search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்சி"

    • அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும் என் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
    • தி.மு.க. தற்போது உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகமாடுகிறது.

    மதுரை

    அ.தி.மு.க மாநாட்டு வளாகத்தில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் நடைபெறும் அதி.மு.க மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களும் பொது மக்களும் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை காலையில் அ.தி.மு.க. கொடி ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

    இந்த மாநாடு இதுவரை யில் இல்லாத அளவுக்கு பிரமாண்டமான முறையில் நடத்தப்படுகிறது. மாநாட்டுக்கு வரும் கட்சித் தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க. நடத்தும் இந்த மாநாட்டை கண்டு பயந்து தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருப்பது மலை யோடு மோதுவது போன்றதாகும்.

    நீட் தேர்வு தொடர்பாக பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றிய தி.மு.க. தற்போது உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகமாடுகிறது. அடுத்து வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    குறிப்பாக பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களை பற்றி கவலைப்படுகிற ஆட்சி தி.மு.க தான்.
    • திராவிட மாடல் ஆட்சி என்றால் சமத்துவம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான புகழேந்தி தலைமை தாங்கினார்.

    முன்னதாக மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன் அனை வரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் தி.மு.க. செய்தி தொடர்பாளர் குழு தலைவர் டி.கே.எஸ்.

    இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசுகையில்:-

    தேர்வு எழுதிய மாணவனாக நாங்கள் இருக்கிறோம். 2 ஆண்டு சாதனையை உங்களிடம் சொல்லி மதிப்பெண் போடுங்கள் என காத்திருக்கிறோம்.

    தி.மு.க. 2 ஆண்டு ஆட்சியில் 204 திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    மக்களை பற்றி கவலைப்படுகிற ஆட்சி தி.மு.க தான். திராவிட மாடல் ஆட்சி என்றால் சமத்துவம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்

    இதில் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. வேதாரத்தினம், நகர்மன்ற துணை தலைவர் மங்களநாயகி, மாவட்ட கவுன்சிலர் சோழன், பொதுக்குழு உறுப்பினர்கள் பழனியப்பன், உமா செந்தா மரைச்செல்வன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு, சுற்றுச்சூழல் அமைப்பாளர் சத்தியமூர்த்தி, வக்கீல்கள் அன்பரசு, வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் அனைத்து சார்பு அணியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி டி.கே.எஸ். இளங்கோ வன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. முடிவில் திருகுமரன் நன்றி கூறினார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக 120 தொகுதிகளில் முன்னிலை பெற்று அங்கு ஆட்சியமைக்க உள்ளது. #KarnatakaElections #KarnatakaVerdict
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இந்நிலையில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி 38 மையங்களில் நடந்து வருகிறது.

    தொடக்கத்தில் இருந்து காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை பெற்று வந்தன. இதனால், அங்கு தொங்கு சட்டசபை அமையும் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது.



    பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களை தாண்டி 120 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 57 தொகுதிகளிலும், மஜத 43 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இனி பெரிய அளவில் வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் வர வாய்ப்பு இல்லை என்பதால், பாஜக ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

    அக்கட்சியின் சார்பில் முன்னள் முதல்வர் எடியூரப்பா மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #KarnatakaVerdict #KarnatakaElectionResults
    ×