என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ghulam NabiAzad"

    • உடல்நலம் சரியில்லாததால் குவைத் மருத்துவமனையில் குலாம் நபி ஆசாத் சேர்ந்தார்.
    • தற்போது குலாம் நபி ஆசாத் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பஹல்காம் தாக்குலுக்குப் பதிலாக பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதையடுத்து எல்லைகளில் தாக்குதலைத் தொடங்கிய பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இந்தியா பதிலடி கொடுத்தது.

    இதற்கிடையே, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழு ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்கள் குறித்து எடுத்துரைத்து வருகின்றனர்.

    குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருக்கும் பா.ஜ.க. எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழுவில் முன்னாள் மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் இடம்பெற்றார். அவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாததால் குவைத்தின் ராயல் ஹயாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவர் தற்போது நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

    இந்நிலையில், குலாம் நபி ஆசாத்துக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து பிரதமர் மோடி அவரது உடல்நிலை குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

    • பா.ஜ.க. எம்.பி. பைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையிலான குழு பஹ்ரைன் வந்தது.
    • அங்கு வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோருடன் அந்தக் குழுவினர் கலந்துரையாடினர்.

    மனாமா:

    பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பைஜயந்த் ஜெய் பாண்டா தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு பஹ்ரைனுக்கு வந்துள்ளது. அந்தக் குழுவினர் அங்கு வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோருடன் கலந்துரையாடினர்.

    அதன்பின், குழுவில் இடம்பெற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறியதாவது:

    பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்திற்குச் சென்று மகாத்மா காந்திக்கு மலர் அஞ்சலி செலுத்தினேன். அங்குள்ள இந்திய சமூகத்தின் பிரதிநிதிகளிடம் உரையாற்றினேன்.

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஒன்றுபட்ட மற்றும் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினேன்.

    பஹ்ரைன் ஒரு மினி இந்தியா போல இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லா மதத்தினரும் இங்கு வாழ்கின்றனர். எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.

    எங்கள் அரசியல் நோக்கத்தைப் பொறுத்தவரை நாங்கள் இந்தியாவில் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் இங்கே நாங்கள் இந்தியர்களாக வருகிறோம்.

    பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இருப்பினும், கிழக்கு பாகிஸ்தான் (வங்காளதேசம்) மற்றும் மேற்கு பாகிஸ்தான் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. ஆனால் நம் நாட்டில், அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். நாங்கள் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்கிறோம்.

    உலகம் முழுவதும் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட பாகிஸ்தானில் வாழும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என தெரிவித்தார்.

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் குலாம்நபி ஆசாத் உள்பட அதிருப்தியாளர்கள் யாருக்கும் மீண்டும் எம்.பி. ஆகும் வாய்ப்பை காங்கிரஸ் மேலிடம் வழங்கவில்லை. இதனால் சோனியா-ராகுல் மீது அதிருப்தியாளர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியில் அடிமட்டத்தில் இருந்து தலைமை வரை மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று குலாம்நபி ஆசாத் தலைமையில் பல மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் குலாம்நபி ஆசாத் உள்பட அதிருப்தியாளர்கள் யாருக்கும் மீண்டும் எம்.பி. ஆகும் வாய்ப்பை காங்கிரஸ் மேலிடம் வழங்கவில்லை. இதனால் சோனியா-ராகுல் மீது அதிருப்தியாளர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

    அதிருப்தியாளர்களில் சிலர் பா.ஜனதாவுக்கு தாவ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து குலாம்நபி ஆசாத்தை சோனியா அழைத்து பேசினார். அப்போது காங்கிரசில் தனக்கு அடுத்த இடமான 2-வது இடத்தை தருவதற்கு தயாராக இருப்பதாக சோனியா தெரிவித்தார்.

    ஆனால் இதை குலாம்நபி ஆசாத் ஏற்கவில்லை. எம்.பி. பதவி கிடைக்காத வருத்தத்தில் இருக்கும் அவர் கட்சியை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    ×