என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துக்ளக்"

    • பா.ஜ.க. நம்பர் 2 கட்சியாகவும், சிவசேனா நம்பர் 1 கட்சியாகவும் இருந்தது.
    • அண்ணாமலை என்னுடைய ஃப்ரண்ட். அவர்கிட்டயும் நான் பேசிக்கொண்டு தான் இருக்கேன்.

    பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றியது தொடர்பாக யூகங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. மேலிடம் விளக்கம் அளிக்காமல் உள்ளனர். இந்த நிலையில், அண்ணாமலை மாற்றப்பட்டு அரசியல் யுக்தி என்று ஆடிட்டர் குரூமூர்த்தி பேசியுள்ளார்.

    'துக்ளக்' நாளிதழின் 56-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:-

    அண்ணாமலை பொறுத்தவரை அது பா.ஜ.க.வின் முடிவு. அண்ணாமலையும், பா.ஜ.க.வும் சேர்ந்து தான் முடிவு எடுத்துள்ளார்களே தவிர அண்ணாமலையை கலக்காமல் எதையும் எடுக்கலை. காரணம் என்னவென்றால் பா.ஜ.க.வால் மட்டும் தனியாக தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என்கிற நிலைமை இருப்பதினால்.

    எடப்பாடி எந்த விஷயத்திலும் பா.ஜ.க.வோடு நெருங்ககூடாது என்று 2024-ல் அவர் எடுத்த முடிவை அவர் மாற்றிக்கொண்டு பா.ஜ.க. ஒத்துழைக்க வந்திருப்பதானால் தான் இன்னிக்கு தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலில் எதார்த்தம் என்று ஒன்று இருக்கிறது. எல்லாமே ஐடிலிசம் கிடையாது. பா.ஜ.க. தனியாக நின்று 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எழுச்சி பெற்று வெற்றி பெறும் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? 10 ஆண்டு தி.மு.க. இருக்கும் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? ஏற்றுக்கொள்ள முடியாது.

    தி.மு.க. போயே ஆக வேண்டும் என்றால் அதற்கு உண்டான யுக்திகளை தயார்படுத்த வேண்டும். அமித்ஷாவை விட இதைப்பற்றி விஷயம் தெரிந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. 2014-ல் மகாராஷ்டிரா தேர்தலின் போது உத்தவ் தாக்கரே என்கிட்ட போன் செய்து கேட்கிறார். அமித்ஷா எங்க இருக்காரு சார் என்னால பார்க்கவே முடியலை சார் என்று. அப்போ மாட்டுங்காவில் ஒரு சின்ன வீட்டில் இருந்தார் அந்த சமயத்தில். அங்கிருந்து தான் யுக்திகளை கையாண்டு பா.ஜ.க. நம்பர் 2 கட்சியாகவும், சிவசேனா நம்பர் 1 கட்சியாகவும் இருந்தது. அதனை அப்படியே மாத்தினார் அமித்ஷா. இன்றைக்கு பா.ஜ.க. மகாராஷ்டிராவை கைப்பற்றி இருக்கிறது என்றால் அன்னிக்கு அவர் எடுத்த யுக்தி. அதனால் அவருக்கு தெரியும். சில பேருக்கு அந்த அஸ்ட்ராலானி என்று கூறுவார்கள். அதாவது எல்லாவிதமான திறமையும் இருக்கும். அந்த மாதிரி திறமை உள்ளவர். தமிழ்நாட்டை கையில் எடுத்து இருக்கார். நம்பிக்கையுடன் இருங்கள். அண்ணாமலையும் அவருக்கு ஒத்துழைப்பார். அண்ணாமலை என்னுடைய ஃப்ரண்ட். அவர்கிட்டயும் நான் பேசிக்கொண்டு தான் இருக்கேன். அதனால அண்ணாமலைக்கு எதிராக ஏதோ ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக நினைத்துக்கொண்டு பேசுவது தவறு என்று கூறினார். 

    விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தின் போது விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் இயக்குநர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். #96TheMovie #VijaySethupathi
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் வெளியிட்ட ‘96’ படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

    இதில் விஜய் சேதுபதி, திரிஷா, இயக்குநர் பிரேம் குமார், கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணிதரன், பி.எஸ்.மித்ரன், லெனின் பாரதி மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


    துக்ளக் படத்தை இயக்கும் டெல்லி பிரசாத்

    இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, 

    `இந்த படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘துக்ளக்’ என்ற படத்தில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் நடிக்கிறேன்.' என்றார்.



    இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, விஜய் சேதுபதியும், திரிஷாவும் ஒருவரையொருவர் ஆரத்தழுவியது வருகைத் தந்திருந்த அனைவரையும் கவர்ந்தது. #96TheMovie #96TheFilm #100thDayCelebrationOf96 #VijaySethupathi #Trisha #Thuglak

    விஜய்  சேதுபதி பேசிய வீடியோவை பார்க்க:

    ×