search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சி தலைவர்"

    • மர்மநபர் ஆட்டோகிராஃப் கேட்பது போன்று அருகில் வந்து கத்தியால் தாக்கியுள்ளார்.
    • துப்பாக்கி கையாள்வதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கத்தி போன்ற ஆயுதங்களால் வன்முறை.

    தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவரான லீ ஜே-மியுங்கை மர்ம நபர் திடீரென கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜனநாயக கட்சியின் தலைவரும், தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவருமான லீ ஜே-மியுங் தெற்கு துறைமுக நகரமான புசன் சென்றுள்ளார். அங்குள்ள விமான நிலையத்தை சுற்றி பார்க்கும்போது மர்ப நபரால் தாக்கப்பட்டுள்ளார்.

    மர்ப நபர் லீ ஜே-மியுங்கிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதுபோல் அருகில் வந்துள்ளார். அருகில் வந்ததும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லீயின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் லீ ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

    அருகில் இருந்தவர்கள் ரத்தம் வெளியாறாமல் இருக்க தங்களது கைக்குட்டைகளால் அழுத்தி பிடித்துள்ளனர். உடனடியாக சிகிச்சைக்கான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தென்கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட மர்ம நபர் சம்பவ இடத்திலேயே பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

    தென்கொரியால் துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலயைில், மற்றவகை ஆயுதங்களால் அரசியல் வன்முறை நிகழ்ந்து வருகின்றன.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரளா மாநிலம் அட்டப்பாடி வழியாக பில்லூர் அணைக்கு வருகிறது.
    • சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு 3 தடுப்பணைகளை கட்டி வருகிறது .

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி பேசியதாவது:- திருப்பூர் மாநகர் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நான்காவது குடிநீர் திட்டத்திற்காக நிதி 1350 கோடி ரூபாய் ஒதுக்கி தந்து திருப்பூர் மக்களின் தாகம் தீர்த்த தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி,அதற்காக முழு முயற்சி எடுத்த சட்டமன்ற உறுப்பினர்கே.என்.விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் ஆகியோருக்கு திருப்பூர் மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

    இதே போல் இந்த மாபெரும் திட்டத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுஇரவு, பகல் பாராமல் உழைத்திட்டஅதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாகவும், ஊக்கமும், ஆக்கமும்ஆலோசனையும் வழங்கிய மேயர் மற்றும் ஆணையாளர் அவர்களுக்கும் மக்களின்சார்பாகவும், அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் நன்றியினைதெரிவித்துக் கொள்கிறோம்.

    அதே நேரத்தில் இந்த சிறப்பான திட்டத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரளா மாநிலம் அட்டப்பாடிவழியாக பவானி ஆறாக பில்லூர் அணைக்கு வருகிறது. இச்சூழலில் பவானிக்குசெல்லும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு 3 தடுப்பணைகளை கட்டி வருகிறது .இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் நமது திருப்பூருக்கு வரக்கூடிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழல் உள்ளது.

    எனவே சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு கட்டிவரும் தடுப்பணையை உடனடியாக தடுத்து நிறுத்த மாநகராட்சி மாமன்றத்தில் சிறப்புதீர்மானம் கொண்டுவர வேண்டும். மேலும் மத்திய மாநில அரசு கவனத்திற்கு கொண்டு சென்று போர்க்கால அடிப்படையில் உடனடியாக தடுத்துநிறுத்த மேயர் மற்றும் ஆணையாளர் அனைத்துமுயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    மேலும் அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சிஅதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து நேரில் சென்று மேற்படி இடத்தை ஆய்வுசெய்து தடுப்பணை கட்டுவதை நிறுத்த ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    • திருச்சி மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தேர்வு தாமதமாகும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை மவுனம் காத்து வருகிறது
    • தற்போதைய நிலையில் கவுன்சிலர்கள் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கும், காங்கிரசாருக்கும் எஞ்சி இருக்கும் ஒரே பதவி எதிர்க்கட்சித் தலைவர் பதவிதான்

    திருச்சி:

    தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அபார வெற்றியை பெற்றன. அதைத் தொடர்ந்து அனைத்து மாநகராட்சிகளையும், பெரும்பாலான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளையும் தி.மு.க. தன்வசமாக்கிக் கொண்டது.

    ஒரு சில இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. இதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள் துணை மேயர் பதவியை எதிர்பார்த்தனர். ஆனால் அது கானல் நீராய் போனது. அதன் பின்னர் கோட்டத் தலைவர் பதவிகளுக்கும் முட்டி மோதிப் பார்த்தனர். எதுவும் நடக்கவில்லை.

    தற்போதைய நிலையில் கவுன்சிலர்கள் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கும், காங்கிரசாருக்கும் எஞ்சி இருக்கும் ஒரே பதவி எதிர்க்கட்சித் தலைவர் பதவிதான்.

    அதற்கும் இலவு காத்த கிளியாக அக்கட்சியினர் காத்திருக்கின்றனர். தேர்தல் முடிந்து 6 மாதங்கள் கழிந்த பின்னரும் தற்போது வரை எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை.

    தமிழக காங்கிரஸ் தலைமையில் இருந்து உறுப்பினர்கள் குழு தலைவரை அறிவிக்கப்பட வேண்டும். அந்த அறிவிப்புக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் எதிர்க்கட்சி தலைவர் தேர்வும் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாக கூறப்பட்டது.

    தேர்தல் நேரத்தில் 10 சீட்டுகள் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தினர். கடைசியில் 5 சீட்டுகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டன. போட்டி பலமாக இருந்ததால் கொடுக்கப்பட்ட 5 சீட்டுகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சித் தலைமை திண்டாடி போனது.

    அதன் பின்னர் வழக்கம் போல் கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அவர்களும் கொடுத்த 5 இடங்களிலும் வெற்றிக் கொடியை நாட்டினர். இவர்களில் சிலர் தற்போது தமக்குத் தெரிந்த வழிகளில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

    இதிலும் அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் காங்கிரஸ் மாமன்ற குழு தலைவர் அறிவிப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கட்சித் தலைமை குழு தலைவரை அறிவிக்குமா? அல்லது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் முடிந்த பின்னர் அறிவிப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதற்கிடையே திருச்சி மாநகராட்சியில் கட்சிகளின் அடிப்படையில் கவுன்சிலர்களுக்கு முன் வரிசையில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சித் தலைவர் தேர்வுடன் அதற்கும் விடை கிடைக்கும் என்று நம்பிக்கையில் இதர கட்சி கவுன்சிலர்கள் காத்திருக்கின்றனர்.

    ×