என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி"

    • புதுச்சேரியில் 657 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சட்டமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி
    • தமிழ்நாட்டில் ஜன.20-ல் தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது

    15-வது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடர் பிப்ரவரி 12 தொடங்கும் என சபாநாயகர் ஆர். செல்வம் அறிவித்துள்ளார்.

    சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி கோரும் துணை மானியக் கோரிக்கைகளும் இந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். 

    மேலும் புதுச்சேரியில் 657 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சட்டமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் ஜன.20-ல் தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
    • புதுச்சேரி வரும் பிரதமர் மோடி அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க தற்போதே காய் நகர்த்தி வருகிறது. இதற்காக மத்திய மந்திரிகள் அடிக்கடி புதுச்சேரிக்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் முதலமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து பேசுகின்றனர்.

    புதுச்சேரி மாநிலத்தில் தேர்தலை முன்வைத்து கடந்த பொங்கல் பண்டிகையின்போது அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும், ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளுடன் தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இதே போல் குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் முதியோர், உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கை விடுத்து வந்தனர். பிரதமர் மோடியும் புதுச்சேரிக்கு வருவதாக உறுதி அளித்திருந்தார்.

    இந்த நிலையில் அவர் வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரி வரும் பிரதமர் மோடி அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

    • சவ ஊர்வலத்தில் அப்புவுக்கும் புதுவை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
    • பிரபல ரவுடி பல்லுவிக்கி, ஹேமநாத், சுரேந்தர் சஞ்சீவ் தலைமையில் இந்த கும்பல் அப்புவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியையொட்டி உள்ள தமிழக பகுதியான சின்னகோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அப்பு என்ற ஜவகர் (வயது 24). இவர் மீது 2 கொலை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    கடந்தாண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரி முத்தியால் பேட்டையில் உள்ள பேக்கரியை மாமூல் கேட்டு சூறையாடிய வழக்கில் புதுச்சேரி போலீசார் அவரை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

    இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் அப்பு, கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பாலகணேஷ், சின்ன முதலியார்சாவடியை சின்னப்பிள்ளை ஆகியோருடன் சின்ன கோட்டக்குப்பம் கறிக்கடை சந்து அமைதி நகரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 பைக்கில் வந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட கும்பல், அப்புவை சுற்றி வளைத்தது.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அப்புவை அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், சரமாரியாக வெட்டினர். இதில் அப்பு ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    தகவலறிந்த கோட்டக் குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கனகச்செட்டிகுளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சவ ஊர்வலத்தில் அப்புவுக்கும் புதுவை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

    அந்த சம்பவத்தில் இருந்து அந்த கும்பல், அப்பு மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாகவே அப்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மேலும் கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பல்லுவிக்கி, ஹேமநாத், சுரேந்தர் சஞ்சீவ் தலைமையில் இந்த கும்பல் அப்புவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

    கொலைக்கு முன்னர் அப்புவுடன் மது அருந்தி கொண்டிருந்த பாலகணேஷ் மற்றும் சின்னப்பிள்ளை ஆகியோர் அப்புவின் எதிராளிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கலாம் என கருதி அவர்கள் 2 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எத்கெம் பார்மா சூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான ரிஸ்பிபிரஸ் டி.ஆர். என்ற இருமல் மருந்து விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
    • திரவ மருந்துகள் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    போலி மருந்து புகாரை தொடர்ந்து புதுச்சேரியில் நடந்த ஆய்வில் பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் விலை உயர்ந்த மருந்துகள் போலியாக தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரியில் கடந்த 19-ந் தேதி வரை நடந்த ஆய்வில் 38 வகையான போலி மருந்துகள் தயார் செய்து விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதுச்சேரியில் மேலும் 2 இருமல் மருந்துகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து புதுச்சேரி அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி அனந்தகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    குஜராத் மாநிலம் அகமதாபாத் பாவ்லா சந்த்கோதர் நெடுஞ்சாலையில் உள்ள எத்கெம் பார்மா சூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான ரிஸ்பிபிரஸ் டி.ஆர். என்ற இருமல் மருந்து (சிரப்) புதுச்சேரியில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

    மற்றொரு இருமல் மருந்தான உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரோர்கி பகுதியில் இருந்து இன்டியன் டிரக் விஷன் நிறுவனத்தின் மெடிகோப் டி சிரப் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 2 இருமல் மருந்துகளையும் மருந்துகடை உரிமையாளர்கள் வாங்கவும் விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இந்தத் திரவ மருந்துகள் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதோடு துறைக்குத் தகவல் அளித்து விட்டு குறிப்பிட்ட மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு அல்லது விநியோகஸ்தர்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது

    • மருந்து கடைகளில் உள்ள இருப்புகளின் நிலவரத்தை மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
    • மாத்திரைகளை அந்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி அனந்தகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    குடல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் இமாச்சல பிரதேசம், சிர்மூர் பகுதியில் இருந்து நோனிஸ் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான மாக்பான்சோ 40 மாத்திரை, கேரள மாநிலம் மற்றும் அகமதாபாத் பாவியா மாவட்டத்தில் இருந்து அபான் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான பெபாவிட் என்ற பெயரிலான பாராசிட்டிமல் 650 மி.லி. கிராம் மாத்திரை, ராஜஸ்தான் மாநிலம் பைவாதி பகுதியில் கார்னானி பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் தயாரிப்பான சங்காவதி 5 கிராம் ஆகிய 3 மாத்திரைகளின் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

    இந்த மாத்திரைகள் புதுவையில் உள்ள மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. மேலும் மருந்து கடைகளில் உள்ள இருப்புகளின் நிலவரத்தை மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

    அந்த மாத்திரைகளை அந்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவு நகல் அனைத்து மொத்த மற்றும் சில்லரை மருந்து விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    • 2025-ல் காற்று தரக்குறியீடு 67 ஆக பதிவானது.
    • போகி புகையினால் காற்றின் தரம் 'மிதமான' மாசு நிலைக்கு தள்ளப்பட்டது.

    புதுச்சேரி:

    பழையன கழிதலும், புதியன புகுதலும் தமிழர் மரபு. போகி பண்டிகை புதுமையை வரவேற்கும் நன்னாளாகக் கொண்டாடப்பட்டது.

    இந்த நாளில் எரிக்கப்படும் பொருட்கள் காற்றில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை புதுச்சேரி ஜவஹர் நகரில் உள்ள மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையம் பதிவு செய்தது.

    2025-ல் காற்று தரக்குறியீடு 67 ஆக பதிவானது. 2026 அடர் மூடுபனியும் மாசடைந்த காற்றும் கடந்த 13 முதல் 14-ந் தேதி வரையிலான போகி பண்டிகை நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. போகி புகையினால் காற்றின் தரம் 'மிதமான' மாசு நிலைக்கு தள்ளப்பட்டது.

    இந்த ஆண்டு காற்று தரக்குறியீடு 113 ஆக உயர்ந்துள்ளது. நுரையீரலுக்குள் எளிதில் நுழையக்கூடிய பி.எம்.,-2.5 நுண்ணிய துகள்கள் 64 என்ற நிலையை எட்டி காற்றின் தரத்தை பாதிக்கும் முக்கிய காரணியாக மாறியது. பி.எம்.,-10 துகள்களின் அளவு 96 ஆக உயர்ந்து, காற்றில் தூசு மற்றும் புகையின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தியது. நைட்ரஜன் டை ஆக்சைடு அளவும் 25.4 ஆக உயர்ந்துள்ளது.

    இது வாகன புகை மற்றும் எரிப்பு நடவடிக்கைகளின் அதிகரிப்பை காட்டுகிறது. புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசுபாடு இரு மடங்கு அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • ’அல்மான்ட் கிட் சிரப்’ மருந்தில், சிறுநீரகத்தை பாதிக்கும் ’எத்திலீன் கிளைகோல்’ அதிகளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • விநியோகிஸ்தர்கள், மருந்துக் கடை உரிமையாளர்கள் இந்த மருந்தை விற்க வேண்டாம்.

    புதுச்சேரி:

    பீகார் மாநிலம், ஹாஜிபூர் வைஷாலியில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் நிறுவன தயாரிப்பான, 'அல்மான்ட் கிட் சிரப்' மருந்தில், சிறுநீரகத்தை பாதிக்கும் 'எத்திலீன் கிளைகோல்' அதிகளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து கிழக்கு மண்டலத்தின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை, அல்மான்ட் கிட் மருந்தை தடை செய்து, அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. கொல்கத்தா மற்றும் தெலுங்கானாவில் இம்மருந்து விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து புதுச்சேரியிலும் இம்மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மருந்து தர கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரி ஆனந்த கிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அல்மான்ட் கிட் சிரப்பில் எத்திலின் கிளை கோலின் அதிகளவு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த சிரப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்.

    விநியோகிஸ்தர்கள், மருந்துக் கடை உரிமையாளர்கள் இந்த மருந்தை விற்க வேண்டாம். இருப்பில் உள்ள மருந்துகளை நிறுவனத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • போதிய நிதி இல்லை என மத்திய அரசு கைவிரிப்பு
    • ரூ.8 ஆயிரம் வழங்கக்கோரி புதுச்சேரி பாஜக கோரிக்கை

    புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3000 அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பரிசுத்தொகை பொங்கலுக்கு பின்னர் அவரவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக புதுச்சேரியில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5000 பொங்கல் பரிசுத்தொகை வழங்க முதலமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த தொகை ரூ.4000மாக குறைக்கப்பட்டது. ஆனால் அதற்கும் ரூ.140 கோடி தேவைப்பட்ட நிலையில் புதுச்சேரி அரசு மத்திய அரசை நாடியது. ஆனால் போதிய நிதி இல்லை என்று மத்திய அரசும் கைவிரித்தது. 

    இந்நிலையில் தொகையை ரூ.3000 என குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் ரங்கசாமி. இதனிடையே புதுச்சேரி பாஜக பொங்கல் பரிசாக ரூ.8000 உயர்த்தி வழங்க வேண்டும் என முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தது. ரூ.10,000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார்.

    தமிழ்நாட்டிலும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.3000 வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • பெண் பலியான நிலையில் உடன் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரியில் கூடப்பாக்கம் அருகே பைக்கில் எடுத்துச்சென்ற வெடிமருந்து எதிர்பாராத விதமாக வெடித்ததில் பெண் பலி, மேலும் ஒருவர் படுகாயம்

    பைக்கில் சென்ற இருவரும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தோர் எனத் தகவல்; காட்டுப்பன்றி வேட்டைக்காக வெடிமருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.

    வெடி மருந்து வெடித்ததில் நரிக்குறவர் இன பெண் பலியான நிலையில் உடன் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
    • பண தேவைக்காக கஞ்சாவை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விற்றது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் விலை உயர்ந்த பைக்கில் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    இதில் ஒருவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர் என்பதும் மற்றொருவர் புதுச்சேரியில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வரும் வாலிபர் என்பதும் தெரியவந்தது.

    மேலும் இவர்கள் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி வந்து பயன்படுத்தி வந்ததும், பின்னர் பண தேவைக்காக கஞ்சாவை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு விற்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 110 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, இஷா சிங் கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை ‘மிஸ்’ பண்ணுகிறேன்.

    புதுச்சேரி:

    கடந்த மாதம் 9-ந்தேதி விஜய் பங்கேற்ற த.வெ.க. பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அந்த கட்சி தொண்டர்கள் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. அவர்களை மைதானம் உள்ளே அனுமதிக்கும் பொறுப்பு லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டும், ஐ.ஆர்.பி.என். கமாண்டன்டுமான இஷா சிங்கிற்கு வழங்கப்பட்டது.

    தொண்டர்கள் காலை முதலே பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வரத் தொடங்கினர். அவர்கள் முண்டியடித்து உள்ளே செல்லும்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங்கிடம் 'மைதானத்தில் ஏராளமாக இடம் உள்ளது. பாஸ் இல்லாத தொண்டர்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றார். இதனால் ஆவேசம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங், சிங்கப்பெண்ணாக மாறி, தனி ஆளாக நின்று கெத்து காட்டினார். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதன் பின்னர் இஷா சிங்கிற்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்தன.

    இந்த நிலையில் மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, இஷா சிங் கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இது புதுச்சேரி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

    புதுச்சேரி மக்கள் சிலர், சமூக வலைதளத்தில் இஷா சிங் சீருடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் உள்ள 'மெல்ல விடை கொடு.. விடை கொடு.. மனமே, இந்த நினைவுகள் நினைவுகள் கனமே, தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம், இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே, சில அழகிய வலிகளும் தருதே, போகின்றோம், போகின்றோம் தூரம் தூரம், ஓ ஓஹோ.. ஓ ஓ ஹோ... என்னை விட்டு செல்லும் உறவுகளே ஓ ஓ ஹோ'. என்னும் பாடலை ரீல்ஸ்சாக வெளியிட்டுள்ளனர். மேலும் 'மிஸ்.யூ.மேம்', உங்களது கடின உழைப்பு மற்றும் சிறந்த சேவைக்கு 'ராயல் சல்யூட்' என்று குறிப்பிட்டிருந்தனர்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக இஷா சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'புதுச்சேரி மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களை 'மிஸ்' பண்ணுகிறேன். நான் டெல்லிக்கு மாறுதலாகி சென்றாலும் புதுச்சேரி, தமிழ்நாடு என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கும்' என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    அவரது இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங்கின் தந்தை, தாத்தாவும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்தான். இவரது தாயார் மும்பை கோர்ட்டு வக்கீல் ஆவார். சமூக சேவையில் அக்கறை கொண்ட இஷா சிங், தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் நீதிபதி பதவிக்கான போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுச்சேரியில் கடந்த மாதம் 9-ந்தேதி த.வெ..க. பொதுக்கூட்டம் உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது.
    • எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லித்தரத் தேவையில்லை, என்று தனி ஆளாக நின்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த மாதம் 9-ந்தேதி த.வெ..க. பொதுக்கூட்டம் உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள 5 ஆயிரம் பேருக்கு மட்டும் பாஸ் வழங்கப்பட்டது. தொண்டர்களை மைதானம் உள்ளே அனுமதிக்கும் பொறுப்பு லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டான இஷா சிங்கிற்கு வழங்கப்பட்டது.

    கூட்டத்திற்கு காலை முதலே தொண்டர்கள் குவியத்தொடங்கினர். இதற்கிடையே கூட்டம் அதிகரித்தபோது தொண்டர்கள் முண்டி அடித்துக்கொண்டு உள்ளே செல்ல முயற்சி செய்தனர். நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், சினியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங்கிடம், மைதானத்தில் ஏராளமான இடம் உள்ளது. பாஸ் இல்லாத தொண்டர்களையும் உள்ளே அனுமதிக்கலாம் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதனால் ஆவேசம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங், சிங்கப்பெண்ணாக மாறி, காவல்துறை என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் சொல்லாதீர்கள். கரூரில் 41 பேர் உயிரிழந்ததை மறந்து விட்டீர்களா? இங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் நாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும், பதில் சொல்ல வேண்டும். உங்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளை சரியாக பின்பற்றுங்கள். எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்லித்தரத் தேவையில்லை, என்று தனி ஆளாக நின்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து அவரை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் பாராட்டுகள் குவிந்தன. இதனால் அவர் உயர் போலீஸ் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகியதாக தெரிகிறது.

    இந்த நிலையில் தற்போது ஐ.பி.எஸ். அதிகாரி இஷா சிங் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

    ×