search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்பாளர்"

    • காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம்.பி.யின் சகோதரி ஜெயக்குமாரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
    • சோதனை முடிந்து அதிகாரிகள் சூட் கேஸ், மற்றும் கட்டைப்பை ஒன்றுடன் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் துறையினர் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதையும் மீறி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் எம்.பி.யின் சகோதரி ஜெயக்குமாரி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    புதுவை இளங்கோ நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 9 பேர் வந்தனர். அவர்கள் அந்த வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.

    சோதனையின் இடையே அவ்வப்போது அதிகாரிகள் வெளியே வருவதும் மீண்டும் வீட்டிற்குள் செல்வதுமாக இருந்தனர். இந்த சோதனை இரவு 8 மணிவரை நீடித்தது. சோதனை முடிந்து அதிகாரிகள் சூட் கேஸ், மற்றும் கட்டைப்பை ஒன்றுடன் வீட்டிலிருந்து வெளியே வந்தனர்.

    அதில் சில ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி எடுத்து சென்றதாக தெரிகிறது. பணம் எதையும் பறிமுதல் செய்து சென்றார்களா? என்பது தெரியவில்லை.

    இதற்கிடையே கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோழிபாக்கத்தில் உள்ள வைத்திலிங்கம் எம்.பி.சம்பந்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த வருமானவரி சோதனை நடந்தபோது காங்கிரஸ் வேட்பாளரான வைத்திலிங்கம் காரைக்காலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். வருமானவரி சோதனை குறித்து அவருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் பா.ஜனதா வேட்பாளரான புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை.

    புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரின் உறவினர் வீடு, பா.ஜனதா வேட்பாளர் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியதே காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள்தான்.
    • இந்திய பாராளுமன்ற அனுமதி இல்லாமல் கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டனர்.

    ராமநாபுரம் பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் மண்டபம் பகுதியில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தபோது பெண்கள் திரண்டு குலவையிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்று இரட்டை இலைக்கு வாக்களிப்போம் என்று உறுதியளித்தனர். அப்போது வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பேசியதாவது:- 

    நான் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்தவன். கிராம மக்களின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்துவேன்.

    கடந்த முறை பொய் வாக்குறுதி கூறி வெற்றிபெற்ற எம்.பி.யை அடையாளம் தெரியுமா, பார்த்திருக்கிறீர்களா? மக்களை ஏமாற்றி ஓட்டுக்களைப் பெற்று உல்லாச வாழ்க்கை வாழ்கின்றவர்கள் மீண்டும் ஓட்டுகேட்டு வந்தால் விரட்டி அடியுங்கள். மக்களின் பிரதிநிதிதான் எம்.பி., அதனை மறந்து மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு உங்களிடமே மீண்டும் ஓட்டுகேட்டு வருகிறார். மக்களை ஏமாற்றிய தி.மு.க. கூட்டணிக்கு தக்கபாடம் புகட்ட இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலனில் அதிக கவனம் செலுத்துவேன். இங்கு மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியதே காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள்தான்.

    கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கும் முன்பு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் மீன்பிடி தொழில் நடைபெற்றது. இந்திய பாராளுமன்ற அனுமதி இல்லாமல் கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டனர். பாராளுமன்ற முதல் கூட்டத்திலேயே தச்சத்தீவு பிரச்சனையை எழுப்புவேன். மக்கள் பிரச்சினையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் கோரிக்கையாக இருந்தாலும், ஆசிரியர்களின் போராட்டமாக இருந்தாலும் கோரிக்கையை நிறைவேற்ற உடனிருப்பேன். இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் இவ்வாறு பேசினர்.

    வேட்பாளருடன் ஜெயபெருமாளுடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • கள் இறக்கும் தொழிலாளரிடம் உங்களுக்கு என்ன தேவையாக உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.
    • கம்மம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து பி.ஆர்.எஸ்.கட்சி சார்பில் நாம நாகேஸ்வர ராவ் போட்டியிடுகிறார்.

    திருப்பதி:

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கள்ளுகடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பனை மற்றும் தென்னை மரங்களில்கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்களிடம் வேட்பாளர்கள் நேரடியாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தந்த்ரா வினோத் ராவ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் அந்த தொகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது கள் இறக்கும் பனைமர தொழிலாளி ஒருவர் பானை மற்றும் பனைமரம் ஏற பயன்படுத்தக்கூடிய உபகரணங்களுடன் வந்தார்.

    அவரிடம் இருந்து கள் பானையை வாங்கிய வேட்பாளர் அதனை கையில் ஏந்திய படி தனக்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

    மேலும் கள் இறக்கும் தொழிலாளரிடம் உங்களுக்கு என்ன தேவையாக உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.

    கள்பானையுடன் வேட்பாளர் ஆதரவு கேட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கம்மம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து பி.ஆர்.எஸ்.கட்சி சார்பில் நாம நாகேஸ்வர ராவ் போட்டியிடுகிறார்.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட வில்லை. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பா.ஜ.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • வேட்பாளர்களை மாற்றக் கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • தேர்தல் நேரத்தில் போராட்டம் வலுத்து வருவதால் கட்சித் தலைமை விரக்தி அடைந்து உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வேட்பாளர்களை மாற்றக் கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல் சட்டமன்ற தொகுதியில் மூத்த தலைவரான பிரபாகர் சவுத்ரிக்கு சீட்டு மறுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கட்சி அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

    மேலும் அலுவலகத்தில் இருந்த மர சாமான்கள் பிளக்ஸ் பேனர்கள் துண்டு பிரசுரங்களை ரோட்டில் எடுத்து வந்து கொட்டி தீயிட்டு எரித்தனர். மேலும் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    படேறு தொகுதியில் சீட் கிடைக்காததால் பிரசாத் என்பவர் அவரது வீட்டில் இருந்த சந்திரபாபு நாயுடுவின் போட்டோக்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை சாலையில் போட்டு எரித்தார்.

    விஜயநகரம் மாவட்டம் நெல்லிமரலா பங்கர்ராஜுக்கு சீட்டு வழங்காததால் அவர் சுயேசையாக போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.

    இதேபோல் 8 சட்டமன்ற தொகுதிகளில் மூத்த தலைவர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டம் செய்தனர்.

    தேர்தல் நேரத்தில் போராட்டம் வலுத்து வருவதால் கட்சித் தலைமை விரக்தி அடைந்து உள்ளது.

    • பிரச்சார வாகனத்தில் இருந்து சீனிவாஸ் சைக்கிள், சைக்கிள் என மைக்கில் பேசினார்.
    • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான பேன், பேன் சத்தமாக கத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருவூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கோலிகாபுடி சீனிவாஸ் போட்டியிடுகிறார்.

    இவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். அந்த பகுதியில் பிரச்சார வாகனத்தில் இருந்து சீனிவாஸ் சைக்கிள், சைக்கிள் என மைக்கில் பேசினார்.

    அப்போது கீழே நின்று கொண்டு இருந்த பெண்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான பேன், பேன் சத்தமாக கத்தினர்.

    இதனால் கடுப்பான சீனிவாஸ் அங்கிருந்த பெண்களை சைத்தான் சைத்தான் என கூறிவிட்டு வாகனத்தை வேறு ஊருக்கு ஓட்டுமாறு கூறிச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
    • நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது மத்திய பாதுகாப்பு படை வீரர் உடையில் ஒருவர் வந்து அமர்ந்து மற்றவர்களுடன் சகஜகமாக பேசிக் கொண்டிருந்தார். திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

    பின்னர் வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் மைக் முன்பு வந்து நின்று நான் 3-வது முறையாக போட்டியிடுகிறேன். இது காலத்தின் கட்டாயம். எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் யாரையும் ஓட்டு போட விடமாட்டேன் என கூறி ரகளை செய்தார். உடனே போலீசார் விரைந்து வந்து அவரை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தனர். அப்போதும் அந்த நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் என்பதும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த நபர் வேட்பு மனுவும் தாக்கல் செய்யவில்லை.

    தொடர்ந்து அந்த நபரை போலீசார் வெளியேற்றினர்.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தாக்கியதாக கூறி, ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவனையில் சேர்ந்துள்ளார்.
    • நாளைக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் கொன்று விடுவோம் எனக்கூறி மிரட்டினர்.

    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த எச்சனஹள்ளியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 51). இவர், திராவிட தெலுங்கு தேசம் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில், திராவிட தெலுங்கு தேசம் கட்சி பாரதிய மக்கள் ஐக்கியதா கட்சியுடன் இணைந்து தமிழகத்தில் 13 இடங்களில் போட்டியிடுகிறது.

    இந்த கட்சிக்கு நாம் தமிழர் கட்சி முன்பு பயன்படுத்தி வந்த கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னை, நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தாக்கியதாக கூறி, ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவனையில் சேர்ந்துள்ளார்.

    இது குறித்து பாரதிய மக்கள் ஐக்கியதா கட்சி வேட்பாளர் ஆறுமுகம் கூறியதாவது:-

    நான் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோதிலிருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்னை கண்காணித்த வண்ணம் இருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனைக்கு வந்த போது அவர்கள் என்னை பின் தொடர்ந்தனர். இதையறிந்த நான் என் நண்பரின் காரில் ஓசூர் நோக்கி சென்றேன்.

    கிருஷ்ணகிரியில் இருந்து, 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்மனூர் அருகே சென்றபோது, 10-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிளில் வந்த நாம் தமிழர் கட்சியினர், எங்கள் காரை வழிமறித்து என்னையும் என்னுடன் இருந்தவர்களையும் கடுமையாக தாக்கினர். மேலும் விவசாயி சின்னத்தில் நீ போட்டியிட கூடாது. நாளைக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் கொன்று விடுவோம் எனக்கூறி மிரட்டினர். இவ்வாறு அவர் கூறினார்.

    காயமடைந்த ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பா.ஜ.க. சார்பில் சமூக தன்னார்வலரான மாதவி லதா என்பவரை பா‌.ஜ.க வேட்பாளராக அறிவித்துள்ளது.
    • ஐதராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் மக்களிடமும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் நிறுவனர் சலாவுதீன் ஒவைசி எம்.பி.யாக இருந்தார்.

    அவரது மறைவிற்குப் பிறகு தற்போது அந்த கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தொடர்ந்து இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.

    இந்த முறை அவரை வெல்ல பா.ஜ.க. சார்பில் சமூக தன்னார்வலரான மாதவி லதா என்பவரை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலிலும் தனது பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளது.

    ஐதராபாத் தொகுதியில் ஒவைசி மற்றும் பா.ஜ.க வேட்பாளரை விட பிரபலமான ஒருவரை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    அதன்படி பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை களமிறக்கலாம் என முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சானியா மிர்சாவிடமும் அவரது குடும்பத்தாரிடமும் காங்கிரஸ் கட்சியினர் பேசி முடிவு செய்துள்ளனர்.

    ஒருவேளை சானியா மிர்சா போட்டியிட மறுத்தால் அவரது தந்த இம்ரான் மிர்சாவை களமிறக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    கடந்த புதன்கிழமை டெல்லியில் தெலுங்கானாவில் மீதமுள்ள தொகுதி வேட்பாளர்கள் தேர்வு குறித்து மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு தரப்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விளையாட்டுத்துறையில் இருந்து அரசியல் துறைக்கு சானியா மிர்சாவை களமிறக்க முயற்சிகள் நடைபெற்று வருவதால் ஐதராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் மக்களிடமும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
    • தமிழ் படிக்கத் தெரியாதவர்களை வேட்பாளராக்கி, தற்போது அதனை நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார்.

    இந்நிலையில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதி நாதக வேட்பாளர் ஜெகதீஸ் சுந்தர் இன்று வேட்புமனுத் தாக்கலின்போது, தமிழில் எழுதி இருந்த உறுதிமொழிப் பத்திரத்தை படிக்கத் தெரியாமல் திக்கி நின்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பின்னர், தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் வாசிக்க, ஜெகதீஸ் சுந்தர் அதனை திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். முகப்பேரில் உள்ள பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி ஆசிரியராக இவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    பதட்டமாக இருந்ததால் உறுதிமொழியை படிக்க சிரமப்பட்டேன் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஸ் சந்தர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் கௌசிக் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் நடத்தும் அலுவலகம் சென்றார் அப்போது உறுதிமொழி வாசிக்க அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் வேட்பாளர் கௌசிக்கிற்கு தமிழ் படிக்கத் தெரியாததால் உறுதிமொழி முழுவதையும் விருதுநகர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் படிக்க, தொடர்ந்து படித்தார் நாம் தமிழர் வேட்பாளர் கௌசிக்.

    இது குறித்து நாம் தமிழர் கட்சி கூறுகையில், வேட்பாளர் கௌசிக் ஓமன் நாட்டில் படித்ததால் தமிழ் படிக்கத் தெரியாது என விளக்கம் அளித்துள்ளார்..

    ஆனால், தமிழ் படிக்கத் தெரியாதவர்களை வேட்பாளராக்கி, தற்போது அதனை நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம்தமிழர் கட்சியின் தென்சென்னை மாவட்ட வேட்பாளராக தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பற்றி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    நாம்தமிழர் கட்சியின் தென்சென்னை மாவட்ட வேட்பாளராக தமிழ்ச்செல்வி அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழ்ச்செல்வி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது அவர் தனது Audi A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அந்த Audi A4 சொகுசு காருக்கு தமிழ்ச்செல்வி இன்சூரன்ஸ் கட்டவில்லை என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இன்சூரன்ஸ் இல்லாத Audi A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்த தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்ச்செல்வி பற்றி விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    • தி.மு.க.வில் இதற்காகவே ஒவ்வொரு வேட்பாளருக்கும் காணொலி வாயிலாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.
    • அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரங்களும்களை கட்டி வருகிறது.

    இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்வது வாடிக்கையாகி உள்ளது. அந்த வகையில் நேற்று பவுர்ணமி நாளில் எல்லா அரசியல் கட்சி வேட்பாளர்களும் வரிசையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களுடன் முக்கிய பிரமுகர்களை அழைத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்றைய தினத்தை மிகவும் நல்ல நாளாக கருதியதால் 75 சதவீதம் வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இதில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 33 பேரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சிகளில்தான் இன்னும் சிலர் மனுதாக்கல் செய்வதற்கு நாளைய தினத்தை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளரின் சொத்து விவரங்கள், மனைவியின் சொத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டி உள்ளதால் ஒரு முறைக்கு இருமுறை அவற்றை சரி பாார்த்து வழக்கறிஞருடன் ஆலோசித்த பிறகே வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    தி.மு.க.வில் இதற்காகவே ஒவ்வொரு வேட்பாளருக்கும் காணொலி வாயிலாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது. மற்ற கட்சியினர் அவரவர் வழக்கறிஞர்கள் உதவியுடன் வேட்பு மனுவை பூர்த்தி செய்து தாக்கல் செய்து வருகின்றனர்.

    வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் என்பதால் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 600-க்கும் மேற்பட்டோர் நாளை மனுதாக்கல் செய்யலாம் என எதிர் பார்க்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விருதுநகர் மக்களவை தொகுதியில் கௌசிக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
    • நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார். அந்த வகையில் விருதுநகர் மக்களவை தொகுதியில் கௌசிக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் கௌசிக் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் நடத்தும் அலுவலகம் சென்றார் அப்போது உறுதிமொழி வாசிக்க அறிவுத்தப்பட்டது.

    இந்நிலையில் வேட்பாளர் கௌசிக்கிற்கு தமிழ் படிக்கத் தெரியாததால் உறுதிமொழி முழுவதையும் விருதுநகர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் படிக்க, தொடர்ந்து படித்தார் நாம் தமிழர் வேட்பாளர் கௌசிக்.

    இது குறித்து நாம் தமிழர் கட்சி கூறுகையில், வேட்பாளர் கௌசிக் ஓமன் நாட்டில் படித்ததால் தமிழ் படிக்கத் தெரியாது என விளக்கம் அறித்துள்ளனர்.

    ஆனால், தமிழ் படிக்கத் தெரியாதவரை வேட்பாளராக்கி, தற்போது அதனை நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    ×