search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றி"

    • தமிழ்நாட்டில் நாம் ஆண்ட கட்சியும் இல்லை... ஆளும் கட்சியும் இல்லை.
    • ஏப்ரல் 19 உன் உழைப்பை எடைபோடும் நாளாகவும், ஜூன் 4 சிங்கக்குட்டிகளின் உழைப்பின் பயனைக் கொண்டாடும் நாளாகவும் அமைய வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் ஓடோடி வந்துவிட்டது. அடுத்த வாரம் இதே நாள், இதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மக்கள் இந்தியத் தேசத்தின் எதிர் காலத்தைத் தங்களின் விரல் நுனிகளால் எழுதிக் கொண்டிருப்பார்கள்.

    தமிழ்நாட்டில் நாம் ஆண்ட கட்சியும் இல்லை... ஆளும் கட்சியும் இல்லை. அதனால் நம்மிடம் கோடிகளும் இல்லை. நம்மிடம் இருப்பவை அனைத்தும் கொடிகளும், கொள்கைகளும் தான். இவற்றை வைத்துக் கொண்டு இவர்களால் என்ன செய்து விட முடியும்? என்ற ஏளனப் பார்வையுடன் தான் தமிழகத்தின் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் நுழைந்தன. ஆனால், சிங்கத்தின் குகையில் சிறு நரிகளால் என்ன செய்து விட முடியும்? என்பதைப் போல நமது உழைப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் அக்கட்சிகள் தொலைதூரத்துக்குப் பின்னால் துவண்டு கிடக்கின்றன. நீயோ வெற்றிக் கோட்டை நெருங்கி விட்டாய்.

    2019-ம் ஆண்டில் திமுக கூட்டணி சார்பில் 38 பேர் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்றனர். ஆனால், அவர்கள் ஆறாவது விரலாகத் தான் இருந்தனர். அவர்களால் அவர்களைத் தேர்வு செய்த தொகுதிகளின் மக்களுக்கோ, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கோ எந்தவித பயனும் ஏற்படவில்லை.

    பாட்டாளி மக்கள் கட்சி காலத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட பல தொடர்வண்டித் திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப் படாமலேயே கிடக்கின்றன. கால ஓட்டத்தில் தமிழகத்திற்கான தேவைகள் அதிகரித்திருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால், தமிழகத்தின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய, செயல் படக்கூடிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பா.ம.க. 10 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வெற்றிக்கனியை பரிசாக வழங்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகவே உள்ளனர். அதே நேரத்தில் அந்தக் கனியை பறிக்க நமது உழைப்பும் மிகவும் அவசியம். இதை நான் உனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து களத்தில் எப்படி உழைக்கிறாயோ, அதே உழைப்பை இன்னும் ஒரு வாரத்திற்கு கொடு. வெற்றி நம் வசமாகிவிடும். ஏப்ரல் 19 உன் உழைப்பை எடைபோடும் நாளாகவும், ஜூன் 4 சிங்கக்குட்டிகளின் உழைப்பின் பயனைக் கொண்டாடும் நாளாகவும் அமைய வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார்.
    • பெண்கள் பிரிவில் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடை பெற்று வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 5-வது ரவுண்டு நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 87-வது நகர்த்தலுக்கு பிறகு கடும் போராட்டத்துக்கு பிறகு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு கிட்டத்தட்ட 6 மணி நேரம் தேவைப்பட்டது.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்னொரு இந்திய வீரர் விதித் குஜாராத்தி அமெரிக்காவின் பேபியானோவுடன் மோதிய போட்டியும் டிரா ஆனது.

    5 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி, குகேஷ் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 2.5 புள்ளியுடன் 4 முதல் 5-வது இடத்திலும், விதித் குஜாராத்தி 2 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது. 5 ரவுண்டு முடிவில் வைஷாலி 2.5 புள்ளிகளுடன் 3 முதல் 5-வது இடங்களிலும், ஹம்பி 2 புள்ளிகளுடன் 6 முதல் 8-வது இடங்களிலும் உள்ளனர்.

    • ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் வருமான வரி-எஸ்.டி.ஏ.டி. அணிகள் மோதின.
    • பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே 23-25, 25-19, 25-18 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பை வென்றது.

    சென்னை:

    நெல்லை நண்பர்கள் கைப்பந்து கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் மற்றும் ஏ.கே. சித்திரை பாண்டியன் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்றுமாலை தொடங்கியது.

    தொடக்க விழாவுக்கு தமழ்நாடு தடகள சங்க தலைவரும், போட்டி அமைப்புக்குழு தலைவ ருமான டபிள்யூ.ஐ.தேவாரம் தலைமை தாங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் ஆபாஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், கே.ஏ.ஜி.டெக்னாலஜிஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஜி.ரவிச்சந்திரன், ஒட்டல் லீ பேலஸ் இயக்குனர் ஏ.என். கார்த்திக், போட்டி அமைப்புக்குழு நிர்வாகிகள் பி.ஜெகதீசன், சி.ஸ்ரீகேசவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் வருமான வரி-எஸ்.டி.ஏ.டி. அணிகள் மோதின. இதில் வருமானவரி 25-17, 25-23 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. அணி 19-25, 26-24, 25-23 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்.மை போராடி வென்றது. இன்னொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி 17-25, 20-25 என்ற கணக்கில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. ஐ.ஓ.பி. அணி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தியது.

    பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே 23-25, 25-19, 25-18 என்ற கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். 2-0 என்ற கணக்கில் எஸ்.டி.ஏ.டி. அணியை வீழ்த்தியது.

    இன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு ஆட்டங்க ளில் ஜி.எஸ்.டி-டி.ஜி.வைஷ்ணவா, தமிழ்நாடு போலீஸ்-வருமானவரி, இந்தியன்வங்கி-எஸ்.ஆர்.எம்., ஐ.ஒ.பி.-எஸ்.டி.ஏ.டி. அணிகள் மோதுகின்றன.

    பெண்கள் பிரிவில் ஐ.சி.எப்.-எஸ்.ஆர்.எம்., தமிழ்நாடு போலீஸ்-டாக்டர் சிவந்தி கிளப் அணிகள் மோதுகின்றன.

    • தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • 6 சட்ட மன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி தோழமை கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    சென்னை:

    தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் முனைவர். த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, தொகுதியில் மேற்கொள்ளவிருக்கும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் மயிலை த.வேலு தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில், சைதாப் பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், தியாகராயர் நகர், மயிலாப்பூர் ஆகிய 6 சட்ட மன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி தோழமை கட்சிகளான, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சமத்துவ மக்கள் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, ஆம் ஆத்மி மற்றும் பல்வேறு தோழமைக் கட்சி களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    தொகுதியில் வீதி வீதியாக இல்லம் தோறும் சென்று வாக்குகள் சேகரித்து, திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அனைத்து பணிகளையும் செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    நிறைவாக கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிர மணியன், "தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழச்சி தங்கபாண்டியன் மிகச் சிறப்பாக பணியாற்றி உள்ளார். நாடாளுமன்றத்தில் தொகுதியின் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த பெண்களின் உரிமைக் குரலாக ஒலித்திருக்கிறார். கழகத் தோழர்கள், தோழமைக் இயக்கத் தோழர்களின் எழுச்சியை பார்க்கும் போது நமது வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குறைந்தது 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்றார்.

    • எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும்.
    • சமூக வலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் கூடாது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியின் அடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் நியாயமானதாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பாக்கிறார்கள். குறிப்பாக தேர்தல் ஆணையம் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும், பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும், அரசியல் கட்சிகளிடையே பாரபட்சம் கூடாது, சமூக வலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் கூடாது, புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல விதிமுறைகளை வெளியிட்டு அறிவித்திருப்பதால் அனைத்து தரப்பு மக்களிடமும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணில் அங்கம் வகித்துள்ள த.மா.கா.வானது கூட்டணில் உள்ள அனைத்து கட்சிகளின் வெற்றிக்காக மக்களை நேரிடையாக சந்தித்து, வாக்குறுதிகள் கொடுத்து, ஓட்டு கேட்டு, மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சியானது பிரதமர் மோடி தலைமையில் அமைய பாடுபடும். நாடு முழுவதற்குமான தேர்தல் என்பதால் வாக்களிக்கும் தகுதி உள்ளவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும் என்பதற்கு ஏதுவாக விழிப்புணர்வுடன் தேர்தல் நடைபெற வேண்டும் என த.மா.கா எதிர்பார்க்கிறது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக, மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப, எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புரோ டூர் போட்டி சென்னை நீலாங்கரையில் 3 நாட்கள் நடந்தது.
    • பெண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணி (பவித்ரா-தீபிகா) வெற்றி பெற்றது.

    சென்னை:

    மெரினா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இந்தியன் பீச் வாலிபால் (கடற்கரை கைப்பந்து) புரோ டூர் போட்டி சென்னை நீலாங்கரையில் 3 நாட்கள் நடந்தது.

    ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் கோவா அணி (ராம்-நிதின்) 21-18, 17-21, 15-9 என்ற செட் கணக்கில் மெரினா பீச் கிளப் அணியை (ராபின்-பரத்) வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. பெண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணி (பவித்ரா-தீபிகா) வெற்றி பெற்றது.

    முன்னாள் டி.ஜி.பி. எம்.ரவி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி எம்.வி.எம்.வேல்முருகன், தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார்கள். தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், அரேபியன் கார்டன்ஸ் குழும நிர்வாக இயக்குனர் கே.அப்துல் நபீல், மாநகராட்சி மண்டல சேர்மன் மதியழகன், செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் எம். அழகேசன் செயலாளர் மகேந்திரன், சேலம் மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சண்முகவேல் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்தன.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய தாரணியும் பா.ஜனதா பக்கம் போகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவோடு கூட்டணி சேரும் கட்சிகள் பற்றி இன்னும் அதிகாரப் பூர்வமாக தெரியவில்லை.

    ஆனால் பா.ஜனதா தரப்பில் வெற்றி இலக்கை எட்ட புது புது வியூகங்களை வகுத்து வருகிறார்கள். நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்தன. இந்நிலையில் அவர் டெல்லி மேல்சபை எம்.பி. யாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

    எனவே நீலகிரியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளரை களம் இறக்க திட்டமிட்டு உள்ளார்கள்.

    மற்றொரு புறத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களையும் கண்காணித்து வருகிறார்கள். அதிருப்தியில் இருப்பவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், மாற்று கட்சிகளில் இருந்தாலும் பிரதமர் மோடி என்ற வலிமையான தலைமை நாட்டுக்கு தேவை என்ற உணர்வுடன் இருப்பவர்கள், ஆகியோரை கண்காணித்து அவர்களில் பா.ஜனதாவுக்கு வர ஒத்துக் கொள்பவர்களை இணைப்பது இல்லாவிட்டால் தேர்தலில் அவர்களின் ஆதரவை பெறுவது என்ற அடிப்படையில் பணிகளை தொடங்கி உள்ளார்கள்.

    ஏற்கனவே தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் 15 பேர் சமீபத்தில் டெல்லிக்கு சென்று பா.ஜனதாவில் இணைந்தனர்.

    காங்கிரஸ் கட்சியிலும் உழைப்பவர்களுக்கு பதவிகள் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் மற்றும் கட்சியின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இன்மை ஆகிய காரணங்களால் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்களை பா.ஜனதாவுக்கு இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடக்கிறது. அந்த வரிசையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய தாரணியும் பா.ஜனதா பக்கம் போகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

    கொங்கு மண்டலத்தில் பா.ஜனதா வலிமையோடு இருப்பது போல் அ.தி.மு.க. வும் வலிமையாக இருக்கிறது. அதற்கு வலிமையான தலைவர்களாக இருப்பது எஸ்.பி.வேலுமணியும், கே.டி.தங்கமணியும் தான்.

    ஏற்கனவே பா.ஜனதா தலைவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்ட அவர்கள் இருவரையும் பா.ஜனதா வெற்றிக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். வருகிற 27-ந் தேதி பல்லடத்துக்கு வரும் பிரதமர் மோடியின் பொதுக் கூட்டத்துக்கு தேவையான உதவிகளையும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பிரபோவோ சுபியாண்டே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
    • அதிபர் தேர்தலில் பிரபோவோ 57 முதல் 59 சதவீதம் வரை வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தோனேசியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாதுகாப்பு மந்திரி பிரபோவோ சுபியாண்டோ முன்னாள் மாகாண கவர்னர்கள் அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவியது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் உடனே ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் பிரபோவோ சுபியாண்டே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.

    இந்நிலையில் அதிபர் தேர்தலில் பிரபோவோ 57 முதல் 59 சதவீதம் வரை வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதன் மூலம் அவர் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார். அதே வேளையில் தேர்தல் முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பிரபோவோ, தனது வெற்றி அனைத்து இந்தோனேசியர்களின் வெற்றியாகும் என்றார்.

    • இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர்.
    • அகதிகள் என்ற வார்த்தையை எடுத்து விட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லெம்பலக்குடியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் அவர்களுக்கென புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு புதிய குடியிருப்புகளை திறந்துவைத்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் முகாம்கள் 106 இருக்கின்றன. அந்த முகாம்களின் உள்ள 20 ஆயிரம் குடும்பங்களுக்கும் அதில் உள்ள 60 ஆயிரம் மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அகதிகள் என்ற வார்த்தையை எடுத்து விட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு.

    கடல் தான் நம்மை பிரித்துள்ளது.தமிழர் என்ற உறவு நம்மை எப்போதும் இணைத்துதான் உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசிடம் அனுப்பியுள்ளோம். முதல் கட்டமாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 200 பேரை தேர்வு செய்து இலங்கை அரசு கொடுக்கப்பட்ட குடியுரிமை மூலம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

    மீண்டும் தமிழ்நாட்டின் சார்பில் முதல் கட்டமாக வந்தவர்களுக்கு உரிமைகள் வழங்குவதற்கான குழு அமைத்து சட்டத்துறை அமைச்சர் ஆலோசனைப்படி சட்ட குழு ஒன்று அமைத்து தீர்வு காணப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்ததை முடிப்பவர். அவர் எடுக்கின்ற எல்லா முயற்சிகளும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற முயற்சிக்கு மக்கள் ஆதரவாக இருக்கின்றனர். அதேபோல் இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர்.

    எதிர்காலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமையை பெற்று தரவும். இலங்கை தமிழர்களில் உள்ள மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கும். வேளாண்மை கல்லூரியில் சேர்வதற்கும் அனுமதி வழங்கும்.

    மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு தான் சட்ட சிக்கல் இருக்கின்றது. அதை மிக விரைவில் மத்தியில் அரசியல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நீட் தேர்வு என்ற அரக்கனை அகற்றிவிட்டு அதில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விடிவுகாலம் வரும்போது நம்மோடு இருக்கின்ற இலங்கை தமிழர்களுக்கும் விடிவுகாலம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 2019-ம் ஆண்டு முதல் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது.
    • எந்த தரப்பு சார்ந்த மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதுமில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதில் பா.ஜனதா தடுமாறி போய் இருக்கிறது. அவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாகி இருக்கிறது என்பதை உணர முடிகிறது. தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்து டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த பேச்சுவார்த்தையில் விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்குபெறும். 10-க்கும் அதிகமான கட்சிகளை கொண்ட ஒரு கட்டுக்கோப்பான கூட்டணியாக இந்தியா கூட்டணி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது.

    பா.ஜனதா, அ.தி.மு.க கூட்டணி கொள்கையற்ற கூட்டணி என்பதால்தான் இடையிலேயே சிதறி போய்விட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் யார் யார் இருக்கின்றனர், பா.ஜனதா கூட்டணியில் யார் யார் இருக்கின்றனர் என உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. வழக்கம்போல பா.ம.க தன்னை தனித்து அடையாளப்படுத்தி கொண்டு எந்த கூட்டணியில் சேரப்போகிறோம் என்பதை ஒரு சூசகமாக வைத்துள்ளனர். தி.மு.க கூட்டணி வலுவாக உள்ளதுடன் தமிழக மக்களின் ஆதரவை பெற்று 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    குடியரசு தலைவர் உரையில் என்ன சொல்லப்பட்டிருந்ததோ, அதே கருத்துகள் அடங்கிய ஒன்றாகத்தான் மத்திய அரசின் பட்ஜெட் உரையும் அமைந்துள்ளது. எந்த தரப்பு சார்ந்த மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அறிவிப்புகள் ஏதுமில்லை. ஒரு வெற்று அறிக்கைபோல இந்த பட்ஜெட் அறிக்கை உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு பிறகு நேரடியாக தேர்தலை சந்திக்க இருக்கக்கூடிய நிலையில் அவர்கள் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் உள்ள இந்த பட்ஜெட் பா.ஜனதாவினருக்கே அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை அள்ள வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.
    • மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவி காலம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன.

    இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கு பொதுத் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    தேர்தல் அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆளும் பா.ஜனதா கட்சி தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. தேர்தல் பிரசாரத்துக்கான பணிகளை ஏற்கனவே அந்த கட்சி பல்வேறு மாநிலங்களில் தொடங்கிவிட்டது.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 400 முதல் 450 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் இலக்கு நிர்ணயித்து உள்ளனர். குறிப்பாக மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை அள்ள வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.

    140 தொகுதிகள் மட்டுமே பாரதிய ஜனதாவுக்கு பலவீனமானதாக கருதப்படுகிறது. அந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர். அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நாளை முடிந்த பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை பா.ஜ.க. தலைவர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

    25-ந்தேதி முதல் நாடு முழுவதும் முதல் முறை இளம் வாக்காளர்களை குறி வைத்து பிரசாரம் தொடங்கப்பட உள்ளது. பாரதிய ஜனதாவின் இந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க வேண்டும் என்பதில் எதிர்ககட்சிகளும் தயாராகி வருகின்றன. பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதற்காக 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன.

    இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த மாத இறுதிக்குள் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இந்தியா கூட்டணி தலைவர்களும் வேட்பாளர்கள் பணிகளை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் முன்பே பிரசாரத்தை தீவிரப்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர்.

    அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நாடு முழுவதும் 7 லட்சம் கிராமங்களில் பா.ஜ.க. தொண்டர்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். அப்போது பிரத மர் நரேந்திர மோடி தலை மையில் பா.ஜ.க. அரசின் நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்படும்.

    ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பிறகு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அவரவர் மாநிலங்களில் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளனர். பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் தொகுதி வாரியாக பிரசாரத்தை முன்னெடுப்பார்கள்.

    8 பாராளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார். இந்த 8 தொகுதிகளில் குறைந்த பட்சம் ஒரு தொகுதியில் பிரதமர் மோடியின் பொதுதுக் கூட்டம், வாகன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

    பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு தேசிய அளவிலான பிரசார பொறுப்பை ஏற்கும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் மூத்த தலைவர் ஒருவர் தேர்தல் பிரசார பொறுப் பாளராக நியமிக்கப்படுவார்.

    உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதர மாநிலங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பெண்கள், இளைய தலைமுறையினரை ஈர்க்க புதிய உத்திகள் வகுக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களால் விரும்பப்படும் பிரபலங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்.

    விவசாயிகள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இளைஞர்கள் நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த கையேடுகள் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படும். பிரதமர் மோடி நாடு முழுவதும் 140-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்வார்.

    இந்த தகவல்கள் டெல்லி பா.ஜ.க. வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ளன.

    • நரேந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் மலேசியாவில் ஆவண படங்களை எடுத்திருக்கும் நரேந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். சேகர் ஜி புரோடக்ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் இந்த புதிய படம் டார்க் காமெடி கதையம்சத்தில் உருவாக இருக்கிறது.


    இந்த படத்தில் சத்யராஜ், வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோடியில் ஒருவன் மற்றும் குரங்கு பொம்மை படங்களில் பணியாற்றிய ஆர்.உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.


    ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவர் முன்னதாக அசுரன், வடசென்னை மற்றும் விடுதலை போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. முழு வீச்சில் இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

    ×