என் மலர்
நீங்கள் தேடியது "கஞ்சா விற்றவர்கள் கைது"
- கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை மடக்கி பிடித்தனர்.
- இருவரையும் போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஓசூர்,
கிருஷணகரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வரர் நகரில் உள்ள முனீஸ்வரர் கோயில் அருகே நேற்று 2 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள், பெங்களூர் சாதிம் நகர் பகுதியை சேர்ந்த குமார் (49) மற்றும் பெங்களூரு உளிமாவு பகுதி மீனாட்சி கோயில் தெருவை சேர்ந்த அருண்குமார் (30) என்பதும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து முறையே 1 1/4 கிலோ மற்றும், ஒரு கிலோ கஞ்சா பொருள்கள் என மொத்தம் 2 1/4 கிலோ தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களையும், அவர்கள் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளையும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இருவரையும் போலீசார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- ஆண்டிபட்டி போலீசார் அன்னை சத்யாநகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
- அப்பகுதியில கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி போலீசார் அன்னை சத்யாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள முட்புதரில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மருது(27) என்பவரை கைது செய்தனர்.
கம்பம் வடக்கு போலீசார் கோம்பை ரோடு பகுதியில் ேராந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த ராஜா(40) என்பவரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
- தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
- பழனிசெட்டிபட்டி போலீசார் ரோந்து சென்றதில் கஞ்சா விற்றவர்களை கைது செய்தனர்
தேனி:
தேனி அருகே கோடாங்கிபட்டி பகுதியில் பழனிசெட்டிபட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு சென்ற சிலம்பரசன்(33), பிரதீப்(27) ஆகியோரை மடக்கினர்.
இதில் பிரதீப் தப்பிஓடிவிட்டார். சிலம்பரசனை போலீசார் கைது செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதேபோல் கூடலூர் வடக்கு போலீசார் கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுடன்பட்டி விலக்கு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த சந்தோஷ்(23), சிவனேந்திரன்(25), தெய்வம்(55) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.






