என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உப்பிலியபுரத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Byமாலை மலர்5 Nov 2021 9:50 AM GMT (Updated: 5 Nov 2021 9:50 AM GMT)
உப்பிலியபுரத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆர்.புதுப்பட்டி கவுண்டர் தெருவைச்சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 45) விவசாயி. இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், விக்னேஷ் வயது 23 என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ரவிச்சந்திரன் நேற்று தீபாவளியன்று அதிகாலையில் புதுப்பட்டி- ஒக்கரைக்கிடையே அமைந்துள்ள தனது தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது மோட்டார் பம்புக்கு செல்லும் வயரில் உள்ள மின்கசிவு தெரியாமல் வயரை மிதித்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று ரவிச்சந்திரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆர்.புதுப்பட்டி கவுண்டர் தெருவைச்சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 45) விவசாயி. இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், விக்னேஷ் வயது 23 என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ரவிச்சந்திரன் நேற்று தீபாவளியன்று அதிகாலையில் புதுப்பட்டி- ஒக்கரைக்கிடையே அமைந்துள்ள தனது தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது மோட்டார் பம்புக்கு செல்லும் வயரில் உள்ள மின்கசிவு தெரியாமல் வயரை மிதித்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று ரவிச்சந்திரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X