என் மலர்
நீங்கள் தேடியது "Bahrain"
- வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார்.
- அப்போது மத்திய கிழக்காசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
வாஷிங்டன்:
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்-காசா போர், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் போன்றவற்றால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து விருந்து அளித்துள்ளார்.
அதன்படி, பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீபா மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி ஆகியோரை தனித்தனியாக டிரம்ப் சந்தித்து விருந்து அளித்தார்.
ஏற்கனவே தனது 2-வது பதவிக் காலத்தின்போது சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். இதன்மூலம் காசா போரில் சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது.
தற்போதைய இந்தச் சந்திப்பின்போது மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது, அமெரிக்க ஜெட் விமானங்கள், கணினி சேவையகங்கள், அலுமினிய உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
அதேபோல், அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின்னுடன் ஆலோசிக்கப்பட்டது.
- பா.ஜ.க. எம்.பி. பைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையிலான குழு பஹ்ரைன் வந்தது.
- அங்கு வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோருடன் அந்தக் குழுவினர் கலந்துரையாடினர்.
மனாமா:
பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு பஹ்ரைனுக்கு வந்துள்ளது. அந்தக் குழுவினர் அங்கு வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோருடன் கலந்துரையாடினர்.
அதன்பின், குழுவில் இடம்பெற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்று மகாத்மா காந்திக்கு மலர் அஞ்சலி செலுத்தினேன். அங்குள்ள இந்திய சமூகத்தின் பிரதிநிதிகளிடம் உரையாற்றினேன்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஒன்றுபட்ட மற்றும் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினேன்.
பஹ்ரைன் ஒரு மினி இந்தியா போல இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லா மதத்தினரும் இங்கு வாழ்கின்றனர். எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.
எங்கள் அரசியல் நோக்கத்தைப் பொறுத்தவரை நாங்கள் இந்தியாவில் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் இங்கே நாங்கள் இந்தியர்களாக வருகிறோம்.
பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இருப்பினும், கிழக்கு பாகிஸ்தான் (வங்காளதேசம்) மற்றும் மேற்கு பாகிஸ்தான் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. ஆனால் நம் நாட்டில், அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நாங்கள் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்கிறோம்.
உலகம் முழுவதும் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட பாகிஸ்தானில் வாழும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என தெரிவித்தார்.
- 5-வது லீக் ஆட்டத்தில் ஹாங் காங்- பஹ்ரைன் ஆகிய அணிகள் மோதின
- இந்த ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது.
மலேசியா, ஹாங் காங், பஹ்ரைன் ஆகிய அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹாங் காங்- பஹ்ரைன் ஆகிய அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஹாங் காங் 20 ஓவரில் 129 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பஹ்ரைன் 129 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பஹ்ரைன், முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஹாங் காங் அணிக்கு 1 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
1 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங் காங், 3-வது பந்தில் 1 ரன் அடித்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் சூப்பர் ஓவரில் ஒரு ரன் கூட அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 0 ரன்னில் ஆட்டமிழந்த அணி என்ற மோசமான சாதனையை பஹ்ரைன் அணி படைத்துள்ளது.
- இந்திய தூதரகம் அனைத்து விதமான உதவிகளையும் மீனவர்களுக்கு செய்து வருகிறது.
- விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள் முடிவடைந்த பிறகு இந்தியா திரும்புவார்கள்.
மனமா:
தமிழக மீனவர்கள் 28 பேர் கடந்த செப்டம்பர் மாதம் மீன்பிடிக்க சென்றபோது, பக்ரைன் நாட்டின் கடல் பகுதியில் எல்லை தாண்டி சென்றனர். இதையடுத்து அவர்கள் 28 பேரையும் பக்ரைன் அரசு கைது செய்தது.
இந்த நிலையில் எல்லை தாண்டி சென்றதாக பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் வருகிற 10-ந்தேதி விடுவிக்கப்பட உள்ளதாக நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூசுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராபர்ட் புரூசுக்கு, மத்திய மந்திரி ஜெய்சங்கர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக நீங்கள் எனக்கு கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி கடிதம் எழுதி இருந்தீர்கள். பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட அந்த மீனவர்கள் வருகிற 10-ந்தேதி விடுவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களை விடுவிப்பது தொடர்பான நடைமுறைகள் முடிவடைந்த பிறகு இந்தியா திரும்புவார்கள். இந்திய தூதரகம் அனைத்து விதமான உதவிகளையும் மீனவர்களுக்கு செய்து வருகிறது.
அவர்கள் விரைவில் நாடு திரும்புவதற்கான நடைமுறைகளை முன்னுரிமை அடிப்படையில் செய்து கொடுக்குமாறு உள்ளூர் அதிகாரிகளுடன் பேசுதற்கான நடவடிக்கைகளில் தூதரகம் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலை செய்வதற்காக செல்லும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஏஜென்டுகளால் வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலை கிடைக்காமல் மிக கடுமையான கூலி வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
முறையான சம்பளம், சரியான உணவு மற்றும் தங்கும் இடம் கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கு அவதிப்படுவதாக தெரிகிறது. இதில் ஆண்களின் நிலை சற்று சுமாராக இருந்தாலும் வீட்டு வேலை செய்வதற்காக இங்கிருந்து செல்லும் பல பெண்கள் அங்கு அனுபவிக்கும் சித்ரவதைகள் மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.
இந்நிலையில், பஹ்ரைன் நாட்டில் வேலைக்காக சென்ற பெண்ணை அராபிய செல்வந்தர் ஒருவர் தனது வீட்டில் கொத்தடிமையாக அடைத்து வைத்து, சித்ரவதை செய்வதாக அங்குள்ள தொண்டு நிறுவனத்துக்கு சமீபத்தில் தகவல் வந்தது.
அந்த தகவலை அவர்கள் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்கும் நடவடிக்கையில் தூதரக அதிகாரிகள் துரிதமாக களமிறங்கினர்.
இதற்கிடையில், தன்னிடம் சிக்கிய பெண்ணின் குடும்பத்தாருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அந்த அராபிய செல்வந்தர், அந்த பெண்ணுக்காக நான் ஏகப்பட்ட பணத்தை கொடுத்திருக்கிறேன். இன்னும் 25 நாளாவது அவளை என்னுடன் வைத்திருப்பேன். அவளை மீட்க உங்களால் என்ன செய்ய முடியுமோ, செய்து கொள்ளுங்கள் என்று சவால் விட்டார்.

மீட்கப்பட்ட இந்திய பெண் யார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவரிடம் இந்திய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #Indianwomanlocked #IndianwomanBahrain #Sushma
பக்ரைன் நாட்டில் முடியரசராக இருப்பவர் மன்னர் ஹமது. இவரது ஆட்சியை எதிர்த்து சியா பிரிவைச் சேர்ந்த அல் வெஃபாக் இயக்கத்தின் தலைவர் ஷேக் அலி சல்மான் உள்ளிட்ட பலரும் போராடி வருகின்றனர். இதனால் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
மன்னரின் முடியாட்சியை கடுமையாக எதிர்த்தும், ஜனநாயக முறையிலான தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றனர். இதனால், அல் வெஃபாக் இயக்கம் உள்ளிட்ட சில இயக்கங்களை மன்னர் ஹமது தடை செய்துள்ளார். மேலும், அரசுக்கு எதிராக போராடிய பலரையும் கைது செய்துள்ளார்.

இந்த நிலையில், பக்ரைன் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷேக் அலி சல்மான், ஆளும் அரசை கவிழ்ப்பதற்காக கத்தார் நாட்டுடன் இணைந்து சதி செய்வதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், ஷேக் அலி சல்மானுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கத்தார் நாடு, ஐ.எஸ் பயங்கரவாதிகளுடனும், ஈரானுடனும் தொடர்பு வைத்து இருப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 2017-ம் ஆண்டு பக்ரைன், சவூதி அரேபியா போன்ற நாடுகள் கத்தார் நாட்டுடனான உறவை முற்றிலுமாக முறித்து கொள்ள முடிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. #Bahrain #Qatar #AlWefaqMovement #SheikhAliSalman
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான மாரத்தான் பந்தயத்தில் ஜப்பான் வீரர் ஹிரோடோ இனோய் தங்கப்பதக்கம் வென்றார். பக்ரைன் வீரர் எல்ஹாசன் எலாப்பாச்சி வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்த போட்டியின் போது கடைசி கட்டத்தில் தன்னை முந்தி செல்ல முயன்ற பக்ரைன் வீரர் எல்ஹாசனை, ஜப்பான் வீரர் ஹிராடோ இனோய் இடித்து தள்ளியதால் அவர் தடுமாறியதாகவும், அதனை பயன்படுத்தி ஹிராடோ இனோய் தங்கப்பதக்கம் வென்று விட்டார் என்று பக்ரைன் நாட்டு அணியின் தலைமை அதிகாரி முகமது பாடெர் போட்டி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆசிய விளையாட்டு போட்டியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட தென்கொரியா வீராங்கனையை, சீனாவின் நீச்சல் வீராங்கனை ஒருவர் தாக்கிதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நீச்சல் வீராங்கனை மீது தெரியாமல் கால் பட்டு விட்டதாக மன்னிப்பு கேட்டும் அவர் தேவையில்லாமல் தாக்கினார் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. #AsianGames #HirotoInoue
இரு நாள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று பக்ரைன் சென்றடைந்தார். அப்போது, அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி சேக் காலித் பின் அகமது பின் முகமது அல் கலிஃபா மனாமா விமான நிலையத்தில் அரசு மரியாதையுடன் அவரை வரவேற்றார்.

இந்நிலையில், இன்று பக்ரைன் பிரதமர் கலீபா பின் சல்மான் அல் கலிபாவுடன் நேரில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. #Bahrain #SushmaSwaraj

மேலும், பல்வேறு உயரதிகாரிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் இருநாட்டு உறவுகள் குறித்தும், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சார உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பக்ரைனில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரக கட்டிடத்தை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் திறந்துவைக்க உள்ளார்.#SushmaSwaraj #Bahrain






