search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP"

    • கேரளா அரசு முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு நாங்களே புதிய அணையை கட்டிக் கொள்வோம் என்று கூறுகிறார்கள்.
    • முல்லை பெரியாறு அணையிலும், சிலந்தி அணையிலும் நம் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

    சென்னை:

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சாவி இருக்கிறது என்ற உடனேயே தமிழர்களை திருடர்கள் என்று கூறினார்கள் என்று பொய் பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் அவர்களே....

    இன்று கேரளா அரசு முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு நாங்களே புதிய அணையை கட்டிக் கொள்வோம் என்று கூறுகிறார்கள்.... இன்று நம் விவசாயிகளின் நீர் ஆதாரமாக இருக்கும் ஒரு அணையை உங்கள் கூட்டணியைச் சார்ந்த கேரளா அரசு முழுவதுமாக களவாட நினைக்கிறது உங்களிடமிருந்து பதில் என்ன?

    முல்லை பெரியாறு அணையிலும், சிலந்தி அணையிலும் நம் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது... இப்போது மவுனமாக இருப்பது ஏன்?

    இதுதான் உங்களின் தமிழ்ப்பற்றா?

    தமிழர்கள் மீதான பற்றா?

    தமிழ்நாட்டு உரிமையை பாதுகாக்கும் நிலைமையா?

    உங்கள் மவுனம் கலையுமா?

    வழக்கம்போல் கடிதம் மட்டும் தான் எழுதுவீர்களா?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட்டு காட்டுங்கள்.
    • கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட்டி காட்டக்கூடாது.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாளான இன்று சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது செய்தியாளர்கள் அவரிடம், தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். 

    அதற்கு பதில் அளித்த சீமான், தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட்டு காட்டுங்கள். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு தனியாக நீங்கள் பெற்ற வாக்குகள் எத்தனை என்று பார்ப்போம். நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை பாஜக பெற்று இருந்தால் நான் கட்சியை கலைத்துவிட்டு போய் விடுகிறேன். யார் பெரிய கட்சி என்று தெரிந்து விடும் இல்லையா. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட்டி காட்டக்கூடாது. தனியாக நீங்கள் எவ்வளவு வாக்கு பெற்று இருக்கிறீர்கள் என்பதை காட்ட வேண்டும் என்று பாஜகவிற்கு சவால் விட்டுள்ளார்.

    • 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அ.தி.மு.க.வாகத்தான் இருந்தது.
    • தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் வெற்றி பெறும்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பா.ஜனதா நிரப்பி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்க வாக்குப்பங்கை பெற்று தென் மாநிலத்தில் 3-வது பெரிய கட்சியாக உருவெடுக்கும். அ.தி.மு.க. இந்துத்துவா சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்வதால் அதை நிரப்ப பா.ஜனதாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    2014-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அ.தி.மு.க.வாகத்தான் இருந்தது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கும், மதமாற்ற தடைச்சட்டத்தை அமல்படுத்துவதற்கும் நாட்டிலேயே முதல் அரசியல்வாதியாக நின்றார்.

    ஆனால் 2016-ம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து அ.தி.மு.க. விலகிவிட்டது. தமிழகத்தில் கோவில்களை காக்கும் ஒரு கட்சியை இந்துக்கள் தேடுகிறார்கள் என்றால் அது இயல்பாகவே பா.ஜனதாவாகத்தான் இருக்கும். ஏனென்றால் ஜெயலலிதாவிடம் இருந்து அ.தி.மு.க. வெகு தொலைவுக்கு விலகிவிட்டது.

    2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தது, ஜெயலலிதா மறைந்தது ஆகிய 2 காரணங்களால்தான் தமிழகத்தில் பா.ஜனதா பெரிய இடத்தைப் பிடித்தது என்று நான் சொல்வேன்.

    தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் வெற்றி பெறும். தெலுங்கானாவில் 17 இடங்களில் 9 இடங்களைத் தாண்டி விடுவோம். ஆந்திராவிலும் நல்ல எண்ணிக்கையில் இடம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • அகிலேஷ் யாதவ் நான்கு இடங்களில் கூட வெற்றி பெற மாட்டார்.
    • காங்கிரஸ் கட்சியால் 40 இடங்களை கூட தாண்ட முடியாது.

    மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. ஏறக்குறைய 440 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது.

    இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா பேசினார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    முதல் ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இந்தியா கூட்டணி துடைத்தெறியப்பட்டுவிட்டது. இந்த முறை காங்கிரஸ் கட்சியால் 40 இடங்களை கூட தாண்ட முடியாது என்பதை நான் உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். அகிலேஷ் யாதவ் நான்கு இடங்களில் கூட வெற்றி பெற மாட்டார்.

    லாலு பிரசாத் யாதவ் அவரது மகனை முதல்வராக்க விரும்புகிறார். உத்தவ் தாக்கரே அவரது மகனை முதல்வராக்க விரும்புகிறார். சரத் பவார் அவரது மகளை முதல்வராக்க விரும்புகிறார். ஸ்டாலின் அவரது மகனை முதல்வராக்க விரும்புகிறார்.

    மம்தா அவரது மருமகனை முதல்வராக்க விரும்புகிறார். சோனியா காந்தி அவரது மகளை முதல்வராக்க விரும்புகிறார். தனது குடும்பத்தினருக்காக வேலை செய்யும் ஒருவரால் நாட்டிற்காக பணி புரிய முடியாது.

    பாகிஸ்தான் தலைவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அவர்களுடையது எனச் சொல்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் அணுகுண்டு வைத்திருப்பதாக சொல்கிறார்கள். பா.ஜனதாவைச் சேர்ந்தவர்கள் அணுகுண்டை பார்த்து பயப்படமாட்டார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். அதை திரும்பப் பெறுவோம்.

    மக்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும், விடுமுறை சுற்றுலாவாக வெளிநாட்டிற்கு செல்ல ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் டிக்கெட் புக் செய்துள்ளனர். ராகுல் காந்தி இத்தாலி, தாய்லாந்து, பாங்காங் புறப்படுவார். நரேந்திர மோடி 23 வருடங்களாக விடுமுறை எடுத்தது கிடையாது. தீபாவளியை விடுமுறையைக் கூட எல்லையில் உள்ள வீரர்களுடன் செலவிட்டார்.

    இந்த தேர்தல் ராமர் கோவிலை கட்டியவர்களுக்கும், ராமர் பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கும் இடையிலானது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி தப்பி தவறி சென்னை வந்தால் வேட்டி கட்டிக்கொண்டு வரக்கூடாது.
    • காங்கிரஸ் லஞ்சம் பெறுகிறது என்று கூறிவந்த மோடி தற்போது லஞ்ச மோசடியில் சிக்கி உள்ளார்.

    சென்னை:

    கோவிலை இடிக்கும் எண்ணம் காங்கிரசுக்கு இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அயோத்தியில் சீதை மற்றும் அனுமனுக்கு கோவில் கட்டுவோம் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    நான் சாதாரணமாக எல்லா மனிதர்களைப் போல பிறக்கவில்லை. இயற்கை முறைப்படி நான் பிறக்கவில்லை. நேரடியாக கடவுள் மூலமாக பிறந்தேன் என்று பிரதமர் மோடி சொல்கின்றார். தேர்தல் முடியும் தருவாயில் ஆட்சியும் முடிந்துவிடும் என்பதை உணர்ந்து ஏதேதோ பேசுகிறார். தரமற்ற நிலக்கரியை தமிழ்நாட்டுக்கு கொடுத்து 6 ஆயிரம் கோடி ஊழல் மோடி செய்துள்ளார்.

    காங்கிரஸ் லஞ்சம் பெறுகிறது என்று கூறிவந்த மோடி தற்போது லஞ்ச மோசடியில் சிக்கி உள்ளார். தமிழர்களை மோடி திருடர்கள் என்று சொல்லி இருக்கிறார்.

    பிரதமர் மோடி தப்பி தவறி சென்னை வந்தால் வேட்டி கட்டிக்கொண்டு வரக்கூடாது. தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள கூடாது என்றால் பாகிஸ்தானில் பிறந்த அத்வானியை ஏன் இந்தியாவில் துணை பிரதமராக்கினார்கள்.


    பிரதமர் மோடி கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். தமிழர்களை நீங்கள் சீண்டி பார்க்க கூடாது. டெபாசிட் வாங்கும் அளவிற்கு இருந்த பா.ஜ.க கட்சி தற்போது அண்ணாமலையை தலைவராக போட்டுக்கொண்டு டெபாசிட் கூட இழக்கப் போகிறார்கள்.

    தி.மு.க, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் நாங்கள் இன்று ஒரே அணியில் இருக்கிறோம். பாசிச சக்தியை துரத்த வேண்டும், ஜனநாயகத்தை காக்கவேண்டும் என்பதால் கொள்கை அடிப்படையில் இணைந்து இருக்கிறோம். காமராஜர் கொடுத்த நல்லாட்சி போல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி கொடுத்துள்ளார் என்றார்.

    முன்னதாக, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பா.ராமசந்திரன் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கேவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர்கள் ரங்கபாஷ்யம், எஸ்.ஏ.வாசு மற்றும் ஏ.ஜி.சிதம்பரம், வி.ஆர்.சிவராமன், ஜெ.பாலமுருகன், அகரம் கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உலகில் உள்ள அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்ட இந்தியா சுமூகமான மாற்றத்தை கொண்டுள்ளது.
    • 2030-ல் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.

    மும்பை:

    இந்தியாவில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 305 இடங்களில் வெற்றி பெறும் என்று அமெரிக்காவை சேர்ந்த அரசியல் ஆலோசகரும், 'ரிஸ்க் மற்றும் ரிசர்ச் கன்சல்டிங்' நிறுவனமான யூரேசியா குழுமத்தின் நிறுவனரான இயான் ஆர்தர் பிரம்மர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலை நியாயமாகவும், வெளிப்படை தன்மையுடனும் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. சுமார் 305 இடங்களில் வெற்றி பெறும்.

    இந்த எண்ணிக்கையில் 10 தொகுதிகள் முன் பின்னாக வெற்றி அமையலாம் என்று எங்களது யூரேசியா குழு தெரிவிக்கிறது. அதாவது பா.ஜ.க. வெற்றி எண்ணிக்கை 295 முதல் 315 தொகுதிகள் வரை இருக்கும்.

    உலகில் உள்ள அனைத்து தேர்தல்களிலும் மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்ட இந்தியா சுமூகமான மாற்றத்தை கொண்டுள்ளது. அதன் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான இந்திய தேர்தல் செயல்முறை பாராட்டுக்குரியது.

    இந்தியா மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்ட நாடு. ஜப்பான், இந்தியாவுடன் வலுவான நட்புறவு வைத்துள்ளது. உலக நாடுகள் இந்தியாவை நெருங்கி வருகின்றன.

    பிரதமர் மோடியின் நிலையான சீர்திருத்தத்தின் பின்னணி, வலுவான பொருளாதார திறன் ஆகியவற்றால் 3-வது முறையாக மோடி வெற்றி பெற போகிறார். 2030-ல் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநில அந்தஸ்து கொண்டாட்டங்களுக்கு அதிக பணம் செலவழித்து, கடன் வாங்கும் முன் காங்கிரஸ் அரசு தான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதலில் செயல்படுத்த வேண்டும்.
    • தெலுங்கானாவுக்கு மாநில அந்தஸ்தை வழங்குவதற்கு பா.ஜ.க எப்போதும் ஆதரவளித்து வந்தது.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநிலம் உருவான 10-வது ஆண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு பின்னர் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்து உள்ளது. இதனால் ஆண்டு விழாவிற்கு முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்தார்.

    இது குறித்து தெலுங்கானா பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சுபாஷ் கூறியதாவது :-

    எந்த தகுதியின் அடிப்படையில் ஆண்டு விழாவிற்கு சோனியா காந்தியை அழைத்து இருக்கிறீர்கள். தெலுங்கானா மக்களால் மாநில அந்தஸ்தை அடைந்தபோது காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ் கட்சிகள் தங்களால் தான் மாநில அந்தஸ்து கிடைத்ததாக பொய் கூறுகின்றனர்.

    மாநில அந்தஸ்து கொண்டாட்டங்களுக்கு அதிக பணம் செலவழித்து, கடன் வாங்கும் முன் காங்கிரஸ் அரசு தான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முதலில் செயல்படுத்த வேண்டும். பி.ஆர்.எஸ் அரசு கடந்த காலங்களில் மாநிலத்தில் மக்கள் துயரத்தில் இருந்த போதும் கொண்டாட்டங்களுக்காக ரூ.500 கோடியை செலவழித்தது.

    தெலுங்கானாவுக்கு மாநில அந்தஸ்தை வழங்குவதற்கு பா.ஜ.க எப்போதும் ஆதரவளித்து வந்தது. மறைந்த சுஷ்மா சிவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகிய கட்சித் தலைவர்கள் இதற்கு ஆதரவு அளித்து வந்தனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சென்னை சைபர் கிரைம் போலீசார் மத்திய பிரதேசத்தில் உள்ள போலீசாருக்கும், என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
    • கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    தற்போது 6-வது கட்டத்துக்கான தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் 6-வது கட்டத்துக்கான தேர்தல் பிரசாரம் நிறைவு பெற இருக்கிறது.

    அடுத்து 7-வது கட்டத்துக்கான தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் தீவிரமாகி வருகிறது. பிரதமர் மோடி இன்று 6-வது மற்றும் 7-வது கட்ட பிரசாரத்துக்காக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்துக்கு செல்கிறார்.

    இந்த இரு மாநிலங்களிலும் 3 வாகன பேரணிகளில் பங்கேற்று அவர் பொதுக்கூட்டங்களில் பேச இருக்கிறார். இதைத் தொடர்ந்து நாளை முதல் உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தை தீவிரப்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு திடீரென கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்துக்கு போனில் பேசிய மர்ம நபர் இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளார்.

    புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகம் தென்மாநிலங்களுக்கு தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. பலத்த பாதுகாப்புடன் இந்த அலுவலகம் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் இந்த அலுவலகத்தில் காவலுக்கு இருக்கிறார்கள்.

    நேற்றிரவு 9.30 மணிக்கு அந்த அலுவலகத்துக்கு போன் வந்தது. போனில் பேசிய நபர் இந்தியில் பேசினார். தான் யார் என்பதை தெரிவிக்காத அவர் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசினார்.

    அவர் கூறுகையில், "மோடி இப்போது வட மாநிலங்களில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். அவர் பிரசாரத்துக்காக வாகன பேரணியில் வரும்போது அவரை கொலை செய்ய நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம்" என்று கூறினார். இவ்வாறு சொல்லி விட்டு அடுத்த வினாடியே அந்த மர்ம நபர் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

    பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த தகவல் வந்ததும் புரசைவாக்கம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பரபரப்பு அடைந்தனர். இதுதொடர்பாக தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் என்.ஐ.ஏ. சார்பில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரை அழைத்து இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் கீழ் இயங்கும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்று தெரியவில்லை. முதல்கட்ட விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து பேசி இருப்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

    இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் மத்திய பிரதேசத்தில் உள்ள போலீசாருக்கும், என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மத்திய பிரதேச போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் இருந்து பேசிய நபரை கண்டுபிடிக்க அவரது தொலைபேசி அழைப்பு வந்த இணைப்பை வைத்து அந்த சிக்னல் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அவர் பயன்படுத்திய சிம்கார்டு பற்றியும் தீவிர ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவரது வாகன பேரணி நாட்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் தேர்தல் பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடி மீதும் பாஜக மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார்.
    • மோடி ராகுல் காந்தியைக் குறிப்பிடும்போது இளவரசர் என்று கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.

    நாடு முழுவதும் 5கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 6 மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் தேர்தல் பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடி மீதும் பாஜக மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். பேரணியில் அவர் பேசுகையில், நான் அரசன் இல்லை, பிரதமர் மோடி தான் அரசன். நான் ஒருபோதும் அரசனாக இருக்க விரும்பவில்லை. நான் உங்களது மகன் மற்றும் சகோதரன் மட்டுமே, அரசன் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

     

    மோடி ராகுல் காந்தியைக் குறிப்பிடும்போது இளவரசர் என்று கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் மோடியை ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயிலில் உள்ள கடவுளான ஜெகநாதரே மோடியின் பக்தர்தான் என்று பாஜக பிரமுகர் பேசியது சர்ச்சையானது.

    அதுமட்டுமின்றி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் மோடி, தான் மனிதப் பிறவியே அல்ல என்றும் பரமாத்மாதான் தன்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது, பயாலஜிகளாக தான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. 

     

    • காவலர் ஆறுமுகப்பாண்டியை, இதுபோன்று துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?
    • முதலமைச்சரின் மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

    சென்னை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் ஒருவர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அரசுப்பேருந்துகளில் காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி இல்லை என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில் நடத்துனரும், போலீஸ்காரரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    இதையடுத்து போலீஸ்காரர் குறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார். அதன்பேரில் நடந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சென்னை ஆயுதப்படையில் வேலைப்பார்த்து வரும் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகபாண்டி என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில்,

    கடந்த 2021-2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், காவலர் ஆறுமுகப்பாண்டியை, இதுபோன்று துன்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

    முதலமைச்சரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

    உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்துக்காக, ஆறுமுகப்பாண்டி மீது துறை ரீதியான நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


    • நட்சத்திர பேச்சாளர்கள் தலைமையிலான பிரசாரத்தின் தரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • இதனால் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி 7வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

    தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்து வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, நட்சத்திர பேச்சாளர்கள் தலைமையிலான பிரசாரத்தின் தரம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

    இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:


    நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவை சரிசெய்வதற்கும், அக்கறையுடன் செயல்படுவதற்கும், ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் முறையான குறிப்புகளை வெளியிட வேண்டும் என அறுவுறுத்தியுள்ளது.

    மத்தியில் ஆளும் கட்சி என்ற முறையில் பா.ஜ.க. நாட்டின் சமூக கட்டமைப்பு தேர்தல் வழிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.

    இந்திய அரசியல் சாசனம் ரத்து செய்யப்பட்டு விடும், விற்பனை செய்யப்பட்டு விடும் என்பது போன்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.

    சமூகத்தை பிளவுபடுத்தும் வகையிலான கருத்துகளை தெரிவிக்கவேண்டாம் என பேச்சாளர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

    மதம், இனம் சார்ந்த பரப்புரைகளை இனி மேற்கொள்ள வேண்டாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

    • இனிவரும் காலங்களில் தமிழர்களை அவமானப்படுத்தினாலோ, தமிழ் மொழியை கொச்சைப்படுத்தி பேசினாலோ, பா.ஜ.க. தமிழகத்தில் இருக்க வாய்ப்பு இல்லை.
    • வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ உடன் தற்போது தேர்தல் ஆணையமும் இணைந்து மோடி கூட்டணியில் பணியாற்றி வருகிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவிகள் தமிழ்நாட்டிற்கு சென்று விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது தமிழர்கள் திருடர்கள் என்று மோடி பேசுகிறார். தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை மந்திரி அமித்ஷா பேசி இருக்கிறார்.

    தமிழ்நாட்டுக்கு வந்தால் திருக்குறள், இலக்கியம், இலக்கணத்தை பற்றி மோடி பேசுவார். மோடி பிரதமர் பொறுப்பில் இருப்பதை மறந்து, அநாகரீகமாக, சந்தர்ப்பவாதியாக பேசி வருகிறார். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.

    இனிவரும் காலங்களில் தமிழர்களை அவமானப்படுத்தினாலோ, தமிழ் மொழியை கொச்சைப்படுத்தி பேசினாலோ, பா.ஜ.க. தமிழகத்தில் இருக்க வாய்ப்பு இல்லை.

    ஒரு வாரத்திற்குள் தமிழ்நாட்டு மக்களிடம் மோடியும், அமித்ஷாவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால், பா.ஜ.க அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம்.

    வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ உடன் தற்போது தேர்தல் ஆணையமும் இணைந்து மோடி கூட்டணியில் பணியாற்றி வருகிறது. அதனால் தான் மோடி எதை பேசினாலும் தேர்தல் ஆணையம் அதனை கண்டு கொள்ளவில்லை. கும்பகர்ணன் போல தேர்தல் ஆணையம் தூங்கிக் கொண்டிருக்கிறது.

    பா.ஜ.க.வில் இருப்பவர்களுக்கு சூடு, சொரணை உள்ளதா ? மோடி, அமித்ஷா இருவரும் தமிழர்களை பற்றி இவ்வளவு பேசியுள்ளனர். ஒரு கண்டனத்தையாவது தமிழக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளார்களா?

    இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

    ×