search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியானா"

    • பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்
    • செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர

    கடந்த 7-ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக் காவலர் சுரேஷ் பாபுவின் மனைவி சுபாஷினி தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    இதுதொடர்பாக சுபாஷினி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், மீண்டும் கடந்த 9ம் தேதி அன்று பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்.

    இந்த செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஹரியானாவைச் சேர்ந்த சச்சின் குமார் (24), அங்கித் (24), அங்கித் யாதவ் (26) ஆகிய மூவரும் சுற்றுலா செல்வதாக சென்னை வந்து, இரு பைக்குகளை வாடகைக்கு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இவர்களை பிடிக்க முயன்ற போது மூவரும் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

    • சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான் என பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதாலா கூறியிருந்தார்
    • அவரை தேர்தலில் தோற்கடிக்க பிராமணர்கள் ஒன்று சேர வேண்டும் எனவும் சபா கோரிக்கை விடுத்துள்ளது

    அரியானா மாநிலம் ஹிசார் தொகுதி பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதாலா பிராமணர்கள் பற்றிய பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    "சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான், நாட்டில் நடக்கும் அனைத்து சாதிய வன்முறை, சாதியக்கொடுமைகளுக்கு பிராமணர்களே பொறுப்பு" என்று அவர் பேசியிருந்தார்.சமூகத்தை சாதிகளாக பிரித்தது பிராமணர்கள்தான்,

    ரஞ்சித் சவுதாலாவின் இக்கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அரியானா பிராமண சபா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவரை தேர்தலில் தோற்கடிக்க பிராமணர்கள் ஒன்று சேர வேண்டும் எனவும் சபா கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், ரஞ்சித் சிங் சவுதாலா ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், "சமூகத்தில் முன்னணி சமூகமாக இருக்கும் பிராமண சமூகத்தின் மீது எனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு. என் வார்த்தைகளால் அவர்களது மனது புண்பட்டிருந்தால், நான் அந்த வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன். நான் யாரையும் அவமதிக்க நினைக்கவில்லை" என்று பேசியுள்ளார்.

    • மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
    • மக்கள் தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே ஓடுவதை பார்க்க முடிந்தது.

    ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள பெரிய தொழில் மையமான தருஹேராவில் உள்ள லைஃப் லாங் நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    இதில், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

    இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், வானத்தில் புகை மூட்டத்துடன் மக்கள் தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே ஓடுவதை பார்க்க முடிந்தது.

    இதுகுறித்து சிவில் சர்ஜன் டாக்டர் சுரேந்தர் யாதவ் கூறுகையில், " ரேவாரி, தாருஹேராவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்துள்ளது. பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவருக்கு காயம் தீவிரமாக உள்ள நிலையில் மேலும், ஒரு தீவிர ரோஹ்தக்கிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்" என்றார்.

    • நஃபே சிங்குடன் கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் உயிரிழந்தார்.
    • காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதி.

    அரியானாவில் இந்திய தேசிய லோக்தள தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான நஃபே சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

    பகதூர் என்ற இடத்தில் நஃபே சிங் காரில் சென்று கொண்டிருந்தபோது சூழ்ந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

    அப்போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து நஃபே சிங் மற்றும் கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் ஆகியோர் உயிரிழந்தனர்.

    மேலும், காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • ஆம்புலன்சுக்கு வழிவிடாது இடையூறு செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
    • 10 ஆயிரம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி கூறியதாவது:

    மோட்டார் வாகனச் சட்டம் 194-இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

    இந்த அவசரகால சேவை வாகனங்களுக்கு வழிவிடாத நபர்களை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து அவர்களுக்கு உடனடியாக ஆன்லைன் மூலம் அபராத ரசீது அனுப்பப்படும் என தெரிவித்தார்.

    ஏற்கனவே குருகிராம் போக்குவரத்து போலீசார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு உறுப்புகளை எடுத்துச்செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பசுமை வழித்தடங்களை அமைத்து தீவிர நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.

    • எதிர் வீட்டில் இருந்த பெண் துடைப்பக்கட்டையுடன் ஓடிவந்தார்.
    • குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.

    அரியானா மாநிலத்தின் பிவானி மாவட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவின் படி, தெருவொன்றில் நின்று கொண்டிருந்த நபரை நோக்கி இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த இருவர் சரமாரியாக சுடும் பகீர் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

    தான் துப்பாக்கியால் சுடப்படுவதை உணர்ந்ததும், தெருவில் நின்று கொண்டிருந்த நபர் அருகில் இருந்த வீட்டிற்குள் ஓடிச் செல்கிறார். துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டதும் எதிர் வீட்டில் இருந்த பெண் கையில் துடைப்பக்கட்டையுடன் வேகமாக ஓடிவந்தார்.

    துப்பாக்கி வைத்திருந்தவர்களிடம் ஓடிவந்த பெண், அவர்களை நோக்கி துடைப்பக்கட்டையை வீசினார். இதை கண்ட மர்ம நபர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட நபரின் பெயர் ஹரிகிருஷ்ணன் என்றும் இவர் குத்துச்சண்டை வீரர் ரவி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

    இவருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஹரிகிருஷ்ணன் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். மர்ம நபர்கள் சுட்டதில் ஹரிகிருஷ்ணன் உடலில் நான்கு தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்திய இருவர் மற்றும் அவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற இருவரையும் போலீசார் சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர். 

    • உணவு சேவையை தனியார் அமைப்பான சொடெக்ஸோ நிர்வகிக்கிறது
    • "நான் இங்கு இனிமேல் உணவு உண்ண மாட்டேன்" என ஒருவர் உரக்க கூறுகிறார்

    இந்தியாவின் வடக்கில் உள்ள மாநிலம் அரியானா. இங்குள்ள தொழில்துறையில் பிரசித்தி பெற்ற பல்வேறு உற்பத்தி சாலைகளை உள்ளடக்கிய மாவட்டம் சோனிபெட். இங்கு புகழ் பெற்ற ஓ.பி. ஜிண்டால் குளோபல் எனும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளது.

    2009-ல், இந்தியாவின் பிரபலமான தொழிலதிபரான நவீன் ஜிண்டால், தனது தந்தையான ஓ.பி. ஜிண்டால் நினைவாக சேவை நோக்கில் இந்த கல்வி நிறுவனத்தை தொடங்கினார். இந்த பல்கலைகழகத்தில் 12 கல்வி நிறுவனங்கள் மூலமாக சட்டக்கல்வி, கலை, அறிவியல், வணிக மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளில் 45 கல்வி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுளிலிருந்தும் இங்கேயே தங்கி மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கேயே தங்கி கல்வி பயிலும் மாணவர்களின் உணவு சேவையை தனியார் அமைப்பான சொடெக்சோ நிர்வகித்து வருகிறது.

    இந்நிலையில் இந்த விடுதி மாணவர்களுக்கான உணவு தயாரிக்கும் கூடத்தில் எடுக்கப்பட்டதாக ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது.

    அதில், ஒரு மிக பெரிய அண்டாவில் மிக அதிகமான அளவில் வேக வைத்த உருளைக்கிழங்குகளை கைகளாலோ, இயந்திரங்களாலோ பிசைவதற்கு பதிலாக ஒரு அரை டிராயர், தொப்பி மற்றும் சட்டை அணிந்த பணியாளர் கால்களாலேயே நசுக்குகிறார்.

    இந்த வீடியோவின் பின்னணியில், "நான் இங்கு இனிமேல் உணவு உண்ண மாட்டேன்" என ஒருவர் உரக்க கூறுவதும் கேட்கிறது.

    இந்த சுகாதாரமற்ற செயலை வீடியோவில் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இச்செயலை எதிர்க்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்து அங்கு உணவு உண்ண மறுத்தனர்.


    இதனையடுத்து பலகலைக்கழக நிர்வாகம், இந்த சம்பவம் குறித்த சொடெக்சோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது.

    • நூ மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் உயிரிழப்பு
    • சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அகற்றும் பணியை மேற்கொண்டது மாவட்ட நிர்வாகம்

    ஜூலை 31 அன்று, அரியானாவில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரை என ஒரு யாத்திரையை நடத்தினார்கள்.

    யாத்திரை தொடங்கிய கோயிலிலிருந்து சில கிலோமீட்டர் தூரம் சென்றதுமே பக்தர்கள் மீது அங்குள்ள கட்டிடங்களிலிருந்து கல்வீச்சு நடைபெற்றது. இதில் பாதுகாப்புக்காக இருந்த காவல்துறை வாகனங்களும் சேதமடைந்தன.

    இதனையடுத்து இரு பிரிவினருக்கிடையே வன்முறை மூண்டது.

    கடந்த சில நாட்களாக குருகிராம் பகுதியிலும் இந்த வன்முறை பரவியது. இரண்டு ஊர்க்காவல் படையினர் மற்றும் 1 மதகுரு உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் காவல்துறை மும்முரமாக ஈடுபட்டது. மாநிலத்தில் சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு இதில் சம்பந்தம் இருப்பதாக கண்டறியப்பட்டது.

    இதனையடுத்து சட்டவிரோத ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு எதிராக அரியானாவின் நூ மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தொடங்கியது.

    நேற்று முன்தினம் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததற்காக வன்முறையால் பாதிக்கப்பட்ட நூ பகுதியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டவ்ரு பகுதியில் வசிக்கும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன.

    பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புல்டோசர்களை கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    மூன்றாம் நாளான இன்று காலை நல்ஹர் பகுதியில் உள்ள ஷாஹீத் ஹசன் கான் மேவதி அரசு மருத்துவக் கல்லூரியின் பிரதான நுழைவாயிலுக்கு எதிரே இருந்த 20-க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மெடிக்கல் கடைகள் புல்டோசரை கொண்டு இடிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாக குழுக்கள் முன்னிலையில் நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த புல்டோசர் நடவடிக்கை தொடர்ந்தது. பல்வேறு பகுதிகளில் உள்ள 50 முதல் 60 கட்டடங்கள் இதுவரை இடிக்கப்பட்டுள்ளன.

    காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பயந்து பலர் ஓடிவிட்டனர். கடந்த பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.

    உள்ளூர் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் துணை தலைவருமான அஃப்தாப் அகமது, இத்தகைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ''கல்வீச்சு நடைபெற்ற இடங்களில் உள்ள கட்டிடங்களின் மேல் மாடியில் அதிகளவில் கற்கள் சேகரிக்கப்பட்டதை கொண்டு இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தோன்றுகிறது. மோதல்கள் தொடர்பாக இதுவரை 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 80 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று அரியானாவின் உள்துறை அமைச்சர் அனில் விஜ் நேற்று தெரிவித்தார்.

    இதுவரை 102 முதல் தகவல் அறிக்கை காவல்துறையால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    • சந்தீப் சிங்கை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லோக் தளம் கட்சி வலியுறுத்தியது.
    • மந்திரி மீதான குற்றச்சாட்டையடுத்து முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டினார்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு விளையாட்டு மந்திரியாக இருப்பவர் சந்தீப் சிங். முன்னாள் ஹாக்கி வீரரான இவர் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று உள்ளார்.

    இந்தநிலையில் மந்திரி சந்தீப்சிங் மீது தடகள பெண் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்.

    ஆவணங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக மந்திரி சந்தீப்சிங் அவரது அலுவலகத்துக்கு வரவழைத்து தவறாக நடந்து கொண்டார் என்றும் நான் அங்கு அறையில் இருந்து தப்பித்து வெளியே ஓடி வந்ததாகவும் பெண் பயிற்சியாளர் தெரிவித்தார்.

    இதுகுறித்து மாநில காவல்துறை தலைவர் உள்துறை அமைச்சர், முதல்-மந்திரியை சந்தித்து முயற்சித்தபோதும் சந்தீப் சிங்கின் தலையீட்டால் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை மந்திரி சந்தீப் சிங் திட்டவட்டமாக மறுத்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெரிவித்தார்.

    இந்த விவகாரம் அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண் பயிற்சியாளரின் புகார் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை நியமிக்க வேண்டும். சந்தீப் சிங்கை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்திய தேசிய லோக் தளம் கட்சி வலியுறுத்தியது.

    இந்த நிலையில் பெண் பயிற்சியாளரின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மந்திரி சந்தீப்சிங் மீது சண்டிகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை செய்தி தொடர்பாளர் கூறும் போது, பெண் பயிற்சியாளர் அளித்த புகாரின் பேரில் அரியானா மந்திரி சந்தீப் சிங் மீது 5 பிரிவுகளின் கீழ் சண்டிகரில் உள்ள செக்டார்-26 போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மந்திரி மீதான குற்றச்சாட்டையடுத்து முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டினார்.

    இந்நிலையில், அமைச்சர் தனது இலாகாவை முதலமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகள் மீண்டும் நிராகரித்துள்ள அவர், இது தனது இமேஜைக் கெடுக்கும் முயற்சி என்று தெரிவித்தார். என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

    • சுக்பீர் சிங் பாதலின் அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டாம் என்று கட்சி தலைமை கேட்டுக்கொண்டது.
    • கர்னாலில் நடந்த கூட்டத்தில், புதிய கட்சியை வழிநடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

    குருஷேத்ரா:

    பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் சக்பீர் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் படுதோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து கட்சித் தலைமையில் மாற்றம் செய்யப்படவேண்டும் என்ற கருத்து கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், சுக்பீர் சிங் பாதலின் அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டாம் என்று கட்சி தலைமை கேட்டுக்கொண்டது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், சிரோமணி அகாலி தளம் கட்சியின் அரியானா மாநில தலைவர்கள் சிலர் கட்சியில் இருந்து விலகினர். மேலும், அவர்கள் ஒன்றிணைந்து அரியானாவில் புதிய கட்சியை தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இது சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    கட்சியில் இருந்து வெளியேறியவர்களில் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் அசந்த், எஸ்ஜிபிசியின் சிர்சா உறுப்பினர் குர்மீத் சிங் திலோகேவால் மற்றும் கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவி ஆகியோர் முக்கியமானவர்கள்.

    கர்னாலில் நடந்த கூட்டத்தில், புதிய கட்சியை வழிநடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக ஒரு தலைவர் கூறினார். இந்தக் குழு அடுத்த இரண்டு மாதங்களில் அரியானாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று சீக்கியர்களை கட்சியில் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளும். அதன்பின்னர், கர்னாலில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு, அதில் மாநில செயற்குழு அறிவிக்கப்படும் என்றும் அந்த தலைவர் தெரிவித்தார்.

    • தேசியக் கொடிக்காக ஏழை மக்களிடம் ரூ.20 கேட்பது வெட்கக்கேடானது என ராகுல் கண்டனம்.
    • ரேஷன் கடை விற்பனையாளர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.

    சண்டிகர்:

    நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம் வரும் 15ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், வீடு தோறும் தேசியக் கொடி ஏற்றும் 'ஹர் கர் திரங்கா' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக அஞ்சல் அலுவகங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹெம்டா கிராமத்தில் ஒரு ரேஷன் கடையில் 20 ரூபாய் கொடுத்து தேசியக் கொடி வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என ஏழை மக்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து செய்தி இணையதளம் வெளியிட்ட பதிவில், தேசியக் கொடியை வாங்கா விட்டால் ரேஷன் பொருட்கள் மறுக்கப் படுவதாகவும் பொதுமக்கள் சிலர் குற்றம் சாட்டினர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் இணையத்தில் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், அந்த ரேஷன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. 


    வாங்கத் தயாராக உள்ளவர்களுக்கு மட்டுமே 20 ரூபாய்க்கு ரேஷன் கடைகள் மூலம் தேசிய கொடி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்னால் துணை ஆணையர் அனிஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஏழை மக்களிடம் தேசியக் கொடிக்காக ரூ.20 கேட்டு கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 


    தேசியத்தை ஒருபோதும் விற்க முடியாது. ரேஷன் பொருட்கள் கொடுக்கும்போது, ஏழை மக்களிடம் மூவர்ணக் கொடிக்காக 20 ரூபாய் வசூலிப்பது வெட்கக்கேடானது. மூவர்ணக்கொடியுடன், பாஜக அரசு நம் நாட்டு ஏழைகளின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்துகிறது என்றும் தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அரியானா மாநிலம் ரெவாரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்ட ராணுவ வீரர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். #RewariGangRape
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் சி.பி.எஸ்.இ. தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக பிரதமர் மோடியிடம்  விருது பெற்றவர்.

    அவர், கடந்த 15-ம் தேதி சிறப்பு பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது வழிமறித்த மூன்று வாலிபர்கள் ஒரு காரில் கடத்தி சென்றனர். அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அந்த மூவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அங்கு வயலில் இருந்த மற்றவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை  பலாத்காரம் செய்துள்ளனர்.

    அப்போது அந்த பெண் சுயநினைவை இழக்கவே, அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து தள்ளி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அந்த பெண் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். 

    இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து விழிப்படைந்த காவல்துறை குற்றவாளிகளை தேடும் பணியில் இறங்கியது. பங்கஜ், மணிஷ், நிஷ்ஷு ஆகிய மூன்று பேரும் முக்கிய குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இதில் பங்கஜ் என்ற முக்கிய குற்றவாளி ராஜஸ்தான் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருபவர் என தெரியவந்து உள்ளது.  

    இதனை அடுத்து, நிஷ்ஷு மற்றும் அவருக்கு உதவி செய்ததாக சஞ்சிவ் என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பங்கஜ் மற்றும் மணிஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அரியானா போலீசார் தெரிவித்துள்ளனர். 
    ×