search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namachivayam"

    • பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன், நியமன எம்.எல்.ஏ. ராமலிங்கம், பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது.
    • மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை என பெயர்கள் அடிபட்டது.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுவை தொகுதி பா.ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    ராஜ்யசபா எம்.பி., 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் ஆகியவற்றோடு பாராளுமன்ற தொகுதியையும் பா.ஜனதா பெற்றது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

    இருப்பினும் கட்சியை அடிமட்டம் வரை கொண்டு செல்ல பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது அவசியம் என கருதி பா.ஜனதா புதுவை தொகுதியை கூட்டணியில் பெற்றது.

    வரும் சட்டமன்ற தேர்தலிலும் கணிசமான தொகுதிகளில் போட்டியிடுவதற்கு வசதியாக இருக்கும் என பா.ஜனதா தலைமை கருதியது.

    அதேநேரத்தில் தொகுதியை பெற்ற வேகத்தில் பா.ஜ.க.வால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. முதல்கட்ட பா.ஜனதா பட்டியலில் புதுவை தொகுதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இதுவரை வேட்பாளர் தேர்வில் இழுபறி நிலவி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தகுதியான நபர் என பா.ஜனதா நிர்வாகிகளே அமைச்சர் நமச்சிவாயத்தை கைகாட்டியுள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்து வருகிறார்.

    இதனால் வேட்பாளருக்காக பலரும் பரிசீலிக்கப்பட்டனர். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை என பெயர்கள் அடிபட்டது. ஆனால் அவர்கள் வெளிமாநிலத்தினர் என்ற முத்திரையால் கைவிடப்பட்டது.

    இதனையடுத்து பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன், நியமன எம்.எல்.ஏ. ராமலிங்கம், பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. இவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமியின் ஆதரவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மீண்டும் நமச்சிவாயம் பெயர்தான் முதலிடத்திற்கு சென்றது.

    இதனிடையே புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறை சரியாக செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    சிறுமி படுகொலை பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்தது. இந்த பிரச்சனையை அரசு சரியாக கையாளவில்லை என்ற புகார் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே காரைக்காலை சேர்ந்த ஜி.என்.எஸ். ராஜசேகரன் வேட்பாளராக பரிசீலிக்கப்பட்டார். ஆனால் அவர் தி.மு.க.வுக்கு நெருக்கமானவர் என கட்சியில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கட்சி மேலிடத்துக்கும் புகார் சென்றது.

    இதனால் அவரை வேட்பாளராக்கும் முடிவும் கைவிடப்பட்டுள்ளது. தற்போது புதுவையில் நிலவக் கூடிய சூழலை சமாளித்து வெற்றி பெறும் வாய்ப்புள்ள நபராக அமைச்சர் நமச்சிவாயத்தையே பா.ஜனதா தலைமை கருதுகிறது. இதனால் மீண்டும், மீண்டும் அமைச்சர் நமச்சிவாயமே வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

    அவரை தேர்தலில் போட்டியிட சம்மதிக்க வைக்க கட்சியின் தலைமை நேரடியாக பேச திட்டமிட்டுள்ளதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    • இந்தியா கூட்டணியில் காங்கிரசும், தி.மு.க.வும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை பெறுவதில் தீவிரம் காட்டின.
    • புதுவையின் 4 பிராந்தியங்களிலும் அறிமுகமானவருமான அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என பரிந்துரை செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    பா.ஜனதா வேட்பாளர் யார்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் புதுச்சேரியில் உள்ள பா.ஜனதா தலைவர்களில் பெரும் பாலானவர்கள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவரும், புதுவையின் 4 பிராந்தியங்களிலும் அறிமுகமானவருமான அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என பரிந்துரை செய்கின்றனர்.

    அதே நேரத்தில் உள்ளூர் அரசியலில் தொடர விரும்புவதால் அமைச்சர் நமச்சிவாயம் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார். அதோடு கட்சி மேலிடத்தையும் சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்றும், யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெற செய்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் கட்சி மேலிடம் அவரை வேட்பாளராக நிறுத்தத்தான் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதனிடையே அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் பெயர்களும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    ஆனால் புதுச்சேரியை சாராத இவர்கள் போட்டியிட்டால் எதிர்கட்சிகள் அதனை சாதகமாக வைத்து பிரசாரம் செய்வார்கள் என்பதால் பா.ஜனதா தலைமைக்கே தயக்கம் உள்ளது.

    இதுதவிர பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம், சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் வேட்பாளர் குறித்து கட்சி தலைமையின் முடிவுக்காக பா.ஜனதாவினர் காத்திருக்கின்றனர்.

    இதே போல எதிர்கூட்டணியான இந்தியா கூட்டணியில் காங்கிரசும், தி.மு.க.வும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை பெறுவதில் தீவிரம் காட்டின.

    ஆனால் ஏற்கனவே காங்கிரசின் சிட்டிங் சீட் என்பதால் தமிழகத்தில் தொகுதிகளை குறைத்தாலும், புதுச்சேரி தொகுதி காங்கிரசுக்குத்தான் ஒதுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.

    காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கமே மீண்டும் போட்டியிடுவதற்கு அதிகமான சாத்தியக்கூறு உள்ளது.

    மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள வைத்தி லிங்கத்திற்கும், உள்ளூர் அரசியலில் ஈடுபடுவதில் விருப்பம் உள்ளது. ஏனெனில் 2026-ல் சட்ட மன்ற தேர்தல் வரும்போது, மீண்டும் தனது தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம் என விரும்புகிறார்.

    இதனால் வெளிப்படையாக இதுவரை தான் எம்.பி. பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறவில்லை.

    அதேநேரத்தில் காங்கிரசில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும் போட்டியிட சீட் கேட்டு வருகிறார். கூட்டணியில் தமிழகத்தில் பேச்சுவார்த்தை முடிந்து, புதுச்சேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் போதுதான் இதற்கு முடிவு கிடைக்கும்.

    உள்ளூர் அரசியலில் ஈடுபட புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து விருப்பம் காட்டி வருவதால் வேட்பாளர் தேர்வில் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சிகள் சேரும் என்பது இன்னும் முடிவாகவில்லை. அ.தி.மு.க. போட்டியிட்டால் 4 பிராந்தியத்துக்கும் அறிமுகமான புதுவை மாநில செயலாளர் அன்பழகன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

    ஒரு வேளை அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தால் புதுவை தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் களமிறக்கப் படலாம். ஏனெனில் பா.ம.க.வும் புதுவை தொகுதிக்கு குறி வைக்கிறது.

    • நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது
    • பா.ஜனதா பிரமுகர் பிரபுதாஸ் அணிவித்தும், வெள்ளியில் பேனா வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாளை முன்னிட்டு உருளையன் பேட்டை தொகுதியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மோடி மக்கள் சேவை மையத்தின் நிறுவனர் பிரபு தாஸ் ஏற்பாட்டில் நடந்த விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் நமச்சிவாயத்திற்கு பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் பா.ஜனதாவினர் வரவேற்பு அளித்தனர்.

    நிகழ்ச்சிக்கு தொகுதி தலைவி பத்மாவதி என்ற நாகம்மாள் முன்னிலை வகித்தார். அமைச்சர் நமச்சிவாயம் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டா டினார். அவருக்கு ஆளுயர மாலை மற்றும் மலர்களால் ஆன கிரீடத்தை பா.ஜனதா பிரமுகர் பிரபுதாஸ் அணிவித்தும், வெள்ளியில் பேனா வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 300 பெண்க ளுக்கு புடவைக ளையும் அமைச்சர் நமச்சி வாயம் மற்றும் பிரபுதாஸ் ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் மாநில சிறப்பு அழைப்பாளர் சாம்ராஜ், மாநில செயற்குழு உறுப்பி னர்கள் முன்னாள் கவுன்சிலர் ராஜன், ஜெயபிரகாஷ் நாராயணன், மாநில மகளிர் அணி பொரு ளாளர் தேன்மொழி, மாநில பிரச்சார பிரிவு இணை அமைப் பாளர் கிரிஜா, நகர மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவி லட்சுமி, நகர மாவட்ட பட்டியல் அணி தலைவர் திருவெற்றிவேல், நகர மாவட்ட ஓ.பி.சி. அணி பொதுச் செயலாளர் கீதா, தொகுதி முன்னாள் தலைவர் சக்திவேல், தொகுதி பொதுச் செயலாளர்கள் மதன் ராஜேந்திரன், தொகுதி துணை தலைவர் பாபு, பொரு ளாளர் பாலமுருகன், செயற்குழு உறுப்பினர்கள் அப்பு, பிரவீன், ஆகாஷ், பிரிவு நிர்வாகிகள் முருகன், ராஜா, நெல்லித்தோப்பு தொகுதி தலைவர் உமாபதி, ஓ.பி.சி. நிர்வாகி முகுந்தன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆலோசனை கூட்டங்களில் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்கிறார்.
    • சுற்றுலாத்துறை அமைச்சர் என்பதால் லட்சுமி நாராயணனுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    புதுச்சேரி:

    துபாயில் நடைபெறும் சர்வதேச சுற்றுலா கண்காட்சியில் புதுவை அரங்கம் இடம் பெற்றுள்ளது.

    சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை புதுவைக்கு ஈர்க்க அமைச்சர் லட்சுமிநாராயணன், என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் துபாய் சென்றுள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் என்பதால் லட்சுமி நாராயணனுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    சபாநாயகர் மற்ற அமைச்சர்கள் துபாய் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. அமைச்சர் நமச்சிவாயம் தனிப்பட்ட பயணமாக துபாய் செல்ல மத்திய அரசிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றார். இதையடுத்து துபாய் கிளம்பிச் சென்றார்.

    அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் குழுவோடு இணைந்து துபாய் சுற்றுலா கண்காட்சி, கலந்துரையாடல், ஆலோசனை கூட்டங்களில் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்கிறார். எம்.எல்.ஏ.க்கள் நாளை மறுநாள் புதுவை திரும்பு கின்றனர்.

    • நெட்டப்பாக்கம் தொகுதி பா.ஜனதா செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் கல்மண்டபம் பகுதியில் பா.ஜனதா ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
    • புதுவையில் விரைவில் ரேஷன் கடைகளில் மீண்டும் அரிசி வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் தொகுதி பா.ஜனதா செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் கல்மண்டபம் பகுதியில் பா.ஜனதா ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

    அமைச்சர் நமச்சிவாயம் ஏழைகளுக்கு வேட்டி,சேலை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி புதுவையில் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கி தருகிறார். இதனால்தான் புதுவையில் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. புதுவையில் விரைவில் ரேஷன் கடைகளில் மீண்டும் அரிசி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை குமரன், தனஞ்செழியன், அய்யப்பன் ஜெயமூர்த்தி, கதிரேசன், அரிபாசுகுமார், முருகையன், லோகநாதன், விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது.
    • தேர்வு மையத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடு, தடையின்றி மின்சார சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்து.

    புதுச்சேரி:

    புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது.

    புதுவையில் 38, காரைக்காலில் 143 மையங்களில் தேர்வு நடக்கிறது. புதுவையில் 82 அரசு மற்றும் 147 தனியார் பள்ளிகளை சேர்ந்த 12 ஆயிரத்து 972 மாணவர்களும், காரைக்காலில் 25 அரசு மற்றும் 34 தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 979 மாணவர்களும் எழுதுகின்றனர். வினாத்தாள்கள் 10 வழித்தடமாக பிரித்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது.

    ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடு, தடையின்றி மின்சார சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்து. தேர்வுக்கு வரும் மாணவர்கள் செல்போன் உட்பட தகவல் தொடர்பு சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருந்தது. நுழைவுச்சீட்டு இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப் படவில்லை.

    தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் குற்றத்துக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படும் என கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி எச்சரித்துள்ளார். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகள் நம்பிக்கையுடனும், அச்சமில்லாமலும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று தங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • புதுவையில் மொத்தம் 255 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 36 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    • புதுவையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும், சுகாதாரத்துறையும் எடுத்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது.

    புதுவையில் மொத்தம் 255 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 36 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 15, காரைக்காலில் 19, ஏனாமில் 2 பேர் தொற்றுடன் உள்ளனர்.

    புதுவையில் 3 பேர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 71, காரைக்காலில் 51, ஏனாமில் 13 பேர் என மொத்தம் 135 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் உள்ளனர்.

    புதுவை மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஆயிரத்து 977 பேர் பலியாகியுள்ளனர். புதுவையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும், சுகாதாரத்துறையும் எடுத்து வருகிறது. இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதாக மருத்துவத்துறை அறிவுறுத்தியது. இதனால் பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் மருத்துவத்துறை அறிக்கை பெற்று முதல்-அமைச்சருடன் கலந்து பேசிய உரிய முடிவை கல்வித்துறை எடுக்கும்.

    ஏற்கனவே பள்ளிகள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவு உள்ளது. பொது இடங்களில் முக கவசம் அணிவது அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. கட்டாயம் முக கவசம் அணிவது குறித்து முதல்-அமைச்சர் ஆலோசித்து முடிவெடுத்து அறிவிப்பார்.

    புதுவை தொழில் தொடங்க ஏதுவான மாநிலமாக உள்ளது. புதுவையில் மருந்து நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் வர தயாராக உள்ளது. பல பிரெஞ்சு நிறுவனங்கள் நேரடியாக வந்து சந்தித்துள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத நிறுவனங்களை பிரெஞ்சு தூதரகம் சார்பில் கொண்டுவர தயாராக உள்ளனர்.

    தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வந்துள்ளன. இந்த அரசு தொழில் முதலீட்டாளர்களுக்கு இன்சென்டிவ் வழங்கி யுள்ளது. சலுகைகளை வழங்கியுள்ளோம். இதனால் சேதராப்பட்டு நிலம் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தொழிற்சாலைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உப்பளம் பெத்தி செமினார் மேல்நிலை ப்பள்ளி ஆரம்ப பிரிவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்குஅமைச்சர் நமச்சிவாயம்பரிசுகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் பெத்தி செமினார் மேல்நிலை ப்பள்ளி ஆரம்ப பிரிவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இந்த பரிசளிப்பு விழாவிற்கு பள்ளியின் முதல்வர் பாஸ்கல்ராஜ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    கண்காட்சியில் சிறந்த முறையில் விளக்கம் அளித்த மாணவர்களில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்குஅமைச்சர் நமச்சிவாயம்பரிசுகளை வழங்கினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு சிகப்பு நிற ரேஷன் கார்டு வழங்கும் விழா திருக்கனூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவிக்காக தலா ரூ.20ஆயிரம் வழங்கினார்.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு சிகப்பு நிற ரேஷன் கார்டு வழங்கும் விழா திருக்கனூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், உள்துறை அமைச்சருமான நமச்சி வாயம் தலைமை தாங்கி 90 பேருக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டு மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட ரேஷன் அட்டைகளை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவிக்காக தலா ரூ.20ஆயிரம் வீதம் 10 பேருக்கு மொத்தம் ரூபாய் 2 லட்சம் உதவி தொகை வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ அருள்முருகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், காட்டேரிக்குப்பம் போட்டோ ராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    • புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள், மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி நபர் தீர்மானத்தை கொண்டுவந்தனர்.
    • அதிகாரம் பறிபோய்வி டுமோ என்று நினைத்து எந்த முயற்சியையும் அதிகாரி களும் எடுப்பதில்லை.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள், மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தி தனி நபர் தீர்மானத்தை கொண்டுவந்தனர்.

    உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது: -புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை என்பது பா.ஜனதா எண்ணம். அத்தனை வகையிலும் ஒத்துழைப்பு தருவோம். அப்போது நான் இருந்த கட்சியில் சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டுள்ளோம். பிராந்தியத்துக்கு பாதகம் என எதிர்த்த சூழலும் உண்டு. தற்போது இந்த சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டசபையில் போடப்பட்ட தீர்மானங்கள் எத்தனை முறை மத்திய அரசிடம் கொண்டு செல்லப்பட்டன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

    அதிகாரம் பறிபோய்வி டுமோ என்று நினைத்து எந்த முயற்சியையும் அதிகாரி களும் எடுப்பதில்லை. அத்தனை தீர்மானங்களும் டெல்லி சென்றடைந்ததில்லை. மாநில மக்கள் உணர்வுகளை டெல்லிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் தயாராக இல்லை. அரசு தீர்மானங்கள் தற்போது கொண்டு செல்லும்போது முன் எச்சரிக்கையுடன் மத்திய அரசிடம் சென்று அடைந்து மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை முயற்சி தொடர்ந்து இருக்க வேண்டும்.

    அந்தந்த மொழிபேசும் மாநிலத்தோடு சேர்த்து விடுவார்களோ என்ற இதர பிராந்திய எம்.எல்.ஏ.க்கள் அச்சத்தில் இருந்தனர். ஒரே மாநிலமாக இருக்க வலியுறுத்தப்படும். மாநில கடன் ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. தள்ளுபடி செய்து தரக்கூடிய மாநில அந்தஸ்தாக இருக்கவேண்டும். அதை உருவாக்கவேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வந்த பிறகு புதுவையிலிருந்து சென்ற கோப்புகள் திரும்ப கிடைக்க 7 ஆண்டுகளாகும் என்ற நிலை மாறிவிட்டது.

    மாநில அந்தஸ்தை வலியுறுத்தி பெறும் சூழலில் கிடைக்கும் காலத்தில் ஒரு சில நடவடிக்கை எடுக்கவேண்டும். நாம் நிதிக்குழுவில் உறுப்பினராக இல்லை. மாநிலமாவோ, யூனியன் பிரதேசமாகவா இல்லை. ஜி.எஸ்.டி. என வரும்போது மாநிலத்தில் சேர்க்கின்றனர். உறுப்பினராக இல்லாததால் நிதி வரவில்லை. 1963 பிசினஸ் ரூலில் திருத்தம் கொண்டு வரவேண்டும். கட்டுகளை விடுவிக்க மாற்றம் கொண்டு வரவேண்டும்.

    அக்கோரிக்கையை மத்திய அரசை வலியுறுத்தி கேட்டு பெறவேண்டும். அமைச்சரவைக்கும், சட்டப்பேரவைக்கும் உரிய அதிகாரம் பெறவேண்டும்.

    கவர்னரே இதை தர வேண்டும். முதல்- அமைச்சருக்கு ரூ. 10 கோடி வரை அனுமதி தரலாம். கிரண்பேடி கவர்னராக வந்தபோது ரூ.1 லட்சம் அனுமதிக்குகூட அவரிடம் செல்லும் நிலையை உருவாக்கினார். கவர்னருக்கும், முதல்- அமைச்சருக்கும் முரண்பாடு ஏற்பட்டால் டெல்லிக்கு அனுப்பும் முறை கடந்த ஆட்சியில் நடந்தது. அந்நிலை இருக்கக்கூடாது. உரிய அதிகாரம் அமைச்சரவை, சட்டப்பேரவைக்கு வேண்டும். மத்திய அரசு கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முழு ஆதரவை பா.ஜனதா தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேம் விமர்சையாக நடந்து முடிந்தது. கும்பாபிஷேகத்தை ஒட்டி 48 நாள் மண்டல அபிஷேகம் நடந்தது.
    • புனர்பூச நட்சத்திரத்தில் காலை 8 மணிக்கு2-ம் கால யாக பூஜையுடன் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த வி.மணவெளியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் காளிகாம்பாள், அகோர வீரபத்திர சாமி, பால்முத்து மாரியம்மன், அறிவொளி விநாயகர், கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேம் விமர்சையாக நடந்து முடிந்தது.

    கும்பாபிஷேகத்தை ஒட்டி 48 நாள் மண்டல அபிஷேகம் நடந்தது. மண்டல அபிஷேகத்தை ஒட்டி அணுங்ஜை விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கியது இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து 108 சங்காபிஷேகமும், சிறப்பு ஹோமம், மஹாபூர்ணாஹதி, மஹா தீபாரதனை நடந்தது. புனர்பூச நட்சத்திரத்தில் காலை 8 மணிக்கு2-ம் கால யாக பூஜையுடன் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து மகாபூர்ணகதி 108 சங்காபிஷேகம் மகா தீபாரதனை விமர்சையாக நடந்தது. மண்டல அபிஷேக நிகழ்ச்சியில் கோவில் திருப்பணி கமிட்டி குழு நிர்வாகி ராமதாஸ் கோயில் தனி அதிகாரி உமாபதி, மண்ணாடிப்பட்டு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், மண்ணாடிப்பட்டு தொகுதி முக்கிய பிரமுகர்கள் மற்றும் பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், அருள்,

    வில்லியனூர் தொகுதி பா.ஜனதா பிரமுகர்கள் ஏகாம்பரம், கண்ணபிரான், தேவராஜ், விஸ்வநாதன், ராமதாஸ்,சாம்ராஜ், காமராஜ் ரெட்டியார்பாளை யம் சரவணன், பா.ஜனதா மாநில ஓ.பி.சி. அணி செயலா ளர் சீனிவாச பெருமாள், கோவில் நிர்வாகிகள் வில்லியனூர் மணவெளி பகுதி பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆக்கி மைதானம் 7 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் பயிற்சியே செய்ய முடியாமல் உள்ளது. நம்முடைய தேசிய விளையாட்டை பாதுகாக்க என்ன செய்தீர்கள்.?
    • சர்வதேச விளையாட்டு மைதானத்தை தனியார் பங்களிப்புடன் காலாப்பட்டில் கொண்டு வரவுள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:

    நேரு (சுயேட்சை): ஆக்கி மைதானம் 7 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் பயிற்சியே செய்ய முடியாமல் உள்ளது.நம்முடைய தேசிய விளையாட்டை பாதுகாக்க என்ன செய்தீர்கள்.?

    அமைச்சர் நமச்சிவாயம்: உண்மைதான். கடந்த காலங்களில் யாரும் கண்டுகொள்ளவில்லை. உடன் நடவடிக்கை எடுக்கிறோம். விளை யாட்டுத்துறைக்கு தனி கவனம் செலுத்துகிறோம். இதுவரை சம்பளம் ஒதுக்கி வந்தோம். தற்போது ஊக்கத்தொகைக்கு ரூ. 8 கோடி ஒதுக்கி தந்துள்ளோம். ஆக்கி மைதானத்துக்கு ரூ. 7.5 கோடி தேவை. நேரடியாக அதற்கு திட்டமதிப்பீட்டை தனியார் நிறுவனம் மூலம் செய்கிறோம்.

    ஆக்கி மட்டுல்ல அனைத்து விளையாட்டுகளிலும் இளைஞர்கள் பயிற்சி பெற செய்ய உள்ளோம். சர்வதேச விளையாட்டு மைதானத்தை தனியார் பங்களிப்புடன் காலாப்பட்டில் கொண்டு வரவுள்ளோம். தனியார் பள்ளியில் 16 ஏக்கர் நிலம் உள்ளது. வில்லியனூரில் மினி ஸ்டேடியம் கொண்டு வரவுள்ளோம்.

    அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.: மின்கட்டணம் செலுத்ததால் உப்பளம் உள் விளையாட்டு அரங்கில் ஏ.சி. வசதி இயங்கவில்லை.

    அமைச்சர் நமச்சிவாயம்: விளையாட்டுத்துறையே முழுவதும் சீர்படுத்தியாக வேண்டும். யாரும் கவனிக்காமல் விட்டு விட்டனர். அனைத்தும் சரி செய்யப்பட்டு விளையாட்டு துறை மேம்படுத்தப்படும்.

    நேரு: அண்ணாதிடல் ஸ்மார்ட் சிட்டி பணி தேக்கத்தால் 2 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது.

    அமைச்சர் நமச்சிவாயம்: விளையாட்டுத்திடலாகவே மாற்றவே ஸ்மார்ட் சிட்டியில் நிதி ஒதுக்கி செய்தோம். ஒரு சில வேலைகளால் நிற்கிறது. அதிகாரிகளை அழைத்து பேசியுள்ளோம். ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ.: கோரிமேடு போலீஸ் மைதானத்தை நவீனப்படுத்தி தாருங்கள்.

    அமைச்சர் நமச்சிவாயம்: போலீஸ் மைதானத்தை நவீனப்படுத்துவோம். விளையாட்டு இயக்குநர் நியமிக்க தனி ஆணை வெளியிட வேண்டும். கல்வித்துறை துணை இயக்குநர் ஒருவரை பணியிடமாற்றம் செய்து விளையாட்டுத்துறைக்கு கொண்டு செல்லவுள்ளோம்.

    கொம்யூன்தோறும் விளையாட்டு மைதானம் கொண்டுவருவோம். தற்போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. அடுத்த ஆண்டு கேலோ இந்தியா திட்டத்தில் விளையாட்டு மைதானங்கள் உருவா க்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    ×