search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MSP"

    • பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
    • சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.

    வரும் மக்களவைத் தேர்தல் அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் இட ஒதுக்கீட்டையும் தன் மானத்தையும் காப்பாற்ற நடத்தப்படும் தேர்தல் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து அகிலேஷ் பேசினார். அதில், ஒருபுறம், அரசியலமைப்பைப் பாதுகாக்க விரும்பும் மக்கள் உள்ளனர், மறுபுறம், அரசியலமைப்பை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் மக்கள் உள்ளனர்.

    2014 - இல் ஆட்சிக்கு வந்தவர்கள், 2024 - இல் வெளியேறுவார்கள். ஹிட்லர் கூட 10 ஆண்டுகள் தான் ஆட்சி செய்தார், அது போல மோடியின் ஆட்சியும் 10 ஆண்டுகளுடன் நிறைவுறும்.

    பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. விவசாயம் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பதால் குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் சட்டரீதியான உத்தரவாதம் இருக்க வேண்டும். விவசாயிகளும், விவசாயமும் அழிந்தால், பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • விவசாயிகளின் குறைகளை அரசு தீர்க்க அரசுக்கு நேரமில்லை" என நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.
    • விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம், தற்போதைய சூழ்நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

    "தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால், அவர்களின் குறைகளைத் தீர்க்க அரசுக்கு நேரமில்லை" என நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவின் வறட்சிப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் 'நாம்' என்ற அறக்கட்டளையை நடிகர் மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து நானா படேகர் நடத்தி வருகிறார். அதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

    இந்நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பட்டேகர் விவசாயிகளின் குறைகளை அரசு தீர்க்கவில்லை என்ற விமர்சனங்களை முன் வைத்தார்.

    அப்படிப்பட்ட அரசிடம் விவசாயிகள் எதையும் கோரக் கூடாது. விவசாயிகள், நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டுவர வேண்டும். எந்த அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

    இளம் தலைமுறைக்கு நீங்கள் என்ன மாதிரியான லட்சியத்தை முன்வைக்கிறீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள். என்னால் அரசியலில் சேர முடியாது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம். தற்போதைய சூழ்நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகர் கிஷோர் ஆதரவு தெரிவித்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது

    அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமானதா? குறைந்தபட்ச ஆதார விலை (MSP) வழங்குகிறோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான இந்த அரசியல்வாதிகளை கூட விட்டு விடுவோம். ஆனால், விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர்வாழும் இந்த தேசபக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களை எப்படி இந்தியர்கள் என சொல்லமுடியும்?

    விவசாயிகள் போராட்டத்தின்போது சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டன, சுவர்கள் எழுப்பப்பட்டன, குழிகள் வெட்டப்பட்டன, துப்பாக்கிகள் சுடப்பட்டன, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் அனைத்தையும் செய்தது. மற்றொரு பக்கம் தேசம் முழுவதற்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளின் மீது தேசவிரோதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது.

    மதவெறி கொண்ட கூட்டத்தின் உறுதியான வாக்குறுதிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியும், அவரது அரசும், அவர்களது பக்தர்களும், விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஆகவே அவர்களுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்.

    ஆனால் இந்த நன்றி கெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்... இந்த விவசாயிகள் தேசவிரோதிகள் எனும் முத்திரைக்கு தகுதியானவர்களா?" என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

    • விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர்வாழும் இந்த தேசபக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள்.
    • விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்

    விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவர்களது தேசபக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என நடிகர் கிஷோர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமானதா? குறைந்தபட்ச ஆதார விலை (MSP) வழங்குகிறோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான இந்த அரசியல்வாதிகளை கூட விட்டு விடுவோம். ஆனால், விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர்வாழும் இந்த தேசபக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களை எப்படி இந்தியர்கள் என சொல்லமுடியும்?


    விவசாயிகள் போராட்டத்தின்போது சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டன, சுவர்கள் எழுப்பப்பட்டன, குழிகள் வெட்டப்பட்டன, துப்பாக்கிகள் சுடப்பட்டன, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் அனைத்தையும் செய்தது. மற்றொரு பக்கம் தேசம் முழுவதற்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளின் மீது தேசவிரோதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது.

    மதவெறி கொண்ட கூட்டத்தின் உறுதியான வாக்குறுதிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியும், அவரது அரசும், அவர்களது பக்தர்களும், விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஆகவே அவர்களுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்.

    ஆனால் இந்த நன்றி கெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்... இந்த விவசாயிகள் தேசவிரோதிகள் எனும் முத்திரைக்கு தகுதியானவர்களா?" என நடிகர் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது
    • 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?

    விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு, X கணக்குகள் முடக்கம், இதுதான் ஜனநாயகமா: ராகுல்காந்தி ட்வீட்

    மோடி அவர்களே..! நீங்கள் ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள் என மக்களுக்கு தெரியும். அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள் என ராகுல்காந்தி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது. இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டால், அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது கிடையாது. முன்னாள் ஆளுநர் உண்மையை கூறினால், அவரின் வீட்டிற்கு சி.பி.ஐயை அனுப்புவது. எதிர்க்கட்சியினரின் வங்கிக்கணக்கை முடக்குவது. 144 தடை உத்தரவை அமல்படுத்துவது, இணையச் சேவைகளை தடை செய்வது, இதுதான் உங்களின் ஜனநாயகமா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சி.ஆர்.பி.எப் வீரர்கள் செல்ல விமானம் கொடுத்திருந்தால் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்திருக்காது என தான் கூறியதற்கு வாயை மூடி அமைதியாக இருக்குமாறு மோடி சொன்னதாக மாலிக் பேட்டியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • கார்ப்பரேட் வரி விலக்கு 1.8 லட்சம் கோடி அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

    விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் "டெல்லி சலோ" என்ற பெயரில் டெல்லி நகரில் பேரணி செல்ல முயன்றனர்.

    ஆனால் அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தங்களை டெல்லிக்கு அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். இதற்கிடையே மத்திய அரசு விவசாய சங்கங்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை நான்கு கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. 4-வது கட்ட பேச்சுவார்த்தையின்போது குறிப்பிட்ட பருப்பு வகைகள், காட்டன், சோளம் உள்ளிட்டவைகளுக்கு ஐந்தாண்டுகள் குறைந்தபட்ச ஆதாய விலை வழங்கப்படும் என மத்திய அரசு பரிந்துரை செய்தது. மேலும் பல பரிந்துரைகளை முன்வைத்தது.

    ஆனால், விவசாயிகள் மத்திய அரசின் பரிந்துரையை ஏற்கவில்லை. நாளை முதல் பேரணி தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் எம்.எஸ்.பி.-க்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை விவசாயிகள் பட்ஜெட்டின் சுமையாக உருவாக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக ஜிடிபி வளர்ச்சியின் உந்து சக்தியாக இருப்பார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் "மோடியின் பிரசார இயந்திரங்கள், அவருக்கு சாதகமாக ஊடகங்களும் எம்.எஸ்.பி. குறித்து பொய்களை பரப்பி விட்டன. மத்திய அரசின் பட்ஜெட்டில் எம்.எஸ்.பி.க்கான சட்ட உத்தரவாதத்திற்கு சாத்தியமில்லை என்பது பொய்.

    CRISIL-ன் கருத்துப்படி 2022-23-ல் விவசாயிகளுக்கு எம்.எஸ்.பி. அளித்திருந்தால், கூடுதலாக 21 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு சுமையைாக இருந்திருக்கும். இது மொத்த பட்ஜெட்டில் 0.4 சதவீதம்தான். இது உண்மை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரி விலக்கு 1.8 லட்சம் கோடி அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கான இந்த சிறிய அளவிலான செலவை மத்திய செய்ய மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

    விவசாயத்துறையில் முதலீடு அதிகரிக்கும். கிராமப் பகுதிகளில் தேவை அதிகரிக்கும். விதவிதமான பயிர்களை வளர்ப்பதில் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படும். இது நாட்டின் செழிப்பிற்கு உத்தரவாதம். வதந்தி பரப்புவது டாக்டர் சுவாமிநாதன் மற்றும் அவரது கனவை இழிவுப்படுத்துவதாகும் என்றார்.

    கோதுமைக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.105 உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. #Wheat #MSP #Cabinet
    புதுடெல்லி:

    கோதுமைக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.105 உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. மேலும் பல தானியங்களின் ஆதார விலை உயர்த்தப்பட்டதால், விவசாயிகளுக்கு ரூ.62 ஆயிரத்து 635 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கமிட்டி கூட்டத்தில், ‘ரபி’ பருவ கோதுமை உள்ளிட்ட தானிய வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து மத்திய வேளாண்துறை மந்திரி ராதா மோகன்சிங் கூறியதாவது:-

    கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.105 உயர்த்தப்படுகிறது. அதனால், அதன் விலை குவிண்டாலுக்கு ரூ.1,840 ஆக உயரும். இது, 6 சதவீத விலை உயர்வு ஆகும்.

    பார்லிக்கான ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.30 அதிகரிக்கப்படுகிறது. அதன் விலை ரூ.1,440 ஆக உயரும். மூக்கடலைக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.220 உயர்த்தப்படுகிறது. அதன் விலை குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரத்து 620 ஆனது.

    மசூர் பருப்பின் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.225 அதிகரிக்கப்படுகிறது. கடுகுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தப்படுகிறது. குங்குமப்பூவுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.845 அதிகரிக்கப்படுகிறது.

    ஆதார விலை உயர்வால், விவசாயிகளுக்கு ரூ.62 ஆயிரத்து 635 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

    வேளாண் ஆலோசனை குழுவின் பரிந்துரை அடிப்படையில், ஆதார விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அனைத்து ‘ரபி’ பருவ தானியங்களுக்கும் அவற்றின் உற்பத்தி விலையை விட 50 சதவீதம் முதல் 112 சதவீதம்வரை ஆதார விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

    வேளாண் விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்தி விலையை விட 50 சதவீதம் அதிக விலை கிடைக்கச் செய்வோம் என்று பா.ஜனதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும்வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு ராதா மோகன்சிங் கூறினார்.
    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை டன்னுக்கு ரூ.2 ஆயிரமும், கேழ்வரகு ஆதரவு விலையை ரூ.9 ஆயிரமும் உயர்த்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை டன்னுக்கு ரூ.2 ஆயிரமும், கேழ்வரகு ஆதரவு விலையை ரூ.9 ஆயிரமும் உயர்த்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

    விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த தானியங்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை, அவற்றின் உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு அதிகமாக உயர்த்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மேலும், 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியாகவும் இதை பா.ஜனதா அளித்தது.

    அதன்படி, மத்திய மந்திரிசபை கூட்டத்தில், கரீப் (சம்பா) பருவ சாகுபடி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று நடக்கிறது. பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டத்தில், கரீப் பருவ சாகுபடி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் உயர்த்தப்படுகிறது. அதனால், அதன் விலை டன்னுக்கு ரூ.17 ஆயிரத்து 500 ஆக உயரும்.

    கேழ்வரகுக்கான ஆதரவு விலைதான் அதிகபட்சமாக டன்னுக்கு ரூ.9 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. அதன் விலை டன்னுக்கு ரூ.27 ஆயிரமாக அதிகரிக்கும்.

    இதுபோல், பாசி பயறு உள்பட மொத்தம் 14 தானியங்களின் ஆதரவு விலை உயர்த்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 
    ×