search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி"

    • சாலை வசதியும் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
    • செல்லம்பாப்பு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பாளையம் செல்லம்பாப்பு நகரில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை முழுமையாக முடிக்காமல் அரை குறை பணியுடன் நடைமுறைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த பகுதியில் சாக்கடை கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளதோடு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சாலை வசதியும் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் செல்லம்பாப்பு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    கூட்டத்தில் செல்லம் பாப்பு நகர் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணியை முழுமையாக முடிக்காததை கண்டித்தும், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க தீர்மானம் செய்துள்ளனர்.

    மேலும் இதுதொடர்பாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை பொதுப்பணித்துறைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

    • கல்லூரியில் படித்து கொண்டே பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அந்த மாணவருக்கு பைக்கை பரிசாக பாலா வழங்கினார்.
    • நடிகர் பாலா ஏழை இளைஞருக்கு பைக் வழங்கிய சம்பவத்தை பொம்மையாக உருவாக்கி உள்ளார்

    சின்னத்திரை காமெடி நடிகராக லட்சக் கணக்கானோர் மனதில் இடம் பிடித்தவர் பாலா. இவரது சமூக சேவை பணிகள் வைரலாகி வருகின்றன.

    அந்த வகையில் மேல்மருவத்தூரில் கல்லூரியில் படித்து கொண்டே பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அந்த மாணவருக்கு பைக்கை பரிசாக பாலா வழங்கினார்.

    அனைவராலும் பாராட்டப்பட்ட இதனை செய்தியாக கடந்து விடாமல் கலை சிற்பமாக மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார். புதுச்சேரி சேலியமேடு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஜெகதீஷ் கலை பொம்மையாக மாற்றியுள்ளார்.

    பள்ளியின் நுண்கலை ஆசிரியர் உமாபதி கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு கிராமங்களில் கிடைக்கும் பயனற்ற தேங்காய் குருமி,தென்னை நார், சுரக்காய் குடுவை போன்றவற்றைக் கொண்டு கலைநயமிக்க பொம்மைகளை உருவாக்கும் பயிற்சி அளித்து வந்தார்.

     

    இதில் பயிற்சி பெற்ற மாணவர் ஜெகதீஷ்,நடிகர் பாலா ஏழை இளைஞருக்கு பைக் வழங்கிய சம்பவத்தை பொம்மையாக உருவாக்கி உள்ளார்.இந்த பைக் பொம்மையை பாலாவுக்கு தான் தர விரும்புவதாக கூறியுள்ளார்.

    தான் சென்னைக்கு செல்ல இயலாது என்ற காரணத்தினால் புதுச்சேரிக்கு நடிகர் பாலா எப்பொழுது வருகிறாரோ அப்போது தருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோடிக்கணக்கான பணத்துடன் வந்த லாரி, காரின் பின் பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
    • மரப்பாலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பணக்கட்டுகள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு, ரிசர்வ் வங்கியின் சென்னை கிளைக்கு சென்றது. கண்டெய்னர் லாரியில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

    அந்த கண்டெய்னர் லாரிக்கு முன்னும் பின்னும் 2 வாடகை கார்களில் கடலூர் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்கு சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு வாகனங்களுடன் கண்டெய்னர் லாரி புதுச்சேரி மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படவே முன்னால் பாதுகாப்புக்கு போலீசார் சென்ற காரின் டிரைவர் திடீர் பிரேக் பிடித்தார்.

    இதனால் பின்னால் கோடிக்கணக்கான பணத்துடன் வந்த லாரி, காரின் பின் பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரின் பின்பக்கம் சேதமடைந்தது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக காரில் இருந்த போலீசார் உயிர்தப்பினர். அதே நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாயுடன் விபத்து ஏற்பட்டதால் பாதுகாப்புக்கு வந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    பொதுமக்களும் போலீசார் நடுரோட்டில் துப்பாக்கியுடன் நிற்பதை கண்டு என்ன ஏதேன்று விசாரிக்க தொடங்கினார்கள்.

    சுதாரித்துக்கொண்ட போலீசார் உடனடியாக மாற்று வாகனம் ஏற்பாடு செய்து அதில் ஏறி, கண்டெய்னர் லாரியுடன் பாதுகாப்புக்கு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக மரப்பாலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஒரு வேட்பாளர் பெயர் அடிபடுவதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
    • 2 பேர் உள்ளூர் பிரபலங்கள், 2 பேர் வெளி மாநில அதிகார பிரபலங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    தேசிய கட்சிகளான காங்கிரஸ்- பா.ஜனதா இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. தனித்து களமிறங்கும் பட்சத்தில் மும்முனை போட்டி சூழல் உருவாகும். அ.தி.மு.க.வில் போட்டியிட 21 பேர் விருப்ப மனு அளித்தனர்.

    வேட்பாளரையும் அக்கட்சி தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையில் அ.தி.மு.க. தலைமை ஈடுபட்டுள்ளதால் அதிகாரப் பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

    அதே வேளையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தேர்வு செய்து பட்டியலை தேசிய தலைமைக்கு அனுப்பிவிட்டது. 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது புதுச்சேரி வேட்பாளரின் பெயர் இடம்பெறும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.


    ஆனால் ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கும் பா.ஜனதாவில் இதுவரை வேட்பாளர் யார்? என்பது தெரியவில்லை. தினசரி ஒரு வேட்பாளர் பெயர் அடிபடுவதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளிடம் கட்சி தலைமை வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தியது.

    அதில் காரைக்காலை சேர்ந்த தொழிலதிபரை வேட்பாளராக நிறுத்த கருத்து கேட்கப்பட்டது. அதில் எம்.எல்.ஏ.க்கள் காரைக்கால் தொழிலதிபரை தேர்தலில் நிறுத்த சம்மதம் தெரிவித்தனர். இதனால் பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்டது.

    இதனிடையே நேற்று பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. நிருபர்களை சந்தித்து பேசிய போது, புதுச்சேரி வேட்பாளர் தேர்வுக்கான பட்டியலில் 4 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். அந்த பட்டியலை டெல்லி கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அதில் ஒருவரை கட்சியின் தேசிய தலைமை இறுதி செய்து அறிவிக்கும் என்றார்.


    அதில் 2 பேர் உள்ளூர் பிரபலங்கள், 2 பேர் வெளி மாநில அதிகார பிரபலங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

    இதில் ஒருவரை அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் முடிவு செய்து விரைவில் அறிவிக்க உள்ளனர்.

    இதற்கிடையே புதுச்சேரி மக்களின் மனநிலை, தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு என்பது தொடர்பான ரகசிய சர்வேயை மத்திய உளவுத்துறை மூலமாக பா.ஜனதா மேலிடம் நடத்தியுள்ளது.

    அதில் புதுச்சேரியில் மக்களின் ஆதரவை பெற்ற பிரபலமான ஒருவரின் பெயர் வெற்றி வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகவும், வெளிமாநிலத்தவர் 2, 3-ம் இடத்திலும், காரைக்கால் தொழிலதிபர் பெயர் கடைசி இடத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

    இவர்களில் ஒருவரை கட்சி மேலிடம் ஏற்கனவே முடிவு செய்து வைத்து விட்டதால், ஓரிரு நாளில் பா.ஜனதா வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக கட்சி தலைமை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2 முறை அவரது பதவி ஏற்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று திருமுருகன் பதவியேற்றுக்கொண்டார்.
    • பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 4 மாதமாக புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி காரைக்கால் வடக்கு தொகுதியை சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இதையடுத்து திருமுருகன் இன்று அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகை வளாகத்தில் நடந்தது. தேசியகீதம், தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த ஆணையை தலைமை செயலாளர் சரத்சவுகான் வாசித்தார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை, திருமுருகனுக்கு அமைச்சர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

    அமைச்சராக பதவியேற்ற திருமுருகன் முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். கவர்னர் தமிழிசைக்கு அமைச்சர் திருமுருகன் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கினார்.

    அமைச்சர் திருமுருகனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

    • புதுச்சேரி அரசை கண்டித்தும் புதுச்சேரி அ.தி.மு.க.வி.னர் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
    • சாலையில் அமர்ந்து கோஷம் போட்டனர். தொடர்ந்து 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் போதைப் பொருள் ஆசாமிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும்நீதிகேட்டும், போதைப்பொருள் விற்பனை கேந்திரமாக மாறி இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கப்படுவதை தடுக்காத புதுச்சேரி அரசை கண்டித்தும் புதுச்சேரி அ.தி.மு.க.வி.னர் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    பந்த் போராட்டத்தையொட்டி அ.தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து மாநிலச்செயலர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். அவர்கள், அண்ணா சிலையை வந்தடைந்தனர்.

    அங்கு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜாராமன், கோமளா, மாநில இணைச்செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணைச்செயலர் காந்தி, நகர செயலாளர்கள் அன்பழகன் உடையார், சித்தானந்தம், தொகுதி செயலாளர்கள் சம்பத், துரை, பாஸ்கர், ஆறுமுகம், மகளிர் அணி விமலா, எழிலரசி, மதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    சாலையில் அமர்ந்து கோஷம் போட்டனர். தொடர்ந்து 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர்
    • இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்சனையாக உள்ளது

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்சனையாக உள்ளது. 28.9% குழந்தைகள் ஏதோ ஒரு வகையான பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்.

    குழந்தைகளுக்கு GOOD TOUCH, BAD TOUCH கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமானது. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு நற்குணங்களை போதித்து வளர்ப்பதும் அவசியம்.

    புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர். இதனால் பல தீமைகளை நாம் எதிர்கொள்கிறோம் என்பது புரிகிறது. பாதுகாப்பான நாடாகவும், ஒன்றுபட்ட சமூகமாகவும் வளர்வோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது
    • அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்று செல்லூர் ராஜு தெரிவித்தார்.

    மதுரையில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அதில், பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார். அவர்கள் கட்சி தலைவர்களான வாஜ்பாய், அத்வானிக்கு மாற்றாக அதிமுக தலைவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற மோடி முயற்சிக்கிறார். கஜினி முகமது போல பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு படையெடுத்தாலும் சரி, மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    அரசியல் இயக்கத்தில் மதம் கலக்க கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். ராமர் கோயில் கட்டுவதை குறை சொல்லவில்லை. அதை மக்கள் மத்தியில் பிரச்சாரமாக எடுத்து செல்ல கூடாது. பாஜக எவ்வளவு உருண்டாலும் அவர்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் ஒரு அரசியல் நாடகம் தான். தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்த பிரதமர் ஏன் இந்த கட்டுமானம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை. எப்படியாவது மருத்துவமனையை கட்டி முடித்தால் சரி தான் என் அவர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார்.

    இதனை அடுத்து, புதுச்சேரியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் பிரதமர் மோடி, அமித்ஷா, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் படங்களுடன், வாக்களிப்போம் தாமரைக்கே என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியிருந்தது பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • 2022ல் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.5 லட்சம் குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன
    • இது ஒரு தேசமாக நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய விஷயம். பெண்களுக்கான பாதுகாப்பும் மரியாதையும் வளர்ந்த தேசத்தின் அடையாளம்.

    புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் ஏன் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன? என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

    அதில், "2022ல் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.5 லட்சம் குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன, அதில் 31 ஆயிரம் பாலியல் வன்புணர்வு வழக்குகள் அடங்கும்.

    உத்தரகாண்டில் பாதிக்கப்பட்ட அங்கிதா பண்டாரியின் குடும்பமாக இருந்தாலும் சரி, மத்தியப் பிரதேசத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்காததால் குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவனாக இருந்தாலும் சரி, ஜார்கண்டில் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளான ஸ்பெயின் சுற்றுலா பயணியாக இருந்தாலும் சரி.

    இதுபோன்ற ஒவ்வொரு சம்பவமும் ஒரு உணர்வற்ற அமைப்பு மற்றும் கொடூரமான சமூகத்தின் பிரதிபலிப்பாகும், இது ஒரு தேசமாக நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய விஷயம். பெண்களுக்கான பாதுகாப்பும் மரியாதையும் வளர்ந்த தேசத்தின் அடையாளம்" என தெரிவித்துள்ளார்.

    • புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது
    • இன்று பா.ஜ.க. ஆட்சியில் நடப்பதோ பாலியல் வன்கொடுமை அதுவும் சின்னஞ்சிறு சிறுமியின் மனிதாபிமானமற்ற கொலை

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்டதை எதிர்த்து புதுச்சேரி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், பாஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி மாநிலத்தில் - பாஜகவின் மாநில முன்னாள் தலைவரும் மகளிருமான டாக்டர் தமிழிசை அவர்கள் துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால் பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அச்சிறுமியை கழுத்தை நெறித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற இதயமற்ற கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது

    இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்ணுரிமை, பெண்குழந்தைகள் நலம் என மேடை தோறும் பொய்மூட்டைகளை அவிழ்த்து கொக்கரித்து வரும் பாஜக கட்சி ஆட்சி நடக்கும் மாநிலத்தில், அதுவும் மூச்சு முந்நூறு முறை பா.ஜ.க.வில் பெண்ணுரிமை" கூவும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை ஆளுநராக உள்ள மாநிலத்தில், உலகத்தில் எங்கும் நடைபெறாத ஒரு அவலம்- அதுவும் பெண் சிறுமிக்கு கொடுமை நடந்துள்ளது.

    2024 ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது" என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.

    இதுதான் பா.ஜ.க.வினர் கூறும் பெண் குழந்தைகள் வளர்ச்சியா..? என கேட்கிறேன். அத்துடன், 'உலகத்தையே பா.ஜ.க. ஆட்சிதான், இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது" என்று புளுகிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. கட்சியினரே, நீங்கள் சொல்வது உண்மைதான். ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு சாக்கடையில் தூக்கி வீசப்பட்ட இந்நிகழ்வைப் பார்த்துதான் உலகமே, பாஜக ஆளும் புதுச்சேரி மாநிலத்தின் பக்கம் திரும்பி காரி உமிழ்ந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி பா.ஜ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த பாலியல் வன்கொடுமை உலகிற்கே படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

    அதுமட்டுமல்லாமல், இந்திய பிரதமர் மோடி அவர்கள், இந்தியா முழுவதும் பெண் குழந்தையை காப்பாற்றவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவும் 2015-ல் பிரதமர் மோடி அவர்கள் துவக்கிய 'பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ" திட்டத்தை துவக்கினார். ஆனால் இன்று பா.ஜ.க. ஆட்சியில் நடப்பதோ பாலியல் வன்கொடுமை அதுவும் சின்னஞ்சிறு சிறுமியின் மனிதாபிமானமற்ற கொலை

    "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று முழக்கமிட்ட மகாகவி பாரதி உலவிய மண்ணில், ஒரு பெண் சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை, காட்டுமிராண்டித்தனமான கொலையையும் பெண்களை பாதுகாக்கத் தவறிய பா.ஜக ஆட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுங் கண்டனத்தை தெரிவிப்பதோடு, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன்

    • புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது.
    • மகளைப் பறிகொடுத்து, மீளமுடியாத துயரில் தவிக்கும் அப்பெற்றோரின் கரங்களைப் பற்றுகிறேன்.

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எம்.பி கனிமொழி, தனது எக்ஸ் பக்கத்தில், "புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராகத் தொடரும் இத்தகைய சம்பவங்கள், மனிதக்குலத்தையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன.

    மகளைப் பறிகொடுத்து, மீளமுடியாத துயரில் தவிக்கும் அப்பெற்றோரின் கரங்களைப் பற்றுகிறேன். பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


    • அரசு ஊழியர்களுக்கு நியமன ஆணை ஆகியவற்றையும் வேகமாக வழங்கி வருகின்றனர்.
    • 12 பஸ்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் ரங்கசாமி இயக்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது.

    தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும். நன்னடத்தை விதிகள் அமலாகிவிட்டால் புதிய திட்டங்கள், பணிகளை செயல்படுத்த முடியாது.

    ஆனால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களையும், தொடங்கிய திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.

    இதனால் பிப்ரவரி மாதத்தின் 3-வது வாரத்திலிருந்தே புதுச்சேரி அரசு பல்வேறு புதிய பணிகளை தொடங்கி வருகிறது. புதுச்சேரியின் பல்வேறு தொகுதிகளிலும் தார்சாலை, சிமெண்டு சாலை, ஆழ்குழாய் கிணறு, சைடு வாய்க்கால் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜைகள் நடக்கிறது.

    அதோடு அரசு ஊழியர்களுக்கு நியமன ஆணை, பதவி உயர்வு ஆணை ஆகியவற்றையும் வேகமாக வழங்கி வருகின்றனர். சமீபத்தில் பி.ஆர்.டி.சி.க்கு வாங்கப்பட்ட புதிய பஸ்களில் 12 பஸ்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் ரங்கசாமி இயக்கி வைத்தார்.

    இந்த நிலையில் புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறையில் காலி பணியிடங்களுக்கு நர்சுகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் கடந்த 1-ந் தேதிக்குள் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. மொத்தம் 144 பேர் சான்றிதழ்கள் சமர்பித்தனர்.

    இதில் முதல்கட்டமாக 92 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இவர்களுக்கான பணி ஆணை வழங்கும் விழா நேற்று இரவு 9 மணியளவில் சட்டசபை வளாகத்தில் நடந்தது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தேர்வானவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் கணவர், கைகுழந்தையோடு பணி ஆணையை பெற்றுச் சென்றனர். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே பணி ஆணை வழங்க வேண்டும் என்பதற்காக அவசர, அவசரமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    மீதமுள்ள 52 பேருக்கும் புதுப்பிக்கப்பட்ட உரிய சான்றிதழ்களை சமர்பித்து பணி ஆணை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ×