search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi"

    • 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
    • பிரதமர் மோடியின் பயோபிக்-ல் நான் நடிக்கவில்லை.

    விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்". விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில், இயக்குநர் மில்டன், விஜய் ஆண்டனி, மெகா ஆகாஷ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அந்நிகழ்வில் கலந்து கொண்ட சத்யராஜிடம் மோடி பயோபிக் படத்தில் நடிப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "பிரதமர் மோடியின் பயோபிக்-ல் நான் நடிக்கவில்லை. அப்படியே நடித்தாலும் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் படத்தை இயக்க முன் வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மோடி பயோபிக்-ஐ என் நண்பர் மணிவண்ணன் போன்ற இயக்குனர் இயக்கினால் அப்படியே தத்ரூபமாக எடுப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பா.ஜ.க. நிச்சயம் 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி.
    • மருத்துவர் முன்னிலையில் அவர் "எஸ் பார் 400 பர்" என்று தொடர்ச்சியாக கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 500 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ.க.வினர் தேர்தல் அறிவிப்புக்கு முன்பிருந்தே கூற ஆரம்பித்துவிட்டனர்.

    பிரதமர் மோடி தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரங்களில் பா.ஜ.க. நிச்சயம் 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்து இருந்தார். மேலும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களும் இதே கருத்தை தேர்தல் பரப்புரைகளில் முன்வைத்தனர்.

    இந்த நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் பா.ஜ.க. கட்சி நிச்சயம் 400-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதை உணர்த்தும் பா.ஜ.க. முழக்கம் "எஸ் பார் 400 பர்" என்பதை தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறார். இவரை கட்டுப்படுத்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முயன்றனர்.

    எனினும், அவர் தொடர்ச்சியாக முழக்கத்தை நிறுத்தாமல் கூறியதால் அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனை அழைத்து சென்றனர். மருத்துவமனையிலும், மருத்துவர் முன்னிலையில் அவர் "எஸ் பார் 400 பர்" என்று தொடர்ச்சியாக கூறினார்.

    மருத்துவர் முன்னிலையிலும் தொடர்ச்சியாக சொன்னதையே சொன்னதால் அவருக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்று மருத்துவரும் குழம்பினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


    • குஜராத் மாநிலத்தில், ஓபிசி இடஒதுக்கீடு பெறும் இஸ்லாமிய சமூகத்தினரின் பட்டியல் இது.
    • தேர்தல் தோல்விக்கு பயந்து, இப்போது என்னை சிறைக்கு அனுப்பப் போவதாக பிரதமர் வெளிப்படையாக மிரட்டுகிறார்.

    எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை இந்தியா கூட்டணி முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும் என்று பிரதமர் மோடி பேசிவரும் நிலையில், குஜராத் அரசும் முஸ்லிம்களுக்கு ஓபிசி இடஒதுக்கீடு கொடுத்து வருகிறது ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதமர் மோடிக்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றை தேஜஸ்வி யாதவ் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் குஜராத்தில் ஓபிசி முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு பட்டியலை இணைந்துள்ளார்.

    அக்கடிதத்தில், "குஜராத் மாநிலத்தில், ஓபிசி இடஒதுக்கீடு பெறும் இஸ்லாமிய சமூகத்தினரின் பட்டியல் இது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல், குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராக இருந்து, தற்போது பிரதமராக இருக்கும் மோடிக்கு தெரியாதா?

    தனியார் துறையில் இடஒதுக்கீடு விவகாரத்தையும் பிரதமர் புறக்கணித்துள்ளார். பீகாரில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் படி இடஒதுக்கீட்டை அதிகரிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் பிரதமர் அதனை நிராகரித்தார்.

    அரசியலமைப்பின் 15 மற்றும் 16 வது பிரிவின் கீழ் அரசு வேலைகளில் மட்டுமே இடஒதுக்கீடு கிடைக்கும், ஆனால் பாஜக அரசு ரயில்வே, ராணுவம் மற்றும் பிற அரசு துறைகளில் இருந்து அரசு வேலைகளை நீக்கியதன் மூலம் இடஒதுக்கீடு மறைமுகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.

    எருமைமாட்டை பறித்து விடுவார்கள், தாலியை பறித்துவிடுவார்கள் என்று பேசிய மோடி இப்போது முஜ்ரா நடனத்தை பற்றி பேசுகிறார். இந்த நாட்டின் பிரதமரின் மொழி இப்படித்தான் இருக்க வேண்டுமா? நீங்கள் யோசித்து முடிவு செய்யுங்கள்.

    தேர்தல் தோல்விக்கு பயந்து, இப்போது என்னை சிறைக்கு அனுப்பப் போவதாக பிரதமர் பேசுகிறார். மத்திய விசாரணை அமைப்புகள் மோடியின் விருப்பப்படி செயல்படுகின்றன என்பதற்கு உங்களது பேச்சே ஆதாரமாகும்" என்று எழுதியுள்ளார்.

    • முஸ்லீம் வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணி முஜ்ரா நடனம் ஆடுவதாக பீகாரில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
    • வெயிலில் அலைந்து உரைகளை ஆற்றுவது அவரது மூளையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    முஸ்லீம் வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணி முஜ்ரா நடனம் ஆடுவதாக பீகாரில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

    பீகாரில் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "எஸ்.சி, எஸ்.டி ஓபிசி மக்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றை முஸ்லிம்களுக்குத் வழங்கும் இந்தியா கூட்டணியில் திட்டங்களை நான் முறியடிப்பேன். அவர்கள் அடிமைகளாக இருந்துகொண்டு தங்கள் வாக்கு வங்கியை தக்கவைக்க 'முஜ்ரா' நடனம் ஆடுகின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரதமரின் கருத்துக்கு கட்டணம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று, பிரதமரின் வாயிலிருந்து 'முஜ்ரா' என்ற வார்த்தையை நான் கேட்டேன். மோடிஜி, இது என்ன மனநிலை? நீங்கள் ஏன் ஏதாவது மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது? அமித் ஷாவும், ஜேபி நட்டாவும் அவருக்கு உடனடியாக மோடிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். வெயிலில் அலைந்து உரைகளை ஆற்றுவது அவரது மூளையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

     

     

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலேவும் மோடியின் கருத்துக்கு கண்டம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், அந்த மனிதர் (மோடி) இப்போது 'முஜ்ரா' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளார். 10 வருட விளம்பரத்தால் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில் மறைந்திருந்த மோடி தனது உண்மையான சுயரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளார். அவர் பயன்படுத்தியது மலிவான மொழி குறிப்பிட்டுள்ளார்.

    ஆர்ஜேடி கட்சி எம்.பி மனோஜ் ஜா கூறுகையில், நேற்று வரை அவருடன் (மோடி) கருத்து வேறுபாடு இருந்தபோதிலும் நாங்கள் இப்போது அவரைப் பற்றி கவலைப்படுகிறோம். 'மட்டன், 'மங்களசூத்ரா', 'முஜ்ரா', இதுதான் ஒரு பிரதமர் பேசக்கூடிய மொழியா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

     

    சிவசேனா காட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, பிரதமரின் உரையின் வீடியோ கிளிப்பைப் பகிரும்போது, "மோடி ஜி விரைவில் குணமடையுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக இஸ்லாமிய பாரம்பரிய நடனமாக இருந்த முஜ்ரா காலப்போக்கில் மாறி, தற்போது கலியாட்டங்களுக்காக மாறுபட்ட வகையில் நடந்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • அத்வானி ஓய்வு பெற்றார். முரளி மனோகர் ஜோஷி ஓய்வு பெற்றார்
    • சிவராஜ் சிங் சவுகான் நீக்கப்பட்டார். வசுந்தர ராஜே நீக்கப்பட்டார். கத்தார் சஹாப் நீக்கப்பட்டார். டாக்டர் ராமன் சிங் நீக்கப்பட்டர்.

    டெல்லி மாநில முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால், தனது தேர்தல் பிரசார வியூகத்தை வேறு மாதிரி கையாண்டார். பிரதமர் மோடி 3-வது முறையாக பதவி ஏற்றாலும் 75 வயது நிறைவடைந்ததும், அமித் ஷாவிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பார் என பரபரப்பு குண்டை வீசினார்.

    அதுவரை பா.ஜனதா தலைவர்கள் பேச்சுகளுக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் பதில் அளித்து வந்தனர். இந்த முறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மோடி மீண்டும் நாட்டின் பிரதமராகி, 3-வது முறையாக பிரதமர் பதவியை முழுமையாக நிறைவு செய்வார் என்றார்.

    இந்த நிலையில் இன்று இந்தியா டுடே டி.வி.க்கு அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டிளித்தார். அப்போது பிரதமருக்கு அடுத்தது யார்? என்ற மோசமான போர் பா.ஜனதாவில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    நீங்கள் இண்டர்நெட்டை பார்த்தீர்கள் என்றால், 2019-ல் அமித் ஷா 75 வயது மட்டும் அதற்கு மேல் வயதுடைய எங்களுடைய கட்சியின் அனைத்து தலைவர்களும் ஓய்வடைவார்கள். இதில் எந்த சமரசமும் கிடையாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    2014-ல் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றபோது, இளைஞர்களுக்கு வழிவிடும் விதமாக இந்த விதியை கொண்டு வந்தார். 75 வயதை தொட்ட பிறகு கட்சி மற்றும் அரசு பொறுப்பு யாருக்கும் கொடுக்கப்படாது என்றார்.

    இந்த விதிப்படி அத்வானி ஓய்வு பெற்றார். முரளி மனோகர் ஜோஷி ஓய்வு பெற்றார். சுமித்ரா மகாஜன் ராஜினாமா செய்த பிறகு ஓய்வு அறிவித்தா். ஆகவே, இந்த விதி இவர்களுக்கும் பொருந்தும்.

    பாஜக கட்சிக்குள், பிரதமர் மோடிக்கு அடுத்த நபர் யார் என்ற மோசமாக போர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தலைவராக பிரதமர் ஓரங்கட்டி வருகிறார். சிவராஜ் சிங் சவுகான் நீக்கப்பட்டார். வசுந்தர ராஜே நீக்கப்பட்டார். கத்தார் சஹாப் நீக்கப்பட்டார். டாக்டர் ராமன் சிங் நீக்கப்பட்டர்.

    யோகி ஆதித்யநாத் ஓரங்கட்டப்பட்டுள்ளார். அவர் நீக்கப்படுவார் என்ற வதந்தி பரவி வருகிறது.

    இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்றைக்கு, எப்போது, எத்தனை பேர் வருவார்கள் என்ற விபரத்தை மாநில தலைவர் முறைப்படி அறிவிப்பார்.
    • நாங்கள் மோடி சொந்த குடும்பத்துக்கே செய்த துரோக புத்தகத்தை தருகிறோம்.

    சென்னை:

    ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறை சாவி தமிழகத்தில் இருப்பதாக பிரதமர் மோடி பேசினார். இதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.

    இதற்கு பதில் அளித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.

    மேலும், வரும் அனைவருக்கும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி தி.மு.க.வும் காங்கிரசும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம்.

    எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதற்கு பதிலளித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:-

    என்றைக்கு, எப்போது, எத்தனை பேர் வருவார்கள் என்ற விபரத்தை மாநில தலைவர் முறைப்படி அறிவிப்பார்.

    அதற்குள் நான் அண்ணாமலைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சாப்பாடு செய்யும் போது மாட்டிறைச்சி கறி செய்யுங்கள். நாங்கள் விரும்பி சாப்பிட தயாராக இருக்கிறோம்.

    நீங்கள் தி.மு.க., காங்கிரஸ் மீது இட்டு கட்டி தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததாக புத்தகத்தை தாருங்கள். பரவாயில்லை, வாங்கி கொள்கிறோம். நாங்கள் மோடி சொந்த குடும்பத்துக்கே செய்த துரோக புத்தகத்தை தருகிறோம். அதையும் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி இன்று வழிபட்டார்.
    • ஒடிஷா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிஷா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி இன்று வழிபட்டார்.

    கோயிலுக்குச் சென்ற புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நான் பூரியில் உள்ள ஸ்ரீஜெகன்நாதரிடம் பிரார்த்தனை செய்தேன். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும், மேலும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைய வழிகாட்டட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று ஒடிஷா பாஜக தலைவர் சம்பித் பத்ரா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஒடிஷா பாஜக தலைவர் பேச்சுக்கு ஒடிஷா காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியது.
    • அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியது. ஈரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் கிழக்கு பகுதியில் அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டரில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தார்.

    ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர், ஆனால் அந்த பகுதியில் மோசமான வானிலை காரணமாக சம்பவ இடத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    தற்பொழுது ஈரானி தொலைக்காட்சி ஒன்றில் சம்பவ இடத்தில் இருந்து ஒருவர் மீட்பு படையினருக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க பிரதமரான ஜோ பைடன் விபத்துக்குள்ளான ஹெலிக்காப்டரை கண்டுப்பிடிப்பதற்கு  அவர்களது சாடிலைட் மேப்பிங் தொழில் நுட்பத்தை வழங்கி உதியுள்ளார்.

    இந்த விபத்தை குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கவலை பதிவை பதிவிட்டுள்ளார் அதில் இப்ராஹிம் ரைசி மற்றும் சக அதிகாரகளின் நல்வாழ்வுக்காக பிராத்திக்கிறேன் என்று அவரது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது 63 வயதான ரைசி, முன்னதாக ஈரான் நாட்டின் நீதித்துறையை வழிநடத்தியவர் ஈரானின் 2021 ஜனாதிபதித் தேர்தலில் ரைசி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
    • ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

    நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26-ந் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந் தேதி 3-ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13-ந் தேதி 4-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனிடையே, இன்று 5-ம் கட்ட தேர்தல் தொடங்கியது.

    ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இதுவரை 23 மாநிலங்களில் நான்கு கட்டங்களாக 379 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குபதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    உத்திரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 7, பீகார், ஒடிசாவில் தலா 5 தொகுதிகளில் வாக்குபதிவு நடை பெறுகிறது. ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, ராஜ்னாத் சிங் போட்டியிடும் லக்னோ தொகுதிகளில் வாக்குபதிவு நடைப்பெறுகிறது. வடக்கு மும்பை - பியூஷ்கோயல், லக்னோ - ராஜ்நாத், அமேதி - ஸ்மிருதி தொகுதியிலும் தேர்தல்.

    ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறும் 49 தொகுதிகளில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இன்று மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடைப்பெறுகிறது.

    • இவரை போன்ற ஒருவரின் வாய், மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது என்பது பாவச்செயல்.
    • இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் மோடியால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் கடந்த 17ஆம் தேதி வெளியானது.

    இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் கிஷோர் பிரதமர் மோடியை விமர்சித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "மோடி பொது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, மனிதனாக இருக்கவும் தகுதியில்லாதவர். இவரை போன்ற ஒருவரின் வாய், மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது என்பது பாவச்செயல். உண்மைக்கு புறம்பான, நெறிமுறையற்ற கருத்துகளை கூறுவதால் அவர் வெட்கப்பட வேண்டும்.

    அவரது வார்த்தைகள், செயல்பாடுகள் என அனைத்தும், உலகில் அவரை விட பெரிய பொய்யர், பெரிய கோழை, அதிக திமிர் கொண்டவர், மோசமானவர், கொடூரமானவர், முட்டாள், கீழ்த்தரமானவர், உணர்வற்றவர், மக்களுக்கு எதிரானவர், ஆபத்து நிறைந்தவர், ஊழல் நிறைந்த சர்வாதிகாரி என்பதை காட்டுகிறது.

    பாஜக ஆட்சியில் இருந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும், விவசாயிகள், இராணுவ வீரர்கள், பெண்கள், குழந்தைகள், மருத்துவமனைகள், கல்லூரிகளின் வளர்ச்சி குறித்தும், செய்த பணிகள் குறித்தும் பேசும் திறன் மோடிக்கு இல்லை. வெறும் பொய் சொல்லி வெறுப்பை மட்டுமே பரப்புகிறார். மேலும் கற்பனையாக வாக்கு ஜிகாத், ஊடுருவல்காரர்கள், பாகிஸ்தானியர்கள் என்று இந்த நாட்டு மக்களை கூறி வருகிறார்.

    அதோடு பிற கட்சியை சுட்டிக்காட்டி அவர்கள் உங்கள் வீடு, எருமை, சைக்கிள் உள்ளிட்ட சொத்துகளை எடுத்து கொள்வார்கள் என்றும், கோயில்களை பூட்டிவிடுவார்கள் என்றும் பேசி வருகிறார். இப்படியான அதிகாரப்பசி மற்றும் போலி இந்துவாக நடந்து கொள்வதால் இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் மோடியால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு முன்னதாக நடிகர் கிஷோர், மோடியை விமர்சித்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மோடி காங்கிரஸ் குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
    • எந்தவொரு தொழிலதிபரும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன் 50 முறை யோசிப்பார்கள் என்று தெரிவித்தார்

    ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மோடி காங்கிரஸ் குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்சத்பூரில் பிரச்சாரப் பேரணியில் பேசிய அவர், "பரம்பரைக் கட்சி அரசியலை ஆதரிக்கும் காங்கிரஸ், மக்களவைத் தொகுதிகளை தங்களின் மூதாதையரின் சொத்துக்களாக கருதுகிறது. எந்தவொரு தொழிலதிபரும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன் 50 முறை யோசிப்பார்கள். அதற்கு காங்கிரஸின் இளவரசர் (ராகுல் காந்தி) பேசும் தொனி மாவோயிஸ்டுகளின் மொழியாக இருப்பதே ஆகும்.

     

    அதைப் பயன்படுத்தி புதுமையான வழிகளில் தொழிலதிபர்களிடமிருந்து காங்கிரஸ் பணம் பறிக்கிறது. காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு, இளவரசரின் (ராகுல் காந்தியின்) தொழில் எதிர்ப்பு மற்றும் தொழிலதிபருக்கு எதிரான மாவோயிஸ்ட் மொழியுடன் அவர்கள் உடன்படுகிறார்களா என்பதற்கு பதிலளிக்க தைரியமாக இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் அவர் அங்கு பேசுகையில், மக்களின் அடிப்படை வசதிகளை காங்கிரஸ் மறுத்து வருவதாகவும் ஜார்கண்டில் 18,000 கிராமங்களின் நிலை 18 ஆம் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே இருந்தது என்றும் தெரிவித்தார். தற்போது ஜார்கண்டில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • ஆளும் திரிணாமுல் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • தொடக்கத்திலிருந்தே பாஜகவை கடுமையாக மம்தா சாடிவந்த நிலையில் அது தேர்தல் காலத்திலும் எதிரொலித்து வருகிறது.

    மேற்க மாநிலத்தில் பராக்பூர், ஹவ்ரா, ஹூக்ளி உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் வரும் மே 20 ஆம் தேதியன்று 5 ஆம் கட்ட தேர்தல் வாக்குபதிவில் இடம்பெற்றுள்ள. இந்நிலையில் ஆளும் திரிணாமுல் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த தேர்தலுக்காக முதலில் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த அவர், பின் அதிலிருந்து வெளியேறி, வெளியில் இருந்து இந்தியா கூட்டணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று அறிவித்தார். தொடக்கத்திலிருந்தே பாஜகவை கடுமையாக மம்தா சாடிவந்த நிலையில் அது தேர்தல் காலத்திலும் எதிரொலித்து வருகிறது. சந்தேஷ்க்காளி விவகாரதை கையில் எடுத்துள்ள பாஜக அதை முன்னிலைப் படுத்தி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

     

    இந்நிலையில் கோதக் பகுதியில் இன்று (மே 18) பிரச்சாரம் செய்த மம்தா, இந்த தேர்தலில் பாஜக 200 சீட் கூட ஜெயிக்காது என்றும் இந்தியா கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளார். பாஜக 400 இடங்களில் உறுதியாக வெல்லும் என்று மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரங்களில் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.  

    ×