என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "AP Assembly election"
- ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.
- ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முதல் மந்திரி சித்தராமையா மற்றும் மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.
இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.
இந்த தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களை பிரசாரத்தில் இறக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதால் வெற்றி வாய்ப்பு உள்ளது.
இதனால் ஆந்திர மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளோம் என தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் தெலுங்கானா வி.ஐ.பி.க்கள் மதிக்கப்படவில்லை. சிபாரிசு கடிதங்கள் அதிகாரிகளால் மறுக்கப்படுகிறது. இதுகுறித்து விவாதம் நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
- திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும்.
- வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.
திருப்பதி:
ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இதில் நடிகையும் மந்திரியுமான ரோஜாவுக்கு மீண்டும் சீட் கிடைக்காது என எதிர்க்கட்சியினர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு ரோஜா பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதன் மூலம் மக்களுக்கு மேலும் சேவை செய்ய பலம் கிடைக்கும். ஆந்திர மாநில மக்கள் நலமடையவும், ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரி ஆக வேண்டும். அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.
நான் கட்சி நிகழ்ச்சிகளிலும் அமைச்சரவை கூட்டங்களிலும் முன் வரிசையில் இருந்து வருகிறேன்.
நகரி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளேன். வருகிற 2024 சட்டமன்ற தேர்தலிலும் எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றனர். அது பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் சூர்யா நடித்த என்.ஜி.கே படம் ஆந்திராவிலும் வருகிற 31-ந்தேதி தெலுங்கில் வெளியாகி உள்ளது. அதுகுறித்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஐதராபாத் வந்த நடிகர் சூர்யா ஆந்திரா அரசியல் குறித்து நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ‘‘யாத்ரா’’ என்ற சினிமா படம் வெளியிடப்பட்டது. இதில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடித்து இருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி நடத்திய அரசியல் போராட்டம், பாதயாத்திரை, சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியை வைத்து யாத்ரா-2 படம் தயாரிக்க உள்ளதாகவும் அதில் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது குறித்து நிருபர்கள் கேட்டனர், அதற்கு சூர்யா பதில் கூறும்போது, ‘‘யாத்ரா’’ படத்திற்கு நல்ல டீம் அமைந்தது. மாபெரும் வெற்றியும் பெற்றது. ‘‘யாத்ரா-2’’ குறித்து இன்னும் யாரும் என்னோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கதை அனைவரையும் கவரும் விதமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன். அதில் சந்தேகமே இல்லை என்றார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா 2-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் காளிபாக்கம் விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
நடிகை ரோஜாவை சந்தித்து தொண்டர்களும், தலைவர்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நகரி தேசம்மா தாயார் கோவிலுக்கு சென்ற ரோஜா அம்மனை தரிசித்தார். அர்ச்சகர்கள் அவருக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்தனர்.
பின்னர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
மாதம் ஒரு முறையாவது திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தால்தான் மனநிறைவு ஏற்படும். கடவுளின் ஆசியாலும், தொண்டர்கள், பொதுமக்களின் ஆதரவாலும் 2-வது முறையாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இனி நல்ல காலம் பிறந்து விட்டது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நல்லாட்சியை மீண்டும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. முதல்-மந்திரியாக ஜெகன்மோகன்ரெட்டி பதவியேற்கும் நிகழ்ச்சி 30-ந்தேதி விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி நகராட்சி விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணியளவில் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி சினிவாசராஜீ, டாலர் சேஷாத்திரி, பொக்காஷம் கிளார்க் குருராஜாராவ் ஆகியோர் விஜயவாடாவில் உள்ள தாடப்பள்ளியில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டியின் வீட்டிற்கு நேரில் சென்றனர்.
ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேவஸ்தானம் சார்பில் சேஷ வஸ்த்திரம் போர்த்தி கவுரவித்தனர். அவருக்கு லட்டு மற்றும் தீர்த்த பிரசாதம் ஆகியவற்றை வழங்கினர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர்.
ஜெகன்மோகன் ரெட்டியின் கையில் மஞ்சள் கயிறு கட்டினர். முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கும் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வாழ்த்து வழங்கினர்.
நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், ஜனசேனை கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளித்தார்.
சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற அவர் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து ஆந்திராவில் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். 2019-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராகவும், தனது கட்சியை பலப்படுத்துவதற்காகவும் பேரணி நடத்த முடிவு செய்தார். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே தபலேஸ்வரம் பாலம் அருகே இந்த பேரணி நடந்தது. இதில் பங்கேற்க தனது கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது அழைப்பை ஏற்று 1 லட்சம் தொண்டர்கள் பேரணியில் குவிந்தனர்.
பேரணியில் பவன் கல்யாண் நடந்து செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அதிக அளவில் தொண்டர்கள் குவிந்திருந்ததால் நெரிசல் ஏற்படும் என்று கருதி அவரை போலீசார் நடந்து செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து பேரணியின் போது பவன்கல்யாண் காரில் சென்றார். தொண்டர்கள் அவரது காரை பின் தொடர்ந்து பேரணியாக சென்றனர்.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பவன் கல்யாண் பேசியதாவது:-
சந்திரபாபு நாயுடு ஆட்சியில் ஊழல் அதிகமாகி விட்டது. இதுபற்றி கேள்வி எழுப்பினால் சந்திரபாபு நாயுடு வாய் திறப்பதில்லை. உள்ளாட்சி தேர்தலில் ஒரு வார்டில் கூட போட்டியிடாத அவரது மகனை எம்.எல்.சி. ஆக்கி உள்ளாட்சித் துறை மந்திரியாக்கி விட்டார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்றார். ஆனால் அவரது மகனுக்கு மட்டுமே வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளார்.
தேர்தலின் போது 600 வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் எதையும் அமல்படுத்தவில்லை. 6 வயது குழந்தையை கேட்டால் கூட சந்திரபாபு நாயுடு அரசின் ஊழலை எடுத்துச் சொல்கிறது. நலத்திட்டங்கள் எல்லாம் ஆளும் கட்சியினருக்கு மட்டுமே கிடைக்கிறது. மக்களுக்கு கிடைக்கவில்லை.
ஜெகன்மோகன் ரெட்டி மீது எனக்கு கோபம் இல்லை. அவரது தந்தை ராஜசேகர ரெட்டி மீது தான் எனக்கு கோபம் உண்டு. 2007-ம் ஆண்டு அவர் முதல்-மந்திரியாக இருந்த போது அவரது கட்சியினர் என்னை வைத்து படம் எடுக்க முயன்றனர். அதற்கு நான் மறுத்தேன். எனவே என்னை மிரட்டினார்கள். அதனால்தான் ராஜசேகர ரெட்டி மீது எனக்கு கோபம் வந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
பவன் கல்யாண் நேற்று ஆந்திரா மாநிலம் ஸ்ரீகா குளம், விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். #PawanKalyan #ChandrababuNaidu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்