொண்டிருந்தபோது அது மேலும் வடக்கு திசை நோக்கி நகர்ந்தது. இதனால் ஒடிசா கடலோர பகுதிகளில் குறிப்பாக கோயில்பூர் பகுதியில் புயல் தாக்கம் ஏற்பட்டது.

    காலை 7 மணிக்கு பிறகு புயலின் தாக்கம் முழுமையாக ஒடிசா கடலோரப் பகுதிக்கு மாறியது. ஒடிசாவில் புயல் கரையை கடந்தபோது மிக, மிக பலத்த மழை பெய்தது. சூறாவளி காற்றும் வீசியது. இதனால் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


    மிக பலத்த மழை காரணமாக ஆந்திராவின் வடக்கு பகுதியிலும் ஒடிசாவின் தென் பகுதியிலும் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. மின் கம்பங்களும் சரிந்து கிடக்கின்றன.

    டிட்லி புயல் சுமார் 15 மாவட்டங்களை பாதிக்கும் என்றும் ரெட் அலர்ட் விடப்பட்டிருந்த நிலையில் 6 மாவட்டங்களை துவம்சம் செய்து விட்டது.

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், ஒடிசாவின் கஞ்சம், பூரி, குந்தா, ஜெகத்சசிங்பூர், கேந்திராபாரா ஆகிய 6 மாவட்டங்களையும் டிட்லி புயல் துவம்சம் செய்து விட்டது. இந்த 6 மாவட்டங்களிலும் மழை பெய்தபடி உள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டிட்லி புயல் தாக்கத்துக்குப் பிறகு மேலும் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்குவதற்கு 836 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    டிட்லி புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை செய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 19 கம்பெனி படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.

    ஒடிசாவை உலுக்கியுள்ள டிட்லி புயலின் தாக்கம் இன்று மாலை வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிட்லி புயல் கோரத்தாண்டவத்தில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக ஒடிசா மாநிலம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஒடிசா கடலோர பகுதி ரெயில் போக்குவரத்தை கிழக்கு கடலோர ரெயில்வே முழுமையாக ரத்து செய்துள்ளது.

    பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இண்டிகோ விமானம் தனது விமான சேவையில் 5 விமான சேவையை ரத்து செய்துள்ளது.

    மிக பலத்த மழை பெய்து மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்க நேரிட்டால் மக்களை உடனுக்குடன் மீட்க வேண்டும் என்பதற்காக 300 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 120 படகுகள் டிட்லி புயல் தாக்கியதும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

    ஒடிசாவுக்கு உதவ விமான படையும், கடற்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒடிசாவில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் டிட்லி புயலின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

    சென்னை - அவுரா வழித்தடத்தில் ரெயில்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மீட்பு பணிகளை விரைந்து செய்ய ஒடிசா முதல்- மந்திரி நவீன்பட்நாயக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஆய்வு செய்தபடி உள்ளார். #TitliCyclone
    வங்க கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல் நாளை கரையை கடப்பதால் ஒடிசா மாநிலத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #CycloneTitli
    புவனேஸ்வர்:

    வங்க கடலின் மேற்கு மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று புயலாக மாறியது.

    ‘டிட்லி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தற்போது ஒடிசாவின் கோபால்பூர் நகருக்கு தென்கிழக்கே 320 கி.மீ தொலைவிலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 270கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    இந்த புயலானது இன்று மதியம் மேலும் அதி தீவிர புயலாக மாறியது. அது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை ஒடிசாவின் கோபால்பூருக்கு வடக்கு ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஒடிசாவை தாக்கியதும் அந்த புயல் மீண்டும் வடகிழக்கு திசையில் திரும்பி மேற்கு வங்காளம் நோக்கிச் செல்லும். அதன் பிறகு ஒடிசா கடற்கரை பகுதியில் படிப்படியாக வலு இழக்கும்.

    புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் 100 முதல் 125 கி.மீ வரை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

    வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் அடுத்த 48 மணிநேரத்துக்கு மிக பலத்த மழை மற்றும் மிதமிஞ்சிய மழை கொட்டும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதையடுத்து ஒடிசா முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து மக்களை உஷார் படுத்தி உள்ளனர்.


    இன்று இரவு முதலே மழை கொட்டத் தொடங்கும் என்பதால் ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜபதி, கன்ஜம், பீரி, ஜகத்சிங்பூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மாநில தலைமைச் செயலாளர் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    வெள்ள மீட்பு பணிக்காக 300 மோட்டார் படகுகளுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ஒடிசா மாநில அதிவிரைவு படை மற்றும் தீயணைப்பு படையினர், காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #CycloneTitli
    ஆந்திராவில் செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக வாலிபர் ஒருவர் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #LockupDeath
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் தென்னேரி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் சத்தியவேடு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அனைவரையும் போலீசார் அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. இதில், ராஜா (24) என்ற வாலிபர் உயிரிழந்துவிட்டார்.

    உயிரிழந்த ராஜா, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மொண்டியம்மன் நகரை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஆந்திர காவல் நிலையத்தில் தமிழக வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #LockupDeath

    ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். #Lightningkills
    ஐதராபாத்:

    ஆந்திர பிரதேசத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் மின்னல் தாக்கி நேற்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மின்னல் தாக்கியதில் கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. நேற்று இரவு பெய்த கனமழையில் மரங்களும் மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. கடும் மழையினால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். #Lightningkills
    ×