என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நாடாளுமன்றம்"
- 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும்
- பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் இந்த 3 மசோதாக்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். இந்த 3 சட்ட மசோதாக்களுக்கும் கடந்த வருடம் டிசம்பர் 25-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
அதே சமயம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஒட்டி விபத்து நடந்து யாரேனும் மரணமடைந்தால், உடனடியாக ஓட்டுநர் காவல்துறைக்கோ அல்லது நீதிபதியையோ சந்தித்து புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இச்சட்டப் பிரிவு வழிவகுக்கிறது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பாராட்டு
- உலகில் வாழும் தமிழர்கள் எல்லாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் பொன்னாளாகும்.
நாகர்கோவில் :
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை (28-ந்தேதி) திறந்து வைக்கிறார். இக்கட்டிடத்தில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செங்கோல்இடம் பெறுகிறது.
தமிழர்களின் பெருமை பேசும் செங்கோலுக்கு பல சிறப்புகள் உண்டு. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் தருணத்தை எப்படி அடையாளப்படுத்து வது என்பது குறித்து ஜவகர்லால் நேரு, ராஜாஜி யிடம் கருத்து கேட்டார்.
அப்போது தமிழகத்தில் மன்னர் ஆட்சி மாற்றம் நிகழும் போது ராஜகுருவிடம் இருந்து செங்கோல் பெறும் மரபு இருப்பதை ராஜாஜி எடுத்து கூறினார். அதன்படி மவுன்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து ஆட்சி அதிகாரம் மாற்றத்தை ஒரு செங்கோல் வழியாக செய்யலாம் என்பதை ஜவகர்லால் நேரு ஒப்பு கொண்டார். ராஜாஜி நேரடியாக தமிழகத்தில் முக்கிய ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு செங்கோல் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.அதன்படி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஆட்சி அதிகாரம் மாறியதற்கான அடையாளமாக அளிக்கப்பட்ட செங்கோலை தயாரித்து அளித்த பெருமை திருவாவடுதுறை ஆதீ னத்துக்கு உண்டு. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டிருக்கும் நிலையில் அன்றைக்கு அளிக்கப்பட்ட செங்கோலும் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. இந்த செங்கோல் நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே காட்சியளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த செங்கோல் நீதிக்கும், நேர்மைக்கும் அடையாளமாக விளங்கும். இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. நாடாளு மன்றத்தில் செங்கோல் அலங்கரிக்கும் நாள் உலகில் வாழும் தமிழர்கள் எல்லாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் பொன்னாளாகும்.
இதற்காக பிரதமர் மோடிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கூலியை அதிகப்படுத்த வேண்டும்.
திருப்பூர் :
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுக்கூட்டம் திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜான்சிராணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்றத்தில் நடைபெறுகிற அனைத்து உரைகளும், நிகழ்வுகளும் செய்கை மொழியுடன் ஒளிபரப்பப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பிற்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். 500 ரூபாய் உதவித்தொகை என்பதை போராடி பெற்றுள்ள நிலையில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வேலை கேட்டு விண்ணப்பம் 6 என்ற படிவத்தை கொடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதத்திலேயே வேலை கேட்டு அந்தந்த மாவட்டங்களில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு வருகிற மே மாதம் 9-ந் தேதி மனு கொடுக்க உள்ளோம்.
100 நாள் வேலை திட்டத்தை அதிகப்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கூலியை அதிகப்படுத்த வேண்டும். மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 10-ந் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில் 2,50,000 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு.
பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு, எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்தியப் பணியாளர் நலத்துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை மத்திய அரசுப் பணிகளில் 27% மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி்னர் நேரடியாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அளித்த தகவலின்படி இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில், பைலட், விமான ஊழியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், விமான நிலைய ஊழியர்கள், சரக்குப் பிரிவு, சில்லறை விற்பனை, பாதுகாப்பு, நிர்வாகம் உள்பட சுமார் 2,50,000 பேர் நேரடி வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக விமானப் போக்குவரத்துறை இணை மந்திரி வி.கே சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், விமானப் போக்குவரத்துத் துறை, 2021-22-ம் ஆண்டில் 58.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்