search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric attack"

    • கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள தியாகராஜன் என்பவரது கடையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார்.
    • மாதவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கொளத்தூர்:

    சென்னை புழல், கிருஷ்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மாதவன் (42). எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். நேற்று காலை 11 மணிக்கு கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள தியாகராஜன் என்பவரது கடையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். அப்போது மின்சாரம் தாக்கி மாதவன் மயங்கி விழுந்தார்.

    அவரை தியாகராஜன் ஆட்டோவில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாதவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உப்பிலியபுரத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உப்பிலியபுரம்:

    உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆர்.புதுப்பட்டி கவுண்டர் தெருவைச்சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 45) விவசாயி. இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், விக்னேஷ் வயது 23 என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ரவிச்சந்திரன் நேற்று தீபாவளியன்று அதிகாலையில் புதுப்பட்டி- ஒக்கரைக்கிடையே அமைந்துள்ள தனது தோட்டத்திற்கு சென்றார்.

    அப்போது மோட்டார் பம்புக்கு செல்லும் வயரில் உள்ள மின்கசிவு தெரியாமல் வயரை மிதித்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று ரவிச்சந்திரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலியான சம்பவத்தையடுத்து புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையை சேர்ந்த ஞானமுத்து மனைவி பஞ்சவர்ணம் (வயது35). இவருக்கு சொந்தமாக 10 மாடுகள் உள்ளன. இந்த மாடுகளை காலையில் மேய்ச்சலுக்கு விட்டால் மாலையில் அவைகள் வீடு திரும்பி விடுமாம்.

    இந்நிலையில் கடந்த 6-ந் தேதி மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில் 2 மாடுகள் மாலையில் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து மறுநாள் ஆலந்தலை காட்டுப் பகுதியில் தேடி பார்த்தபோது இரண்டு மாடுகள் இறந்து கிடந்தது. இதன் அருகில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகள் இறந்தது தெரியவந்தது.

    இது குறித்து பஞ்சவர்ணம் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை அருகே கஜா புயலால் அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட 2 பேர் பலியாகினர். #Electricattack
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரமின்றி பொதுமக்கள் தவித்தனர்.

    மின் கம்பங்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் 95 சதவீதம் அளவுக்கு சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள சில பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் சீரமைப்பு பணியின்போது மின்சார ஊழியர்கள் விபத்தில் சிக்கினர். இதில் ஒருவர் பலியானார். மேலும் ஆங்காங்கே அறுந்து கிடந்த மின்கம்பிகளாலும் விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று காலை 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலியாகினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரையப்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி மனைவி சுசீலா (வயது 50). அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சக்தி (25). இவர்கள் இருவரும் இன்று காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக நடந்து சென்றனர். அப்போது வழியில் புயலால் சேதமான மின் வயர்கள் அறுந்து கிடந்தன.

    அந்த வயர்கள் அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே கடந்த 25 நாட்களாக கிடந்தது. மின் சப்ளை இல்லாததால் அந்த மின்வயர்களை பொதுமக்கள் அப்புறப்படுத்தி அந்த வழியாக சென்று வந்தனர்.

    அதுபோல் இன்று காலை சுசீலாவும், சக்தியும் மின் வயர்களை அப்புறப்படுத்த முயன்றபோது திடீரென அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆலங்குடி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அறுந்து கிடந்த மின் வயர்களில் மின்சாரம் பாய்ந்தது எப்படி என்று தெரியவில்லை. அங்கு ஒரு சில பகுதியில் மின் சீரமைப்பு பணிகள் முடிவுற்று மின் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அறுந்து கிடந்த மின் வயர்களில் மின்சாரம் பாய்ந்திருக்கும் என தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திரண்டு கோரிக்கை விடுத்தனர். #Electricattack


    கே.வி. குப்பம், செங்கத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள மேல்மாயில் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் இவரது மனைவி புவனா (வயது 40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    புவனா இன்று காலை வீட்டில் உள்ள துணிகளை துவைத்து வீட்டின் மேற்கூரையின் மீது காயபோட்டுள்ளார். அப்போது அருகே சென்று கொண்டிருந்த மின் கம்பி மீது தவறுதலாக கைபட்டு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முன்னூர் மங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). நேற்று இரவு அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜேந்திரன் இயற்கை உபாதைக்காக வெளியே வந்தார். அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்து விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து புதுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேகமலை வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் யானை பலியானது. பெண் யானை மின் கம்பியை துதிக்கையால் தட்டியபோது மின்சாரம் பாய்ந்து இறந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
    கூடலூர்:

    மேகமலை வன உயிரின சரணாலய பகுதிக்கு உட்பட்டது வெண்ணியாறு, இந்த பகுதி வழியாக சுருளியாறு மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து திருநெல்வேலி மாவட்ட மின்பகிர்மான வட்டத்துக்கு உயர்மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது 9 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து சரணாலய உதவி வனப்பாதுகாவலர் குகனேஷ், கம்பம் கிழக்கு வனச்சரகர் துரை தினேஷ், கால்நடை மருத்துவர் செல்வம் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதில் பெண் யானை மின் கம்பியை துதிக்கையால் தட்டியபோது மின்சாரம் பாய்ந்து இறந்தது தெரிய வந்தது. இறந்த யானைக்கு 9 வயது இருக்கும் என கால்நடை டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் யானை தனது 6 மாத குட்டியுடன் இதே இடத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. வனப்பகுதியில் யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. எனவே சரணாலயத்தினர் மின் கம்பி வடங்களை உயர்த்தி செல்லும் வகையில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், பெரும்பாலான மின்சார கம்பி வடங்கள் வன விலங்குகள் நடமாடும் பகுதியில் இல்லை. உணவு மற்றும் தண்ணீருக்காக இடம் பெயரும் போது இது போன்ற விபத்துகள் நடக்கின்றன. எனினும் இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.



    செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேலஒலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70), விவசாயி. இவரது மனைவி முனியம்மாள் (60).

    கணவன்-மனைவி இருவரும் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்குள்ள மோட்டார் கொட்டகையில் மின் விளக்கை போடுவதற்காக பெருமாள் சுவிட்சை அழுத்தினார்.

    அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவர் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி முனியம்மாளும் அங்கு ஓடிவந்து கணவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. சிறிது நேரத்தில் கணவன்- மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த செஞ்சி சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் அருகே கொண்டலாம்பட்டியில் மின்சாரம் தாக்கி விசைத்தறி உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம், கொண்டலாம்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 55). இவர் வீட்டில் விசைத்தறி வைத்து சேலைகள் உற்பத்தி செய்து வந்தார். மேலும் வீட்டில் நெய்யப்படும் இந்த சேலைகளை வெளியே கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தார். நேற்று மதியம் மணி விசைத்தறியில் சேலை நெய்து கொண்டிருந்தபோது, எந்திரத்தின் பெல்ட் திடீரென துண்டாக அறுந்தது. இதை மணி மாற்ற முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே மணி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அவரது மகன் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

    வந்தவாசியில் மின்சாரம் தாக்கி தாய், பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி சுமதி (32). இவர்களது ஒரே மகன் மணிகண்டன் (16). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர்கள், கறவை மாடுகளையும் பராமரித்து வந்தனர்.

    இந்த நிலையில், கார்த்திக் வேலை நிமித்தமாக நேற்று வெளியூர் சென்றிருந்தார். வீட்டு அருகே அத்திப்பாக்கம் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த தங்களது கறவை மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக நேற்றிரவு 7 மணியளவில் தாய் சுமதி, மணிகண்டன் சென்றனர்.

    அப்போது, வயல் வரப்பில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்காமல் இருவரும் மிதித்தனர். இதில் மின்சாரம் தாக்கியதில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இரவு நேரம் என்பதால் 2 பேரும் பலியான தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை.

    இன்று காலை அந்த வழியாக சென்ற சிலர், சுமதியும், அவருடைய மகனும் மின்சாரம் தாக்கி இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கிராம மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டு உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    தகவலறிந்ததும், வந்தவாசி வடக்கு இன்ஸ்பெக்டர் கவுரி, சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே, மின்வாரிய நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள், விவசாயிகள் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    டி.எஸ்.பி. பொற்செழியன் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதன்காரணமாக, ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



    கோவை ரெயில் நிலையத்தில் அதிகாலை நேரத்தில் வாலிபர் உயர்மின் அழுத்த வயரை பிடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கோவை:

    கோவை ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றித் திரிந்தார்.

    6-வது பிளாட்பாரத்துக்கு சென்ற அவர் அங்கு நின்று கொண்டு இருந்த ரெயில் என்ஜின் மீது ஏறினார். இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கீழே இறங்குமாறு சத்தம் போட்டனர். எதையும் காதில் வாங்கி கொள்ளாத அந்த வாலிபர் திடீரென அந்த வழியாக சென்ற உயர்மின் அழுத்த வயரை பிடித்தார். கண்இமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் அந்த வாலிபர் உடல் கருகி உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த ரெயில் பயணிகள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 80 சதவீத காயங்களுடன் உடல் கருகி உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்.

    ரெயில்வே போலீசார் சிகிச்சை பெற்று வரும் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஜான் (வயது 20) என்பதும், வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர் சரியாக பேச முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்த முடியவில்லை. கோவை ரெயில் நிலையத்தில் அதிகாலை நேரத்தில் வாலிபர் உயர்மின் அழுத்த வயரை பிடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சூளைமேட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகன் அரிகரராஜன்(வயது 23). என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

    அப்போது மழை பெய்ததால் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு அங்கிருந்த இரும்பு கதவில் மின்சாரம் பரவியது. இந்த நிலையில் இதை அறியாமல் அரிகரராஜன் வீட்டின் கதவை திறந்ததால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மழை காலங்களில் மின் விபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்று கோவை மின்வாரியம் அறிவுரை வழங்கி உள்ளது.
    கோவை:

    கோவை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மழை காலங்களில் மின்விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டி, இழுவை கம்பிகள் அருகே செல்லக்கூடாது. வீட்டில் மின்அதிர்ச்சி ஏற்பட்டால் ரப்பர் செருப்பை அணிந்து சுவிட்சை அணைத்த பின்னர் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.

    தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்கவோ, நடமாடவோ கூடாது. இடி- மின்னலின்போது மின் கம்பிகள், கம்பம், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவைகள் இல்லாத தாழ்வான பகுதியில் தஞ்சமடைய வேண்டும். இடி-மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் போன்ற மின்சாதனப் பொருட்களை பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    மின் கம்பி அறுந்து கிடந்தால் அதனை மிதிக்காமல் உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பங்களில் பந்தல் அமைக்க விளம்பர பலகைகளை பொருத்த கூடாது. கனரக வாகனங்களை மின் கம்பி அருகிலோ அல்லது மின்மாற்றி அருகிலோ நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்கவோ கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகே இருக்க வேண்டாம்.

    ஈரமான கைகளுடன் சுவிட்சுகள் மறறும் விளக்குகள் போன்றவற்றை இயக்குதல் கூடாது. மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால் நடைகளை கட்ட வேண்டாம். மின்சாரத்தினால் ஏற்படும் தீயிணை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சி செய்ய கூடாது. மழை காலங்களில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும் வகையில் விழிப்போடும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட்டு மின் விபத்தை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×