search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எல்ஏ"

    • அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    நேற்று பிரசாரத்துக்கு செல்ல தயாராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில் போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட பாதிப்பால் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.

    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்து விடும்.
    • அலுவலகங்களுக்கு இப்போது பொது மக்கள் மட்டுமின்றி கட்சி நிர்வாகிகளும் வந்து செல்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு தேர்தல் தேதி அநேகமாக வருகிற சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்து விடும்.

    அதன் பிறகு முதலமைச்சர் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை கட்சிப் பணிக்கு செல்லும் போது அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. சொந்த கார் அல்லது தனியார் வாகனங்களை பயன்படுத்தி கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும்.

    அதுமட்டுமின்றி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி தோறும் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு இப்போது பொது மக்கள் மட்டுமின்றி கட்சி நிர்வாகிகளும் வந்து செல்கின்றனர். அரசியல் ஆலோசனை கூட்டங்களும் இங்கு நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அங்கு கட்சி நிர்வாகிகள் வரக் கூடாது என்பதற்காக அரசு சார்பில் உள்ள எம்.எல்.ஏ.க் கள், எம்.பி.க்கள் அலுவலகங்களை பூட்ட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

    மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உத்தர விடுவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் இப்போதே தங்களது அலுவலகத்தில் உள்ள சொந்த பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    • ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில் ராஜினாமா.
    • கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். கட்டார் ஆட்சிக்கு ஜனநாயக ஜனதா கட்சி என்ற மாநில கட்சி ஆதரவு அளித்து வந்தது.

    இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பா.ஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. 

    இருந்த போதிலும் சில சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் கட்டாருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், கட்டார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதற்கிடையே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், அரியானாவில் கர்னூல் சட்டமன்ற எம்எல்ஏ பதவியை முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார்.

    விரைவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

    • சுகாதாரத்துறை முன்னாள் மந்திரியுமான கே.கே.ஷைலஜா கண்ணூர் மாவட்டம் மத்தனூர் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்து வருகிறார்.
    • ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த காங்கிரஸ் ஷாஃபி பரம்பில் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் களை கட்ட தொடங்கிவிட்டது. அங்குள்ள 16 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. அதேபோல் பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதிகளில் போட்டியிடுவோரின் விவரங்களை அறிவித்துள்ளது.

    அது மட்டுமின்றி மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது கட்சி சார்பில் களம் காண இருப்பவர்கள் விவரத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் ஒரே மக்களவை தொகுதியில் 2 எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட உள்ளனர்.

    இடது ஜனநாயக முன்னணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவரும், கேரள மாநில சுகாதாரத்துறை முன்னாள் மந்திரியுமான கே.கே.ஷைலஜா கண்ணூர் மாவட்டம் மத்தனூர் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்து வருகிறார்.

    ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த காங்கிரஸ் ஷாஃபி பரம்பில் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவர்கள் இருவரும் தான் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகரை மக்களவை தொகுதியில் தங்களின் கட்சி சார்பில் போட்டியிட உள்ளனர்.

    அவர்கள் இருவருமே சட்டப் பேரவை தேர்தலின் போது மக்களால் அங்கீகரித்து கொண்டாடப்பட்டவர்கள் ஆவர். அதிலும் முன்னாள் மந்திரி கே.கே. ஷைலஜா மத்தனூர் சட்டமன்ற தொகுதியில் மிகப்பெரிய வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.

    மேலும் கொரோனா, நிபா வைரஸ் பரவிய காலக்கட்டத்தில் கேரள சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த ஷைலஜா மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பலராலும் பாராட்டப்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரு மக்களவை தொகுதியில் எம்.எல்.ஏ.க்கள் இருவர் போட்டியிடுவது கேரள அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இப்போது அவருடைய தண்டனைக்கு தடை விதித்துள்ளது.
    • கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்ததற்கு வெள்ளைக்காரர்களே காரணம்.

    நெல்லை:

    தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது.

    அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இப்போது அவருடைய தண்டனைக்கு தடை விதித்துள்ளது. எனவே அவருக்கு மீண்டும் எம்.எல்.ஏ. வாய்ப்பு வழங்குவது தொடர்பாக வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல், காசிப்பூர் மக்களவை உறுப்பினர் அன்சாரி ஆகியோரின் விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதே நடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் பரிசீலிக்கப்படும்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு எங்களுடைய சட்டப்பேரவை முதன்மைச் செயலாளருடன் கலந்து ஆலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதை நீங்கள் விரைவில் பார்க்கலாம்.

    கால்டுவெல், ஜி. யு.போப் பற்றி கூறியபோது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெள்ளைக்காரர்கள் தான் இந்திய கலாசாரத்தை அழித்தார்கள் என்று பேசினார். அதேபோல் பலரும் பேசி வருகிறார்கள்.

    பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்கு முன்பு இந்திய கலாசாரம் எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அப்போது உயர் ஜாதியினர் மட்டுமே படிக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம். இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். அவர்கள் தான் சொத்து வாங்க முடியும் என்ற நிலை இருந்தது.

    ஆனால் வெள்ளைக்காரர்களான கால்டுவெல், ஜி. யு.போப் போன்றவர்கள் வந்த பிறகுதான் எல்லோரும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் மத போதகர்களாக வந்தாலும், அதைத்தாண்டி இந்திய, தமிழக கலாசாரத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள்.

    தமிழர்கள், இந்தியர்களுக்கு இலவச கல்வி கொடுத்தார்கள். நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்ததற்கு வெள்ளைக்காரர்களே காரணம். உயர் ஜாதியினர் மட்டுமே கல்வி கற்கும் முறையை மாற்றியவர்கள் வெள்ளைக்காரர்கள் தான். கால்டுவெல்லை அங்குள்ள 90 சதவீத மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (வயது 37) கார் விபத்தில் உயிரிழந்தார்.
    • எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

    தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் எம்.எல்.ஏவான லாஸ்யா நந்திதா (வயது 37) பிப்ரவரி 23-ம் தேதி நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கார் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 13-ந் தேதி நல்கொண்டாவில் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் வீடு திரும்பிய நந்திதாவின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நந்திதா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இன்று 2-வது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

    லாஸ்யா நந்திதா தந்தை சயன்னா 5-முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இறந்தார்.

    அவரது மறைவிற்குப் பிறகு சந்திரசேகர ராவ் அவரது மகளான லாஸ்யா நந்திதாவிற்கு, செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணேலாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.

    பெண் எம்.எல்.ஏ. ஒருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா உயிரிழப்பு போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், "அனுபவமில்லாத ஓட்டுநர்களால் சாலை விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிறது. தொலைதூரப் பயணங்களுக்காக திறமையான ஓட்டுநர்களை நியமிக்க வேண்டியது அவசியம். இதை கருத்தில்கொண்டு, ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க முடிவு செய்துள்ளோம். ஓட்டுநர் சோதனை நடத்துவதற்கான பயிற்சி இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும்" என தெரிவித்தார்.

    • காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
    • சட்டசபை அலுவலகத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த மல்காஜ்கிரி எம்.எல்.ஏ மைனம்பள்ளி அனுமந்த ராவ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வெமுல வீரேஷம், குப்பம் அணில் குமார் ரெட்டி ஆகியோர் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இதேபோல் ஜி.எச். எம்.சி முன்னாள் மேயர் போந்து ராம் மோகன், விஹாராபாத் மாவட்ட தலைவர் சுனிதா ரெட்டி, ஸ்ரீதேவி, பி.ஆர்.எஸ் தலைவர் சந்திர சேகர் ரெட்டி, பிரபல திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் மாமனார் ஆகியோர் தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ் முன்ஷி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

    பின்னர் ஐதராபாத்தில் உள்ள சட்டசபை அலுவலகத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • 2 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றதால், எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியவில்லை.
    • பல்வேறு தொகுதிகளில் காங்கிரசார் வெளியேறியதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சுதந்திரம் பெற்ற காலம் முதல் நீண்ட காலமாக காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்து வருகிறது.

    இதனால் காங்கிரசின் கோட்டை என புதுவை கருதப்பட்டது. 2016-ம் ஆண்டு தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 15 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

    ஆனால் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் 2021-ல் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் தோல்வியை தழுவினர். 2 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றதால், எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியவில்லை.

    இதற்கு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் இறுதியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் பிரமுகர்கள் வெளியேறி பா.ஜனதா மற்றும் என்.ஆர். காங்கிரசில் இணைந்தனர்.

    தற்போது பா.ஜனதாவில் உள்ள அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி முக்கிய பிரபலங்கள் காங்கிரசை சேர்ந்தவர்கள்தான். சமீபத்தில் பா.ஜனதாவின் தலைவராக செல்வகணபதி எம்.பி. பொறுப்பெற்றார்.

    அவர் புதிய நிர்வாகிகளை கட்சியில் நியமித்து வருகிறார். இதில் பா.ஜனதாவுக்கு மாறிய காங்கிரசாருக்கு பதவிகள் கிடைக்கவில்லை. இது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    அதேநேரத்தில் பல்வேறு தொகுதிகளில் காங்கிரசார் வெளியேறியதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது தேர்தல் பணிகளை பாதிக்கும் என கருதப்படு கிறது.

    இந்த நிலையில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள வைத்திலிங்கம் எம்.பி. கட்சியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் ஒரு கட்டமாக கட்சியிலிருந்து வெளியேறிய காங்கிரசாரை மீண்டும் கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளை காங்கிரஸ் பக்கம் இழுக்க தூது விட்டு வருகின்றனர்.

    • 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
    • ஜார்க்கண்டில் இருந்து மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.600 கோடி மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக ஜார்க்கண்ட் முதல்-மந்திரியும் ஜே.எம்.எம். கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது.

    இதனை தொடர்ந்து தனது முதல் மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்தார். புதிய முதல் மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார். அவர் 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் தடுக்க ஜே.எம்.எம். கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஐதராபாத் அழைத்துவரப்பட்டனர் அவர்கள் அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஜார்க்கண்டில் இருந்து மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 4 எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு பராமரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் எம்.எல்.ஏ.க்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறார். வருகிற 5-ந் தேதி வரை ஜார்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    5-ந் தேதி தனி விமான மூலம் அவர்களை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இன்று ஜார்கண்ட் மாநில எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ள சொகுசு விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    • இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
    • தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    திருச்சி:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை ( வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு பிரம்மாண்ட மாநாடு நடை பெறுகிறது. அக்கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைவரின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

    மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சா ரியார், திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்மு ருகன் எம்எல்ஏ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ. ஆர் ஈஸ்வரன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநாட்டு பொறு ப்பாளருமான பெரம்பலூர் இரா. கிட்டு உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள 28 கட்சிகளின் தலைவர்கள் கொள்கிறார்கள்.

    மேலும் தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதையொட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. தற்போது அந்தப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மாநாடு நுழைவு வாயில் பகுதி முந்தைய நாடாளுமன்ற கட்டிடத்தின் வடிவில் பிரம்மாண்டமாக அமைத்துள்ளனர். முகப்பில் கட்சித் தலைவர் திருமாவளவனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார். முன்னதாக சென்னையில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மேல் புறப்பட்டு திருச்சி வருகை தருகிறார். பின்னர் கார் மூலமாக சாலை மார்க்கத்தில் மாநாடு நடைபெறும் சிறுகனூருக்கு செல்கிறார்.

    முன்னதாக செல்லும் வழியில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் திறக்கப்பட்ட கலைஞர் சிலையை பார்வையிடுகிறார்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், தமிழக முதலமைச்சரின் சிறப்பு பாதுகாப்பு டிஐஜி திருநாவுக்கரசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நேற்று கலெக்டர் பிரதீப் குமார் மாநாடு பந்தல் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி, பெரம்பலூர் இரா. கிட்டு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மற்ற பொறுப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.
    • தந்தை ஆரூண் ஏற்கனவே எம்.பி.யாக வெற்றி பெற்றவர் தற்போது வயது முதிர்வு காரணமாக அவர் போட்டியிடவில்லை.

    காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பபட்டுள்ள பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களில் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானா திருவள்ளூர் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மற்ற பொறுப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். ஆனால் அசன் மவுலானா 'நான் பொறுப்பாளர் பதவியே கேட்கவில்லையே. நான் எம்.பி. தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். எனக்கு கட்சி மேலிடம் அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களிடம் பொங்கி இருக்கிறார். தேனி தொகுதியில் இவரது தந்தை ஆரூண் ஏற்கனவே எம்.பி.யாக வெற்றி பெற்றவர் தற்போது வயது முதிர்வு காரண மாக அவர் போட்டியிடவில்லை. எனவே அந்த தொகுதியை கைப்பற்றும் முடிவில் அசன் மவுலானா உறுதியாக இருக்கிறார்.

    இன்னும் 2½ ஆண்டுகள் எம்.எல்.ஏ பதவி இருக்கிறதே வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்விக்கு ஏற்கனவே அந்த மாதிரி வாய்ப்பு வழங்கிய நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன என்றார்.

    • எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
    • 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுவதால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

    அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற இருக்கும் முகவர்களின் கூட்டம் தொகுதி வாரியாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.

    இதேபோல் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் கட்சியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இப்போது மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

    இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில் வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) மாவட்ட கழகங்கள் நடத்தும் மாவட்ட அளவிலான "சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு" நடைபெறுகிறது.

    இப்பயிற்சி வகுப்பில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணவி, மகளிர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×