search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொளத்தூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
    X

    கொளத்தூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    • கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள தியாகராஜன் என்பவரது கடையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார்.
    • மாதவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கொளத்தூர்:

    சென்னை புழல், கிருஷ்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மாதவன் (42). எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். நேற்று காலை 11 மணிக்கு கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள தியாகராஜன் என்பவரது கடையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். அப்போது மின்சாரம் தாக்கி மாதவன் மயங்கி விழுந்தார்.

    அவரை தியாகராஜன் ஆட்டோவில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாதவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×