search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opposition leader"

    • மர்மநபர் ஆட்டோகிராஃப் கேட்பது போன்று அருகில் வந்து கத்தியால் தாக்கியுள்ளார்.
    • துப்பாக்கி கையாள்வதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கத்தி போன்ற ஆயுதங்களால் வன்முறை.

    தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவரான லீ ஜே-மியுங்கை மர்ம நபர் திடீரென கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜனநாயக கட்சியின் தலைவரும், தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவருமான லீ ஜே-மியுங் தெற்கு துறைமுக நகரமான புசன் சென்றுள்ளார். அங்குள்ள விமான நிலையத்தை சுற்றி பார்க்கும்போது மர்ப நபரால் தாக்கப்பட்டுள்ளார்.

    மர்ப நபர் லீ ஜே-மியுங்கிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதுபோல் அருகில் வந்துள்ளார். அருகில் வந்ததும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லீயின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் லீ ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

    அருகில் இருந்தவர்கள் ரத்தம் வெளியாறாமல் இருக்க தங்களது கைக்குட்டைகளால் அழுத்தி பிடித்துள்ளனர். உடனடியாக சிகிச்சைக்கான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தென்கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட மர்ம நபர் சம்பவ இடத்திலேயே பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

    தென்கொரியால் துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலயைில், மற்றவகை ஆயுதங்களால் அரசியல் வன்முறை நிகழ்ந்து வருகின்றன.

    • திருச்சி மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தேர்வு தாமதமாகும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை மவுனம் காத்து வருகிறது
    • தற்போதைய நிலையில் கவுன்சிலர்கள் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கும், காங்கிரசாருக்கும் எஞ்சி இருக்கும் ஒரே பதவி எதிர்க்கட்சித் தலைவர் பதவிதான்

    திருச்சி:

    தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அபார வெற்றியை பெற்றன. அதைத் தொடர்ந்து அனைத்து மாநகராட்சிகளையும், பெரும்பாலான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளையும் தி.மு.க. தன்வசமாக்கிக் கொண்டது.

    ஒரு சில இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. இதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள் துணை மேயர் பதவியை எதிர்பார்த்தனர். ஆனால் அது கானல் நீராய் போனது. அதன் பின்னர் கோட்டத் தலைவர் பதவிகளுக்கும் முட்டி மோதிப் பார்த்தனர். எதுவும் நடக்கவில்லை.

    தற்போதைய நிலையில் கவுன்சிலர்கள் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கும், காங்கிரசாருக்கும் எஞ்சி இருக்கும் ஒரே பதவி எதிர்க்கட்சித் தலைவர் பதவிதான்.

    அதற்கும் இலவு காத்த கிளியாக அக்கட்சியினர் காத்திருக்கின்றனர். தேர்தல் முடிந்து 6 மாதங்கள் கழிந்த பின்னரும் தற்போது வரை எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை.

    தமிழக காங்கிரஸ் தலைமையில் இருந்து உறுப்பினர்கள் குழு தலைவரை அறிவிக்கப்பட வேண்டும். அந்த அறிவிப்புக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் எதிர்க்கட்சி தலைவர் தேர்வும் தள்ளிப் போய்க் கொண்டிருப்பதாக கூறப்பட்டது.

    தேர்தல் நேரத்தில் 10 சீட்டுகள் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தினர். கடைசியில் 5 சீட்டுகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டன. போட்டி பலமாக இருந்ததால் கொடுக்கப்பட்ட 5 சீட்டுகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சித் தலைமை திண்டாடி போனது.

    அதன் பின்னர் வழக்கம் போல் கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அவர்களும் கொடுத்த 5 இடங்களிலும் வெற்றிக் கொடியை நாட்டினர். இவர்களில் சிலர் தற்போது தமக்குத் தெரிந்த வழிகளில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

    இதிலும் அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் காங்கிரஸ் மாமன்ற குழு தலைவர் அறிவிப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கட்சித் தலைமை குழு தலைவரை அறிவிக்குமா? அல்லது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் முடிந்த பின்னர் அறிவிப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதற்கிடையே திருச்சி மாநகராட்சியில் கட்சிகளின் அடிப்படையில் கவுன்சிலர்களுக்கு முன் வரிசையில் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சித் தலைவர் தேர்வுடன் அதற்கும் விடை கிடைக்கும் என்று நம்பிக்கையில் இதர கட்சி கவுன்சிலர்கள் காத்திருக்கின்றனர்.

    நிலத்தடி நீர் பயன்பாட்டினை கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குப்படுத்துகல் சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசின் நீர் ஆற்றல் அமைச்சகம் கடந்த ஆண்டு கெசட்டில் வெளியிட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நிலத்தடி நீர் பயன்பாட்டினை கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குப்படுத்துகல் சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசின் நீர் ஆற்றல் அமைச்சகம் கடந்த ஆண்டு கெசட்டில் வெளியிட்டது.

    அதன்படி விவசாயத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க மத்திய அரசு அல்லது மாநில நிலத்தடி நீர் அதிகார அமைப்பிடம் அனுமதி அல்லது தடையில்லா சான்றிதழ் பெற தேவையில்லை.

    அதுபோல் பெரு தொழில் நிறுவனங்கள் முறைப்படி அனுமதி பெற்றே நிலத்தடி நீரைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தண்ணீர் பயன்பாட்டு அளவினை கணக்கிட டிஜிட்டல் மீட்டர் பொருத்த வேண்டும். பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை மூட வேண்டும போன்ற பல விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

    மத்திய அரசின் நெறிமுறைகள் மாநில நிலத்தடி நீர் அதிகார அமைப்பின் சட்டத்தோடு முரண்பட்டால மத்திய அரசின் விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.புதுவையில் ஏற்கனவே விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ஒவ்வொரு ஆழ்துளை கிணறுக்கும் இடையே 250-300 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். கடற்கரையிலிருந்து 6 கி.மீ.க்குள் அனுமதியில்லை மற்றும் புதுவை நிலத்தடிநீர் அதிகார அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளது.

    தற்போதைய மத்திய அரசின் நெறிமுறைகளை அமல்படுத்தினால் விவசாயத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க வசதியிருப்பவர்கள் எங்கும் அலையாமல் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாய உற்பத்தியை மேற்கொள்ளலாம். ஆனால் மத்திய அரசின் விதிமுறைகளை புதுவை நிலத்தடி நீர் அதிகார அமைப்பு புதுவையில் அமல்படுத்த மறுத்து வருகின்றது.

    புதுவையில் மத்திய அரசின் புதிய நெறிமுறை களை அமல்படுத்தினால் வாய்ப்புள்ள விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்வர், அதுபோல் புதுவையில் நிலத்தடி நீர் கட்டுப்பாடின்றி உறிஞ்சப்படுவது கட்டுப்படுத்தப்படும்.

    எனவே அரசு உடனடியாக நிலத்தடி நீர் பயன்பாட்டினை கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய மத்திய அரசின் நீர் ஆற்றல் அமைச்சக நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்களை தடுக்க முடியாது என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்து விட்டன.
    • நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் தமிழகத்தில் லாக்அப் மரணங்கள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது. இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துவிட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் லாக்கப் மரணங்கள் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பிரதமர் பதவிக்கு மோடியுடன் போட்டியிடும் எதிர்க்கட்சிதலைவர் யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கேள்வி எழுப்பி உள்ளார். #AmitShah #RahulGandhi
    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வியுற்றதன் பிறகு அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று முதல் முறையாக ராஜஸ்தான் வந்தார்.

    ஜெய்ப்பூரில் பாராளுமன்ற தேர்தல் ஆயத்த தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அமித்ஷா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுகிறார். பா.ஜனதா தனது பிரதமர் வேட்பாளரை முன் நிறுத்தி உள்ளது.

    ஆனால் எதிர்கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியவில்லை. பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்து உள்ளனர். ஆனால் பிரதமர் வேட்பாளருக்கு ஒருவரை அவர்களால் முன்நிறுத்த முடியவில்லை.



    நான் ராகுல்காந்தியிடம் கேட்கிறேன் எங்கள் அணியில் நரேந்திரமோடி இருக்கிறார். உங்கள் அணியில் யார் தலைவர்? என்பதை சொல்லுங்கள். எதிர்க்கட்சி அணியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைவர் தோன்றி கொண்டு இருக்கிறார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் நாம் தோற்று விட்டோம் என்பதால் யாரும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நமக்கும், அவர்களுக்கும் இடையே 1 லட்சத்து 70 ஆயிரம் ஓட்டுகள் தான் வித்தியாசம் உள்ளது. நாம் கடுமையாக உழைத்தால் மீண்டும் எழுச்சி பெற்று வெற்றி பெறமுடியும்.

    நமக்கு அதிகாரம் என்பது முக்கியமல்ல. மக்களுக்கு சேவை செய்வது தான் முக்கியம் 1950-ம் ஆண்டு நமது கட்சி தொடங்கப்பட்டது. இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் நாம் ஆட்சியை பிடிப்போம். நமது கட்சி நாடுமுழுவதும் விரிவடைந்து வலுவாக உள்ளது.

    இவ்வாறு அமித்ஷா பேசினார். #AmitShah #RahulGandhi
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷரீப் அந்நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். #ShahbazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைத்துள்ளது.

    இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

    இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷரீப் அந்நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

    எதிர்க்கட்சி தலைவராக ஷாபாஸ் ஷரீப்பை நியமனம் செய்ய 111 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என பாராளுமன்ற சபாநாயகர் ஆசாத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விரைவில் அவர் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
    ×