search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாச வீடியோ"

    • பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • பாஜக எம்.பி உபேந்திர சிங் ரவாத், வெளியான ஆபாச வீடியோ போலியானது என்று புகார் அளித்துள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி தொகுதி பாஜக எம்.பி., உபேந்திர சிங் ராவத், மீண்டும் அதே தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தான் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

    வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் உடன் உபேந்திர சிங் ராவத் இருக்கும் ஆபாச வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சித் தலைமை அறிவுறுத்தலால் அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார் எனக் கூறப்படுகிறது

    ஆனாலும், பாஜக எம்.பி உபேந்திர சிங் ராவத், அந்த ஆபாச வீடியோ போலியானது என்று புகார் அளித்துள்ளார். எனது நற்பெயரை கெடுக்கும் எண்ணத்தில் DeepFake AI தொழில்நுட்பத்தால் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக தனது புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

    அதே சமயம், நேற்று மேற்குவங்கம் மாநிலம் அசன்சோல் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்ட பவான் சிங், தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்தார்.

    பவான் சிங், பெங்காலி பெண்களை ஆபாசமாக சித்தரித்து பாடல்களில் நடித்துள்ளார் என்ற சர்ச்சை எழுந்த நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, முதற்கட்ட பட்டியலில், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    • மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது.
    • தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராக உள்ள விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

    போலி ஆபாச வீடியோ விவகாரத்தில் மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், காவல்துறைக்கும் தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தருமபுரம் ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை, மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது.

    எனவே, மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளா இருந்து வருகிறார்

    இந்நிலையில், மடாதிபதியின் சகோதரரும், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் உள்ள விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

    அதில், தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும். நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும், இதனை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறி. கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.

    இந்த சம்பவத்தில் செம்பனார்கோயிலைச் சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், மதுரையைச் சேர்ந்த வழக்கரைஞர் ஜெயச்சந்திரன் மற்றும் செம்பனார்கோயில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த.விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

    இந்தச்சம்பவம் தொடர்பாக சிறப்புப் படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத், சீர்காழி ஒன்றிய பாஜக முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    அவர்களை நேற்று இரவு 10 மணியளவில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து 4 பேரும் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்த பெண்ணின் கணவர் பேனா கேமராவை ஆய்வு செய்தார்.
    • வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் வீட்டில் படுக்கை அறைக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்து பேனா கேமராவை பொருத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

    ராயபுரம்:

    சென்னை ராயபுரம் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வாடகை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். 2-வது தளத்தில் 9 வயது மகனுடன் குடியிருந்த இவரது கணவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

    நேற்று காலையில் இவர்கள் வசித்து வந்த வீட்டின் படுக்கை அறையில் புதிதாக பேனா ஒன்று இருந்ததை பெண் பார்த்துள்ளார். அதில் கேமரா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி தனது கணவரிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

    இதையடுத்து வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்த பெண்ணின் கணவர் பேனா கேமராவை ஆய்வு செய்தார்.

    அப்போது அதில் தனது மனைவியின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. உடை மாற்றும் காட்சிகளும், மேலும் பல வீடியோக்களும் பதிவாகி இருந்தன.

    இதையடுத்து ராயபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று கணவர் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரஜினிஸ் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்.

    அப்போது வீட்டின் உரிமையாளரின் மகனான இப்ராகிம் படுக்கை அறையில் பேனா கேமராவை பொருத்தி இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இப்ராகிம் மருத்துவ மாணவர் என்பது தெரிய வந்தது. சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் எம்.டி.எஸ். இறுதியாண்டு படித்து வரும் இவர், வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் வீட்டில் படுக்கை அறைக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்து பேனா கேமராவை பொருத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • பணம் தராவிட்டால் சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார்.
    • மாணவியின் வீடியோ மட்டுமின்றி பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ஆரூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் அருண் பிரசாத் என்கிற சிட்டா (வயது 23). இவர் அதேபகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் பழகி உள்ளார். அப்போது அந்த மாணவிக்கு தெரியாமல் அவரை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அந்த மாணவியிடம் வீடியோவை காட்டி மிரட்டி அருண் பிரசாத் பணம் கேட்டுள்ளார். பணம் தராவிட்டால் சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது வீட்டிற்கு செல்லாமல் பக்கத்து கிராமத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மாணவி சோகத்துடன் இருப்பதை பார்த்த உறவினர்கள் மாணவியிடம் விசாரித்துள்ளனர். பின்னர் மாணவி நடந்ததை தெரிவித்துள்ளார். மாணவியின் உறவினர்கள் ஆரூர் கிராமத்தில் உள்ள அருண் பிரசாத்தின் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்துள்ளனர்.

    அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மாணவியன் உறவினர்கள் வாலிபரை தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பிடுங்கிப் பார்த்துள்ளனர். அதில் மாணவியின் வீடியோ மட்டுமின்றி பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மாணவியின் உறவினர்கள் அந்த செல்போனை சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் தெரிவித்தனர். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்த அருண் பிரசாத் தப்பிவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அருண் பிரசாத்தை அவரது தொலைபேசி எண்ணின் மூலம் தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்நிலையில் குளத்தூர் 4 முனை சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பஸ்சில் அருண் பிரசாத் வந்திறங்கினார். உடனே அருண் பிரசாத்தை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஒரிரு தினங்களில் போலீஸ் காவலில் எடுத்து அருண் பிரசாத்திடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    • மாணவர்கள் ஆபாச படம் பார்த்து சீரழிந்து விடுவார்கள் என கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
    • ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் சர்ச்சைக்குரிய முறையில் பேசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், எம்மிகானூர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எர்ரகொட்டா சென்ன கேசவலு ரெட்டி. இவர் நேற்று தனது வீட்டில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆந்திராவில் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படங்களை பார்க்கின்றனர் பெருநகரங்களில் கூட ஆபாச படங்களை பார்க்கிறார்கள்.

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ஆட்சியில் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள லேப்டாப், டேப் செல்போன் வழங்கப்படுகிறது.

    இதனால் மாணவர்கள் ஆபாச படம் பார்த்து சீரழிந்து விடுவார்கள் என கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்க தல்ல. ஒரு சில மாணவர்கள் செய்யும் செயல்களுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தை குறை கூறுவது நியாயமானது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் சர்ச்சைக்குரிய முறையில் பேசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
    • வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    சென்னை:

    சென்னை போலீசில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக 'அவள்' என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண்களுக்கான சட்ட உரிமைகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவள் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் துணை கமிஷனர் கீதாஞ்சலி கலந்து கொண்டு பேசினார். 1,500 மாணவிகள் மத்தியில் சைபர் கிரைம் தொடர்பாக அவர் விளக்கி கூறியதாவது:-

    இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக போலியான ஆபாச வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. எனவே பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும். தேவையில்லாத பட்சத்தில் தங்களது புகைப் படங்களையோ, வீடியோக்களையோ பகிராமல் இருப்பதே நல்லது. வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    ஒருவேளை சமூக ஊடகம் மூலமாக யாராவது தேவையில்லாத செய்தி களை அனுப்பினால் உடனே மனம் உடைந்து போகாமல் போலீசாரை அணுக வேண்டும். மனதில் தவறான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் தைரியமாக போலீசை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவள் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு இதுவரை 1,500 பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    • இளம்பெண் வாடகை காரை முன்பதிவு செய்தார். முன்பதிவு செய்த சில நிமிடங்களிலேயே அவரது குழந்தை அழ ஆரம்பித்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 32 வயது மதிப்புள்ள ஒரு இளம்பெண் 6 வயது சிறுமி மற்றும் 9 மாத கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தனது வீட்டிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது மகளின் பள்ளிக்கு சென்றுள்ளார்.

    அங்கு பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் அவர் தனது வீட்டிற்கு புறப்பட முயன்றார். அப்போது அந்த இளம்பெண் வாடகை காரை முன்பதிவு செய்தார். முன்பதிவு செய்த சில நிமிடங்களிலேயே அவரது குழந்தை அழ ஆரம்பித்தது. அப்போது ஒரு ஆட்டோவை அழைத்து புறப்பட தயாரானார்.

    அந்த நேரத்தில் வாடகை கார் டிரைவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு தான் 5 கிலோ மீட்டர் தூரம் காரை ஓட்டி வந்து விட்டதாகவும், விரைவில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்துவிடுவேன் என்று கூறி உள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் சில நிமிடங்கள் காத்திருந்தார். ஆனாலும் கார் வரவில்லை.

    இதையடுத்து அவர் தனது குழந்தைகளுடன் வாடகை ஆட்டோவில் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் மீண்டும் வாடகை கார் டிரைவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு வந்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் அந்த இளம்பெண் கார் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

    முன்பதிவு செய்த காரை ரத்து செய்ததால் ஆத்திரம் அடைந்த கார் டிரைவர் அந்த இளம்பெண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஆபாச போட்டோ, வீடியோக்களை அனுப்பி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • வாட்ஸ்அப் மூலம் சாமிநாதனுக்கு ஸ்கிரீன் ரெக்கார்டு படத்தை அனுப்பியுள்ளார்.
    • ராஜஸ்தான் வாலிபர் செல்போனில் மிரட்டல் விடுத்த நம்பரை கொண்டு விசாரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில பா.ஜனதா தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன். இவரது வீடு, லாஸ் பேட்டை பெத்து செட்டிபேட்டை புது வீதியில் உள்ளது.

    இவரது செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலமாக ஒரு பெண் ஆடையின்றி ஆபாசமாக வீடியோ காலில் தோன்றியுள்ளார். இதை பார்த்து திடுக்கிட்ட சாமிநாதன், உடனடியாக அந்த வீடியோ அழைப்பை துண்டிப்பு செய்தார்.

    அதன்பிறகு, வாட்ஸ்அப் மூலம் சாமிநாதனுக்கு ஸ்கிரீன் ரெக்கார்டு படத்தை அனுப்பியுள்ளார். அது, யூ-டியூப்பில் வீடியோ உள்ளடக்கத்தை பதிவேற்று வதற்கான ஸ்கிரீன் ஷாட் படமாக இருந்தது. வாட்ஸ் அப்பில் அந்த பெண் ஆபாசமாக தோன்றிய வீடியோ அழைப்பை பதிவு செய்து அனுப்பியதுடன், மேலும் சாமிநாதன் பேசுவது போல் சித்தரித்தும் இருந்துள்ளது.

    அதன்பிறகு அவருக்கு செல்போனில் வேறொரு நம்பரில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆண் நபர், ரூ.50 ஆயிரம் பணம் தர வேண்டும். தராவிட்டால் ஆபாச வீடியோவை யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து சாமிநாதன், புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி

    கேயன், கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டிய நபர்களை தேடி வருகின்றனர்.

    ராஜஸ்தான் வாலிபர் செல்போனில் மிரட்டல் விடுத்த நம்பரை கொண்டு விசாரித்தனர். இதில் அந்த நபர், ராஜஸ்தானில் இருந்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரின் பெயர், ஊர் விவரத்தை கண்டுபிடித்து பிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    • பணம் கொடுக்க மறுத்தால் அந்த வீடியோவை ‘யூ-டியூப்’பில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் (வயது 53). இவர் லாஸ்பேட்டை பெத்திச்செட்டிப்பேட் புதுத்தெருவில் வசித்து வருகிறார்.

    இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களாக புதிய நம்பரில் இருந்து 'ஹலோ ஜி' என தொடர்ந்து மெசேஜ் வந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் யாரோ மெசேஜ் அனுப்பி இருப்பதாக கருதி இதனை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

    இந்த நிலையில் கடந்த வாரம் அவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வீடியோ கால் ஒன்று வந்தது. அதனை சாமிநாதன் எடுத்தபோது மறுமுனையில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடை ந்த அவர் உடனடியாக செல்போன் அழைப்பை துண்டித்தார்.

    அதையடுத்து அவரது செல்போன் எண்ணுக்கு மற்றொரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியஒரு பெண் சாமிநாதனிடம் செல்போனில் ஆபாச வீடியோவில் பதிவான காட்சி இருப்பதாக கூறி ரூ.50 ஆயிரம் பணம் கேட் டார். பணம் கொடுக்க மறுத்தால் அந்த வீடியோவை 'யூ-டியூப்'பில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் பா.ஜனதா தலைவர் சாமிநாதன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டிய மர்ம பெண்ணை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    புதுவை பா.ஜனதா தலைவரிடம் இளம் பெ ண் ஆபாச வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், பொதுமக்கள் தங்களின் செல்போன் எண்களுக்கு, புதிய எண்களில் இருந்து வரும் வீடியோ கால்களை ஏற்க வேண்டாம். தற்போது ஆன்லைன் மோசடி கும்பல், வீடியோ கால் மூலமாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆபாச காட்சிகளை வைத்து எதிர் முனையில் இருப்பவர்கள் உரையாடுவது போல காட்சிகளை ஜோடிக்கிறார்கள். இதுபோல் யாரும் பாதிக் கப்பட்டால் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம். உடனடியாக சைபர் கிரைம் போலீஸ் எண் 1930-ல் புகார் அளியுங்கள்' எனத்தெரிவித்தனர்.

    • டெலிகிராம் என்ற செயலி மூலம் நேகா என்கிற மெகர் என்ற பெண் தன்னை தொடர்பு கொண்டார்.
    • வீடியோக்களை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளனர்.

    பெங்களூரு:

    சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள், குற்றச்சம்பவங்கள் குறித்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை அறியாமல் மோசடி கும்பலின் வலையில் சிக்குபவர்கள் பல லட்சங்களை இழந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    அந்த வகையில் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

    அதில், டெலிகிராம் என்ற செயலி மூலம் நேகா என்கிற மெகர் என்ற பெண் தன்னை தொடர்பு கொண்டார். பின்னர் வாட்ஸ்-அப் மூலம் இருவரும் பேச ஆரம்பித்தோம்.

    அப்போது அவர் எனது கணவர் துபாயில் பணிபுரிகிறார். இதனால் நான் தனிமையில் தவிக்கிறேன். உங்களுடன் உடலுறவில் ஈடுபட விரும்புகிறேன் என கூறியதோடு அவரது புகைப்படங்கள் மற்றும் முகவரியை கூறினார்.

    அதன்படி சம்பவத்தன்று நான் மெகர் வீட்டுக்கு சென்றபோது அங்கு அடையாளம் தெரியாத 3 பேர் திடீரென நுழைந்து ஏன் இங்கு வந்தீர்கள் என கூறி என்னை தாக்கினர்.

    பின்னர் என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து ரூ.3 லட்சம் தராவிட்டால் நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலமாக அழைத்து செல்வோம் என மிரட்டினார். இரவு வரை என்னை சிறைப்பிடித்து வைத்திருந்த அந்த கும்பல் என்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டுகளை பறித்து கொண்டதோடு கூடுதலாக ரூ.2 லட்சம் கேட்டனர்.

    அப்போது என்னுடைய கிரெடிட் கார்டு வீட்டில் இருப்பதாக கூறி நான் வீட்டுக்கு முயன்றபோது ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பித்தேன். என்னை கடத்தி தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அந்த வாலிபரை கடத்தி தாக்கி பணம் பறித்த கும்பலை சேர்ந்த சரண பிரகாஷ், அப்துல் காதர், யாஷின் என்பது தெரிய வந்தது. அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட நேகா என்ற மெகர் மும்பையை சேர்ந்த மாடல் அழகி என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்று அவரை பிடித்தனர்.

    மாடல் அழகி நேகா ஹனிடிராப் முறையில் தொழில் அதிபர்கள், வாலிபர்கள் என 50-க்கும் மேற்பட்டோரிடம் செல்போன் செயலிகள் மூலம் உரையாடி உள்ளார்.

    அப்போது கொஞ்சி குலாவி பேசி அவர்களை தனது வலையில் வீழ்த்தி உள்ளார். பின்னர் அவர்களை வீட்டுக்கு வரவழைத்து உள்ளார். அங்கு வருபவர்களை வீட்டு வாசலுக்கு பிகினி உடையில் கிளுகிளுப்பாக சென்று வரவேற்று உள்ளே அழைத்து சென்று விடுவாராம். ஏற்கனவே வீட்டிற்குள் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி உள்ள நிலையில் வீட்டுக்குள் வருபவர்களை நேகா பிகினி உடையில் கட்டி அணைத்ததும் அதனை சரண பிரகாஷ், அப்துல் காதர், யாஷின் ஆகிய 3 பேரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளனர்.

    பின்னர் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளனர். இதுவரை அந்த கும்பல் 50-க்கும் மேற்பட்ட வாலிபர்களிடம் ரூ.35 லட்சத்திற்கும் மேல் பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேசிய ஒரு மர்ம நபர் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.விடம் பேசிய செல்போன் எண், பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சரவணக்குமார் (வயது 48). தி.மு.க.வைச் சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் பாரதி நகரில் வசித்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்தது. அதனை சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆன் செய்தபோது எதிர்முனையில் இருந்து யாரும் பேசவில்லை. அதன் பிறகு சில மணி நேரங்கள் கழித்து வீடியோ கால் பதிவு செய்து அதனுடன் பெண் ஒருவர் செக்சியாக பேசுவது போன்ற தவறாக சித்தரித்து வீடியோவை அவரது செல்போனுக்கு அனுப்பினர்.

    அதன் பிறகு பேசிய ஒரு மர்ம நபர் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் பணத்தை அனுப்பினார். அதன் பிறகு இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தேனி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.விடம் பேசிய செல்போன் எண், பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உண்மையிலேயே வீடியோ அனுப்பியது பெண்ணா அல்லது வேறு யாருமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பெரியகுளம் எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்க முயன்றபோது அவர் உரிய பதிலளிக்க மறுத்து விட்டார்.

    • பங்குத்தந்தை ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
    • தன்னை சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மிரட்டியதாக குறிப்பிட்டு இருந்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பங்குத் தந்தையாக 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பணியாற்றி வருகிறார்.

    இவர் சில நாட்களுக்கு முன்பு தேவாலயம் உள்ள பகுதியில் நின்ற போது, அங்கு ஓரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது.

    பின்னர் அவர் வைத்திருந்த லேப்-டாப் மற்றும் மொபைலை அந்தக் கும்பல் பறித்துச் சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சிலர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில் இது பற்றி புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் தற்போது தாக்குதலுக்கு உள்ளான பங்குத்தந்தை ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடி யோக்களில் பெண்ணுடன் அவர் டிக்-டாக் பாணியில் பாடல் பாடுவது, முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

    இந்த வீடியோக்கள் வேகமாக பரவி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைப் பார்த்த பலரும் பங்குத் தந்தை மீது ஏற்கனவே பல புகார்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். தேவாலயம் வரும் பெண்களிடம் அவர் தகாத முறையில் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

    சமூகவலைதளங்களில் வெளியான வீடியோக்கள், பங்குந்தந்தையின் லேப்டாப் மற்றும் மொபைலில் பதிவு செய்யப்பட்டவையாக இருக்கலாம் என்றும், அதனை பறித்துச் சென்றவர்கள் இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்த சூழலில் சம்பந்த ப்பட்ட பாதிரியாரின் தந்தை சில நாட்களுக்கு முன்பு கொல்லங்கோடு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னை சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மிரட்டியதாக குறிப்பிட்டு இருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த மாணவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×