என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganja selling"

    • களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் நேற்று குடில்தெரு பாலம் அருகே ரோந்து சென்றனர்.
    • போலீசாரை பார்த்ததும் சிறுவர்கள் மற்றும் 4 பேரும் தப்பி ஓடினர்.

    களக்காடு:

    களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் நேற்று குடில்தெரு பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது 4 பேர், சிறுவர்களுக்கு ஏதோ விற்பனை செய்து கொண்டி ருந்தனர். போலீசாரை பார்த்ததும் சிறுவர்கள் மற்றும் 4 பேரும் தப்பி ஓடினர். போலீசார் விரட்டி சென்று 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் களக்காடு தெப்பக்குளத் தெருவை சேர்ந்த கொம்பையா (வயது22). கலுங்கடி நடுத்தெருவை சேர்ந்த செல்வசகாயம் (18), கல்லடி சிதம்பரபுரத்தை சேர்ந்த ஐசக் (18), ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (32) என்பதும், 4 பேரும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 30 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • பழனிசெட்டிபட்டி போலீசார் ரோந்து சென்றதில் கஞ்சா விற்றவர்களை கைது செய்தனர்

    தேனி:

    தேனி அருகே கோடாங்கிபட்டி பகுதியில் பழனிசெட்டிபட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு சென்ற சிலம்பரசன்(33), பிரதீப்(27) ஆகியோரை மடக்கினர்.

    இதில் பிரதீப் தப்பிஓடிவிட்டார். சிலம்பரசனை போலீசார் கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதேபோல் கூடலூர் வடக்கு போலீசார் கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுடன்பட்டி விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த சந்தோஷ்(23), சிவனேந்திரன்(25), தெய்வம்(55) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    ×