என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actor kishore"

    • டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்?
    • இது ராகுல் காந்தியின் போராட்டம் அல்ல.. நமது போராட்டம்

    2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பாஜவுடன் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக நேற்று, தேர்தல் ஆணைய தரவுகளை காண்பித்து செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    கர்நாடகாவில் மகாதேவபுரா தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டன, மகாராஷ்டிராவில் குறுகிய காலத்தில் 1 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், புகைப்படம் இல்லாத வாக்காளர்கள், படிவம் 6 முறைகேடு உள்ளிட்ட 5 வழிகளில் மோசடி நடந்துள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்?, வீடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்?, வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்வது ஏன்?, எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், எதிர்க்கட்சிகளை மிரட்டுவது ஏன்?, பாஜகவின் ஏஜண்டைப் போல தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்? உள்ளிட்ட 5 கேள்விகளை ராகுல் எழுப்பினார்.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து நடிகர் கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இந்திய ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் படுகொலை செய்த பயங்கரவாதிகளை 'மகாதேவா'புரா நடவடிக்கை அம்பலப்படுத்துகிறது.

    எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அனைத்து இந்தியர்களின் சார்பாக வணக்கம். டிஜிட்டல் தரவு மற்றும் சிசிடிவி காட்சிகளை வழங்காத தேர்தல் ஆணையத்தின் தந்திரங்களையும் தாண்டி, ஜனநாயகத்தின் அடித்தளத்தை அழித்த மிகப்பெரிய துரோகத்தை நிரூபிக்க, 21 அடி உயரமுள்ள டன் கணக்கில் சூழ்ச்சி ஆவணங்களை பகுப்பாய்வு செய்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு வணக்கம்..

    இது ராகுல் காந்தியின் அல்லது எதிர்க்கட்சியின் போராட்டம் அல்ல.. நமது போராட்டம் மற்றும் நமது உரிமைதான் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இப்போதாவது நாம் எழுந்து நிற்க மாட்டோமா? இப்போதாவது விசாரணை நடக்குமா? இல்லை இது ஒரு புதிய சாதாரணமாக இருக்குமா?

    துணை ஜனாதிபதி போன்ற உயர்ந்த பதவியை ராஜினாமா செய்வது போலவும், தேர்தல் பத்திரங்களைப் போன்ற அரசியலமைப்பிற்கு முரணான ஒரு மோசடி போலவும்?

    இறந்த பொருளாதாரம் எனக்கு தெரியாது, ஆனால் நாம் நிச்சயமாக இறந்த ஜனநாயகத்தில் வாழ்கிறோம்.

    இந்திய மக்கள், ஊடகங்கள், நீதிமன்றம், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த துரோகத்தின் ஒரு பகுதியாக இருக்க மறுத்து, இந்த துரோகிகளுக்கு எதிராக நிற்காவிட்டால், நமது வாக்குரிமை முற்றிலுமாக பறிக்கப்படுவதை விரைவில் காண்போம்" என்று தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர்வாழும் இந்த தேசபக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள்.
    • விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்

    விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவர்களது தேசபக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என நடிகர் கிஷோர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமானதா? குறைந்தபட்ச ஆதார விலை (MSP) வழங்குகிறோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான இந்த அரசியல்வாதிகளை கூட விட்டு விடுவோம். ஆனால், விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர்வாழும் இந்த தேசபக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களை எப்படி இந்தியர்கள் என சொல்லமுடியும்?


    விவசாயிகள் போராட்டத்தின்போது சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டன, சுவர்கள் எழுப்பப்பட்டன, குழிகள் வெட்டப்பட்டன, துப்பாக்கிகள் சுடப்பட்டன, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் அனைத்தையும் செய்தது. மற்றொரு பக்கம் தேசம் முழுவதற்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளின் மீது தேசவிரோதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது.

    மதவெறி கொண்ட கூட்டத்தின் உறுதியான வாக்குறுதிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியும், அவரது அரசும், அவர்களது பக்தர்களும், விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஆகவே அவர்களுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்.

    ஆனால் இந்த நன்றி கெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்... இந்த விவசாயிகள் தேசவிரோதிகள் எனும் முத்திரைக்கு தகுதியானவர்களா?" என நடிகர் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • விவசாயிகளின் குறைகளை அரசு தீர்க்க அரசுக்கு நேரமில்லை" என நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.
    • விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம், தற்போதைய சூழ்நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

    "தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால், அவர்களின் குறைகளைத் தீர்க்க அரசுக்கு நேரமில்லை" என நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவின் வறட்சிப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் 'நாம்' என்ற அறக்கட்டளையை நடிகர் மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து நானா படேகர் நடத்தி வருகிறார். அதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

    இந்நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பட்டேகர் விவசாயிகளின் குறைகளை அரசு தீர்க்கவில்லை என்ற விமர்சனங்களை முன் வைத்தார்.

    அப்படிப்பட்ட அரசிடம் விவசாயிகள் எதையும் கோரக் கூடாது. விவசாயிகள், நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டுவர வேண்டும். எந்த அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

    இளம் தலைமுறைக்கு நீங்கள் என்ன மாதிரியான லட்சியத்தை முன்வைக்கிறீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள். என்னால் அரசியலில் சேர முடியாது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம். தற்போதைய சூழ்நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகர் கிஷோர் ஆதரவு தெரிவித்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது

    அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமானதா? குறைந்தபட்ச ஆதார விலை (MSP) வழங்குகிறோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான இந்த அரசியல்வாதிகளை கூட விட்டு விடுவோம். ஆனால், விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர்வாழும் இந்த தேசபக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களை எப்படி இந்தியர்கள் என சொல்லமுடியும்?

    விவசாயிகள் போராட்டத்தின்போது சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டன, சுவர்கள் எழுப்பப்பட்டன, குழிகள் வெட்டப்பட்டன, துப்பாக்கிகள் சுடப்பட்டன, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் அனைத்தையும் செய்தது. மற்றொரு பக்கம் தேசம் முழுவதற்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளின் மீது தேசவிரோதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது.

    மதவெறி கொண்ட கூட்டத்தின் உறுதியான வாக்குறுதிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியும், அவரது அரசும், அவர்களது பக்தர்களும், விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஆகவே அவர்களுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்.

    ஆனால் இந்த நன்றி கெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்... இந்த விவசாயிகள் தேசவிரோதிகள் எனும் முத்திரைக்கு தகுதியானவர்களா?" என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

    • இவரை போன்ற ஒருவரின் வாய், மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது என்பது பாவச்செயல்.
    • இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் மோடியால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் கடந்த 17ஆம் தேதி வெளியானது.

    இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் கிஷோர் பிரதமர் மோடியை விமர்சித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "மோடி பொது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, மனிதனாக இருக்கவும் தகுதியில்லாதவர். இவரை போன்ற ஒருவரின் வாய், மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது என்பது பாவச்செயல். உண்மைக்கு புறம்பான, நெறிமுறையற்ற கருத்துகளை கூறுவதால் அவர் வெட்கப்பட வேண்டும்.

    அவரது வார்த்தைகள், செயல்பாடுகள் என அனைத்தும், உலகில் அவரை விட பெரிய பொய்யர், பெரிய கோழை, அதிக திமிர் கொண்டவர், மோசமானவர், கொடூரமானவர், முட்டாள், கீழ்த்தரமானவர், உணர்வற்றவர், மக்களுக்கு எதிரானவர், ஆபத்து நிறைந்தவர், ஊழல் நிறைந்த சர்வாதிகாரி என்பதை காட்டுகிறது.

    பாஜக ஆட்சியில் இருந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும், விவசாயிகள், இராணுவ வீரர்கள், பெண்கள், குழந்தைகள், மருத்துவமனைகள், கல்லூரிகளின் வளர்ச்சி குறித்தும், செய்த பணிகள் குறித்தும் பேசும் திறன் மோடிக்கு இல்லை. வெறும் பொய் சொல்லி வெறுப்பை மட்டுமே பரப்புகிறார். மேலும் கற்பனையாக வாக்கு ஜிகாத், ஊடுருவல்காரர்கள், பாகிஸ்தானியர்கள் என்று இந்த நாட்டு மக்களை கூறி வருகிறார்.

    அதோடு பிற கட்சியை சுட்டிக்காட்டி அவர்கள் உங்கள் வீடு, எருமை, சைக்கிள் உள்ளிட்ட சொத்துகளை எடுத்து கொள்வார்கள் என்றும், கோயில்களை பூட்டிவிடுவார்கள் என்றும் பேசி வருகிறார். இப்படியான அதிகாரப்பசி மற்றும் போலி இந்துவாக நடந்து கொள்வதால் இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் மோடியால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு முன்னதாக நடிகர் கிஷோர், மோடியை விமர்சித்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது குறிப்பிடத்தக்கது.

    ×