search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரச்சாரம்"

    • மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை அள்ள வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.
    • மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவி காலம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன.

    இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கு பொதுத் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    தேர்தல் அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆளும் பா.ஜனதா கட்சி தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. தேர்தல் பிரசாரத்துக்கான பணிகளை ஏற்கனவே அந்த கட்சி பல்வேறு மாநிலங்களில் தொடங்கிவிட்டது.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 400 முதல் 450 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் இலக்கு நிர்ணயித்து உள்ளனர். குறிப்பாக மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை அள்ள வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.

    140 தொகுதிகள் மட்டுமே பாரதிய ஜனதாவுக்கு பலவீனமானதாக கருதப்படுகிறது. அந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர். அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நாளை முடிந்த பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை பா.ஜ.க. தலைவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

    25-ந்தேதி முதல் நாடு முழுவதும் முதல் முறை இளம் வாக்காளர்களை குறி வைத்து பிரசாரம் தொடங்கப்பட உள்ளது. பாரதிய ஜனதாவின் இந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க வேண்டும் என்பதில் எதிர்ககட்சிகளும் தயாராகி வருகின்றன. பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதற்காக 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன.

    இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த மாத இறுதிக்குள் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இந்தியா கூட்டணி தலைவர்களும் வேட்பாளர்கள் பணிகளை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் முன்பே பிரசாரத்தை தீவிரப்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர்.

    அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நாடு முழுவதும் 7 லட்சம் கிராமங்களில் பா.ஜ.க. தொண்டர்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். அப்போது பிரத மர் நரேந்திர மோடி தலை மையில் பா.ஜ.க. அரசின் நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்படும்.

    ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பிறகு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அவரவர் மாநிலங்களில் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளனர். பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் தொகுதி வாரியாக பிரசாரத்தை முன்னெடுப்பார்கள்.

    8 பாராளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார். இந்த 8 தொகுதிகளில் குறைந்த பட்சம் ஒரு தொகுதியில் பிரதமர் மோடியின் பொதுதுக் கூட்டம், வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

    பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு தேசிய அளவிலான பிரசார பொறுப்பை ஏற்கும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் மூத்த தலைவர் ஒருவர் தேர்தல் பிரசார பொறுப் பாளராக நியமிக்கப்படுவார்.

    உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதர மாநிலங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பெண்கள், இளைய தலைமுறையினரை ஈர்க்க புதிய உத்திகள் வகுக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களால் விரும்பப்படும் பிரபலங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்.

    விவசாயிகள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இளைஞர்கள் நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த கையேடுகள் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படும். பிரதமர் மோடி நாடு முழுவதும் 140-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்வார்.

    இந்த தகவல்கள் டெல்லி பா.ஜ.க. வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ளன.

    பெண்களுக்கான கருத்தடை சிகிச்சை பல்வேறு மருத்துவ காரணங்களால் செய்ய இயலாத போது அவர்களின் கணவர்கள் இந்த எளிய கருத்தடை சிகிச்சை முறையை மேற்கொண்டு பயன்பெறலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சை குறித்த வாகன பிரச்சாரத்தை திருநாவலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். செல்வி தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ அலுவலர் அசுவினி, வட்டார புள்ளியியலாளர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் முருகன், கவியரசரன், கோபிநாத், பகுதி சுகாதார செவிலியர் மின்னல் கொடி, செவிலியர்கள் சரண்யா, சரசு, சுஜிதா, மருந்தாளுனர் ராமன், ஆய்வக நுட்பனர் ராதிகா, புவனேஸ்வரி, கிராம சுகாதார செவிலியர்கள் சரண்யா, ஸ்ரீதேவி, ஆரோக்கியமேரி, கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பெண்களுக்கான கருத்தடை சிகிச்சை பல்வேறு மருத்துவ காரணங்களால் செய்ய இயலாத போது அவர்களின் கணவர்கள் இந்த எளிய கருத்தடை சிகிச்சை முறையை மேற்கொண்டு பயன்பெறலாம்.ஆண்டு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது என்று வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.

    • வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் புகளூர் காகித ஆலையில் நடைபெற்றது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் எடுத்துரைத்து விளக்கப்பட்டது.

    வேலாயுதம்பாளையம்,

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் பிழை திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் குறித்து வரும் 25-ந்தேதி சனிக்கிழமை மற்றும் 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களி லும் நடைபெறும் சிறப்பு முகாம் குறித்து விளக்குவ தற்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன வளாகத்தில் உள்ள கால அலுவலகம் அருகே வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய விளக்க நிகழ்ச்சி கூட்டம் நடைபெற்றது.இதில் கரூர் கோட்டாட்சியர் ரூபினா, கரூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள், புகழூர் நகராட்சி அதிகாரி, புகளூர் தாசில்தார் முருகன், செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் செயல் இயக்குனர் சீனிவாசன், பொது மேலாளர் கலைச்செல்வன், துணைப் பொது மேலாளர் இராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்ட தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் எடுத்துரைத்து விளக்கப்பட்டது.

    • குளித்தலை அரசு பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு நூதன முறையில் பிரசாரம் நடைபெற்றது
    • 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது குளித்தலை ஆர்.டி.ஓ. ரவி தலைமையில் பள்ளி மாணவர்கள் மத்தியில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் மற்றும் அவர்கள் குடும்பத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வோட் 18 + என்ற அமைப்பில் மாணவர்களை அமர செய்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது, இதில் குளித்தலை வட்டாட்சியர் மகுடேஸ்வரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் வெங்கடேசன், தேர்தல் துணை வட்டாட்சியர் நீதிராஜன், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீவித்யா , கிராம நிர்வாக அலுவலர் ராமதாஸ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • சங்கராபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இதயதுல்லா, பொதுக் குழு உறுப்பினர் துரைராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் கேலிச் சித்திரமாக 10 தலை ராவணன் அவதாரத்தில் ராகுல் காந்தியை வரைந்து லட்சகணக்கான பாரதீய ஜனதாசமூக வலைதள குழுக்களில் வாயிலாக வெளியிட்டு வெறுப்பு பிரச்சாரத்தை செய்யும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் , பேரூராட்சி துணைத் தலைவர் ஆஷா பி ஜாகீர், மாவட்ட துணைத் தலைவர் இதயதுல்லா, பொதுக் குழு உறுப்பினர் துரைராஜ் முன்னிலையில் நடைபெற்றது. நகரத் தலைவர்வக்கீல் முகமது பாஷா வரவேற்றார். மாணவர் காங்கிரஸ் மாநில செயலாளர் அதில் கான் தலைமையில் கண்டன உரையாற்றி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.

    • பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் போன்ற பொருட்களை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
    • கிராமங்கள் மற்றும் நகரங்களில் தூய்மை பணிகளை பரப்புவேன்.

    கும்பகோணம்:

    சமூக கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு குறித்து கிராம சமுதாய மக்கள் விழிப்பு ணர்வு பெற்று வளர்ச்சி பெற இந்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் 108இடங்களை

    தேர்வு செய்து அதில் கும்பகோணம் சுற்றியுள்ள சூரியனார் கோவில், கஞ்சனூர், திருநாகேஸ்வரம் நவக்கிரக கோயில்களில்

    தூய்மை பிரச்சாரம், உறுதிமொழி பிரச்சாரம், விழிப்புணர்வு பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சி கள் உலக சுற்றுலா தினத்தில் நடைப்பெற்றது.

    தூய்மை பிரச்சாரத்தை சூரியனார்கோவில் ஆதினம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    ராமலிங்கம் எம்.பி, முன்னாள் எம்.பி. பாரதிமோ கன், ஒன்றிய குழு துணைத்த லைவர் கோ.க.அண்ணா துரை, தெற்கு மண்டல சுற்றுலா துறை அதிகாரி மாரிமுத்து, டாபி மாநில தலைவர் ஜாஹிர் உசேன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து முன்னதாக எனது குடும்பம், எனது ஊர், எனது கிராமம் மற்றும் எனது பணியிடத்து டன் தூய்மைக்கான தேடலை தொடங்குவேன் எனவும், உலக நாடுகள் தூய்மையா னவை என்றும் அவர்களின் குடிமக்கள் குப்பை கொட்டு வதில் ஈடுபடுவதில்லை எனவும், இந்த உறுதியான நம்பிக்கையுடன், கிராமங்கள் மற்றும் நகரங்களில் தூய்மை பணிகளை பரப்புவேன் எனவும் 100 மணிநேரத்தை தூய்மைக்காக செலவிட முயற்சி செய்வது என்றும்,

    தூய்மையை நோக்கி எடுக்கும் ஒவ்வொரு அடியும் எனது நாட்டை தூய்மையாக மாற்ற உதவும் என்றும்சுத்த மான தேசமே ஆரோக்கியமான தேசம் என மாணவர்கள் தூய்மை உறுதிமொழியை எடுத்தனர்.

    மேலும் பள்ளி மாணவ ர்கள் கை உறை அணிந்து கோவில் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் போன்ற பொரு ட்களை அகற்றி தூய்மை பணிகளை செய்தனர்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகி மகாலிங்கம், அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி இணை செயலாளர் சிராஜுதின், பள்ளி தாளா ர்கள், தலைமை ஆசிரி யர்கள், உள்ளாட்சி பிரதிநிதிக ள்,கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மீனாம்பாறை பகுதியில் சுமார் 40 சென்ட் பரப்பளவில் அரசு நிலம் உள்ளது.
    • பட்டா வழங்கும் வரை யாரும் இடத்தை ஆக்கிரமிக்க கூடாது.

    பல்லடம், செப்.22-

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி மீனாம்பாறை பகுதியில் சுமார் 40 சென்ட் பரப்பளவில் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நேற்று மீனாம்பாறை மற்றும் அவரப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூடாரம் அமைத்து ஆக்கிரமிக்க முயன்றனர்.இது பற்றி தகவல் அறிந்து வந்த பல்லடம் வருவாய் ஆய்வாளர் அனிதா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் பொதுமக்கள் காலி செய்ய மறுத்தனர். அப்போது வருவாய் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆய்வுக்குப்பின் பட்டா வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். ஆக்கிரமிப்புகளை நீங்களே அகற்றிக் கொள்ளுங்கள். இல்லையெனில் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும். பட்டா வழங்கும் வரை யாரும் இடத்தை ஆக்கிரமிக்க கூடாது.

    மீறினால் கம்பி வேலி அமைத்து இடத்தை பாதுகாப்பதுடன் பொது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.

    • பெரம்பலூரில் மின் ஊழியர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்
    • ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரம் விநியோகம்

    பெரம்பலூர்,

    அனைத்து வீடுகளிலும் தற்போதுள்ள மின்சார ரீடிங் மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அமல்படுத்திட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனை கண்டித்தும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், மின் ஊழியர்களின் வேலையிழப்புகள் குறித்தும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள உழவர் சந்தை முன்பு விழிப்புணர்வு பிரசார இயக்கம் நடந்தது. மாநில செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். இதில் மின் ஊழியர்கள் உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    • வருகிற 30-ந் தேதி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்லி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம்.
    • போராட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

    முத்துப்பேட்டை:

    100 நாள் வேலை திட்டத்திற்கு தேவையான நிதியை குறைத்து வழங்கியுள்ள மத்திய அரசை கண்டித்து வருகிற மே 30-ந் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்லி நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் நேற்று முத்துப்பேட்டை அடுத்த பாண்டி, வேப்பஞ்சேரி ஊராட்சி மற்றும் மங்கலூர் கிளைகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராஜா, ஒன்றிய செயலாளர் சிவசந்திரன், ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அன்பு செல்வம், சுப்ரமணியன், மங்கல் சம்பத், காசிநாதன் ஆகியோர் சந்தித்து போராட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

    அப்போது, பாண்டி ஊராட்சியில் 20-க்கும் மேற்ப்டட தொழிலாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினருக்கு நிதி அளித்து பாராட்டினர்.

    • விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியலின அணி சார்பாக சென்னையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. பட்டியலின அணி சார்பாக சென்னையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    விழுப்புரம் பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.ஏ.டி. கலிவரதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின அணி மாவட்ட நிர்வாகிகள், ராஜசேகர், அங்காளன், நாகராஜ், கலையரசன், முரளி, சதாசிவம் , பார்த்திபன், வெங்கடேசன், சுந்தர்ராஜன், எல்.குமாரசாமி, குபேரன், பிரியா, ஆன்மீக பிரிவு மாவட்ட நிர்வாகிகள் சந்திரசேகரன், வெங்கட்ராமன், சுரேஷ் குருக்கள், விக்கிரவாண்டி ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடகிருஷ்ணன், ஞானவேல், முருகன், தங்கராசு, காணை ஒன்றிய நிர்வாகிகள் வினோத், பிரச்சார பிரிவு மாவட்ட நிர்வாகிகள் தனசேகரன், சுகுமார், குணசேகரன், பாலா, விழுப்புரம் நிர்வாகிகள் விஜயன், குமரகுரு, ஆறுமுகம், திருக்கோவிலூர் நிர்வாகிகள் பத்ரி நாராயணன், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர்கள ஜோதி, ராஜா, நாகராஜ், செல்வகுமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தியாகு, மேற்கு நிர்வாகி ஜெயசீலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர் பிரபாகரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், ஞானவேல், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் எஸ்.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் நடைபெற்றது
    • வட்டார கல்வி அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை குறித்த வாகன பிரச்சாரம் நடைபெற்றது. அக்கட்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பிரச்சார வாகனத்தை வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆடல் பாடல், விளையாட்டு செயல்பாடுகள் வாயிலாக பாடங்களை கற்றுக் கொள்ளும் என்னும் எழுத்தும் திட்டம், அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ், ஆசிரியர் பயிற்றுனர் பாரதிதாசன், சுரேஷ்குமார், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஹமத்துல்லா மற்றும் பள்ளி மேலாண்மைகுழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

    • பேராவூரணி வட்டாரத்தில் 15 இடங்களில் பிரச்சார வாகன விழிப்புணர்வு நடைபெற்றது.
    • அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு குறித்து எடுத்து கூறப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமையில் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நடைபெற்றது.

    வட்டார கல்வி அலுவலர்கள் கலாராணி, அங்கையர்கண்ணி ஆகியோர் பெற்றோரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேம்பையன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண், இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் மற்றும் தன்னார்வலர்கள் சந்ரோதயம், ராஜேஸ்வரி, தனலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பேராவூரணியில் நடைபெற்ற பிரச்சார வாகன தொடக்க நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன், ஆசிரியர் பயிற்றுனர்கள் சரவணன், முனிசாமி, சிவமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பேராவூரணி வட்டாரத்தில் 15 இடங்களில் பிரச்சார வாகன விழிப்புணர்வு நடைபெற்றது.

    அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப்பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு, 14 வகையான விலையில்லா நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.

    ×