என் மலர்
நீங்கள் தேடியது "Super Over"
- அரியானா- பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் 207 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது.
- இதனால் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது.
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அங்கிட் குமார் தலைமையிலான அரியானா அணியும் அபிஷேக் சர்மா தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த ஓவரை அன்ஷுல் காம்போஜ் வீசினார். முதல் பந்தில் 1 ரன் விட்டுக்கொடுத்த அவர் அடுத்த 2 பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அபிஷேக் சர்மா, சன்வீர் சிங் ஆகியோர் முதல் பந்தில் டக் அவுட் ஆனார்கள். இதனால் அரியானா அணிக்கு 2 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை அரியானா அணி முதல் பந்திலேயே அடித்து வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவரில் மிரட்டிய அன்ஷுல் காம்போஜ் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 213 ரன்கள் எடுத்தது.
- இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக வங்கதேசதுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சவுமியா சங்கர் 45 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மோதி 3 விக்கெட்டும் அகேல் ஹோசைன், அலிக் அதனேஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து அலிக் அதனேஸ்- கீசி கார்டி ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலிக் அதனேஸ் அவுட் ஆனார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்தது. அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் கீசி கார்டி ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஒரு முனையில் கேப்டன் சாய் ஹோப் பொறுப்புடன் விளையாட எதிர் முனையில் விக்கெட்டுகள் சரிந்தன. 133 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஹோப் நிலைத்து ஆடி அரை சதம் கடந்தார். கடைசி வரை போராடிய ஹோப், அணியை தோல்வியில் இருந்து மீட்டு டிரா செய்தார்.
இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 1 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி வருகிற 23- ந் தேதி நடக்கவுள்ளது.
- டி20 போட்டியில் எப்போதாவது ஒருமுறை தான் சூப்பர் ஓவர் வரை ஆட்டம் வரும்.
- டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக இப்போட்டி அமைந்தது.
டி20 போட்டியில் போட்டி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். எப்போதாவது ஒருமுறை தான் சூப்பர் ஓவர் வரை ஆட்டம் வரும். ஆனால் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதிய டி20 போட்டியில் ஒன்றல்ல, இரண்டல்ல, 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக இப்போட்டி அமைந்தது.
நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகள் மோதிய டி20 போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை அடித்தது. இதனையடுத்து 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை அடித்தது. ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
முதல் சூப்பர் ஓவரில் 2 அணிகளும் தலா 19 ரன்கள் அடிக்க இரண்டாவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அந்த சூப்பர் ஓவரில் இரு அணிகளும் 17 ரன்களை அடித்தது.
இதனால் 3 ஆவது சூப்பர் ஒவ்வரு நடத்தப்பட்டது. அதில் நேபாளம் அணி முதல் 4 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றது.
- இரண்டு அணிகளும் சமமான ஸ்கோரை பெற்றால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும்.
- சூப்பர் ஓவரில் வெற்றி பெறும்வரை தொடர்ந்து நடத்தப்படும்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் நிர்வாகம் 10 அணி கேப்டன்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியது. அதன்பின் ஐபிஎல் விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு போட்டியின்போது 2-வது இன்னிங்சில் 10 ஓவருக்குப் பிறகு புதிய பந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக பந்து ஈரமாகிவிடுதால் பந்து வீச்சாளர்கள் பந்து வீச சிரமப்படுவதாக கூறியதன் அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஓவர் குறித்து ஐபிஎல் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு அணிகளும் சமமான ஸ்கோர் எடுத்திருந்தால் போட்டி டை என அறிவிக்கப்பட்டு, சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டும். இதில் ஒவ்வொரு அணியின் 3 பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய முடியும். 6 பந்துகள் வீசப்படும். இரண்டு விக்கெட் இழந்தால் அணியின் பேட்டிங் முடிவுக்கு வரும்.
ஒருவேளை சூப்பர் ஓவரின்போது இரண்டு அணிகளும் சமநிலையான ஸ்கோரை பெற்றால், மீண்டும் சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். இப்படி ஒரு வெற்றி பெறும் வரை சூப்பர் ஓவர் சென்று கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் சூப்பர் ஓவருக்கு ஒரு மணி நேரம்தான் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை முறை வேண்டுமென்றால் சூப்பர் ஓவர் விளையாட முடியும் எனத் தெரிவித்துள்ளது.
- 5-வது லீக் ஆட்டத்தில் ஹாங் காங்- பஹ்ரைன் ஆகிய அணிகள் மோதின
- இந்த ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது.
மலேசியா, ஹாங் காங், பஹ்ரைன் ஆகிய அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹாங் காங்- பஹ்ரைன் ஆகிய அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஹாங் காங் 20 ஓவரில் 129 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பஹ்ரைன் 129 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பஹ்ரைன், முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஹாங் காங் அணிக்கு 1 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
1 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங் காங், 3-வது பந்தில் 1 ரன் அடித்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் சூப்பர் ஓவரில் ஒரு ரன் கூட அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 0 ரன்னில் ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை பஹ்ரைன் அணி படைத்துள்ளது.
- உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஓவர் போட்டி நடைபெற்றுள்ளது.
- 2007-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் டை ஆனது. அப்போது சூப்பர் ஓவருக்கு பதிலாக பவுல் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
பிரிட்ஜ்டவுன்:
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய 3-வது ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள நமீபியா-ஓமன் அணிகள் மோதின.
டாஸ் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 19.4 ஓவர்களில் 109 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக காலித் கைல் 34 ரன்கள் எடுத்தார். நமீபியா தரப்பில் டிரம் பெல்மேன் 4 விக்கெட்டும் டேவிட் வைஸ் 3 விக்கெட் டும் எராஸ்மஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய நமீபியா அணியும் 20 ஓவரில் 6 விக்கெட் 109 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டையில் முடிந்தது. ஆட்டம் டையில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடை பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணியில் டேவிட் வைஸ், எராஸ்மாஸ் களம் இறங்கினர். பிலால் கான் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரி உள்பட 21 ரன்கள் எடுக்கப்பட்டது.
டேவிட் வைஸ் 13 ரன்னும், எராஸ்மாஸ் 8 ரன்னும் எடுத்தார். அடுத்து 22 ரன் இலக்குடன் ஓமன விளையாடியது. டேவிட் வைஸ் வீசிய அந்த ஓவரில் ஓமன் அணியால் ஒரு விக்கெட் இழந்து 10 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நமீபியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஓவர் போட்டி நடைபெற்றுள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பையில் நடைபெற்ற சூப்பர் ஓவரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை நமீபியா படைத்துள்ளது. இதற்கு முன்பு 19 ரன்கள் எடுத்ததே சூப்பர் ஓவரில் அதிக ரன் ஆகும். இதனை நமீபியா முறியடித்துள்ளது.
2012-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் 2 சூப்பர் ஓவர் நடைபெற்றது. ஒரு போட்டியில் இலங்கை -நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 13 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது.
2-வது சூப்பர் ஓவர் போட்டியில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் 19 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
2007-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆட்டம் டை ஆனது. ஆனால் அப்போது சூப்பர் ஓவருக்கு பதிலாக பவுல் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் ஓவர்களின் பட்டியல்:-
1. நியூசிலாந்து 174/7 (20 ஓவர்கள்) - இலங்கை 174/6 (20 ஓவர்கள்) - இலங்கை வெற்றி சூப்பர் ஓவர், 13/1 - 7/1 - கண்டி, 2012
2. மேற்கிந்திய தீவுகள் 139 (19.3 ஓவர்கள்) - நியூசிலாந்து 139/7 (20 ஓவர்கள்) - மேற்கிந்திய தீவுகள் சூப்பர் ஓவர் வெற்றி, 19/0 - 17/0 - கண்டி, 2012
3. ஓமன் 109 (20 ஓவர்கள்) - நமீபியா 109/7 (20 ஓவர்கள்) - நமீபியா சூப்பர் ஓவர் வென்றது, 21/0 - 10/1 - பார்படாஸ், 2024
- கடைசியில் களமிறங்கிய ஷாஹீன் ஷா அப்ரிடி 23 ரன்களை விளாசினார்.
- அமெரிக்கா 1 விக்கெட் இழப்புக்கு 18 ரன்களை சேர்த்தது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 44 ரன்களையும், ஷதாப் கான் 40 ரன்களையும் சேர்த்தனர். கடைசியில் களமிறங்கிய ஷாஹீன் ஷா அப்ரிடி 23 ரன்களை விளாசினார்.
இதையடுத்து 160 என்ற இலக்கை துரத்திய அமெரிக்கா அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அமெரிக்கா அணியின் துவக்க வீரரும், கேப்டனுமான மொனாக் படேல் 38 பந்துகளில் அரைசதம் கடந்து அவுட் ஆனார்.

இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் தங்கள் பங்கிற்கு ரன்களை சேர்க்க அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்களை சேர்த்தது. இதன் காரணமாக போட்டி சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த அமெரிக்கா 1 விக்கெட் இழப்புக்கு 18 ரன்களை சேர்த்தது.
19 ரன்களை துரத்திய பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் காரணமாக போட்டியில் அமெரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு டி20 உலககக் கோப்பை தொடரின் 2-வது சூப்பர் ஓவர் போட்டியாக இது அமைந்தது.
- பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.
- இந்திய அணிக்காக விளையாடியது அம்பலமாகி இருக்கிறது.
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய அமெரிக்கா வரலாற்று சாதனையை பதிவு செய்தது.
சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 1 விக்கெட் இழந்து 18 ரன்களை குவித்தது. அடுத்து வந்த பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழந்து 13 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.
அமெரிக்கா வெற்றி பெற அந்த அணியின் சௌரப் நெட்ராவல்கர் முக்கிய பங்காற்றினார். சிறப்பாக பந்துவீசிய இவர் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேற்றைய போட்டியில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, சௌரப் நெட்ராவல்கர் இந்திய அணிக்காக விளையாடியது அம்பலமாகி இருக்கிறது.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சௌரப் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். யு19 இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சௌரப் 2010-இல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்களை பந்துவீசி 16 ரன்களை கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
அந்த வகையில், 14 ஆண்டுகள் கழித்து அணி மாறிய சௌரப் அமெரிக்க கிரிக்கெட் அணியில் களமிறங்கி டி20 உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தோல்வியடைய முக்கிய காரணமாக விளங்கியுள்ளார்.
முன்னதாக, யு19 போட்டியில் இந்தியா தோல்வியுற்ற பாகிஸ்தான் அணியிலும் பாபர் அசாம் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதைய போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இரு அணிகளும் 164 ரன்னில் ஆல்அவுட் ஆனதால் சூப்பர் ஓவர்.
- முதன்முறை இரு அணிகளும் தலா 10 ரன்களும், 2-வது முறை தலா 8 ரன்களும் அடித்தன.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மகாராஜா டிராபி என்ற பெயரில் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹூப்ளி டைகர்ஸ்- பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய ஹூப்ளி டைகர்ஸ் அணி 20 ஓவரில் 164 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் அந்த அணி திணறியபோது மணிஷ் பாண்டே 33 ரன்களும், அனீஷ்வர் கவுதம் 30 ரன்களும் சேர்த்தனர். பெங்களூரு டைகர்ஸ் அணி சார்பில் லாவிஷ் கவுசல் சிறப்பாக பந்து வீசி 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.
பின்னர் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. மயங்க் அகர்வால் 34 பந்தில் 54 ரன்கள் விளாசினார். என்ற போதிலும் போட்டியை வெற்றிகரமாக முடிக்கவில்லை. பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியும் 164 ரன்னில் ஆல்அவுட் ஆனதால் போட்டி "டை"யில் முடிந்தது.
இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் இரண்டு அணிகளும் தலா 10 ரன்கள் அடித்தன. இதனால் 2-வது முறை சூப்பர் ஓவரை கடைபிடிக்கப்பட்டது. 2-வது முறை இரு அணிகளும் தலா 8 ரன்கள் அடித்தன. இதனால் 3-வது முறை ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
இந்த முறை பெங்களூரு பிளாஸ்டர்ஸ் 12 ரன்கள் அடித்தது. ஆனால் ஹூப்ளி அணி இதை சேஸிங் செய்து வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட்டில் இதுவரை மூன்று முறை சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டதா? எனத் தெரியவில்லை. இதனால் இநத் போட்டி வரலாற்றில் இடம் பெறும் ஒரு போட்டியாக அமைந்துள்ளது.






