search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#கைது"

    • சந்திரசேகரனின் செல்போன் எண் சிக்னல் மூலம் போலீசார் தேடிவந்தனர்.
    • தென்காசி போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவராக சந்திரசேகரன் இருந்து வருகிறார். தற்போது தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பகுதியிலுள்ள திருநகரில் வசித்து வருகிறார்.

    இவரது வீட்டிற்குள் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்ததாகவும், அப்பொழுது அவரது மனைவி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை பிடிக்க முயற்சி செய்தபோது ஆத்திரத்தில் அவர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் சந்திரசேகரை வெட்டி விட்டு சென்று விட்டதாகவும் புகார் ஒன்றை தென்காசி போலீஸ் நிலையத்தில் அளித்திருந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கிய போது, கொள்ளை அடிக்க வந்ததாக கூறப்படும் நபர்கள் சந்திரசேகரின் செல்போனை எடுத்து சென்றதும், அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஒரு கைப்பையை அங்கே விட்டு சென்றதும் தெரியவந்தது.

    அதனைத்தொடர்ந்து அவர்கள் விட்டு சென்ற கைப்பையை எடுத்து போலீசார் சோதனை செய்த போது, அவர்கள் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என சந்திரசேகரனின் செல்போன் எண் சிக்னல் மூலம் போலீசார் தேடிவந்தனர்.

    அந்த செல்போன் எண்ணின் சிக்னல் மூலம் அவர்கள் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களை பின் தொடர்ந்து சென்ற தென்காசி போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் கூலிப்படை போல் செயல்பட்டதும், அவர்களை தென்காசி பகுதியை சேர்ந்த 2 பேர் இதுபோல் செய்ய சொன்னதாகவும் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தென்காசி பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற இளநீர் கண்ணன் மற்றும் சக்திமாரி ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் தி.மு.க. ஊராட்சி தலைவரான சந்திரசேகரனிடம், அவர் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசுவது போன்று ஆடியோ இருப்பதாகவும், செல்போன் செயலி மூலம் எடுக்கப்பட்ட வீடியோ உள்ளதாக கூறி சந்திரசேகரனை பணம் கேட்டு மிரட்ட முடிவு செய்து, அதன்படி, கோயம்புத்தூர் கும்பலை இங்கு வந்து வீடியோ மற்றும் ஆடியோக்கள் உள்ளதாக கூறி சந்திரசேகரனை மிரட்டி உள்ளனர்.

    அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரச்சினை ஏற்படவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரியவந்தது.

    அதனை தொடர்ந்து சந்திரசேகரனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக சக்திமாரி (வயது 47), ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (22), தேனி பகுதியை சேர்ந்த ரிஸ்வான் (22), திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மதன்குமார் (20) கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த போத்திராஜ் (30), கோவை பகுதியை சேர்ந்த அருள் ஆகாஷ் (34) மற்றும் முக்கிய குற்றவாளியான தென்காசி பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற இளநீர் கண்ணன் (40) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ருக்மணிபாளையத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக பால சுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் இலவசமாக மதுபானம் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அந்த விற்பனையாளர் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து விற்பனையாளர் பாலசுப்ரமணியனின் தலையில் தாக்கியுள்ளனர்.

    அதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் பீரிட்டு வெளி வந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் பாலசுப்ரமணியனை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மேலும், இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டதாக மன்னார்குடி அடுத்த சொக்கனானவூர் கிராமத்தை சேர்ந்த அருள்முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நெடுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த திவ்யராஜ், அதே பகுதியை சேர்ந்த அஜித் மற்றும் சொக்கனானவூர் கிராமத்தை சேர்ந்த சரத் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு.
    • பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ சஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

    சவுக்கு சங்கர் உடனிருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகியோரிடம் பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிந்து முகமதுசு கைலை கைது செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது பயாஸ் (வயது40). வெளிநாடுகளுக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரை கும்பகோணம் சோழபுரத்தை சேர்ந்த முகமது சுகைல் (32) என்பவர், தான் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பை தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் எடுத்துள்ளதாக கூறி அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

    இந்த தொழிலில் முதலீடு செய்தால் ஒரு லட்சம் பொங்கல் பரிசு தொகுப்பு பைகளுக்கு ரூ.22 லட்சம் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

    இதனை நம்பிய முகமது சுகைல் முதல் கட்டமாக ரூ.50 லட்சமும், அடுத்த கட்டமாக ரூ. 25 லட்சமும் கொடுத்துள்ளார். இதில் அவர் கொடுத்த தொகைக்கு வட்டியாக ரூ.19 லட்சத்தை முகமது சுகைல் வழங்கி உள்ளார்.

    அதிக வட்டி தருவதாக கூறி அதில் இருந்தும் ரூ.10 லட்சத்தை கூடுதல் முதலீடாக பெற்றுக்கொண்டுள்ளார்.

    நாளடைவில் முகமது சுகைல் வட்டியும் கொடுக்க வில்லை. பணமும் கொடுக்கவில்லை. இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. அப்போது, ரூ.5 கோடிக்கு ஏலச்சீட்டு போட்டுள்ளதாகவும். அதற்கு தவணை தொகை செலுத்த ரூ.50 லட்சம் கிடைத்தால் அந்த சீட்டை எடுத்து, கடன்களை அடைத்துவிடுவதாக முகமது சுகைல் கூறியுள்ளார். இதையும் நம்பி ரூ.௫௦ லட்சத்தை முகமது பயாஸ் கொடுத்துள்ளார்.

    அதன் பிறகு கொடுத்த பணம் ரூ.1.35 கோடியை திரும்பிக்கேட்ட முகமது பயாஸுக்கு, முகமது சுகைல் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்நிலையில் எஸ்பி அலுவல கத்தில் முகமது பயாஸ் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்த போது, தற்காலிகமாக ரூ.10 லட்சத்தை கொடுத்து விட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக எஸ்பி அலுவலகத்தில் முகமது பயாஸ் மீண்டும் ஒரு புகார் அளித்தார்.

    இந்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், முகமது சுகைலையை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வாங்கிய தொகைகளை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து முகமதுசு கைலை கைது செய்தனர்.

    இது தொடர்பாக அவரிடம் தொடர் விசாரணைக்கு பின்னர் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • வெண்டிலேட்டர் வழியாக செல்போன் காமிரா வீடியோ பதிவு.
    • 2 செல்போன், லேப்டாப் பறிமுதல்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் ஆயுர்வேத மற்றும் சித்தா சிகிச்சை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண், பெண்களுக்கு மசாஜ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் ஒருவர் அங்கு மசாஜ் செய்வதற்காக வந்தார். அவருக்கு அங்கு பணியமர்த்தப்பட்ட பெண் ஒருவர் மசாஜ் சிகிச்சை அளித்தார்.

    அந்த அறையில் உள்ள வெண்டிலேட்டர் வழியாக செல்போன் காமிரா மூலமாக வீடியோ பதிவு செய்யப்பட்டதை பார்த்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இது தொடர்பாக அவர் உறவினர்களுக்கும், வடசேரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

    அவர்கள் அந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பணிபுரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது பெண்ணின் வீடியோ காட்சிகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் முன்னிலையிலேயே பெண்ணின் உறவி னர்கள் சரமாரியாக தாக்கினர். பின்பு அவரை போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

    அவர் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்திருக்கிறார். இதையடுத்து அவரது 2 செல்போன்கள் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆய்வு செய்தனர்.

    அவரது லேப்டாப்பில் மேலும் சில பெண்களின் கிளு கிளு வீடியோ காட்சிகள் இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை வந்தவர்களா? வேறு ஏதாவது பெண்களின் வீடியோ காட்சிகளா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • செல்போன் செயலி மூலம் மோசடி.
    • உடந்தையாக இருந்த மேலும் ஒருவர் கைது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் செல்போன் செயலி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக அவரிடம் கூறினார். மேலும் இதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்கி வருமான வரி செலுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காக கோவில்பட்டி வாலிபரிடம் பணம் கேட்டுள்ளார்.

    இதை நம்பிய அவர் ரூ.4 லட்சத்து 88 ஆயிரத்து 159-ஐ ஜி.பே மூலம் கொடுத்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி. உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் மோசடியில் ஈடுபட்டது தஞ்சாவூர் ரெட்டி பாளையம் ரோடு ஆனந்தம் நகரை சேர்ந்த ராஜவேல் (வயது 31) என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை தூத்துக்குடி போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

    அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், இவருக்கு உடந்தையாக கர்நாடக மாநிலம் பெங்களூரு சிங்கசந்தரா பகுதியை சேர்ந்த கணேசன் (31) என்பரும் இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.

    • பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்.
    • கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கேசர்குளி சாலை கிராமத்தை சேர்ந்தவர் விஜயரங்கன். இவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், தீர்த்தகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். இவரும், இவரது மனைவி புனிதாவும் சேர்ந்து தனியார் பைனான்ஸ் இன்வெஸ்ட்மென்ட் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.

    அதில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அதில் முதலீடு செய்தால் அதிகலாபம் கிடைக்கும் என்று ஆசைவார்ததை கூறினர். அதனை நம்பி, 3.10.2015-ம் தேதி வங்கி மூலம் ரூ.2 லட்சமும் , பணமாக ரூ.2 லட்சமும் என ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தேன்.

    மேலும் இரண்டு ஏலச்சீட்டில் சேர்ந்து அதன் மூலம் பணத்தை கட்டி வந்ததாகவும், இவ்வாறாக டெபாசிட் செய்த தொகை மற்றும் ஏலச்சீட்டில் கட்டிய தொகை என மொத்தம் ரூ.13 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்தனர்.

    இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இவ்வழக்கானது விசாரணைக்காக சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் இருந்து தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாறுதல் செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    விசாரணையில் சாம்ராஜ் ரூ.36 லட்சத்து 83 ஆயிரத்து 40 பணத்தை 4 நபர்களிடமிருந்து டெபாசிட் மற்றும் ஏலச்சீட்டுக்காக பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.

    இவ்வழக்கில் சாம்ராஜ் என்பவரை தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்த நிலையில் 25.03.2024 -ம் தேதி அவரை கைது செய்து கோவை முதலீட்டாளர்கள் நலன் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.

    எனவே தனியார் பைனான்ஸ் - இன்வெஸ்மெண்ட் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தில் டெபாசிட் மற்றும் ஏலச்சீட்டில் பணம் முதலீடு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கற்பகம், தெரிவித்துள்ளார்.

    • மனு கொடுப்பதற்காக கஞ்சா பொட்டலத்துடன் பா.ஜ.க. ஓ.பி.சி. அணி மாநில செயற் குழு உறுப்பினர் சங்கர் பாண்டி வந்திருந்தார்.
    • போலீசார் அவரிமிருந்த மனுவை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.

    மதுரை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்க கொடைக்கானல் செல்வதற்காக நேற்று காலை மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மனு கொடுப்பதற்காக கஞ்சா பொட்டலத்துடன் பா.ஜ.க. ஓ.பி.சி. அணி மாநில செயற் குழு உறுப்பினர் சங்கர் பாண்டி வந்திருந்தார்.

    விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, போலீசார் அவரிமிருந்த மனுவை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.

    இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பிலிருந்த போலீசாரை ஆபாசமாக திட்டியது, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது, வெடிகுண்டு வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியது, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது என்பது உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் பணி புரியும் மாதவன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க. நிர்வாகி சங்கர் பாண்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • உடனடியாக பணம் கொண்டு வந்த 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • வாலிபர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வாலிபர்களை கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து நெல்லூருக்கு வந்தே பாரத் ரெயில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் பெட்டிகளில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    2 வாலிபர்கள் வைத்திருந்த சூட்கேஸை போலீசார் சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. உடனடியாக பணம் கொண்டு வந்த 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பணத்தை எண்ணிப் பார்த்ததில் ரூ.50 லட்சம் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் ஆந்திர மாநிலம் ஆத்மகூரு சட்டமன்றத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ. வேட்பாளராக போட்டியிடும் மேகவதி விக்ரம் ரெட்டிக்கு சொந்தமான பணம் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். வருமானவரித்துறை அதிகாரிகள் போலீஸ் நிலையத்திற்கு வந்து ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    வாலிபர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோல்பி ட்ரிக்கிள் தெரிவித்தார். போலீசாரும் இது தற்கொலை தான் என வழக்கை முடித்துவிட்டனர்.
    • போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கிறிஸ்டின் டரிக்கிள் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் கோல்பி டிரிக்கிளிடம் விசாரித்த போது உண்மை வெளிவந்தது.

    கன்சாஸ்:

    அமெரிக்கா கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கோல்பி ட்ரிக்கிள் (வயது 30). இவரது மனைவி கிறிஸ்டன் டிரிக்கிள் (26) கடந்த 2019-ம் ஆண்டு இவர் ஹோஸ்ட் கன்சாவில் உள்ள வீட்டில் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோல்பி ட்ரிக்கிள் தெரிவித்தார். போலீசாரும் இது தற்கொலை தான் என வழக்கை முடித்துவிட்டனர்.

    மனைவி பெயரில் 2 ஆயுள் காப்பீடுகள் இருந்தது. அதன் மூலம் கோல்பிக்கு 1.20 லட்சம் டாலர் ( சுமார் ரூ.1 கோடி ) இன்சூரன்சு தொகை கிடைத்தது. அதனை அவர் ஜாலியாக செலவழித்தார்.

    வீடியோ கேம்களுக்காக ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவழித்தார். கடன்களை அடைத்தார். தான் பெரிய இசை கலைஞராக வேண்டும் என்ற ஆசையில் இசைக்கருவி–கள் வாங்கி குவித்தார். இதோடு மட்டும் நின்று விடாமல் ரூ1.66 லட்சம் மதிப்பிலான செக்ஸ் பொம்மை வாங்கினார்.

    இது தனக்கு ஆறுதலாகவும், அரவணைப்பாகவும் உள்ளதாக அவர் கருதினார். இது தொடர்பாக அவரது தாயார் கூறும் போது தனது மகன், மனைவி இறந்த பிறகு சரியாக தூங்குவது இல்லை. இதனால் செக்ஸ் பொம்மையினை வாங்கினார். ஆனால் அதனுடன் செக்ஸ் உறவு எதுவும் வைக்கவில்லை என்று கூறினார்.

    இந்த சூழ்நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கிறிஸ்டின் டரிக்கிள் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் கோல்பி டிரிக்கிளிடம் விசாரித்த போது உண்மை வெளிவந்தது.

    மனைவியை கொன்று தற்கொலை செய்ததாக நாடகமாடி இன்சூரன்சு மூலம் கிடைத்த பணத்தில் செக்ஸ் பொம்மை உள்ளிட்ட பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கில் போலீசார் கோல்பி டிரிக்கிளை கைது செய்தனர்.

    • சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
    • தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 5-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஐ.எம்.ஓ. என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற முகவரியில் இருந்து தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார்.

    அவர், மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க, வருமானவரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டு உள்ளார்.

    அதனை நம்பிய இளைஞர் ரூ. 4 லட்சம் 88 ஆயிரத்து 159 பணத்தை 'ஜிபே' மூலம் அனுப்பி உள்ளார்.

    பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த இளைஞர் இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் தஞ்சாவூர் ரெட்டி பாளையம் ரோடு, ஆனந்தம் நகர் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (வயது31) என்பவர், பாதிக்கப்பட்ட இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று ராஜவேலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி அழைத்து வந்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 5-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீ சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகள் வங்கி முன் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
    • திருச்செங்கோடு துணைப்பதிவாளர் பி.கிருஷ்ணன் முறை கேடுகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில் 2700-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் அனைவரும் விவசாயிகளாக உள்ள நிலையில் வங்கியில் வரவு செலவு வைத்து தங்களது பணத்தை டெபாசிட் செய்தும் வைத்துள்ளனர்.

    அவ்வாறு வைத்திருந்த பணத்தை அவர்களது கவனத்திற்கு வராமலேயே வங்கியில் வேலை செய்த எழுத்தர் சி.பெரியசாமி என்பவரும், வங்கி செயலாளர் அ.பெரியசாமி என்பவரும் மோசடி செய்து சுமார் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தெரிய வந்தது. இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகள் வங்கி முன் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

    அப்போது அவர்களை சமாதானப்படுத்திய கூட்டுறவு துறை அதிகாரிகள் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து அவரவர் கணக்குகளில் எவ்வளவு மோசடி நடைபெற்றிருக்கிறது என்று கணக்கெடுத்து உரிய தொகையை பெரிய சாமியின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்தனர்.

    அதன் அடிப்படையில் பொதுமக்கள் அமைதியாக இருந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மீண்டும் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 21-ந் தேதி வங்கியை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தங்களது பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்த தகவல் அறிந்த சரக கூட்டுறவு பதிவாளர் கிருஷ்ணன் வங்கிக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில் பொதுமக்களின புகாரின் பேரில் விசாரனை செய்த கூட்டுறவு துறை அதிகாரிகள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சரகம் எளச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சேமிப்பு கணக்கு பயிர்க்கடன், நகைக்கடன், மத்தியகாலக் கடன், மாற்றுத்திறனாளி கடன், இட்டுவைப்பு கடன், உரம் மற்றும் உறுப்பினரிடம் தொகை வசூலித்து சங்கத்தில் வரவு வைக்காதது உள்ளிட்ட இனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 644 அளவிற்கு முறைகேடுகள் கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு அறிவுரையின் படி திருச்செங்கோடு துணைப்பதிவாளர் பி.கிருஷ்ணன் முறை கேடுகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார்.

    இதனைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட சங்கச் செயலாளர் அ.பெரியசாமி மற்றும் எழுத்தர் சி.பெரியசாமி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    ×