என் மலர்
நீங்கள் தேடியது "அமித்ஷா"
- தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
- நயினார் நாகேந்திரன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார்.
தற்போது தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.
அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
- டெல்லியில் உள்ள இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நயினார் சந்திக்கிறார்.
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். டெல்லியில் உள்ள இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை குறித்து அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, யாத்திரையின்போது மக்களிடம் இருந்துபெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நிர்மலா சீதாராமனிடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.
யாத்திரையின்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
- அந்தமானில் வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார்.
- சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவிஜயபுரம்:
சாவர்க்கரின் புகழ்பெற்ற கவிதையான 'சாகரா ப்ராண்' எழுதப்பட்டு 116வது ஆண்டு நிறைவை ஒட்டி, உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அந்தமான் நிகோபர் தீவுக்குச் சென்றார்.
தெற்கு அந்தமானில் உள்ள பியோத்னாபாத் என்ற இடத்தில் நிறுவப்பட்ட வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார். அதன்பின், சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:
அந்தமான் நிகோபர் தீவுகள் ஒரு தீவுக்கூட்டம் அல்ல. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தவம், தியாகம், அர்ப்பணிப்பு, தேசபக்தியால் உருவான ஒரு புனித பூமி.
நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, வீர சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒருபோதும் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
அவர் தமது காலத்தில் ஹிந்து சமூகத்தில் இருந்த தீமைகளை எதிர்த்து துணிச்சலுடன் போராடினார். சமூகத்தின் எதிர்ப்பு அவருக்கு இருந்தாலும் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தார்.
வீர சாவர்க்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. பிறப்பிலே ஒரு உண்மையான தேசபக்தர்.
சுதந்திரத்துக்கு முன், அந்தமான் நிகோபர் சிறைக்கு கொண்டு வரப்பட்ட நபர், அங்கிருந்து திரும்பி வந்தாலும் அவர்களின் மனம், ஆன்மா அழிக்கப்பட்டு, ஒருபோதும் அசல் வடிவத்திற்கு திரும்ப முடியாது.
ஆனாலும், வீர சாவர்க்கர் தமது வாழ்க்கையின் கடினமான நாட்களை இங்கே கழித்ததால் இந்தியருக்கு ஒரு தீர்த்த ஸ்தலமாக மாறிவிட்டது. இந்த இடம், மற்றொரு சுதந்திர போராட்ட வீரரான நேதாஜியின் நினைவுடனும் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சாவர்க்கர் 1911-ம் ஆண்டு ஸ்ரீ விஜயபுரம் என அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.
- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார்.
வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வரும் அமித்ஷா கூட்டணி விரிவாக்கம், தேர்தல் பணிகள் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தமிழகம் வரும் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பேசியது குறித்து நயினார் நாகேந்திரன் கூற வாய்ப்பு உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- பாராளுமன்றத்தில் நடந்த ‘வந்தே மாதரம்’ விவாதம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அம்பலப்படுத்தி உள்ளது.
- மகாராஷ்டிரத்தில் தினமும் ஏதாவது ஒரு மந்திரியின் ஊழல் வெளிவருகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் எதிர்க்கட்சியினர் நோட்டீஸ் கொடுத்தனர். இதில் மகாராஷ்டிர முன்னாள் முதல்-மந்திரி தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி.க்களும் அடங்குவர்.
இது குறித்து மத்திய மந்திரி அமித்ஷா, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அதிலும் குறிப்பாக உத்தவ் சிவசேனாவை கடுமையாக தாக்கியதுடன் அவர்கள் இந்துத்வாவை கைவிட்டு விட்டதாக கூறினார்.
இதுபற்றி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, "உள்துறை மந்திரி அமித்ஷா எனக்கு இந்துத்வா பற்றி பாடம் எடுக்க வேண்டாம்" என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் நடந்த 'வந்தே மாதரம்' விவாதம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அம்பலப்படுத்தி உள்ளது. நமது சொந்த நாட்டின் தேசிய கீதம் குறித்து எப்படி விவாதம் நடத்த முடியும். 'வந்தே மாதரம்' 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் ஏன் 'வந்தே மாதர'த்தை நினைவுகூருகிறார்கள். பா.ஜ.க.வுக்கு 'வந்தே மாதரம்' மீதான காதல் ஒருநாள் மட்டும்தான்.
மகாராஷ்டிரத்தில் தினமும் ஏதாவது ஒரு மந்திரியின் ஊழல் வெளிவருகிறது. ஆளும் கட்சி தலைவர்கள் பணக்கட்டுகளுடன் இருக்கும் வீடியோக்கள் வெளியாகிறது. இருப்பினும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. ஊழல் மந்திரிகளை பாதுகாக்கும் ஒரு "கவச பாதுகாப்பு" இலாகாவை முதல்-மந்திரி தொடங்கி அதற்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
- எனக்கு எந்த பதிலும் வரவில்லை என்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் நேற்று பேசும் போது அமித்ஷாவின் கைகள் நடுங்கியதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நேற்று அமித்ஷா மிகவும் பதட்டமாக இருந்தார். அவர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவரது கைகள் நடுங்கின. அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார். இவை அனைத்தையும் நேற்று அனைவரும் பார்த்தனர்.
நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை. அவர் எந்த ஆதாரங்களையும் அளிக்கவில்லை. களத்துக்கு வாருங்கள், எனது அனைத்து செய்தியாளர்கள் சந்திப்பு பற்றியும் பாராளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று நான் அவருக்கு நேரடியாக சவால் விடுத்தேன். ஆனால், எனக்கு எந்த பதிலும் வரவில்லை என்றார்.
- நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 120 எம்பிக்கள் கையெழுத்து
- வாக்கு வங்கிகளை காப்பாற்றி கொள்வதற்காகவே இந்த செயல்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. மற்றும் பல அரசியல் விமர்சகர்களும் இந்த கருத்தை முன்வைத்தன.
இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன், சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் 'இம்பீச்மெண்ட்' செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் சொன்னவாறே இந்தியா கூட்டணி தலைவர்கள் நேற்று, ஜி.ஆர். சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனக்கூறி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதத்தை அளித்தனர். அதில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 120 எம்பிக்கள் கையொமிட்டிருந்தனர்.
இந்நிலையில் நீதிபதி சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசிய அமித்ஷா, நீதிபதிக்கு எதிரான இந்த தீர்மானம் அர்த்தமற்றது என்றும், தங்களது வாக்கு வங்கிகளை காப்பாற்றி கொள்வதற்காக எதிர்க்கட்சியினர் இவ்வாறு செய்வதாக தெரிவித்தார். இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவையில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தனது உரையை நிகழ்த்தி வருகிறார்.
- நாடாளுமன்றம் மிகப்பெரிய பஞ்சாயத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
- நாடாளுமன்ற விதிகளின்படி நாங்கள் எப்போதும் விவாதங்களுக்குத் தயாராக இருக்கிறோம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவர திருத்தம் தொடர்பாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அமித் ஷா மேலும் கூறியதாவது:-
இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகளிடம் இதைப் பற்றி இரண்டு அமர்வுகளுக்குப் பிறகு விவாதிக்க வேண்டும் என்று சொன்னோம். ஆனால் அவர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் ஒப்புக்கொண்டோம்... ஏன் 'இல்லை' என்று சொன்னோம்? 'இல்லை' என்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
ஒன்று, அவர்கள் SIR பற்றிய விவாதத்தை விரும்பினர். இந்த சபையில் SIR பற்றிய விவாதம் இருக்க முடியாது என்பதை நான் தெளிவாக அறிவேன். SIR தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு.
இந்தியாவின் EC மற்றும் CEC அரசாங்கத்தின் கீழ் செயல்படவில்லை. விவாதம் நடத்தப்பட்டு கேள்விகள் எழுப்பப்பட்டால், அதற்கு யார் பதிலளிப்பார்கள்? தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் சொன்னபோது, உடனடியாக ஒப்புக்கொண்டோம்.
இந்த விஷயத்தில் விவாதம் தொடர்பாக முதல் இரண்டு நாட்களுக்கு ஒரு தடை ஏற்பட்டது. இது மக்களுக்கு இதைப் பற்றி விவாதிக்க நாங்கள் விரும்பவில்லை என்ற தவறான தகவல் பரவியது. இந்த நாட்டில் விவாதங்களுக்கு நாடாளுமன்றம் மிகப்பெரிய பஞ்சாயத்து என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பாஜக- தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபோதும் விவாதங்களிலிருந்து விலகிச் செல்லாது. எந்த விஷயமாக இருந்தாலும், நாடாளுமன்ற விதிகளின்படி நாங்கள் எப்போதும் விவாதங்களுக்குத் தயாராக இருக்கிறோம்.
இந்திய வாக்காளர் மட்டுமே இந்தியாவில் வாக்களிக்க வேண்டும் என்பதை எஸ்ஐஆர் உறுதி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து எடுத்துரைத்தேன்.
- தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த பின்னர் செங்கோட்டையனுடன் பேசவில்லை.
சென்னை:
மறைந்த ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* தனிக்கட்சியை தொடங்க இருப்பதாக நான் எங்கேயும் எந்த சூழலிலும் சொல்லவில்லை.
* டெல்லிக்கு சென்று மரியாதை நிமித்தமாகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன்.
* பிரிந்து இருப்பவர்கள் ஒன்றுபட வேண்டும் என நோக்கத்தில் தான் அமித்ஷாவை சந்தித்தேன்.
* பிரிந்து இருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுபட வேண்டும் என அமித்ஷாவிடம் கூறினேன்.
* மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து எடுத்துரைத்தேன்.
* தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த பின்னர் செங்கோட்டையனுடன் பேசவில்லை என்றார்.
- ஒரு பக்கம் நடிகர் விஜய் மூலம் திமுக எதிர்ப்பை வலுப்படுத்துவதும் மறுபக்கம் அதிமுகவையே பலவீனப்படுத்துவதும் தான் பாஜகவின் சதி உத்தி.
- தேர்தலுக்குள்ளாகவே எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுவார்.
சென்னை :
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எச்சரிக்கை
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் நடிகர் விஜய் தலைமையில் த.வெ.க.வில் இணைவதற்கு பின்னால் பாஜக தான் இருக்க வேண்டும். ஏனென்றால்,
அதிமுகவிலிருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டவுடனே தில்லிக்கு பறந்து அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன்.
"அமித்ஷாவை சந்தித்து அடுத்து என்ன செய்யலாம்" என ஆலோசனை கேட்கத்தான் வந்ததாக வெளிப்படையாக சொன்னார். இப்போது, தவெகவில் இணைவதும் அமித்ஷாவின் ஆலோசனை தானா என்னும் அய்யம் எழுகிறது.
எடப்பாடி பழனிசாமி அவர்களை தடுமாற வைத்து, பாதிக்கு பாதி தொகுதிகளை பெறுவது தான் பாஜகவின் உத்தி. (பீகார் போல)
ஒரு பக்கம் நடிகர் விஜய் மூலம் திமுக எதிர்ப்பை வலுப்படுத்துவதும் மறுபக்கம் அதிமுகவையே பலவீனப்படுத்துவதும் தான் பாஜகவின் சதி உத்தி.
தேர்தலுக்குள்ளாகவே எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுவார். அதற்கு பின் பாஜக முழுமையாக
அதிமுகவை கையகப்படுத்தும். அதற்கான உத்திகளை பாஜக தொடங்கி விட்டது.
நடிகர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நடிகர் விஜய்யை ஏற்றுக்கொள்வதில் எந்த மனத்தடையும் இருக்காது என்பதையே செங்கோட்டையன் தவெகவில் இணைவதை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
- கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்தது.
- தானே முதல்வராக தொடருவேன் என சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.
தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பல முறை இந்த அதிருப்தி வெளிப்பட்ட வண்ணம் இருந்தது. தனது ஆதரவாளர்களை டிகே சிவகுமார் கண்டிக்கும் அளவுக்கு இது சென்றது.
இதற்கிடையே அண்மையில் "கர்நாடக காங்கிரசில் நிரந்தராக நீடிக்க முடியாது" என பேசிய டிகே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தொனியில் காய் நகர்த்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அமித்ஷாவுடன் டிகே சிவகுமார் தொடர்பில் இருப்பதாக பரவிய தகவல் கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அமித்ஷாவுடன் தாம் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் புகாரை டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக மறுத்தார். இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் அரசியலை விட்டு விலகத் தயார் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
- வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்பது நாட்டையும் நமது ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு செயல்முறை ஆகும்.
- நக்சலைட் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் மாநிலம் ஹரிபரில் நடந்த எல்லை பாதுகாப்பு படையின் 61-வது எழுச்சி தின விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியாவின் எல்லை மற்றும் பாதுகாப்புப் படைகள் சமரசம் செய்யாது என்பதை முழு உலகிற்கும் தெளிவாகியது. ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம், பயிற்சி முகாம்கள் மற்றும் ஏவு தளங்களை நமது ராணுவம் அழித்தது.
துரதிருஷ்டவசமாக, சில அரசியல் கட்சிகள் ஊடுருவல்காரர்களை பாதுகாக்க முயற்சித்து வருகின்றன. ஊடுருவல்காரர்களை அகற்றும் பணியை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன.
இந்த அரசியல் கட்சிகள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு ஆகியவற்றை எதிர்க்கின்றன.
ஊடுருவல்காரர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நமது நாட்டில் இருந்து அனைத்து ஊடுருவல்காரர்களையும் நாங்கள் அகற்றுவோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது எங்களது உறுதிமொழி ஆகும்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்பது நாட்டையும் நமது ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு செயல்முறை ஆகும்.
தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை முழுமையாக ஆதரிக்குமாறு நாட்டு மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஊடுருவல்காரர்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு பீகார் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கை ஆகும்.
நக்சலைட் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர். நாட்டை நக்சலைட் பாதிப்பில் இருந்து 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் விடுவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.






