search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India alliance"

    • பாரபட்சமான பட்ஜெட் என்ற பதாகையுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம்
    • இப்போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு ரூ.15,000 கோடியையும் பீகார் மாநிலத்திற்கு ரூ.26,000 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

    ஆந்திரா, பீகார் மாநிலங்களை தவிர தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர் கூட இந்த பட்ஜெட்டில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட்டை விமர்சித்தன.

    இதனையடுத்து மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில், மத்திய பட்ஜெட் பாரபட்சமாக போடப்பட்டுள்ளது என்பதைக் கண்டித்து பாராளுமன்றத்தில் நாளை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தது.

    இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காததை கண்டித்து, பாராளுமன்ற வளாகத்தில் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாரபட்சமான பட்ஜெட் என்ற பதாகையுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    • இது மோடி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் என காங்கிரஸ் தலைவர் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
    • நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது என்றார் ராகுல் காந்தி.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு சபை கூடியதும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    இந்த பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது என காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், இது மோடி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட், வேறு ஒன்றும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில், மத்திய பட்ஜெட் பாரபட்சமாக போடப்பட்டுள்ளது என்பதைக் கண்டித்து பாராளுமன்றத்தில் நாளை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.
    • இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது

    அரியானாவில் விரைவில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. முன்னதாக தனித்துக் களம் காண்பதாக காங்கிரஸ் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து ஆம் ஆத்மி இந்த முடிவை அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் சிங், பஞ்சாப் முதலவர் பகவத் மான் கூட்டாக இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

     

    பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையாக உள்ள நிலையில் அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வென்றது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி 10 இடங்களை கைப்பற்றியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.

    ஆனால் இடையிலேயே பாஜகாவுக்கான ஆதரவை ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா முறித்துக்கொண்டார். சில சுயேச்சைகளும் பாஜகவுடனான ஆதரவை விலகிக் கொண்டு காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ளதால் தற்போது ஸ்திரத்தன்மை இலலாமல் அரியானாவில் பாஜக ஆட்சி தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில்தான் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது. பாஜக ஆதரவை முறித்துக்கொண்ட துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் கடந்த தேர்தலைப் போல தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது. எனவே பாஜக - காங்கிரஸ் - ஆம்ஆத்மி-ஜேஜேபி ஆகிய நான்கு கட்சிகளின்  முனை போட்டி  இந்த சட்டமன்றத் தேர்தலில் உருவாகியுள்ளது. 

    • பீகார் மாநிலத்தில் 12 சதவீதம் மக்களை உள்ளடக்கிய OBC பிரிவில் உள்ள சமூகத்தை சேர்ந்த முகேஷ் சஹானி அம்மாநில அரசியலில் முக்கிய புள்ளியாக பார்க்கப்படுகிறார்.
    • கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளத்துறை அமைச்சராக முகேஷ் சஹானி பொறுப்பு வகித்தவர் ஆவார்.

    பீகாரில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற விகாஷீல் இன்சான் கட்சியின் [VIP] தலைவர் முகேஷ் சஹானியின் தந்தை வீடு புகுந்து மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் 12 சதவீதம் மக்களை உள்ளடக்கிய OBC பிரிவில் உள்ள சமூகத்தை சேர்ந்த முகேஷ் சஹானி அம்மாநில அரசியலில் முக்கிய புள்ளியாக பார்க்கப்படுகிறார்.

     

    கடந்த 2020 ஆம் ஆண்டு நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியில் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளத்துறை அமைச்சராக முகேஷ் சஹானி பொறுப்பு வகித்தவர் ஆவார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் இருந்த சஹானி அங்கு ஏற்பட்ட விரிசலைத் தொடர்ந்து இந்தியா கூட்டணிக்கு வந்தார்.

    தற்போது முகேஷ் சஹானி மும்பை சென்றுள்ளார். அவரது தந்தை ஜிதன் சஹானி பீகாரின் தார்பங்கா மாவட்டத்தில் சுபால் பஜார் பகுதியில் தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஜிதன் சஹானியை கட்டிலில் வைத்து கூர்மையான ஆயுதங்களால் குத்திக் கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.

     

    அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த போலீசார் கட்டிலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜிதன் சஹானியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். அரசியல்  காரணங்களால் இந்த கொலை நடந்துள்ளதா அல்லது முன்விரோதம் காரணமாகவா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    • வட மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக வெற்றி பெற்றது பாஜாகாவுக்கு பேரிடியாக அமைந்தது.
    • 'நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் உள்ளே சில வெளிநாட்டு கைகள் இயங்கிவந்தன'

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களிலும், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களிலும் வெற்றி பெற்றது. 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று கூறி தேர்தலை சந்தித்த பாஜக, கூட்டணி வெற்றியை சேர்க்காமல் தனித்து 240 இடங்களில் மட்டுமே வென்றது.

    இந்நிலையில் கூட்டணி கட்சிகளின் தயவில் மோடி தலைமையில் மீண்டும் பாஜக அரசு ஆட்சியமைதுள்ளது. பாஜகவின் கோட்டையாக விளங்கும் உத்தரப் பிரதேசம் உள்ள மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக வெற்றி பெற்றது பாஜாகாவுக்கு பேரிடியாக அமைந்தது.

    இந்த நிலையில்தான் தற்போதைய பாஜக அரசில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சராக உள்ள சிவராஜ் சிங் சவுகான் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக நிறைய இடங்களில் தோற்பதற்கு வெளிநாட்டு சக்திகளின் தலையீடே காரணம் என்று பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    இன்று ராஜஸ்தானில் நடந்த சுமார் 88,000 உறுப்பினர்கள் பாஜக கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற சிவராஜ் சிங் சவுகான், 'நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் உள்ளே சில வெளிநாட்டு கைகள் இயங்கிவந்தன. அந்த வெளிநாட்டு சக்திகள் பாஜக வெற்றி பெறுவதை விரும்பவில்லை' என்று தெரிவித்தார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் சுமார் 16 ஆண்டுகள் அம்மாநிலத்தின் முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றுள்ளார்.
    • 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

    நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    அதன்படி, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதேபோல், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளிலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    இதில், தமிழகத்தில் இடைத்தேரத்லில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.

    மற்ற மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் 2019ம் ஆண்டு முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மகத்தான மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நாற்பது தொகுதியிலும் நாற்பதுக்கு நாற்பது என்ற நூறு விழுக்காடு வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான 'இந்தியா' கூட்டணி பெற்றது.

    சாதாரண வெற்றியல்ல, பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியைப் பெற்றோம். அதிமுக கூட்டணி படுதோல்வியை அடைந்தது. பாஜக கூட்டணி, பாதாளத்தில் விழுந்தது. இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொண்டோம்.

    விக்கிரவாண்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய புகழேந்தி அவர்கள் உடல்நிலை காரணமாக மறைவெய்தியதைத் தொடர்ந்து இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளராக ஆற்றமிகு உடன்பிறப்பு அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்தோம்.

    நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது. பாஜக, தனது அணியில் இருக்கும் பா.ம.க.வை நிறுத்தியது.

    'இடைத்தேர்தலிலேயே நிற்பது இல்லை' என்று வைராக்கியமாக இருந்த பா.ம.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை.

    தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது. பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகமே என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலின் மூலமாக எடைபோட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நேரகாலம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கும், தினந்தோறும் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களுக்கும் மக்கள் தெரிவித்த நன்றியின் அடையாளமாகவே இந்த வெற்றியை நான் பார்க்கிறேன்.

    திராவிட முன்னேற்றக் கழக ஆற்றல்மிகு வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெற வைக்க பொறுப்பேற்றுக் கொண்ட கழக துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் க.பொன்முடி கழக கொள்கைப் பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் களம் கண்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் என பலரும் களப்பணி ஆற்றினார்கள்.

    பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன், இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி உள்ளிட்ட முன்னணியினர் பலரும் தேர்தல் பரப்புரை செய்தார்கள். நமது இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார்கள். இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் உடன்பிறப்புகளும் - தோழமைக் கட்சித் தோழர்களும், உதயசூரியனின் வெற்றிக்கு இரவு பகல் பாராது கண்துஞ்சாது உழைத்த அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

    விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பொன் கௌதமசிகாமணி உள்ளிட்ட ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது.

    நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பாஜக. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக. அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது.

    திமுக கழக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது. இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நமது கழக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது.

    நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும் பயணத்தையும் தொடர்கிறோம். வெற்றிப் மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • மகாராஷ்டிராவில் காலியாக இருக்கும் 11 சட்டமேலவை இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
    • ஒரு எம்.எல்சி.யை [ சட்ட மேலவை உறுப்பினரை] தேர்வு செய்ய 23 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் தேவை

    மகாராஷ்டிராவில் காலியாக இருக்கும் 11 சட்டமேலவை இடங்களுக்கு இன்று [ஜூலை 12] தேர்தல் நடக்கிறது. இதில் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ள நிலையில் தங்களின் கட்சி எம்.எல்.ஏக்கள் அணி மாறிவிடக்கூடாது என்று அவர்களை 5 நட்சத்திர விடுதிகளில் கட்சிகள் பாதுகாத்து வைத்தன.

     

    இதில் ஆளும் மஹாயுதி [ பாஜக - ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் ] கூட்டணிக்கும், மஹா விகாஸ் அகாடி[ காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இடம்பெற்ற இந்தியா கூட்டணி] ஆகிய இரண்டு கூட்டணிக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    ஒரு எம்.எல்சி.யை [ சட்ட மேலவை உறுப்பினரை]  தேர்வு செய்ய 23 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவை என்ற சூழ்நிலையில் பாஜக பக்கம் இருக்கும் அஜித் பவார் பக்கம் உள்ளவர்கள் சரத் பவாரிடம் தாவும் சூழ்நிலை உள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 48 இல் 30 இடங்களில் வெற்றி பெற்றதும் இந்த மேலவைத் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படும். விரைவில் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நடைபெற உள்ளதால் இன்றயை மேலவைத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

     

    எனவே அவரவர் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க இரு தரப்பினரும் வாக்குப்பதிவு நேரம் வரை 5 நட்சத்திர விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளில்  தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டனர்.கடைசி நேரத்தில் வாக்குகள் பிரிந்து விடக்கூடாது என்பதில் இரண்டு கூட்டணியினரும் தீவிரமாக உள்ளனர். இன்று காலை 9 மணிக்கு தொடங்கியுள்ள தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

    மொத்தம் 11 இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் 201 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொண்ட மஹாயுதி [பாஜக கூட்டணி] 9 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 69 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொண்ட மஹா விகாஸ் அகாடி[இந்தியா கூட்டணி ] 3 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது . ஒரு  சுயேச்சை உட்பட  6 எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகிப்பது குறிபிடத்தக்கது. 

    • அயோத்தி தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றார்
    • ராகுலின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    குஜராத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் நேற்று அங்கு நடந்த கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 'அரசியல் ஆதாயத்துக்காக பாஜக முன்னெடுத்த ராமர் கோவில் இயக்கம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியால் முறியடிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே குஜராத்திலும் மோடியை முறியடிப்போம்' என்று தெரிவித்தார்.

    கடந்த நூற்றாண்டின் இறுதியில் பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ணா அத்வானி உள்ளிட்டோர்  உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரில் முன்னெடுத்த ராமர் கோவில் இயக்கம், கலவரங்களின் மூலம் பாபர் மசூதியை இடிக்கப்படும் அளவுக்கு சென்றது.

    அன்று முதல் புகைந்து கொண்டிருந்த இந்த ராமர் கோவில் இயக்கத்தில் முக்கிய கட்டமாக கடந்த 2014 ஆம் ஆனது மக்களவைத் தேர்தலில் பாபர் மசூதி இருந்த இடத்தில ராமர் கோவில் காட்டுவோம் என்று வாக்குறுதியுடன் வெற்றி பெற்று அமைந்த மோடி தலைமையிலான பாஜக அரசால் மீண்டும் தீவிரம் பெறத் தொடங்கியது.

    அதன்விளைவாக 1800 கோடி செலவில் மத்திய பாஜக அரசால் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாஜக ராமர் கோவிலை திறந்தது தேர்தல் ஆதாயத்துக்கான நகர்வாக எதிர்கட்சிகலால் குற்றம் சாட்டப்பட்டது.

    ஆனால் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அயோத்தி தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றார்.மேலும் பாஜகவின் கோட்டையாக விளங்கிய அம்மாநிலத்தில் இந்தியா கூட்டணி பெருமபான்மை வெற்றியை பெற்றது.

    இந்த பின்னணியிலேயே ராமர் கோவில் இயக்கம் இந்தியா கூட்டணியால் முறியடிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராகுலின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைர்  சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    • இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் உண்மையை ஓங்கி உரைப்பார்கள்.
    • தங்களுடைய நலனுக்காக கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் அல்ல.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் கவர்னர் தமிழிசை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களை துச்சமென நினைத்து இழிவாக பேசியுள்ளார்.

    தேர்தல் தோல்வி இவரை இப்படி பேச சொல்கிறதோ என்று எண்ணத்தோன்று கிறது.

    இங்கிருந்து சென்ற இந்தியா கூட்டணியின் 40 எம்.பி.க்கள்தான் இந்த பாரதத்தின் வலிமையான எதிர்க்கட்சிக்கு தூண்களாக திகழ்கின்றனர். நாட்டிற்கு எப்பொழுது எல்லாம் அநீதி இழைக்கப்படு கிறதோ அப்போதெல்லாம் இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் உண்மையை ஓங்கி உரைப்பார்கள்.

    எங்கள் தலைவருடைய நாடாளுமன்ற உரை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் மக்கள் மன்றத்திலே மக்கள் மனதிலே நீங்காமல் என்றும் நிலைத்திருக்கும். உண்மையை யாராலும் மறைக்க முடியாது.

    இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் மக்களின் நலனுக்காக பாடுபடக் கூடியவர்களேயன்றி தங்களுடைய நலனுக்காக கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் அல்ல என்பதை தமிழிசை புரிந்து கொண்டு இதுபோன்ற அவதூறான பேச்சுக்களை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • எதிர்க்கட்சி தலைவர் என்பது ஒரு பதவி மட்டுமல்ல. அது ஒரு பெரிய பொறுப்பு.
    • நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் நன்றி.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அரசியலில் பெரும் பொறுப்பை முதல்முறையாக ராகுல்காந்தி ஏற்றுள்ளார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரானது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில், "என் மீது நம்பிக்கை வைத்த நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் நன்றி.

    எதிர்க்கட்சி தலைவர் என்பது ஒரு பதவி மட்டுமல்ல. அது உங்களின் உரிமைகளுக்கான குரலாக மாறி போராட வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏழைகளுக்கும். சிறுபான்மையினருக்கும், விவசாயிகளுக்கும். தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய ஆயுதம். அதன் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் நாங்கள் பதிலடிக் கொடுப்போம்" என்று அவர் பேசியுள்ளார்.

    • புதுவையில் திமுக தலைமையில் ஆட்சியை உருவாக்க வேண்டும் என திமுகவினர் விரும்புகின்றனர்.
    • விக்கிரவாண்டியில் இடைத்தேர்லும் நடக்க உள்ளது.

    புதுச்சேரி:

    கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

    தேர்தலில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்து 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தி.மு.க.வுக்கு 6 தொகுதி கிடைத்ததால், சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

    தேர்தல் முடிந்தது முதல் காங்கிரஸ், தி.மு.க. இடையே புதுவையில் யார் பெரிய கட்சி என்ற உரசல் இருந்து வருகிறது. ஜானகிராமனுக்கு பிறகு திமுக தலைமையில் புதுவையில் ஆட்சி இல்லை. கால் நூற்றாண்டுகாலமாக ஆட்சியில் இல்லாததால் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள இச்சமயத்தில் புதுவையில் திமுக தலைமையில் ஆட்சியை உருவாக்க வேண்டும் என திமுகவினர் விரும்புகின்றனர்.

    இதனால் காங்கிரசை விட பெரிய கட்சி என்ற முறையில் திமுகவினர் அவ்வப்போது காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    இந்த வெற்றி காங்கிரசுக்கு புது தெம்பை உருவாக்கியுள்ளது. ஏனாம், இந்திராநகர் தொகுதிகளை தவிர அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் அதிக வாக்குகளை பெற்றார். காங்கிரஸ் இன்னும் பலத்தோடு உள்ளது என காட்டும்படியாக தேர்தல் முடிவு அமைந்தது. வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என கருதுகின்றனர்.

    தேவைப்பட்டால் தி.மு.க.வை தவிர்த்து தனி கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்ற எண்ணமும் காங்கிரசாரிடையே எழுந்துள்ளது.

    சமீபத்தில் இந்தியா கூட்டணி கட்சி கூட்டத்தில் இது வெளிப்பட்டது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் பேசும்போது, தி.மு.க. 40 ஆயிரம் வாக்குகள்தான் கூடுதலாக பெற்றுத்தந்துள்ளது. காங்கிரஸ்தான் அதிகளவில் வாக்குகளை பெற்றுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வலுவாக உள்ளது என பேசினார்.

    இது கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து திமுக அமைப்பாளர் சிவா பேசும்போது, 13 தொகுதிகளில் 80 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று தந்துள்ளோம். சந்தேகமிருந்தால் கூட்டி கழித்து பாருங்கள், திமுகவின் மதிப்பையும், வளர்ச்சியையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். கட்சி தலைமை இட்ட பணியை சிறப்பாக நிறைவேற்றியுள்ளோம்.

    எங்கள் தலைவரும், காங்கிரஸ் வேட்பாளருக்காக பிரசாரம் செய்தார். இந்த பிரசாரம் அதிக வாக்குகளை பெற்றுத்தந்துள்ளது. தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படாதவாறு கூட்டணி கட்சிகளை சமமாக நடத்தி வருகிறார்.

    விக்கிரவாண்டியில் இடைத்தேர்லும் நடக்க உள்ளது. இந்த நேரத்தில் இதுபோன்ற பேச்சுகள் கூட்டணிக்குள் கசப்பை ஏற்படுத்தும். இதை தவிருங்கள். எங்கள் கட்சி தலைமை கூறுவதை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார்.

    • இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தைக் கையில் ஏந்தி பாராளுமன்ற வளாகத்துக்கு முன்னாள் திரண்டு அணிவகுத்தபடி உள்ளே சென்றனர்.
    • நீட் முறைகேடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்தியா கூட்டணி என்.டி.ஏ அரசை நோக்கி குரல் உயர்த்தும்

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி இந்தியாவில் மீண்டும் ஆட்சியமைத்துள்ள 3 வது முறையாக இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற 71 அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில் புதிய அரசு அமைந்ததற்குப் பிறகு இன்று முதல் பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியுள்ளது. பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் இன்று பதவிப்பிரமாணம் நடக்கிறது. முதலாவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற உறுப்பினராக உறுதியேற்றுக்கொண்டார். மேலும் புதிய எதிர்கட்சி எம்.பிக்கள் பாராளுமன்றத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ள ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் சேர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தைக் கையில் ஏந்தி பாராளுமன்ற வளாகத்துக்கு முன்னாள் திரண்டு அணிவகுத்தபடி உள்ளே சென்றனர்.

    நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் நீட் முறைகேடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்தியா கூட்டணி என்.டி.ஏ அரசை நோக்கி குரல் உயர்த்தும் என்று எதிராபகப்படுகிறது. நீட் முறைகேடு தவிர, அதிகரிக்கும் விலைவாசி, உணவு பற்றாக்குறை, வெப்ப அலையால் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள், நீட் PG தேர்வு ரத்து, UGC NET தேர்வு விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி என்.டிஏ அரசை வலியுறுத்தும் என்று தெரிகிறது.

     

     

    இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சென்றமுறையை விட அதிக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளதால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குரல் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இன்று [ஜூன் 24] தொடங்கியுள்ள 18 வது பாராளுன்றக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×