search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிஷா"

    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெனால்டி ஷுட் முறையில் நெதர்லாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பெல்ஜியம் அணி. #HockeyWorldCup2018 #Netherlands #Belgium
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் 8 - 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் வெண்கலம் வென்றது. 
    இந்நிலையில், உலககோப்பையை வெல்லப் போகும் அணிக்கான போட்டியில் நெதர்லாந்தும், பெல்ஜியமும் மோதின.



    இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதின. இதனால் முதல் பாதி மட்டுமின்றி ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    இதையடுத்து, இந்த தொடரில் இரண்டாவது முறையாக பெனால்டி ஷுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் பெல்ஜியம் அணி என்ற 3 - 2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி உலககோப்பையை வென்றது.

    உலககோப்பை இறுதிப்போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குடன் சேர்ந்து அமர்ந்து கண்டுகளித்தார். #HockeyWorldCup2018 #Netherlands #Belgium
    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்து அணியை 8 -1 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்த ஆஸ்திரேலியா அணி வெண்கலத்தை வென்றது. #HockeyWorldCup2018 #Australia #England
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்துள்ளன.

    இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின.

    இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தின்ர். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோல் அடித்தனர்.

    இறுதியில், 8 - 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் வெண்கலம் வென்றது. #HockeyWorldCup2018 #Australia #England
    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை பெனால்டி ஷுட் முறையில் 4 -3 என்ற கணக்கில் தோற்கடித்த நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #HockeyWorldCup2018 #Netherlands #Australia
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் அணி 6 -0 என்ற கணக்கில் இங்கிலாந்தை துவம்சம் செய்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இரண்டாவது அரையிறுதி போட்டி ஆஸ்திரேலியா அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையே இன்று இரவு நடைபெற்றது.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நெதர்லாந்து வீரர் கிளென் ஷுர்மான் 9வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து, 20வது நிமிடத்தில் நெதர்லாந்தை சேர்ந்த சிவி வான் ஆஸ் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் நெதர்லாந்து 2 -0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 45வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிம் ஹோவர்டு தனது அணிக்கு முதல் கோல் அடித்தார். இறுதிவரை போராடிய ஆஸ்திரேலிய வீரர்கள், ஆட்டத்தின் இறுதி வினாடியான 60வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து வெற்றியாளரை தேர்வு செய்ய பெனால்டி ஷூட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் 4 - 3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    உலக கோப்பை ஹாக்கி தொடரில் பெனால்டி ஷுட் முறை இந்த போட்டியில்தான் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    நாளை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணி பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. #HockeyWorldCup2018 #Netherlands #Australia
    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். #HockeyWorldCup2018 #SachinTendulkar
    புதுடெல்லி:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இதில் முதலில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தை 6- 0 என்ற கோல் கணக்கில் வென்ற பெல்ஜியம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.



    இந்நிலையில், உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை திறம்பட செய்த ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உலக அளவில் தரமாக செய்துள்ளதற்கு பாராட்டுக்கள். கலிங்கா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியை நேரில் காண பார்வையாளனாக வரவுள்ளேன். எனது ஆதரவு என்றும் உண்டு என பதிவிட்டுள்ளார். #HockeyWorldCup2018 #SachinTendulkar
    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 6-0 என்ற கணக்கில் தோற்கடித்த பெல்ஜியம் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #HockeyWorldCup2018 #Belgium #England
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பெல்ஜியம் வீரர் டாம் பூன் 8-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 19வது நிமிடத்திலும் பெல்ஜியம் வீரர் சைமன் கோக்னார்டு ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.



    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் பெல்ஜியம் வீரர்கள் அதிரடியாக ஆடினர். 37வது நிமிடத்தில் செட்ரிக் சார்ப்லியர் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து, ஆட்டத்தின் 45 மற்றும் 50வது நிமிடத்தில் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் தலா ஒரு கோல் அடித்தார். 53வது நிமிடத்தில் செபாஸ்டியன் டாகியர் ஒரு கோல் அடித்தார்.

    பெல்ஜியம் வீரர்களின் அதிரடி ஆட்டத்துக்கு இங்கிலாந்து வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இங்கிலாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில், பெல்ஜியம் அணி இங்கிலாந்தை 6 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் பெல்ஜியம் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  #HockeyWorldCup2018 #Belgium #England
    ஒடிசாவில் நடந்துவரும் உலககோப்பை ஹாக்கி போட்டியில் இன்று அரையிறுதியில் மோதும் அணிகள் வெற்றி பெற சுதர்சன் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்தியுள்ளார். #HockeyWorldCup2018 #Belgium #England #Australia #Netherlands #SandArtistSudarsan
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளும், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன.

    இந்நிலையில், ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மணல் சிற்பம் வரைந்துள்ளார்.

    அந்த சிற்பத்தில் உலக கோப்பை போட்டிகளில் மோதவுள்ள அணிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்த அவர் 4 நாடுகளின் கொடிகளை வரைந்து வாழ்த்தியுள்ளார்.  #HockeyWorldCup2018 #Belgium #England #Australia #Netherlands #SandArtistSudarsan
    உலககோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்த இந்தியா போட்டியில் இருந்து வெளியேறியது. #HockeyWorldCup2018 #India #Netherlands
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிந்து காலிறுதி போட்டிகள் நேற்று தொடங்கின.

    இன்று நடைபெற்ற காலிறுதியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 12வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப் சிங் முதல் கோல் அடித்து முன்னிலை வகிக்க உதவினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், நெதர்லாந்து வீரர் தெய்ரி பிரிங்மேன் 19வது நிமிடத்தில்  ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை ஆனது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர் மிங்க் வான் டான் வெய்ர்டன் 50வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் நெதர்லாந்து அணி 2 - 1 என முன்னிலை பெற்றது. அதன்பின் ஆட்டம் முடியும் வரை யாரும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், நெதர்லாந்து அணி இந்தியாவை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் நெதர்லாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் தோற்றதன் மூலம் இந்தியா போட்டியில் இருந்து வெளியேறியது. #HockeyWorldCup2018 #India #Netherlands
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் அர்ஜெண்டினாவை 3- 2 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இங்கிலாந்து. #HockeyWorldCup2018 #England #Argentina
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிந்து காலிறுதி போட்டிகள் இன்று தொடங்கின.

    முதல் காலிறுதியில் இங்கிலாந்து மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆட்டம் தொடங்கிய 17வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கன்சாலோ பெய்லட் முதல் கோல் அடித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் பாரி மிடில்டன் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் சமனிலை வகித்தன.

    இதையடுத்து, இரண்டாவது பாதியில் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால், 45வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் வில் கால்னன் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கன்சாலோ பெய்லட் மீண்டும் ஒரு கோல் அடித்தார். 

    இதற்கு பதிலடியாக, இங்கிலாந்தின் மற்றொரு வீரரான ஹாரி மார்டின் 49வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி அர்ஜெண்டினாவை 3 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து வீரர் லியாம் அன்செல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் ஆஸ்திரேலியாவும், பிரான்சும் மோதின. இதில் ஆஸ்திரேலியா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. #HockeyWorldCup2018 #England #Argentina
    உலக கோப்பை ஹாக்கி கால் இறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நெதர்லாந்தை நாளை எதிர்கொள்கிறது. #HockeyWorldCup2018
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டது. ‘லீக்‘ முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக தகுதி பெறும். 2-வது, 3-வது இடத்தைப்பிடிக்கும் அணிகள் ‘கிராஸ் ஓவர்’ என அழைக்கப்படும் 2-வது சுற்றுக்கு நுழையும். கடைசி இடத்தை பிடிக்கும் அணி வெளியேற்றப்படும்.

    9-ந்தேதியுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிந்தது. அதன்படி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இந்தியா, ஜெர்மனி, ஆகிய 4 அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெற்றன. ஸ்பெயின், அயர்லாந்து, மலேசியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் வெளியேற்றப்பட்டன.

    கிராஸ் ஓவர் ஆட்டம் 10 மற்றும் 11-ந்தேதிகளில் நடந்தது. இதன் முடிவில் நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதியில் நுழைந்தன. 4 முறை சாம்பியனான பாகிஸ்தான், கனடா, சீனா, நியூசிலாந்து அணிகள் வெறியேற்றப்பட்டன.

    கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அணிகள் மோது கின்றன.

    இந்திய அணி கால் இறுதியில் பலம் வாய்ந்த நெதர்லாந்தை நாளை (13-ந்தேதி) எதிர்கொள்கிறது.

    1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி ‘லீக்‘ ஆட்டங்களில் 5-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவையும், 5-1 என்ற கணக்கில் கனடாவையும் வீழ்த்தியது. 2-2 என்ற கணக்கில் பெல்ஜியத்துடன் ‘டிரா’ செய்தது.

    3 முறை சாம்பியனான நெதர்லாந்து அணி ‘லீக்‘ ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 1-4 என்ற கணக்கில் தோற்று இருந்தது. 5-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும், 7-0 என்ற கணக்கில் மலேசியாவையும் வீழ்த்தி இருந்தது. கிராஸ் ஓவர் ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

    இந்திய அணிக்கு நெதர்லாந்தை வீழ்த்துவது கடும் சவாலாகவே இருக்கும். #HockeyWorldCup2018
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் பெல்ஜியம் அணியிடம் 5 - 0 என்ற கோல் கணக்கில் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான். #HockeyWorldCup2018 #Pakistan #Belgium
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெல்ஜியம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பெக்ஜியம் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் முதல் கோல் அடித்தார். அவரை தொடர்ந்து, தாமஸ் பிரெய்ல்ஸ் 13வது நிமிடத்திலும், செட்ரிக் சார்லியர் 27வது நிமிடத்திலும், செபாஸ்டியன் டாக்கியர் 35வது நிமிடத்திலும், டாம் பூன் 53வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

    பெல்ஜியம் வீரர்களின் ஆட்டத்துக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர்களால் போராட முடியவில்லை.

    இறுதியில், பெல்ஜியம் அணி பாகிஸ்தானை 5 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது. பெல்ஜியம் வீரர் சைமன் குக்னார்டு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #HockeyWorldCup2018 #Pakistan #Belgium
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. #HockeyWorldCup2018 #Germany #Malaysia
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் மலேசியா அணிகள் இன்று மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் டிம் ஹெர்ஸ்புருச் முத்ல் கோல் அடித்தார். அவரை தொடர்ந்து 14 மற்றும் 18வது நிமிடத்தில் மற்றொரு வீரரான கிறிஸ்டோபர் ருர் தலா ஒரு கோல் அடித்தார்.

    ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் மலேசிய வீரர் ரஸி ரஹிம் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து மற்றொரு வீரரான  
    நபில் நூர் 28வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இரண்டாவது பாதியில் ஜெர்மனி வீரர் மார்கோ மில்டாகு 39-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அப்போது ஜெர்மனி 4 - 2  என முன்னிலை வகித்தது. அடுத்த சில நிமிடங்களில் மலேசிய வீரர் ரஸி ரஹிம் ஒரு கோல் அடித்தார். 59-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் டிம் ஹெர்ஸ்புருச் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், ஜெர்மனி அணி மலேசியாவை 5 - 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஜெர்மனி அணி காலிறுதிக்குள் நுழைந்தது. ஜெர்மனி வீரர் கிறிஸ்டோபர் ருர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #HockeyWorldCup2018 #Germany #Malaysia
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் கனடாவை 5 -1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி காலிறுதிக்குள் நுழைந்தது. #HockeyWorldCup2018 #India #Canada
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் கனடா அணிகள் இன்று மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன் பிரித் கவுர் முதல் கோல் அடித்தார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இந்தியா 1- 0 என முன்னிலை வகித்தது. 

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 39வது நிமிடத்தில் கனடா அணியின் புளோரிஸ் வான் சன் ஒரு கோல் அடித்து தனது அணியை சமனிலைப்படுத்தினார்.

    அதன்பின்னர், இந்திய அணி வீரர்கள் அபாரமாக விளையாடினர். 46வது நிமிடத்தில் இந்திய வீரர் சிங்லெங்சனா கஞ்சுகம் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து, 47 மற்றும் 57வது நிமிடத்தில் லலித் உபாத்யாயா 2 கோல்களை அடித்தார். மற்றொரு இந்திய வீரர் அமித் ரோதாஸ் 51 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    10 நிமிடங்களில் இந்திய வீரர்கள் அபாரமாக ஆடி 4 கோல்களை அடித்து அணியை வெற்றி பெறச்செய்தனர்.

    இறுதியில், இந்திய அணி கனடாவை 5 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி காலிறுதிக்குள் நுழைந்தது. லலித் உபாத்யாயா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    சி பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் பெல்ஜியம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் 5 - 1 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. #HockeyWorldCup2018 #India #Canada
    ×