என் மலர்
செய்திகள்

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷரீப் அந்நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். #ShahbazSharif
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைத்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷரீப் அந்நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக ஷாபாஸ் ஷரீப்பை நியமனம் செய்ய 111 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என பாராளுமன்ற சபாநாயகர் ஆசாத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விரைவில் அவர் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.
Next Story






